கொத்து பரோட்டா –03/04/09
நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு, நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா, எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி, ”உங்கள்ல யாராவது ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?” அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும் தொண்டையை கனைத்து “நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது ‘நாக்க மூக்க’ நகுல தானே?” என்றதும் விழுந்தது அடி. ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் ‘குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறி அழைத்து செல்கிறது. அடுத்து கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தால...