Posts

பதிவர் சந்திப்பு 27/03/10

Image
பதிவர் சந்திப்பு நடந்து கொஞ்ச மாசமாகிவிட்டது. அடிக்கடி பதிவர்கள் தனித்தனியாகவும், வெளியூரிலிருந்து வரும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதும் ஒரு சில பேரை தொடர்ந்து சந்தித்தாலும், எல்லோரும் ஒரு சேர சந்தித்து நாளாகிவிட்டது. அதனால் வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் சந்திப்போமா..?. இம்முறை நாம் வழக்கமாய் சந்திக்கும் பீச்சில் இல்லாமல், ஒரு கூரைக்கு கீழ் ஒருவருடன், ஒருவர் அளவளாவி மகிழ்வோம். அத்துடன் சென்னை இணைய எழுத்தாளர் குழுமத்தை ஆரம்பிக்க, முதலடியை எடுத்து வைப்போம். இதற்கு எல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க அழைக்கிறோம் உங்கள் சார்பாக. சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு நாள் : 27/03/10 கிழமை ; சனிக்கிழமை நேரம் : மாலை 6 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6. முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். சென்னை: தொடர்புக்கு மணிஜி :9340089989 M.M.Abdulla -9381377888 cablesankar -9840332666 லக்கிலுக்: 9841354308 நர்சிம் ; 9841888663 பொன்.வாசுதேவன் : 999454101 0 மேலே உள்ள நான்கு லோகோக்களில் எதை நம்முடைய லோகோவாக அமைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் அபிப்...

Joyfull சிங்கப்பூர்-3

Image
காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” என்றவரிடம் “நீங்க ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார். எனக்கு கூட அவர் சொன்ன காரணத்தை நினைத்து பாவமாய்தான் இருந்தது. காலையில் நம்ம ப்ளாக்கில் லோக்கல் நம்பரை கொடுத்தவுடன் தொடர்ந்து போன் வர ஆரம்பித்தது. வந்த போன்களை பார்த்து பிரபாகர் “அண்ணே.. சிங்கப்பூர்ல இவ்வளவு நண்பர்களா? என்று அதிசயப்பட்டார். புண்ணாக்கு மூட்டை பாலாவும், என்னுடய வாசக நண்பர் ஜெய்கிருஷ்ணாவும் இன்றே சந்தித்தாகவேண்டும் என்று சொல்ல, இரவு லிட்டில் இந்தியாவில் சந்திப்பதாய் பிக்ஸ் செய்து கொண்டு, வண்ணத்திரை தொலைக்காட்சியில் விக்ரம் படம் போட்டிருந்தார்கள் அதை பார்த்துவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு, மாலை அவரக்ளை சந்திப்பதற்காக கிளம்பினோம். அருமையான எம்.ஆர்.டி, மற்றும் பஸ் பயணங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும், கட்டமைப்பு நேர்த்திகளையும் சற்றே பொறாமையோடு வியந்தேன். வழியில் விஜய் ஆனந்தை எம்.ஆர்.டி ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு, முஸ்தபாவின் வாசலில் காத்திருக்க சொன்ன ஜெய்யையும், பாலாவை சந்தித்தோம்...

கொத்து பரோட்டா – 22/03/10

Image
சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம் வருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% இலங்கை தமிழர்களுக்காக தன் உயிரை விட்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றிய தன் சாட்சியத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்பவாத செய்ல்களை பற்றியும் இயக்குனர் ராம் எழுதியிருக்கிறார். காலம் கடந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் தெரிய வேண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். முத்துகுமாரின் தியாகம் எப்படி இருட்டடிக்கபட்டது என்பதை விளக்கும் கட்டுரை. எனக்கு கோபமும் அழுகையும் ஒரு சேர வந்தது அதை படித்தவுடன். முத்துகுமார் யாரோ ஒருவன் அல்ல என்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனரும் கூட. அந்த கட்டுரையை படிக்க ...

