Thottal Thodarum

Aug 22, 2011

கொத்து பரோட்டா- 22/08/11

ஜப்பானில் சுமார் 350 கோடி ரூபாய் பணம் மக்களிடையே கிடைத்திருக்கிறது. அதை பத்திரமாய் அவர்கள் போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா? பூகம்பத்தின் போது பல லட்சம் பேர்களின் வீடுகள் நாசமடைந்து அழிந்து போனது. அதை சீரமைக்கும் போது அந்ததந்த வீடுகளில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் அந்நாட்டு மக்கள் போலீஸார் வசம் ஓப்படைத்தனர். இதைத் தவிர, நகைகள், விலையுர்ந்த பொருட்களும் உண்டு. விபத்தில் அடிபட்டு கிடக்கும் ஆட்களிடம் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாய் அவர்களிடமிருக்கும் உடைமைகளை அள்ளிக் கொண்டு போகும் போலீசும், மக்களும் உள்ள நம் நாட்டில் இது ஒரு ஆச்சர்யமான, அதிசயமான விஷயமே.
###########################################


நேற்று முன் தினம் சென்னை “ழ” கபேயில் நேசமித்ரன், கார்திகை பாண்டியன், விதூஷ், கிருஷ்ணபிரபு போன்றவர்களின் பங்களிப்பில் உருவான காலாண்டு இதழான “வலசை”யின் அறிமுக கூட்டம் பதிவுலக நண்பர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்றது. தமிழ் பதிவுலகில் முக்கியமான அனைத்து நண்பர்களும், பஸ்ஸர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். வழக்கமான இலக்கிய புத்தக வடிவில்லாமல் டெம்மி சைஸில் அமைத்திருந்தது ஆர்வத்தை தூண்டியது. நிறைய உலக இலக்கியம் படித்தவர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். நமக்கும் இலக்கியத்திற்கு தூரம் அதிகமென்பதால் அட்டையை எட்டிப் பார்த்ததோடு சரி.. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. எட்டிப் பார்த்த கொஞ்ச நேரத்தில் நாக்கு சுளுக்கிக் கொண்டதால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. நமக்கு குரும்பூர் குப்புசாமிதான் லாயக்கு. சிறந்த வாசிப்பாளிகளான, கார்த்திகை பாண்டியன், விதூஷ், தருமி, நேசமித்ரன், கிருஷ்ணபிரபு போன்றவர்களின் பங்கெடுத்துள்ள இந்த இதழ் முக்கியமாய் மொழிபெயர்ப்பு வாசிப்பாளர்களிடம் நல்ல இடத்தை பெறும் என்று தோன்றுகிறது. நம்ம மொழிபெயர்ப்பு எல்லாம் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சியுடனேயே.. நின்று விட்டதால் இது பற்றி மேலும் சொல்லும் ஒர்த் நமக்கில்லை. சந்திப்பில் வழக்கம் போல கருப்பட்டிக் காப்பி தூள் பரத்தியது. சந்திப்பின் முடிவில் நடந்த பாட்டுக் கச்சேரியும் சுவாரஸ்யம். எங்களுக்கு. கேட்டவங்களுக்கு எப்படின்னு யாருக்கு தெரியும்.
############################################
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மக்களிடையே எப்படி இவ்வளவு ஆதரவு கிடைத்தது என்று யோசித்து ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறது காங்கிரஸ் அரசு. வெளிநாட்டு சதியாம். நண்பர் ஒருவர் சொன்னார் ஆமாம் சோனியா வெளிநாட்டுகாரங்க தானே என்று.
############################################
தத்துவம்
சில சமயம் நம் வாழ்க்கையின் அத்தனை கதவுகளும் மூடப் பட்டுவிட்டதாகவே தோன்றும். ஆனால் எல்லாம் மூடப்பட்ட கதவுகள் அடைக்கப்படுவதில்லை. கதவை மெல்ல அழுத்தித் திறக்கும் கைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கதவை திற காற்று நிச்சயமாய் வரும்.

அவனால் செய்ய முடியுமென்றால் உன்னாலும் நிச்சயமாய் செய்ய முடியும் - எவனாலும் செய்ய முடியாது என்றால் நிச்சயம் நீ செய்ய வேண்டும்.-ஜப்பானிய பழமொழி.

அவனால் செய்ய முடியுமென்றால், அவனே செய்யட்டும், யாராலும் செய்ய முடியாது என்றால் “ஆணியே புடுங்க வேண்டாம்” விட்டுருங்க.- நம்மூர் பழமொழி.

