Thottal Thodarum

Oct 10, 2010

உங்கள் பக்கம்



ஆயிரம் பேர் கேட்டாலும் காட்டிகொடுக்க மனம் இல்லை
என் இதயத்தை திருடியது நீயென்று
திருடியவருக்கு ஆயிள் தண்டனையாம்
அடைபட்டு விடு என் இதயச்சிறையில்...
நாம் வெறும் நண்பர்கள் தான் என்றால்
நம்பாமல் கை கொட்டி சிரிக்கின்றது
இந்த ஊர் உலகம் மட்டும் அல்ல
என் இதயமும் அதில் இருக்கும் நீயும்.
கடல் நீர் குடி நீராகின்றதாம்
நீ கால் நனைத்து சென்றதால்..

வாய் விட்டு சொன்னாய் புரியவில்லை என்றேன்
கண்களால் சொல்கிறாய் இப்போது புரிகின்றது
காதல் செய்தவன் தான் கவிதை எழுத வேண்டும் என்றால்
பொய் சொன்னதாக தபூ சங்கரை சுட்டு கொலை செய்யவா போகிறீர்கள்…
என்னையும் மன்னித்து விட்டு போங்கள்
இதயத்தில் பிறந்து
கண்ணுக்குள் வளர்ந்து
நெஞ்சுக்குள் மறைந்திருந்த காதல்
இன்று ஊர் முன்னே செத்து போகிறது
உனக்கு திருமணமாம்..

நிறைமாத கர்பிணியை போல
இறக்கி வைக்காமல் செல்போனை கையில் சுமக்கிறேன்
உனது குரலுக்காக...
உன்னை காதலிப்பதாய் சொன்னேன் - சிரித்தாய்
காதலிப்பவன் கவிதை எழுதுவான் என்றேன் - சிரித்தாய்
இதுதான் என் காதல் கவிதை என்றேன் - மீண்டும் சிரிக்கிறாய்
நினைக்க நினைக்க எழுதி கொண்டே இருக்கிறேன்
நினைவுகளில் நீ இருக்கும் வரை....

http://suthershan.blogspot.com/2010/10/blog-post_03.html

டிஸ்கி: உங்களது படைப்புகள் உங்கள் பக்கத்தில் வெளிவர.. எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். 
Post a Comment

9 comments:

ம.தி.சுதா said...

////நிறைமாத கர்பிணியை போல
இறக்கி வைக்காமல் செல்போனை கையில் சுமக்கிறேன்
உனது குரலுக்காக... ////
கவிதை அருமையாக இருக்கிறது

ம.தி.சுதா said...

ஆஹா இன்னிக்க சுடு சொறு எனக்குத் தான் என நினைக்கிறேன்...

வேங்கை said...

கவிதை அருமை அருமையோ அருமை

Unknown said...

எல்லாம் நல்லார்க்கு...அந்த கடைசியா ஒரு டிஸ்கி போடீங்களே.....அங்கதாண்ணே....அங்கதான் நிக்கறீங்க....

Suthershan said...

கேபிள் சங்கர் சார், இது நான் எழுதும் முதல் கவிதைகளின் தொகுப்பு... வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..
படித்த, பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்..

Unknown said...

முதல் கவிதையின் கடைசி இரண்டு வரிகள் அருமையிலும் அருமை!!

saba said...

என்னையும் மன்னித்து விட்டு போங்கள்
இதயத்தில் பிறந்து
கண்ணுக்குள் வளர்ந்து
நெஞ்சுக்குள் மறைந்திருந்த காதல்
இன்று ஊர் முன்னே செத்து போகிறது
உனக்கு திருமணமாம்..



அருமை

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்றதொரு முயற்சிக்கும், உங்கள் பக்கம் சிறக்கவும் பாராட்டுக்கள்.

ரைட்டர் நட்சத்திரா said...

karthikeyani25.blogspot.com