Thottal Thodarum

Oct 23, 2018

#Me Too

உலகெங்கும் மீடூ கூக்குரல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது தேவையானதும் கூட. ஏன் லேட்டாய் சொன்னாய் போன்ற கேள்விகளுக்கு பதிலாய், அட்லீஸ்ட் இப்பவாவது சொல்ல வழி பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நேரம். எனக்கு நெருக்கமான தோழிகள் சில பேருக்கு இம்மாதிரியான பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவம் இருக்கிறது. சொல்லியும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கப் பெற்றவர்களிடமிருந்து அடுத்த முறை விலகியும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும், அச்சம்பவத்திலிருந்து வெளிவர இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மீடூ இயக்கம் மூலமாய் அவர்களுக்கு எதிராய் கேள்விகள் எழுப்புவதும், அவர்கள் குரல் வளையை நெருக்க, நினைப்பதும் நாம் நம் சமூகத்துக்கு செய்யும் துரோகம். நம் வீட்டு பெண்களுக்கு இழைக்கும் துரோகமாகும். 

ஆனால் இதே நேரத்தில் இதை பழிவாங்கும் நடவடிக்கையாய் கையில் எடுக்கும் பெண்கள் இல்லாமல் இல்லை. தாய்மையை போற்றும் இதே இடத்தில் தான் பிறந்த குழந்தையை வீசி எறிவது முதல், கணவனை போட்டுத்தள்ளுவது வரை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 

எத்தனையோ நண்பர்களின் வாழ்க்கை அவர்களது மனைவிமார்களின் வரதட்சணை கொடுமை கேஸினால் மொத்த குடும்பமே நடுத்தெருவுக்கு வந்த கதையெல்லாம் உண்டு. குறிப்பாய் நான் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அவன் குடும்பத்தை ஜெயில்ல வைக்காம விடமாட்டேன் என்று கருவறுத்து சொன்ன பெண்களை நான் பஞ்சாயத்து பேசப் போன நேரங்களில் பார்த்திருக்கிறேன். 

பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு ஆண்களும் வரையரையில்லாமல், கேள்வி கேட்காமல் , அருமை தோழி, செருப்படி தோழி என பின்னூட்டம் மிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து எப்போது பேசினாலும், சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் வரும்.  பிரபல ஓட்டலில் உள்ள பப் அது. உயர் குடி மக்கள் மட்டுமே தென்படும் பப். இறந்து போன ஒரு தொழிலதபர் தன் அடுத்த வார பிறந்த நாள் பார்ட்டியை அங்கே  வந்திருந்த தோழிகளுக்காக உடனடியாய் கொண்டாட, நானும் அவர்களில் ஒருவனாய் அழைக்கப்பட்டேன். பிரபல நடிகர், பிரபல ஒளிப்பதிவாளரின் மனைவி, அவரது தோழி, இன்னும் பிற நடிகர்கள் என ஒர் சிறு கூட்டம். பார்ட்டி சிறப்பாக நடந்தேறி கொண்டிருந்த வேளையில், ஒளிப்பதிவாள மனைவியின் தோழி, அழுதபடி வந்தாள். 

என்னவென்று கேட்ட போது. வரும் வழியில் ரெஸ்ட் ரூமிற்கு அருகில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவனை காட்டி அவன் தன் பின்பக்கத்தை பிடித்து அழுத்தி விட்டான் என்று மேலும் அழுதாள். வந்ததே கோபம் எங்களுக்கு.. உடனடியாய் உடனிருந்த ஒரு சில பேர் அங்கே போய் அவர்களிடம் சண்டை போட ஆர்மபிக்க, வ்ந்திருந்த நடிகர் அதீதமாய் போதையில் சண்டையிட்டு, அவனை அடிக்க ஆரம்பித்தார். உடனிருந்த நண்பர் அதை தடுக்கும் பொருட்டு அவரும் அடிபட்டார். எனக்கென்னவோ எதையும் விசாரிக்காமல் அடிதடியில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை. எனவே அவர்களை பிரித்து விட்டேன்.

