Posts

கொத்து பரோட்டா - 28/03/16

தோழா இரண்டு ஆண்களுக்கு இடையே ஆன நட்பின் நெருக்கத்தை சொல்லும் படம். ப்ரெஞ்சில் வெளியான அன் டச்சபிள் எனும் படத்தின் அஃபீசியல் ரீமேக். அது ஒரு உண்மைக்கதை. அதை இங்கே கொஞ்சம் எக்ஸ்டெண்ட் செய்து இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் மிஞ்சினாலும் நெஞ்சை நக்கக் கூடிய படமாய் போய்விடக்கூடிய அத்துனை வாய்ப்புகள் உள்ள கதை. ஆனால் அதை மிகைப் படுத்தாத நடிப்பினாலும், ஒவ்வொரு காட்சியின் ட்ரான்ஸிஷனாலும், வசனத்தினாலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்தியாகட்டும், நாகார்ஜுன் ஆகட்டும் பர்பெக்ட்டாய் நம் மனதினுள் பதிந்துவிட்டார்கள். ராஜு முருகன், முருகேஷ் பாபுவின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். தேவைபடுகிற இடத்தில் தேவைக்கதிகமாய் இல்லாத வசங்கள். சில சமயங்களில் சீரியஸாய் ஆரம்பிக்கிற சீனை அப்படியே சிரிப்பாய் மாற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வழியாகவும், சிரிப்பாய் ஆரம்பிக்கும் காட்சியை தொண்டையை அடைக்கும் காட்சியாகவும் மாற்றக்கூடிய வலிமையுள்ள வசனங்கள். நாகார்ஜுனுக்கு வயசே ஆகாதா?. மனுஷன் நாளாக நாளாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மில்லியனர் என்றதும் அதில் நாகார்ஜுனை பொருத்திய காஸ்...

கொத்து பரோட்டா - 21/03/16

”இந்த வாட்டி யாரு வருவாங்க சொல்லுங்க?” என்ற அந்த அம்மணியிடம், “நிச்சயம் மாற்றம் வரதுக்கான வாய்ப்பிருக்குன்னேன். அப்ப நீங்க திமுகவா? அப்படின்னாங்க... “அப்படியில்லைங்க.. வெள்ளத்துக்கு முன்னாடி நிச்சயம் அதிமுகவுக்கு 70 சதவிகிதம் வாய்ப்பு இருந்துச்சு. இப்ப அதுக்கு சாத்தியமில்லை. திமுகவுக்கு கூட்டணி வலு இல்லைன்னு சொல்றீங்க? சரி.. அப்படி பார்க்கும் போது அதிமுக, திமுக ரெண்டுத்துக்கு சரி சதவிகித வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை விஜயகாந்த், பா.ம.க, பா.ஜ.க, ம.ந.கூன்னு ஆளாளுக்கு ரெண்ட்ரொரு சீட் ஜெயிச்சுட்டாலும், காலக் கொடுமை இவங்க உதவியிருந்தாத்தான் ஆட்சி அமைக்க முடியும்னா, நிச்சயம் அவங்களே திமுகவுக்குத்தான் போவாய்ங்க.. என்ன நீங்க மைனாரிட்டி திமுகன்னு அஞ்சு வருஷத்துக்கு புலம்பிட்டிருக்கலாம். அம்பூட்டுத்தான். என்ன நான் சொல்றது? என்று போது “தம்பி உங்களுக்கு உலகம் தெரியலை.. ஏன்னா நேத்து நான் பல பேரை சந்திச்சேன் அங்க அவங்ககிட்ட பேசினப் போது , தெளிவா ஒண்ணு தெரிஞ்சுச்சு, அடுத்தது அம்மாதான்னு. அப்படியா? யாரை சந்திச்சீங்க? எந்த ஏரியாவுல போய் சந்திச்சீங்க? என்றேன் ஆவலுடன். நம்ம மகளிர் அணி கூட்டத்திலதான் என்றா...

