சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் அம்சவள்ளி பவன்


மதுரை சிந்தாமணி அருகில் 1952 முதல் இந்த சீரக சம்பா பிரியாணிக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். சென்னையில் அவர்களது ப்ராஞ்சை திறந்திருக்கிறார்கள். நண்பர் பத்திரிக்கையாளர் கெளதம் சொன்னார். முதல் முறை போகும் போது இரவாகிவிட்டதால் அவர்களது ஸ்பெஷல் பிரியாணியை சூடாக சாப்பிட முடியவில்லை. பரோட்டா, அதற்கான சிக்கன், மட்டன் சால்னாவுடன், நல்ல கிரிஸ்ப் கோலா உருண்டையோடு கிளம்பிவிட்டேன். இன்று மதியம் அண்ணாநகர் வரை வேலை. நல்ல பசி என்றார் நண்பர். சரி நல்ல சீரக சம்பா பிரியாணி சாப்பிடுவோமா? என்று வண்டியை கட்டினோ இந்த அம்சவள்ளியை பார்க்க.


அப்போதுதான்  தம் உடைத்திருப்பதாகவும் சற்றே காத்திருங்கள் என்றார்கள். தலை வாழை இலை போடப்பட்டு, கால் லிட்டர் வாட்டர் பாட்டிலை வைத்தார்கள். சிக்கன், மட்டன் கிரேவி, வெங்காயப் பச்சடி என வரிசைக்கட்டிவிட்டு, சுடச்சுட பிரியாணி பரிமாறினார்கள். பிரியாணியின் கலரே ஆர்வத்தை தூண்டியது. நல்ல சீரக சம்பா அரிசியின் மணமும், மசாலாவின் மணமும் நாசியிலிருந்து மனசுக்குள் போனது. முதல் பிடி எடுத்து வாயில் வைத்தேன். வாவ். நல்ல மணம், குணம், காரத்துடன், சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருந்த மசாலாவோடு ஒர் டிவைனான பிரியாணி. சீரக சம்பா பிரியாணி சென்னைக்கு வந்தாச்சு. என்று தான் சொல்வேன். உடன் கொடுக்கப்பட்ட மட்டன் சால்னா அட்டகாசம்.

மதிய நேரமானாலும் சரி, இரவானாலும் சரி பிரியாணிதான் இவர்களது மெயின் கோர்ஸ். இரவில் பரோட்டா, கல் தோசை, சிக்கன், போன்றவைகளும் இருக்கிறது. பட் டோண்ட் மிஸ் திஸ் சீரக சம்பா பிரியாணி.

ஹோட்டல் அம்சவள்ளி பவன்
யூ-75, 5வது மெயின் ரோடு
அண்ணாநகர் வெஸ்ட்
ஐய்யப்பன் கோவில் அருகில்



Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்