Thottal Thodarum

Dec 10, 2016

நீர் - நாவல் விமர்சனம்

நீர் – நாவல் விநாயக முருகன்

சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள். நீ எக்கேடு கெட்டாவது போ.. என்று தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போன மனைவியின் மேலான கோபம். கழிவிரக்கம். சந்திராவின் மீதான காமம், என சுவாரஸ்யமான நடையில் வெள்ளத்தின் பார்க்காதவன் மனதில் பயத்தையும், பதைப்பையும் உருவாக்கும் எழுத்து. என்னை போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரீப் ப்ளே மாதிரியான விஷயம்தான் என்றாலும், சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. என்ன வெள்ளம் வடிய ஆரம்பித்ததும், கதை (அ) நிகழ்வின்  போக்கில் உள்ள சுவாரஸ்யமும் வடிந்து, அடிக்கடி கதை நாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடியில் தம்மடிக்க போவது போல கதையின் முடிவும் ஆனது  வருத்தமே. 

Post a Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்.