சாப்பாட்டுக்கடை - மதுரை சாரதா மெஸ்

Image
நீங்க பாட்டுக்கு பேலியோவுக்கு போயிட்டீங்க.. எங்களுக்குத்தான் சாப்பாட்டுக்கடை போஸ்ட் இல்லாம போயிருச்சுன்னு நிறைய பேர் என்னை நேரில் சந்திக்கும் போது கேட்பார்கள். என்னதான் பேலியோவில் இருந்தாலும் அவ்வப்போது சீட்டிங் டேயில் புல் கட்டு கட்டுவது இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிற நிலையில் சமீபத்தில் போன உணவகம் தான் இந்த மதுரை சாரதா மெஸ். முன்பு திருவல்லிக்கேணியில் இருந்த இந்த உணவகத்தில் கோலாவும் உருண்டையும், அயிரை மீன் குழம்பும், ஸ்பெஷல். பின்பு அவ்விடத்தை காலி செய்ய சொன்னதினால் சில பல வருடங்கள் இல்லாமல் இப்போது சி.ஐ.டி. நகர் மேயர் துரைசாமி அலுவகத்திற்கு எதிரே சின்னக்கடையாய் மீண்டும் அதே மதுரை சாரதா மெஸ். வழக்கம் போல அவர்களது ஸ்பெஷலான கோலாவையும், மீல்சையும் ஆர்டர் செய்தாகிவிட்டது. சாப்பாட்டிற்கு சிக்கன், மீன் குழம்பு மட்டுமே. மட்டன் குழம்பெல்லாம் இல்லை. பட்.. வீட்டுச் சாப்பாடு போல அருமையான சாப்பாடு, மட்டன் சுக்கா நல்ல இளம் கறியாய் சமைத்து கொண்டு வந்தார்கள். கோலா உருண்டை எல்லா கடைகளை விட கொஞ்சம் பெருசாகவே இருந்தது. கிரிஸ்பியாய் இருந்தாலும், சூடு இல்லாததால் எனக்கு கொஞ்சம் பிடிக்கவில...

கொத்து பரோட்டா - 14/03/16

விகடன் ப்ளாக் என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. நான்கு பக்கங்கள் நாக்குத் தள்ள வலைப்பூக்கள் எழுதி வந்தவர்கள் எல்லாம், ட்வீட்டருக்கும், பேஸ்புக்கும் போய்விட, எழுத ஆளே இல்லாமல், திரட்ட வலைப்பூக்களே இல்லாமல் தமிழ் மணம் போன்ற திரட்டிகள் எல்லாம் காய்ந்து போயிருக்க, இத்தனை வருஷம் கழித்து விகடன் ப்ளாக் ஆரம்பித்திருப்பது ஏன் என்றே புரியவில்லை. விகடன் ப்ளாக் என்பது ஒரு திரட்டியைப் போல இருந்தால் கூட பிரச்சனையில்லை. இவர்களுக்கான கட்டுரையை நாம் அவர்களுக்கு மெயில் செய்து அவர்கள் செலக்ட் செய்த கட்டுரையை பின்பு வலையேற்றுவார்கள் என்பதும், அப்படி செலக்ட் ஆன கட்டுரை, படங்களை விகடன் வலைத்தளத்தில் வெளியிடுவதினாலும் பெருவாரியான மக்களுக்கு ரீச் ஆகும் என்றும், பிரதமர் எல்லாம் தமிழில் படித்து விருந்துக்கு கூப்பிட வாய்ப்பிருக்கிறது என்று பப்ளிக்குட்டி கொடுப்பதெல்லாம் செம்ம மொக்க ஐடியா. என்னைப் பொறுத்தவரை விகடன் ப்ளாக்க விட, சொந்த வலைப்பூ, பேஸ்புக், ட்வீட்டர் போன்றவற்றில் இயங்கும் சுதந்திரம் இதில் இருப்பதாய் தெரியவில்லை. அத்தோடு, இணையத்தை பொருத்தவரை தொடர்ந்து எழுதுகிறவர்கள் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வளர்ந்து கொண...

