Thottal Thodarum

Aug 17, 2017

கொத்து பரோட்டா 2.0-39

கொத்து பரோட்டா 2.0-40
Play test – Black Mirror
கூப்பர் ஒரு அமெரிக்கன். உலகம் சுற்றும் வாலிபன்.  லண்டனில் சுற்றி வரும் போது சோஞ்சா எனும் டெக் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். அன்றிரவை அவளுடன் கழிக்கிறான். அடுத்த நாள் தன் டூரை தொடர நினைக்கும் போது அவனுடய க்ரெடிட் கார்ட் நம்பர் திருடப்பட்டு, பயணத்திற்கு பணமில்லாமல் போகிறது. வேறு வழியில்லாமல் மீண்டும் சோஞ்சாவிடம் போய் உதவி கேட்க, “ஆட் ஜாப்” எனும் ஆப் மூலம் ஒரு பிரபல கேம் கம்பெனியின் விளையாட்டை டெஸ்ட் செய்யும் ஆளாய் போகிறான். அங்கே அவனுடய கழுத்துக்கு பின் ஒர் பட்டன் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, கிட்டத்தட்ட விர்சுவல் ரியாலிட்டி போன்ற ஒரு விளையாட்டை விளையாட சொல்கிறார்கள். அதில் அவன் தன் முடிவுகளை சொல்ல, இதனிடையில் அவனை அங்கே கூட்டிச் செல்லும் பெண் போனவுடன் அவனுடய செல் போனை அணைக்கச் சொல்கிறாள். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் அக்ரிமெண்ட் காப்பி எடுத்து வர அவள் போகின்ற நேரத்தில் கூப்பர் போனை ஆன் செய்து அந்த மெஷினின் படத்தை சோஞ்சாவுக்கு அனுப்புகிறான்.

முதல் ஆட்டத்தை முடித்தவுடன் அந்த கேம் கம்பெனியின் ஓனர் தங்களிடம் இன்னும் வெளியிடப்படாத பீட்டா கேம் ஒன்று உள்ளதாகவும். கொஞ்சம் அபாயகரமானதாக இருக்கும் எனவும். உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் மனதிற்கு ஆபத்து. நீங்கள் டெஸ்ட் செய்ய விரும்பினால் நீங்கள் எதிர்பார்காத அளவுக்கான பணம் தருவதாகவும் சொல்ல, என்ன பெரிதாய் ஆட்டம் ஆடிவிடப் போகிறார்கள் என்று கூப்பர் ஓகே என்கிறான். அதன் பின்பு நடக்கும் விஷயங்கள் திடுக், திடுக் சமாச்சாரம். செம்ம சுவாரஸ்யம். க்ளைமேக்ஸ் அதை விட பெரிய ட்விஸ்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமாவிற்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரிக்கை விடுத்திருந்த தமிழ் சினிமா குழுவினருக்கு 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதம் வரி என்றும் அதற்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதம் வரி என்ற அறிவிப்பு அஹா.. சூப்பர் என்று கொண்டாட முடியவில்லை. கிட்டத்தட்ட “செக்” வைத்த நிலை. அதிக வரி தமிழ் சினிமாவை அழித்துவிடும், ஹிந்தி படத்துக்கும் தமிழ் படத்துக்கும் ஒரே விதமான வரியா? என்றும் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் பிரச்சனைதான் என்ன? தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே 30-15 சதவீத வரி இருக்கத்தானே செய்கிறது? என்ன தமிழக அரசு கொடுக்கும் வரி விலக்கு இனி இல்லை. அவ்வளவுதானே? அதற்காக கொடுக்கப்படும் மாமுல் தொகையை கணக்கிடப்படும் போது வாங்காமல் வரி கட்டுவதே உசிதமென பல சிறு, குறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் எண்ணம்.  காசு கொடுத்து வரிவிலக்கு வாங்கியாகிவிட்டதே என்ற ப்ரெஷரில் ஜூன் மாதம் ரிலீசாகும் சிறு முதலீட்டு படங்கள் வரிசைக் கட்டி நிற்கிறது. 

