Thottal Thodarum

Jun 29, 2019

எண்டர் கவிதைகள் -27


அன்பு எங்கேயும் போகவில்லை.
உனக்கான பிரவாகமாய் 


என்னுள்ளேயே இருக்கிறது
அது உனக்கு தெரிந்தே இருந்தாலும், 


கிடைக்கபெறும் அன்பின் மிகையால் 
என் அன்பை தவிர்க்கிறாய்
தூக்கிப் போடுகிறாய்.
அது ஏன் என என்னால் 
புரிந்து கொள்ள முடிவதற்கான
காரணம் அன்பு.
எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை,
என்றைக்கும் உன்னை நேசிப்பதை
கைவிடுவதுமில்லை.

Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அன்பு..
அழகாய்.

Alexander Pushkin said...

Onnumey puriyala