முன் தினம் பார்த்தேனே - திரை விமர்சனம்

Image
கொஞ்ச நாளுக்கு முன்னால் இதே கதைகளனில் ஒரு படம் வந்து போனது. அது சொல்ல..சொல்ல இனிக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் அவன் கடந்து போகும் பெண்கள், அவர்களின் காதல், அவனின் காதல் என்று போகும் படம். இதுவும் அந்த வகைதான். சஞ்சய் வெளிநாட்டில் உட்கார்ந்தவாறு வாய்ஸ் ஓவரில் கதை சொல்ல ஆரம்பிக்கிறான். சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும், தனக்கென ஒரு பெண் அமைய மாட்டாளா என்று ஏங்கி, ஏங்கி அலைய, ஒருத்தி கிடைக்க, அவளிடம் நெருங்க முயற்சிக்கும் போது, அவளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்திருப்பது தெரிய, பின்பு ஆர்த்தியுடன் அவன் சுற்ற, ஊரில் பெரிதாய் நல்ல பேர் இல்லாத அப்பெண்ணிடம் உள்ள நல்ல குணத்தை கண்டு அவளுடன் ப்ரோபோஸ் செய்ய, ஊர் பேசியது உண்மை என்பது போல ஒரு விஷயம் அவனுக்கு வர, நொந்து போன அவன் வேறு ஒரு பெண்ணை ப்ரபோஸ் செய்துவிட, ஒரு கட்டத்தில் உண்மை தெரிய, அவளை பார்க்க போகிறான் என்ன ஆனது என்பதை வெண் திரையில் காண்க. புதுமுக கதாநாயகன், நல்ல உயரமாய், அழகாய், பழைய அஜித் போல இருக்கிறார். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும், மெல்ல மெல்ல பெரிதாய் குறை சொல்லும் அளவிற்கு ஏதுமில்லை. முதல் கதாநாயகி,பூ...

Joyfull சிங்கப்பூர்-2

Image
                                                      சிங்கையின் சுப்ரீம் கோர்ட்   எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன். குழம்பத்திலிருந்து வெளியே வருவதற்குள் உடுக்கை ஆங்கிலம் பேசுகிறேன் என்று சைனீஸில் உட்காருங்கள், சீட் பெல்ட்டை போடுங்கள் என்று சொல்ல, அடுத்த சில நொடிகளிள் 35,000 அடிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக கீழிறங்க ஆரம்பித்தது. முதல் வெளிநாட்டு பயணம், வெற்றிகரமாய் அயல் மண்ணில் கால் வைக்க போகிறோம் என்ற உணர்வே உள்ளுக...

Joyfull சிங்கப்பூர்

Image
ஒ ரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம். சுவாமி ஓம்காருடன் என் பயணம் என்றவுடன், என்னை பற்றி தெரிந்தவர்கள் “பாவம் சாமி” என்று வருத்தபட்டதாக சொன்னார்கள். “அவருக்கு கூட வர்றதுக்கு வேற ஆளே கிடைக்கலையா..?” என்று எல்லோர் மனதிலும் கேள்வி இருந்தது. நான் ஒரு ஆன்மீகவாதி என்பதை உணர்ந்தவர் ஆதலால் ஓம்கார் ஒரு புன்னகையுடன் “சொன்னா சொல்லிட்டு போகட்டும்” என்றார். என்னா பெருந்தன்மை. வேற வழி. மதியம் இரண்டு மணி விமானத்தை பிடிக்க, காலை 11.00 மணிக்கு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். நானும் என் மனைவியும் சாமிக்காக காத்திருந்த போது, அவரும் மெல்ல வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் போர்டிங் போட கிளம்பிய போது ஒரு வெண் சட்டை உருவம் எங்களை கடக்க, நான் “அண்ணே” என்று கூப்பிட, சட்டென திரும்பினார்… அப்துல்லா.. அலுவலக விஷயமாய் யாரையோ செண்ட் ஆப் செய்ய வந்திருந...

கொத்து பரோட்டா - மினி -16/03/10

Image
பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857,804, மரீனா மாண்டிரியன, பாலா, விஜய், ஜெகதீஷ், ராம், அறிவிலி, சுதாகர், ஜான்சன், சாமி, ஒம்கார், வீரமாகாளி, பெருமாள் கோவில், தெருவோர லெக் பீஸுகள், சண்டெக் , எஸ்பிளனேட், ரத்னம், ப்ஃளையர்ஸ், சிக்கன் ரைஸ், கொத்து பரோட்டா, ராம், டைகர், பர்கர், லாலிபாப், ஹேனக்கன், ஷீவாஸ்ரிகல் 12 வருஷம், ஐபாட், ஐ போன், லாப்டாப், டாலர், ஜுராங்கூன், சபாரி, ரோஸ்விக், ஜெய்கிருஷ்ணா, அப்துல்லா, கேலாங், ராபில் டவர், சிட்டி ஹால், க்ளார்க்ஸ் வாக், மால்ப்ரோ, துரியன், உயரமான, குள்ளமான, மூக்கில் ஓங்கி குத்துவிடப்பட்டு முகத்தோடு மூக்கு ஒட்டிய சீனர்கள், அவ்வளவு சிகப்பு தோலுக்கு, மேக்கப் செய்து சாயங்காலம் லேசாய் எண்ணெய் வடியும் முகங்கள், ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்.. இன்னும் நிறைய ஊரிலிருந்து வந்ததும்.. அதுவரை. கேபிள் சங்கர்

