Feb 24, 2012

சாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்

Photo0382
சைவ உணவகங்களில் பல இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான கடைகளில் வழக்கமான தோசை, இட்லி போன்றவைத்தான் இருக்கும். அதில் என்ன ஸ்பெஷலாய் இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தை உடைத்த உணவகம் நெல்லை சைவ உணவகம்.


சென்னையில் வடபழனி, ஆற்காடு ரோடு, பரணி ஹாஸ்பிட்டல் எதிரில் சிறியதாய் ஒரு மரத்தின் பின்னால் உடைந்த போர்டு ஒன்று இருக்கும். கொஞ்சம் தேடித்தான் சாப்பிட வேண்டும். பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல் போன்ற அயிட்டங்கள் தான் கிடைக்கும். ஆனால் சுவைத்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். முக்கியமாய் அவர்கள் ஊற்றும் சாம்பார், மற்றும் சட்னி அட்டகாசமாய் இருக்கும்.
Photo0381
முன்பு மதிய நேரத்தில் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது நிறுத்தி விட்டதாய் சொன்னார்கள். இரவு ஒன்பது மணிக்கே கடையை ஏறக்கட்டி விடுகிறார்கள். நல்ல சுவையான, நியாயமான விலையில் உள்ள உணவை சாப்பிட விரும்பினால் நீங்கள் நெல்லை சைவ உணவகத்திற்கு நடையை கட்டுங்கள். சுவைக்கு நான் கியாரண்டி.
கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

sugi said...

hey, when did u go? 2ni8? Eat well n look after urself :-)

sarav said...

thaliavarae ! intha edathai daily cross panni porom aana antha hotel irukkarathey theriyadhu neenga eppadi thaan kandupidikireengalo!

vaazhga ungal pani ! ! !

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான சுவையான பதிவு ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்ன கொடுமை
இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?

ஆரூர் மூனா செந்தில் said...

அண்ணா நாம பெலிந்தா நாசி கண்டார் போனதப் பத்தி போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். போட்டோவெல்லாம் எடுத்தீங்க. ஒண்ணயும் காணோமே?

கார்த்திக் said...

இந்தக்கடைல எண்ண தோசை ரொம்ப நல்லாருக்கும் தல :-)))

rajasundararajan said...

சாப்பிட்டிருக்கிறேன். 'நெல்லை' என்னும் பெயர்க் கவர்ச்சிக்காகவும், பரணி மருத்துவமனையில் எங்கள் மருத்துவரம்மாவின் பணிநேரம் நீள்கையில் காத்திருக்கும் வேளைகளிலும்.

ஆனால், பாரம்பரியச் சுவை உள்ள கடைகள் எல்லாம் மூடப்பட்டுகொண்டு வருகின்றன.

மணிஜி...... said...

கேபிள் ..அங்கு எண்ணை தோசைதான் ஸ்பெஷல்..

Ravikumar Tirupur said...

இதுநாள் வரை உங்க சாப்பாட்டுக்கடையை படிக்க மட்டுமே வாய்ப்பு இருந்தது. இனிமேல் ருசி பார்த்திடவேண்டியதுதான்

ரோஸ்விக் said...

நான் குமரன் காலனியில் இருந்த பொழுது பலமுறை அங்கு சாப்பிட்டிருக்கிறேன். நடிகர் நெல்லை சிவாவும் நானும் கூட பேசிக்கொள்ளாமல் எதிரெதிராக அமர்ந்து இந்தக் கடையில் சாப்பிட்டிருக்கிறோம். நல்லாயிருக்கும் அண்ணே!