Thottal Thodarum

Aug 20, 2011

முதல் இடம்.

mudhal-idam-stills-7 ஏவிஎம்மின் தயாரிப்பு. மைனா ஹிட்டிற்கு பிறகு வித்தார்த்தின் நடிப்பில் வரும் படம். புது இயக்குனர், சொன்ன கதையில் மிகவும் பிடித்துப் போய் உடனடியாய் படம் செய்ய ஆரம்பித்ததாய் சொன்னார்கள். அப்படி என்ன கதை என்று பார்ப்போமா?


வித்தார்த்தின் பெயர் எமக்குஞ்சு. அவன் ஒரு சில்லுண்டி ரவுடி. தன் நண்பனின் மேல் கைவைத்ததால் அவனின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போனவன். அதைப் பற்றி அவனுடய அம்மா எதையும் கேட்பதில்லை. ரவுடியாய் இருக்கிறான் என்றால் அடுத்து என்ன நடக்கும் நல்ல அழகான, படிச்ச பொண்ணு பின்னாடி அவன் சுத்துவான், அப்புறம் அவ சுத்துவா. அதான் நடக்குது. இவங்க காதலுக்கு அவளோட அப்பனாத்தா ஒத்துக்க மாட்டாங்க.. அப்புறம் அவங்க எப்படி சேர்ந்தாங்கன்னுதானே கதை இருக்கணும். அதுவும் இருக்கு. நடுவுல பருத்திவீரன், சுப்ரமணியபுரம், இரண்டு வில்லன்க, அவனோட அண்ணன் பெரிய ரவுடி, கேட்டா அவரு வீரராம். சரி விடுங்க இதான் கதை. இதுல என்னத்த கண்டுபுட்டாங்கன்னு ஏவிஎம்மு படமெடுத்தாங்கன்னு தெரியலை
mudhal-idam-stills-5 வித்தார்த்தின் கேரக்டர் சும்மா உதார் விடும் பார்ட்டியா? இல்லை நிஜமாகவே ரவுடியா? என்பதே குழப்பமாய் வைத்திருக்கிறார்கள். சுத்தமாய் அழுக்கு ரவுடியாய் காட்டினால் பருத்திவீரன் ஞாபகம் வ்ந்துவிடுமோ? இல்லை கொஞ்சம் டீஸெண்டான நட்புக்காக கொலை செய்ய ஒத்துக் கொள்ளூம் சுப்ரமணியபுரம் கேரக்டருக்கும் ஏற்றார் போல கதையில்லை. எனவே அப்படியே வைத்துக் கொள்ளவும் குழப்பம். அதே போல அந்த லோக்கல் கவுன்சிலர், நகராட்சி மன்ற தலைவர். கேரக்டர்களுக்குள்ளான விரோதம். ஒரு முக்கியமான காட்சியில் இருவரும் ஒரே காரில் பயணிக்கிறார்கள். விரோதிகள்.  அதுவும் சகஜமாய். அடுத்த காட்சியில் ஆளாளுக்கு வெட்ட சொல்கிறார்கள். ஓட்டு போட ஆட்களை கடத்துகிறார்கள். இத்தனைக்கும் கவுன்சிலருக்கு சப்போர்ட் செய்ய விரும்புவர்களை எதிர்பார்ட்டி கடத்தி வைக்கிறான். ஆனால் அவர்களோ கவுன்சிலருக்குத்தான் சப்போர்ட். அவர்களை எதற்காக திரும்ப கடத்த சொல்ல வேண்டும். அவர்களை ஓட்டை மாற்றி போடச் சொன்னால்  ஆயிற்றே? கிஷோரின் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு பில்டப்?. ஏன் அவர் கேரக்டரையும் நல்லவனா? கெட்டவனா? என்று குழப்ப வேண்டும். இப்படி பல கோணங்களில் கதை போவதால் போலீஸ் எஸ்.பி அவரின் வீரத்தைப் பற்றி பேசும் காட்சிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதிலும் ஒட்டாமல் படம் பார்கக் வேண்டிய கட்டாயத்தில் ஒரு இன்வால்மெண்டும் வர மாட்டேன் என்கிறது.
mudhal-idam-stills-10 வித்தார்த்தின் கேரக்டர் குழப்பத்தையும் மீறி ஆங்காங்கே சிறு சிறு ரசிக்க வைக்கும் காட்சிகள் இருக்கவே செய்கிறது. அதே போல கவிதா நாயரின் முகம் முத்தினதாய் பல காட்சிகளில் அக்கா போலிருக்கிறார். கண்கள் சில இடங்கள் க்யூட். கூட வரும் ப்ரெண்ட் கேரக்டரையெல்லாம் நல்லா தேடிப் போடுகிற இயக்குனர் கதாநாயகி விஷயத்தில் சறுக்கியிருப்பது ஏன் என்றே தெரியவில்லை?. பெண்ணிற்கு வரும் காதல் கடிதங்களை பஸ் கண்டக்டர் அப்பாவே வாங்கி வந்து படிப்பதும், அதில் ஒரு லெட்டர் அவருக்கு வந்ததாய் இருக்க மனைவி துரத்துவதும் இண்ட்ரஸ்டிங். இம்மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் வித்தார்த்த் வித்யாசமாய் வேட்டி சட்டை அணிந்து டைட் பட விளம்பர மாடல் போல பளிச்செனவே இருக்கிறார். போதையில் குடித்து வீழ்ந்து கிடந்தாலும் கண் கூசும் பளிச்செனவே இருக்கிறார். மயில்சாமி ஆங்காங்கே வ்ந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கலைவாணி வழக்கமாய் கத்தி கத்தி அழுகிறார். படம் பூராவும் மகன் செய்யும் த்வறுக்கெல்லாம் உடைந்தையாய் ஆதரவு அளித்துவிட்டு, க்ளைமாக்ஸின் போது வில்லன் திருந்துவது போல மகன் மீது பாசத்தை பொழிந்து, அவனை திருந்தச் சொல்லி அழுவது செம காமெடி. எதிர்கோஷ்டி வில்லனை வைத்து தருகிற ட்விஸ்ட் ஓகே.
Mudhal Idam Movie Gallery செல்லதுரையின் ஒளிப்பதிவு பளிச். டி.இமானின் இசையில் இரண்டு குத்துபாடல்கள் ஓகே. அப்புறம் வாந்தே போந்தே என்ற அறிவுமதியின் பாடல் கொஞ்சமே கொஞ்சம் மெலடி. எழுதி இயக்கியவர் ஆர்.குமரன். பருத்திவீர்ன் டைப் ரவுடிக்கதை, களவாணி டைப் காட்சிகள், சுப்ரமணியபுரம் போன்ற நட்பு, துரோகம், கொலை, என்று  நிறைய வைத்து ஒரு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இவ்வளவு பளிச்செனற ரவுடியை தமிழ் சினிமாவில் என்பதுகளுக்கு முன்னால் தான் காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் குட்டி குட்டி ட்விஸ்டூகள், சில வசனங்கள் அட போட வைத்தாலும், ஹீரோ கேரக்டர் முதல் வில்லன் கேரக்டர் வரை ஒரு குழப்பமான மனநிலை இருப்பதால் ஒன்றும் ஏற மாட்டேன் என்கிறது.