நண்பனுக்கு விழுந்த அடியை தடுத்த அடி வாங்கிய நண்பர் “சார்.. அவனுக்கு இந்த எடமெல்லாம் புதுசு. நானாச்சும் கூட இங்க ரெகுலர்.  அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்” என்று சத்தியம் செய்தான். “எந்த ஆம்பளை தன் தப்ப ஒத்துட்டிருக்கான்” என்றாள் அவள். எல்லாரையும் பிரித்து விட்டு, சண்டையினால் பப் மூட உத்தவிட்டதினால் கிளம்பினோம்.

மணி பன்னிரெண்டு கூட ஆகாததால் பார்ட்டி மூட் யாருக்கும் குறையவில்லை. அதனால் வேறு எங்கு பார்ட்டி நடக்கிறது என்று கேட்டறிந்து “இட்ஸ் ஹேப்பனிங் இன் டி.நகர்” என்று ஒர் முக்கிய ஓட்டலை சொல்ல, எல்லாரும் கிளம்பினோம். என்னுடய காரில் ஒளிப்பதிவாளர் மனைவி, அவரது தோழி, இன்னொரு நடிகர் வர, காரில் பேசிக் கொண்டே வந்தோம். இரண்டு பேருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்த நடிகர் இம்மாதிரியான ஆண்களின் குறியை அறுத்துவிட வேண்டும் என்றார். அதைச் சொன்னதும் சிரித்தார். தோழி. 

ஏன் சிரிக்கிறாய் என்று கேட்ட போது “விரைப்பெடுத்த குறியை அறுத்தால் சின்னதாய் இருக்குமா? பெருசாய் இருக்குமா? “ என்று கேட்டாள் அவள். அவள் பாதிக்கப்பட்ட கோபத்தில் பேசுகிறாள் என்று எல்லோரும் அமைதியாய் இருந்தோம்.

சிறிது நேர அமைதியான பயணத்திற்கு பின், “என்னதான் செஞ்சான் அவன்?” என்று தெலுங்கில் கேட்டாள் ஒளிப்பதிவாள மனைவி.  “உண்மைய சொல்லணும்னா.. அவன் ஒண்ணும் செய்யலை. இருக்குறதுலேயே நான் தான் சுமாரா இருந்தவ அந்த பார்ட்டியில. எவனுமே என்னை கண்டுக்கலை. ஏன் இப்ப பக்கத்துல உக்காந்துட்டு என் மொலைய இடிச்சிட்டு இருக்கானே இவன் கூட. சும்மா என்னை பம்ஸை பிடிச்சான் அங்க பிடிச்சான்னு சொன்னா.. கவனிப்பானு அழுதுட்டே வந்து சொன்னேன். ஆனா அடிதடி வரைக்கும் போகும்னு நினைக்கலை” என்றாள். 

எனக்கு தெலுங்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியாத காரணத்தினால் இயல்பாய் பேசினார்கள். ஒளிப்பதிவாள மனைவி.. சிறிது அதிர்ச்சிக்கு பிறகு அவளும் சிரிக்க ஆரம்பித்தாள். அவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் நடிகணும் சிரித்தான்.

இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்பவே அப்படி என்றால் இன்றைக்கு டிக்டாக்கில் வடசென்னை பிரபல “லூசு.. கூதி” வசனத்தை வெளிப்படையாய் டப்மாஷ் செய்கிற காலம். அதை தவறு சொல்லவில்லை. அது அவர்கள் விருப்பம்.  பட் அட்டென்ஷன் சீக்கிங் அதிகமாய் இருக்கிற காலம். எல்லா சட்டங்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய காலம். சரியா பயன்படுத்தினா பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். இல்லைன்னா.. கஷ்டம் தான். இன்று வரைக்கும் அடிப்பட்ட அந்த ஆண் தனக்குண்டா பாதிப்பிலிருந்து வெளிவந்திருக்க முடியுமா? என்று கேட்டறிய வழியில்லை. ஆனால் என்னால் இன்றும் கூட வெளிவர முடியாமல் பத்து ஆண்டுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.  

மீடூக்கள் லேட்டாய்தான் வெளிவரும். 

Post a Comment

1 comment:

Ravi said...

அருமையான பதிவு!!