கலிகாலம்.
நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல..
சிவகுமார் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு அண்ணாசாலை புகாரி ஓட்டலுக்கு முன் வண்டியிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு சுயநினைவு இழந்து காணப்பட்டிருக்கிறார். பொது மக்கள் இவரை கண்டெடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ரெண்டு நாட்கள் சுயநினைவின்றி மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் யாருமற்ற அநாதையாய் இறந்து போனார். சரி இதிலென்ன கலிகாலப் புலம்பல் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிவகுமார் எனும் இவரை பற்றிய பின்புலம் தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது. சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களை கோர்ட்டில் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வழியனுப்பி வைக்கும் உன்னத கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர் இவர். விபத்துகளில் ஆள் அடையாளம் தெரியாமல் மரணத்தருவாயில் இருப்பவர்களின் பின் புலத்தை தேடி பிடித்து அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்து இறந்தவரின் கடைசிக் கால காரியங்களை அவர்கள் குடும்பத்துடன் செய்தவர். இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?
கேபிள் சங்கர்
Comments
என்ன விதி இது
அடுத்தவன் சாப்பாட்டில் மண்ணை அள்ளி போடுறவன்,
எல்லாம் நல்ல இருக்கான்
நல்லது செஞ்ச மனுசனுக்கு ரொம்ப ஆண்டவன் சோதனையை
கொடுத்திட்டான்
ஆனால் நல்ல சேவை செய்துவந்த சிவகுமார் அனாதைப் பிணம் ஆனது வேதனைக்குரியது !
anyway RIP for a good soul.
சிவகுமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
பலனை எதிர்பார்க்காதே