கொத்து பரோட்டா -07/03/16

ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்திப் பார்க்கலாம் என்ற நடத்திய போது வந்த ரிசல்ட்டுகள் குழப்பமாய் இருந்தாலும் வேறொரு விஷயத்தை தெளிவாக சொல்கிறது. ட்விட்டர் ஓட்டெடுப்பில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம்தான் இருக்கிறது என்பது போல வருகிறது. பேஸ்புக்கில் அதெல்லாம் வரவே வராது என்கிறார்கள். நடுநிலை வாதிகள் என்ற க்ரூப்பே காணவில்லை. கொஞ்ச மாதத்திற்கு முன் சகாயம் தான் முதல்வர் என்று ஒரு க்ரூப்பும், ஏன் கெஜ்ஜரிவாலை தமிழ் நாட்டு முதலமைச்சராக்கக் கூடாது என்று ஒரு க்ரூப்பும் பேசிக் கொண்டிருக்க, ம.ந.கூ என்ற ஒன்றைப் பற்றி ஓட்டெடுத்தால் ஒட்டெடுப்பை கூட சீந்த மாட்டேன் என்கிறார்கள். சும்மா போடுற ஓட்டுக்கே இப்படியென்றால் நிஜ ஓட்டெடுப்பில் என்னவாகுமென்று புரிந்தது. மக்களைப் பொறுத்தவரை ஒருத்தரையே தொடர்ந்து ஆளவிடுவது இல்லை என்ற முடிவில் இருப்பதாலும், இவர்கள் ரெண்டு பேரைத் தவிர வேறொரு க்ரூப் ஸ்ட்ராங்காக வரவில்லை என்பது தான் உண்மை நிலை. எலக்‌ஷன் தேதி அறிவிப்புக்கு ரெண்டொரு நாள் முன்பு கட்சி ஆரம்பித்த அப்துல் கலாம் ஆலோசகரின் கட்சியை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இதன் நடுவில் சீமான் வேறு கம்யூனிஸ்...

கொத்து பரோட்டா - 29/02/16

Image
அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நான் விமர்சனம் செய்தால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளை விட, பா.ம.க, சீமான் போன்றோரின் கட்சியில் உள்ளவர்கள் மிக மரியாதையாய் திட்டுவார்கள். நேற்று கூட பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எங்களோட யார் வேணா கூட்டணிக்கு வரலாம்னு சொன்னதை நான் காமெடின்னு சொல்லியிருந்தேன். அதுக்கு அவங்க கட்சிக் காரர் ஒருத்தர் பேஸ்புக்குல டேய்.. உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேண்டா என்று மரியாதையாய் எச்சரித்திருந்தார். வண்டலூர் மாநாடு அன்புமணிதான் தமிழகத்தின் எதிர்காலம் என்றிருக்கிறார். அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவை கலாய்த்து வேறொரு வீடியோ ஓடுகிறது. அதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலை. அவருடய முதல்வர் பதவியேற்பு வீடியோவில் இன்னொரு விஷயத்தை சொல்லி அவர்களின் தொண்டர்களை பழக்கப்படுத்தலாம். அதாவது நானும் எனது கட்சி ஆதரவாளர்களும் சகிப்புத்தன்மையை பழக்கப்படுத்திக் கொள்வோம்ங்கிறதத்தான் சொன்னேன்.

ஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள்-2

திமுகவின் ஆட்சியாய் இருக்கும் பட்சத்தில் அம்மா.. அம்மா என்று ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் இல்லாது போகும். அம்மா உணவகம் பேரறிஞர் அண்ணா உணவகமாய் மாற வாய்ப்பு உண்டு. நிச்சயம். போன ஆட்சியில் அரசு மருத்துவமனையாய் மாறிய கட்டிடம் மீண்டும் தலைமை செயலகமாய் மாறும். அண்ணா நூலகம் சிறப்பாக இயங்கும். ஏற்கனவே அரை குறையாய் போடப்பட்ட ரோடுகள் மீண்டும் போடப்படும். கார்பரெஷன் கக்கூஸுகளின் காண்ட்ரேக்ட் மீண்டும் இம்முறை ஆட்சிக்கு வருகிறவர்களின் கைகளில் மாறும். அதிமுக ஆட்சியில் யாருக்கும் பெரிய அதிகாரமில்லை, நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போல எப்போது வேண்டுமானாலும் பதவி போகலாம் என்ற நிலை இருக்கும். அது மாறும் கட்சியில் இருக்காது என்பதினால் பதவி கிடைத்தவர்களின் அதிகார ஆட்டம் அவரவர் ஏரியாக்களில் அதிகமாய் இருக்கும். போட்ட காசை எடுப்பதற்கு காசு வாங்கினாலும், நிச்சயம் வேலை நடக்கும்.  மேற் சொன்ன மாற்றங்கள் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அஃதே சீரிய முறையில்  நடக்கும்.  கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா -22/02/16