இனி வரும் காலங்கள் மல்ட்டிப்ளெக்ஸை விட சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களுக்கு நல்லது என்ற ஒரு “டாக்”  தற்போது சினிமா ஆட்களிடம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏன் மல்ட்டிப்ளெக்ஸின் டிக்கெட் ரேட்டையும் நூறு ரூபாய்க்கு  கொண்டு வரக் கூடாது என்றும் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி நூறு ரூபாய் ஆக்கும் பட்சத்தில் முன்பிருக்கும் 120 ரூபாய்க்கு பதிலாய் 118 தான் வரும். ரெண்டு ரூபாய் குறைவு என்கிறார்கள். போன வாரம் வரைக்கும் வார இறுதியில் எங்களுக்கு கட்டுப்படியாகிற விலையில் டிக்கெட் விலையை நிர்ணையிக்கும் உரிமையை தர வேண்டுமென்றவர்கள் இன்றைக்கு நூறு ரூபாய்க்குள் டிக்கெட் விலையை வைத்துக் கொள்ள வேண்டுமென்று விழைகிறார்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் டிக்கெட் விலையை ஏற்ற கோரிக்கை. அதே நேரத்தில் இன்னொரு பக்கம், தியேட்டர்காரர்கள் டிக்கெட் விலையை கொஞ்சம் அதிகப்படுத்தி தர மட்டுமே கோரிக்கை. காரணம் அரசு நிர்ணையித்துள்ள தொகைக்கு மேலே தான் ஆல்ரெடி வசூல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசு ஒரிஜினல் விலையில் இருந்து 50 சதவிகிதம் ஏற்றினால் கூட இன்றைக்கு வாங்கு ரேட் தான் வரும். எனவே கேட்டு பிரயோசனமில்லை என்பது புரிந்ததினால் தான்.

உதாரணமாய் மாநகராட்சி ஏரியாவில், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் 50 ரூபாய் தான் அதிக பட்ச விலை. சென்னையில் கேசினோ, ஏவிஎம்.ராஜேஸ்வரியை தவிர யார் இந்த தொகைக்கு டிக்கெட் விற்கிறார்கள்? என்பது அனைவரும் அறிந்ததே. அரசு விலை ஏற்றம் என்று அறிவிக்கும் பட்சத்தில் இனி 50 ரூபாய் இல்லை. 80-100 ரூபாய் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் பட்சத்தில் தியேட்டர்காரர்களுக்கோ, விநியோகஸ்தருக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்தவிதமான வசூல் உயர்வும் வரப் போவதில்லை. அதனால் தான் மெல்லிய கீச்சை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