சில படங்களைப்  பற்றிய கருத்தை படம் பார்த்தபின் தான் சொல்ல முடியும். ஆனால் இப்படத்திற்கான விளம்பரத்தை வைத்து பார்த்தாலே தியேட்டரில் நுழைய விட்டுவிடுவேனா என்கிறார்கள். தானா வர்றவனையும் துரத்தி அடிக்கும் முந்தானை முடிச்சு ஸ்டைல் விளம்பரங்கள். அதிலும் ட்ரைலர் படு கொடுமை. இப்படித்தான் அயன், சிவாஜிக்கெல்லாம் செய்தார்களா? இல்லை படம் பர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு இது போதும்னு நினைச்சிட்டீங்களா?. இதையெல்லாம் மீறி நான் பார்த்துட்டேன். வெளியே என்னைப் போன்ற பல நூறு உதவி இயக்குனர்கள் நல்ல நல்ல கதைகளோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏவிஎம்முக்கு மீண்டும் ஒரு அன்பே.. அன்பே..
முதல் இடம் – மூணு சப்ஜெக்ட் ஃபெயில்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

Anonymous said...

Hai Sir Iam dinesh I need the Link of One Tamil FIlm iam form Mumbai .name of the Film is "Our Eeravu" (One Night) Pls send the Torrent link [pls
gm_dinesh@live.com.

shortfilmindia.com said...

hi dinesh. yo u dont get that link. it's not been sold to fms. they are my friends only. they launched their second film audio of Ambuli 3d yesterday.

