24 சலனங்களின் எண். விமர்சனம் -1
நல்ல வாசிப்பாளரிடமிருந்து பாராட்டு. அதுவும் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு. கொஞ்சம் வெட்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நன்றி Pachaiyappan Ge வணக்கம்.சார்..நான் பச்சையப்பன். தி.மலை.உங்கள் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.கரைந்த நிழல்கள், கனவுத்தொழிற்சாலைக்குப் பிறகு திரையுலகைப் பற்றியதான நல்ல நாவல்.சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை வழங்கிற்று.வாழ்த்துகள்.. இரண்டு மட்டுமல்ல..முகநூலில் பாலகுமாரனின் கல்லூரிப்பூக்கள் நாவலையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளேன்..திரையுலகின் உள்ளிருந்து எழும் உண்மையான குரல்..வெறும் நாவல் அல்ல..பலரின் வாழ்வு என்பதை எளிதில் வாசகன் உணர்ந்து விடுவான்..ஒரே குறை..ஆட்டிட்யூட்..போன்ற வார்த்தைகள் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகனுக்கு பிரதியை அந்நியப்படுத்திவிடும்..நன்றி நிச்சயம் தங்கள் படைப்பு தகுதியானதே..ஒரு வாசகனாக என் கணிப்பு பொய்ப்பதில்லை.இலக்கிய உலகில் நல்லதொரு அங்கீகாரமாக விருதைப்பெறும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.சுஜாதாவின் படைப்புகளுக்குரிய readability,அ.மித்ரனின் எளிம,பாலாவின் உணர்வுபூர்வமான கதை அனைத்தையும் உங்கள் நாவல் கொண்டுள்ளது.வெல்டன் சார். Nandri Pachaiyappan G...