விவாதிப்பதை விட வளைந்து கொடுத்து போவது நல்லது.
அர்த்தமுள்ள மெளனம், அர்த்தமில்லாத வார்த்தையை விட சிறந்தது.
###########################################
ப்ளாஷ்பேக்
நம்ம ஊர் சத்யராஜுக்கு சரியான போட்டி கொடுக்ககூடிய ஆள் தெலுங்கு மோகன் பாபு. ஒரு சமயங்களில் இவர் சத்யராஜ் தமிழில் செய்த மலையாள படங்களின் ரீமேக்கை தெலுங்கில் செய்திருக்கிறார். சில தமிழ்படங்களில் கேனத்தனமான வில்லன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் வெர்சடைலான நடிகர்களில் முக்கியமானவர். தெலுங்கில் இவரது டயலாக் டெலிவரிக்காகவே படம் பார்பவர்கள் அதிகம். அமைதிப் படை திரைப்படம் ஹிட்டானவுடன் எம்.தர்மராஜு.எம்.எல்.ஏ என்று தெலுங்கில் ரீமேக்கினார்கள். மிகப் பெரிய ஹிட். பாலக்கோலில் அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்த போது  இந்த பாடலுக்கு கிடைத்த ஆரவாரம் அபாரம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எஸ்.பி.பி. ரொம்பவும் ரசித்து உற்சாகமாய் குரலில் நடித்து பாடியிருப்பார். எஸ்.பி.பியின் உற்சாக குரலுக்காகவே இப்பாட்டை விரும்புவீர்கள்.
############################################
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை அறிவித்ததும் யாருமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.எல்லா எதிர்கட்சிகளும் அதை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் வரவேற்று விட்டன. ஏன் திமுக தலைவரே வரவேற்று ”நான் வாழும் வீட்டையே எனக்கு பிறகு மக்களுக்கு மருத்துவமனைக்காக எழுதிக் கொடுத்திருக்கிறேன்.நான் கட்டிய கட்டிடத்தை மருத்துவமனையாக்குவதையா எதிர்ப்பேன்” என்று சொல்லும் அளவிற்கு நிலமை ஆகிவிட்டது. ஆனால் அக்கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவதற்கு குறைந்த பட்சம் உடனடி தேவையாய் 60-70 கோடிகள் செலவு செய்யப் பட வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரி விஷயம் தனி என்று சொல்கிறார்கள். எது எப்படியோ சினிமா ஷூட்டிங்கிற்க்கு விடாமல் மக்களுக்கு உருப்படியாய் செய்ய திட்டம் போட்டதே பெரிய விஷயம்.நானும் பாராட்டுறேன்.ம்ஹும் வேற வழி. எய்ம்ஸ் மாதிரியாமில்ல.. 
###########################################

காமெடி
கார்க்கி, ஆதி, பரிசல் ஆகியோர் சேர்ந்து கலாய்த்திருக்கும் இந்த ரீமிக்ஸ் படம். செம காமெடி. தளபதி படத்திலிருந்து ஒரு முக்கிய காட்சியை கார்க்கி வசனமெழுதி, பேசி, ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே லேசான புன்னகையை தவழ விடும் படம். மம்முட்டிக்கு ஆதியின் குரல் வந்தவுடன் நான் விழுந்து விழுந்து சிரிக்கலானேன். செம..காமெடி. கார்கியின் வசனங்கள்   படு சுவாரஸ்யம்.  நீங்களும் பார்த்து சிரியுங்கள்.

#############################################

என்னவோ தமிழ் சினிமா ஆட்சி மாறியவுடன் தேனும் பாலும் ஓடும் என்பது போல சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறி.. சமீபம் வரை தெய்வதிருமகளும், காஞ்சனாவும்தான் ஓடிய படங்களாய் இருக்கிறது மற்ற படங்கள் எல்லாம் போட்ட பணத்தில் போஸ்டர் ஒட்டிய காசு கூட வரவில்லை என்கிறார்கள். குறைந்த பட்ச முதலீட்டில் படம் எடுப்பவர்கள் எல்லாம் சாட்டிலைட் ரைட்ஸ் விற்று ஒரு முப்பது சதவிகித முதலீட்டை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. எல்லாம் படங்களையும் அடி மாட்டு ரேட்டுக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள்.
###############################################
மை கார்னர்”ழ” கபேயில் நடந்த ஜுகல்பந்தியும், கச்சேரியும்.