Sivakumar said...

நீங்கள் ஏ.வி.எம்முக்கு படம் பண்ணினாலும்...அவர்கள் பின்பற்றி வரும் பார்முலாவில் இருந்து வெளியே வருவது கடினம் என்றே தோன்றுகிறது. முருகதாசின் கம்பனிக்கு படம் செய்ய முயற்சிக்கலாமே? பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வேற. ஷார்ட் கட்ல ஹாலிவுட்டுக்கு போகவும் சான்ஸ் இருக்கு.

Village வின்ஞானி said...

@mudhal idam director...

Village வின்ஞானி said...

@mudhal idam director...Ithaana unga takku..!!!

Anonymous said...

Fine dr ,i know some heard abt the film ,thats y iam asking ,no problem ,Ambuli 3D Most wait that film different look R Parthiban

கேரளாக்காரன் said...

மொத்தத்தில் முதல் இடம் கடைசி தரம்!!!!!!!!!!!! அப்படிதானே ?

Jackiesekar said...
This comment has been removed by the author.
Jackiesekar said...

கூல் கேபிள்... கண்டிப்பா ஒரு நாள் அந்த பிராமண்ட கதவு திறக்கும்...

சி. முருகேஷ் பாபு said...

கேபிள்ஜி, படத்தின் டைரக்டர் பெயர் கண்ணன் இல்லை, குமரன்!

Mani Vel said...

Santhadi saakula ungala neengale nalla director nu sollikiringa...Appadiye ivaruku vaaipu kidachu ivaru padam eduthutaalum...mothala edukura short film ah nalla edukura valiya paarunga....

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...
விதார்த்துக்கு சறுக்கலா முதல் இடம்.

Balaji.R said...

Mr.Manivel , pls don't comment like that.sankar can do best , i am just following him for last few months and the way of his writing is good . He will become good director and try to wish or keep quiet. Don't discourage ATLEAST.

நலம் நன்று said...

அவருக்கு இது முதல் படம்... குழப்பமான மனநிலை இருக்கறது சரிதான்... அது சரி பல படம் பாத்த நிறுவனம்... கொஞ்சம் சின்சியரா வேலை வாங்கியிருக்காலமே... போஸ்டர்ல கூட டாமினேட் பண்ணியிருப்பது தெரிகிறது... எவிஎம்க்கு இதெல்லாம் ஒரு அடியா... குமரன் கவலப்பாடதீங்க... இன்னும் நிறைய அவகாசம் இருக்கு அடுத்த படத்துக்கு...

Cable சங்கர் said...

manivel.. நிச்சயம் நான் நல்ல டைரக்டர் தான். அந்த நம்பிக்கையில்லாமல் பேசினால் நான் படமெடுக்க முடியாது. என்னை மட்டும் கேட்க சொல்ல வில்லை என்னைப் போல பல நூறு பேர்கள் இருக்கிறார்கள். நான் எடுத்த குறும்படம் விருதுகள் வாங்கியிருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ. அது போல என்னால் முடிந்த அள்வு ஒரு சிற்நத படத்தை அளிக்க முயற்சிப்பேன். நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருவேன். நன்றி.

Cable சங்கர் said...

sivakumar. ஃபாக்ஸ் ஸ்டார் முருகதாஸ் தயாரிப்பு அவர்களின் எங்கேயும் எப்போதும்ல் தான் இருக்கிறது. முருகதாஸ் வேண்டுமானால் ஹாலிவுட்டுக்கு போக முடியும்.:)

Cable சங்கர் said...

வன்மி.. முதல் படம் அதுவும் ஏவிஎம் போன்ற நிறுவனம் என்கிற போது குழப்பம் இருப்பது சரியில்லை நண்பா. ஆனால் ஏவிஎம்மின் அனுபவத்திற்கு அவர்களின் டிசைன் மார்கெட்டிங் எலலாமெ படு சொதப்பல்.

ammarajam said...

Dear Cable,

Dont market yourself when you judge other's films. This will not add beauty to your blog.

Regards,

Amarnath

Cable சங்கர் said...

ammarajam
why i should not market myself?. i have all the right to market my self. if a film is produced they have to market the film before release. that is there duty. like that i have to market my self. that is not wrong. this is my opinion.

aotspr said...

நல்ல விமர்சனம்.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com