Image
தேர்தல் ஜுரம் ஆரம்பமாகிவிட்டது. ஆளும் அரசு கட்டங்கடைசியாய் 110 விதிகளின் படி அறிவிப்பாய் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஏற்கனவே கொடுத்த அறிவிப்புகளின் நிலை எல்லோருக்கும் தெரியுமாதலால் யாரும் அதை சட்டை செய்ததாய் தெரியவில்லை. எதிர்கட்சியாய் இருப்பவர்களோ அதையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சொல்வது ஒன்றும் தவறல்ல இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் அதே 110 விதியை பின்பற்றாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆட்சியில் தொடர்ந்த நல்லதை மீண்டும் தொடர்ந்த பழக்கம் நம் தமிழ்நாட்டு அரசியலில் இருந்ததே கிடையாது.

ஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள் -1

மதுவிலக்கு வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தால் அதனால் நாட்டு மக்களுக்கு நடக்கப் போகும் முக்கிய மாற்றங்களைப் பற்றி ஊகிக்கலாமா? முதல் கையெழுத்தாக மதுவிலக்கு என்று சொல்லி வருகிறார்கள். திமுகவாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அன்றிலிருந்து மதுவிலக்கு கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்கப்படும் என்று அறிவிப்பார்கள். மநகூ, பா.ம.க, எல்லாம் மாறி ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத காரியம் ஆனாலும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் முதல் கையெழுத்தாக மது விலக்கை கொண்டு வர முயற்சிப்பார்கள். ஆனாலும் அது நடக்காது. அதிமுக, பா.ஜ.க இரண்டு பேரும் கூட்டணீ சேர்ந்தால் நிச்சயம் மதுவிலக்கு என்பதே கிடையாது. அடுத்த மாற்றம் பற்றி அப்புறம் பேசலாம். கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா - 15/02/16

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இணையமெங்கும் இனி தமிழீழம் கிடைக்காது. அது இது என்று ம.ந.கூ கூட்டம் ஒரு புறமும். முன்னாடி இப்படி பேசினியே இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சிப்ப? என்பது போன்ற ரீதியில் கேள்விகளாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ இப்போது தான் தமிழ் அரசியலுக வரலாற்றில் முதல் முறையாய் போன கூட்டணியில் திட்டியவர்கள் ஒன்றாய் கூடி ஓட்டுக் கேட்க வருகிறார்ப் போல.. உதிர்ந்த ரோமம், என் அம்மாவுக்கு பொறக்கலை, துரோகத்தின் மொத்த வடிவம், என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தால் சாட்டைய எடுத்து அடியுங்கள் என்பது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு, மறந்து ஓட்டுப் போட்டவர்கள் தான் நாம் என்பதையும் மறந்து கருத்து சொல்லிக் கொண்டேத்தானிருக்கிறோம். சமீபத்தில் ஒர் அதிமுக முக்கிய பிரமுகரிடமும், அவர்களின் பேரவை உறுப்பினருடனும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் வெற்றி வாய்ப்பு எப்படியென? கூட்டணி தான் முடிவு செய்யும். ஏன்னா.. வெள்ளத்திற்கு முன்னாடி எங்களுக்கும் என்பது சதவிகிதம் என்றால் இப்போ ஐம்பதுக்கு ஐம்பது ஆகிவிட்டது என்று தோன்றுகிறது முக்கியமாய் திமுக+ காங்கிரஸ்+ தேமுதிக சேர்ந்தா...