##################################################
அடல்ட் கார்னர்
திருமணமான ஜோடி ஒன்று செக்சாலஜிஸ்ட் டாக்டரை பார்க்க போனார்கள். 
டாக்டர் பொண்டாட்டியிடம், 'உங்க பிரச்சனை என்ன?' என்று கேட்டார். 
பொண்டாட்டி, 'இவருக்கு செக்ஸ் பண்றப்போ எல்லாம் சீக்கிரமா விந்து வந்துடுது டாக்டர்..' என்று சொன்னாள். 
டாக்டர் புருஷனிடம், 'இது தான் உங்க பிரச்சனையா?' என்று கேட்டார். 
புருஷன், 'அது அவ பிரச்சனை டாக்டர்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை' என்று சொன்னான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

Anonymous said...

புதிய த.செ. >>> மருத்துவமனை

"டாக்டர்" புரட்சித்தலைவி வாழ்க!

Philosophy Prabhakaran said...

குறும்படம் செம நக்கல்...

ஷண்முகா said...

கொத்து சூப்பர் ...குறும்படம்....அருமை.........

நேசமித்ரன் said...

நன்றிகள் தலைவரே :)

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
ரைட்டர் நட்சத்திரா said...

முதல் செய்தி ஆச்சரியம் நன்றி

iniyavan said...

கேபிள், தளபதி குறும்படம் எக்ஸலண்ட். கார்க்கி குரலும், பரிசல் குரலும் அப்படியே பொருந்துது. நண்பர்களை மனமார பாரட்டுகிறேன். ரொம்ப நல்லா இருக்கு. ரசிச்சு இதுவரை 4 தடவை பார்த்துட்டேன். நன்றி.

CS. Mohan Kumar said...

அண்ணனின் பூவே இளைய பூவே பாடலை இருட்டடிப்பு செய்த கேபிளை வன்மையாக கண்டிக்கிறேன்

CS. Mohan Kumar said...

இன்ட்லியில் இணைக்க கூட நேரம் இல்லையா? நான் இணைச்சிருக்கேன்

'பரிவை' சே.குமார் said...

கொத்து சூப்பர்.
குறும்படம் அருமை.

Jackiesekar said...

i miss zha cafe function.... all the best makkals

R. Jagannathan said...

Reg J's move to convert the MK's proposed new assembly building into a hospital, I am surprised that not many have objected to it. Even MK's initial reaction as per the media, was one of 'no objection'.

The building was designed to be the legislative assembly with associated facilities. A hospital building - that too a super speciality hospital- needs a totally different plan and facilities. More money will be spent on demolitions and rebuilding. It will be difficult to conceal many new installations without structural changes. It is not clear if J has consulted the medical specialists and building specialists on the conversion proposal before she made the announcement in the assembly.

J stated in reply to Court's queries that the building was not ready fully and that had administrative problems by having the ministers and the secretaries 2 km away from each other. That is the reason for her choosing to operate from St. George Fort. If it is so, court shall ask her to complete the building as planned and move in there as early as possible.

She can always build a super speciality hospital elsewhere (even advisable if she agrees with MK's proposal to use old, now vacated, prison compound ).

It is the public's money that is being wasted by doing away with the projects / schemes brought forth by the previous government and worse that it may be followed by future governments as well.

Let us hope some advisers can give J some sane advises and also hope she listens.

Appreciate your readers' comments on above.

-R. Jagannathan

கார்க்கிபவா said...

thanksppppaa

Anonymous said...

மன்றம் வந்த தென்றல் உங்கள் தொண்டைக்குள் புகுந்து வெளிவருகையில் சூறாவளியாக பயமுறுத்துகிறது..

குணசேகரன்... said...

apdulla rocks..ur voice is nice..but slow singing..

பனித்துளி சங்கர் said...

ஒளியும் , ஒலியையும் ஒன்றாய் எடுத்து இருந்தால் இன்னும் அசத்தல் சங்கர் .

பனித்துளி சங்கர் said...

சினிமாத் துறையின் புனைப்பு இன்னும் நீள்கிறது போல !?>??????????????????

பனித்துளி சங்கர் said...

அரசியல் தெரிந்தவன் அடி முட்டாள் என்பது போல இருக்கிறது உங்களின் எழுத்தின் ஆளுமை !????????????????????????????????????????????????????????????????????????????

பனித்துளி சங்கர் said...

சினிமா முதலீட்டார்கள் பற்றி சிந்திக்கும்போழுது அரசியலுக்கும் , விமர்சனத்திற்கும் வேறுபடும் பெயர் இல்லையே நடு நிலைமை !??????????????????????????????????????????????

பனித்துளி சங்கர் said...

மனிதன் வாழும் போதே இறந்துபோனால் வருத்தம் . வாழ்ந்த பின்பு மறைந்து போனால் சொர்க்கம் இதில் எதை ஏற்பது அண்ணாத்த !? ?????????????????????????????????????

பனித்துளி சங்கர் said...

குறும்படம் அருமை பகிர்ந்தமைக்கு நன்றி தலைவா .