100 ரூபாய்க்குள் டிக்கெட் என்றால் 18 சதவிகிதம் வரி என்பது நிச்சயம் ஒரு நல்ல மூவ். மாநில அரசும் அஃபீஷியலாக டிக்கெட் விலையை 100க்கு கீழ் சிங்கிள் ஸ்கிரீனுக்கு உயர்த்திக் கொடுத்துவிட்டால் நிச்சயம் அதற்குரிய வரியோடு வசூல் செய்ய ஏதுவாக இருக்கும். அதே நேரத்தில் நிச்சயம் மல்ட்டிப்ளெக்ஸுக்கு கட்டுப்படியாகுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் தரும் வசதி அப்படி. ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும் போது தற்போது உள்ளது போல, வரியுடன் டிக்கெட் விலை வசூலிக்கப்படுமா? அல்லது டிக்கெட் விலை மற்றும் வரியாய் வசூலிக்கப் போகிறார்களா? என்ற குழப்பமும் இந்த 100 ரூபாய்க்கு  18 சதவிகிதம் வரி எழுப்பியுள்ளது.  மந்திய மாநில அரசுகளின் உடனடி முடிவும், அறிவிப்பும் தான் நிறைய குழப்பங்களை தெளிய வைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் நெக்ஸ்ட் என்ற ஒர் புதிய அறிவிப்பு தமிழ் இணையம் பயன்படுத்தும் பலரிடம் என்னது அது என்ற கேள்வியை எழுப்புயுள்ளது. சாதாரண டிவி பார்க்கும் மக்களுக்கு சன்னின் இன்னொரு சேனல் போல என்ன இன்னும் டிவியில வரவேயில்லையே? என்று குழப்பமும் ஏற்படுத்தியிருக்க, இண்டர்நெட் மூலம் மொபைலில், இணைய சப்போர்ட் இருக்கும் டிவிக்களின் மூலமாக, மாதம் ஐம்பது ரூபாய்க்கு சன் குழும சேனல்கள் மற்றும் அவர்களுடய படங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் லைவாகவோ, அல்லது விரும்பிய நேரத்திலோ எப்போது வேண்டுமானாலும், பார்க்கலாம் என்று புரிய ஆர்மபிக்கும் போது அட என்று தோன்றினாலும், இவர்களின் எண்ட்ரி மிகவும் லேட் .  ஓ.டி.டி. ப்ளாட்பார்ம் எனும் இந்த ஓவர் த டாப் டெக்னாலஜிக்கு நம்மூர் விஜய் டிவி ஸ்டார் க்ரூப்பின் ஹாட் ஸ்டார் மூலமாய் வலம் வந்து அங்கே ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு தனியே விளம்பரம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பதைப் பார்த்தபின் தான் அவனே இவ்வளவு செய்யும் போது நம்ம கிட்ட எம்பூட்டு இருக்கு என இறங்கியிருக்கிறார்கள். நெட்பிளிக்ஸ், ஹூலு, அமேசான் ப்ரைம், யுப்பி டிவி  என ஏற்கனவே இந்த ஓ.டி.டி. டெக்னாலஜியில் கால் பதித்து கலக்கிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சன்னின் இந்த முடிவு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது.

ஹிந்தியில் பிரபல டிவி மற்றும் மோஷன் பிக்க்சர் தயாரிப்பாளர்களான பாலாஜி டெலி பிலிம்ஸ் அவர்களுக்கென தனி ஓ.டி.டி ப்ளாட்பார்மாக ஆல்ட் பாலாஜி என ஒன்றை ஆரம்பித்து, தடாலடியாய் பல ஒரிஜினல் கண்டெண்டுகளாய், சீரீஸ், மற்றும் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சோனி லிவ்,  என ஏகப்பட்ட டிஜிட்டல் ப்ளாட்பார்ம் வளர்ந்து கொண்டிருக்கிறது.  டிவியை ஆப்பின் மூலமாய் பார்க்கும் வசதி, அது மட்டுமில்லாமல் டிவி மார்க்கெட்டை மட்டுமே வைத்துக் கொண்டு ஜல்லியடிக்காமல், வித்யாசமான, போல்டான கண்டெண்டுகளை கொண்டு, மக்களை ஈர்பது ஒரு புறம் என்றாலும், இனி வரும் இண்டெர்நெட் காலங்களில் டிவி நிகழ்சிச்களை என்பது வெறும் சாட்டிலைட் கேபிள் ஒளிபரப்பு என்றில்லாமல் ஒர் புதிய பரிணாமத்தை இந்த ஓ.டி.டி டெக்னாலஜி மூலம் அடையப் போகிறது. ஓ.டி.டி. பிங்கி வாட்சிங், ஒரிஜினல் கண்டெண்ட், க்ரோம் காஸ்ட், ஆண்ட்ராய்ட் டிவி, ஸ்மார்ட் டிவி என்பதை பற்றியெல்லாம் இனி வரும் வாரங்களில் பார்ப்போம்.  ஒரு விதத்தில் தமிழ் சினிமா உலகிற்கு ஒர் நல்ல விஷயம். இனி சாட்டிலைட் சேனல்களின் ரைட்சுகளை மட்டுமே நம்பியில்லாமல், இம்மாதிரியான இணைய வழி ப்ளாட்பார்ம்களுக்கு தனித்தனியே விற்க வாய்ப்பும், புதிய புதிய கண்டெண்டுகளுக்கான டிமாண்டும் ஏற்படப் போகிறது. லைட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Post a Comment

No comments: