நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.
சினிமா கனவுகளின் ஆயிரம் வாயில்கள் நிறைந்த ஏரியாவில் கிட்டத்தட்ட வெளிக்கதவு உள்ள இடத்தில் அந்த அலுவலகம் அமைந்திருந்தது. ஒரு குட்டி ப்ளாட். அது ஒரு சினிமா சம்பந்தபட்ட கம்பெனி என்று வாசலில் விட்டிருந்த ஷூக்களையும், செருப்புகளையும் பார்த்தே தெரிந்து கொண்டேன். வாசலில் ஒரு மிக இளைஞன் ஓரமாய் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தான். பைக்கை வைத்து விட்டு உள்ளே யார் என்று பார்வையால் தேடிக் கொண்டிருந்த போது, அவன் சிகரெட்டை காலால் நசுக்கிவிட்டு “யார் சார்.. யாரை பாக்கணும்?” என்றான். “….. வரச்சொல்லியிருந்தாங்க..” ”அப்படியா.. வாங்க உள்ளே உட்காருங்க.. “ என்று சொல்லி ஒரு சேரை காண்பித்துவிட்டு, ஒரு கதவை திறந்து உள்ளே போனான். அது ஒரு சின்ன ஹால், இரண்டு சோபாக்களூம், சேர்களுமாய் இடத்தை அடைத்துக் கொள்ள, அங்கேயிருந்த டீவியில் டிவிடி முலமாய் அவர்களுடய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சுவர் முழுவதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படமும், சில போஸ்டர்களும் தெரிய, அறையிலிருந்து வெளிவ்ந்து வெகு இளைஞன், “உள்ளே போங்க” என்றான். நான் என் உடைகளை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டு, லேப்டாப்பை ஒரு முறை சரியாய் மாட்...