சிம்புத்தேவனின் மூன்றாவது படம், தமிழில் ரொம்ப நாளுக்கு பிறகு வந்திருக்கும் முழு நீள கெளபாய் படம். என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கோடை விடுமுறையில் வந்திருக்கும் படம் பெரிதாக கதைக்கெல்லாம் மெனக்கெடவில்லை. ஒரு வைரத்தை தொலைத்த லாரன்ஸை வைரத்தை கொண்டு வந்தால் தான் அவர் வளர்க்கும் பிள்ளைகளை ஒப்படைப்பேன் என்று கூறிவிட, அவருக்கு உதவுவதாக மெளலி, ரமேஷ்கண்ணா, இளவரசு கும்பல் சொல்ல, அதற்கு பிரதியுபகாரமாய் தங்கள் கெளபாய் கிராமத்தை அவனை போலவே இருந்த சிங்கம் என்கிற லாரன்ஸை போல நடித்து வில்லன்களை பயமுறுத்தினால் அவருக்கு அவர்கள் கோயிலில் உள்ள வைரத்தை தருவதாய் சொல்ல, அதற்காக அங்கே போகும் லாரன்ஸுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தான் படம். எல்லா கெளபாய் படங்களை போலவே மரத்தால் ஆன வீடுகள், குதிரைகள், கெள்பாய் டிரஸுகள், கோயில் ஐயருக்கு கூட தலையில் கெளபாய் தொப்பி, பாஸ்மாக் என்று டாஸ்மாக்குக்கு பதிலாய் சரக்கு கடை, காபி டேவின் வாசலில் மசால் வடை போடும் டீக்கடை, கிராமத்துக்கு பெயர் ஜெய்சங்கர்புரம், முதலில் குடிவந்தவர் கர்ணன் என்கிற கேமராமேன், அப்புறம் எம்ஜிஆர், பின்னர் அசோகன், கடைசியாய் வந்தவர் ஜெய்...