தம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்

Image
சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் கலந்து கட்டி வரும். சில படஙக்ளை பார்க்கும் போது தூக்கு மாட்டி சாகலாமா என்ற எணணம் மேலோங்கும். இந்த படம் அந்த வரிசையில். தமிழ் படத்தில் கிண்டல் செய்ததை எல்லாம் சீரியஸாக படமாக்கியிருக்கிறார்கள். ரொமப் கொடுமைடா சாமி.. முடியல.. சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் ஹீரோ..சனாகானை காதலிக்க, ஹீரோவின் அப்பாவின் நண்பர் அவர் பெண்ணை கட்டித்தர முன்வந்து நிச்சயம் செய்துவிட, இவர் மறுக்க, அவர் உண்மையை உடைக்கிறார்.பரத அவரது பிள்ளையில்லை என்று.. பின்ன என்ன அவருடய ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடிக்க வளர்ப்பு அப்பா டிக்கெட் எடுத்து கொடுக்க.. அடப்போங்கப்பா.. போய் வேற வேலைய பாருங்க. தம்பிக்கு இந்த ஊரு – சரி இருக்கட்டும் Technorati Tags: tamil film review , திரை விமர்சனம்

கொத்து பரோட்டா-08/03/10

ஓர் அறிவிப்பு சிங்கை பதிவர்கள் மற்றும் அரசின் தொடர் அழைப்பை ஏற்று (ம்ஹுக்கும்.. டேய் வேணாம்) இலக்கிய உரை ஆற்றுவதற்க்காக (பின்ன எழுத்தாளர் ஆயிட்டோமில்ல) வருகிற 10ஆம் தேதி அன்று என் சிங்கை பயணம் ஆரம்பமாகிறது. 16ஆம் வரை. நண்பர்கள் யாரும் தமிழர்களின் பழக்க தோஷத்தில், ஊரெங்கும் கட்டவுட் வைத்து வரவேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.:) (அப்படினா வையுங்கன்னு அர்த்தம்) ################################################################### நித்தயானந்தா – ரஞ்சிதா போனவாரம் பதிவுலகையே கலக்கிய ஒரு மேட்டர். இன்னும் ஒரு வாரத்தில் புஸ்ஸென ஆகிவிடும். ஒரு பக்கம் பாவம் ரஞ்சிதா என்றும், இன்னொருபக்கம் நித்யானந்தா மோசம் செய்துவிட்டார் என்றும், ஒழுக்க சிலர் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது நான் ச்ட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்று அறிக்கை விடுத்திருகிறார். இன்னொரு பக்கம் வேறு எந்த பத்திரிக்கைக்கும் செய்திகளை தராமல் தங்கள் பத்திரிக்கைகளில் மற்றும் டிவிக்களில் மற்றும் அரைமணிக்கொரு முறை ஒளிபரப்பி கீழே “தீராத விளையாட்டு பிள்ளை” பட விளம்பரத்தை போட்டு தஙக்ளீன் டி.ஆர்.பி குறையாமல் பார்த்...

அவள் பெயர் தமிழரசி – திரை விமர்சனம்

Image
தமிழ் சினிமாவில் சில தலைப்புகள் மிகவும் கேட்சியாய், வித்யாசமாய் அமைவதுண்டு, அத்தோடு அம்மாதிரியான திரைப்படங்களுக்கு வித்யாசமான விளம்பரங்கள் மிக பெரிய பலமாய் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி பட்ட அழகான கவிதையான தலைப்பில் வித்யாசமான விளம்பரஙக்ளால் என்னை ஈர்த்த படம். காஃப் லவ் எனப்படும் சிறுவயது எதிர்பால் ஈர்ப்பின் காரணமாய் வலைய வரும், பாவைகூத்து ஆடும் குடும்பத்து பெண்ணிற்கும், ஊர் பெரிய மனிதரின் பேரனுக்கும் ஏற்படும் நட்பும், பின்னாளில் அது காதலாய் மாற, அவள் மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வதால், தன்னை பிரிந்து போய்விடுவாளோ என்ற பயத்தில் அவளை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான்.நாயகன். அந்த ஒரு சம்பவம் அவளின் மொத்த வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. குற்ற உணர்ச்சியில் அவளை தேடியலையும் நாயகன் அவளை கண்டானா? இவனை அவள் ஏற்றுக் கொண்டாளா? என்பதை திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் பாராட்ட பட வேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் முத்தையா அவர்கள். துல்லியமான உறுத்தாத ஒளிப்பதிவு. அடுத்து விஜய் ஆண்டனி. அருமையான இரண்டு பாடல்களும், குறிப்பாக படம் நெடுகிலும் ஓடும் ஒரு ஆழ்ந்த சோக வயலி...