சரி… இவர்கள் தான் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டோமானால். ப.ம.க வோ… எதுக்கு ஆதரிக்கணும்.. அப்புறம் பின்னாடி சீட்டும், பையனுக்கு ராஜ்ய சபா எம்.பியும், மந்திரி பதவியும் போயிருமோன்னு, எங்க போய் முட்டிகிட்டா பித்தம் தெளியும்னு தெரியாம வாய மூடிட்டு உட்காந்துட்டாங்க. இந்த லட்சணத்துல 2011ல இவங்க ஆட்சின்னு நாலு வருஷம் முன்னாடி அறிக்கை வேற.
ஆ..ஊன்னா மைனாரிட்டி திமுக அரசுன்னு சொல்லிட்டிருக்கிற அதிமுக தலைமை எந்தவிதமான பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தாம வாயை மூடிட்டு எதுக்கோ காத்திட்டிருக்கிற மாதிரி போயிருச்சு. அது சரி ஒருவேளை கூட்டம் கூட்டி வேலை செய்ய கட்சியில ஒரு தலைவராவது இருந்தாத்தானே.. இல்லே ஒரு வேளை எப்படியும் வரப் போற எலக்ஷன்ல வேலைக்காவாதுன்னு பணிக்கர் சொல்லிட்டாரோ என்னவோ பொறவு எதுக்கு வீணா போராட்டம் அது இதுன்னு அடக்கி வாசிட்டாங்க போலருக்கு.
பாவம் பி.ஜே.பி மட்டும் ஆங்காங்கே மைக் செட், மேடையமைத்தவர்கள் காவலர்கள் மற்றும் வந்த தலைவர்களின் கார் டிரைவர்கள் என்று மொத்தம் பத்து பேரை வைத்துக் கொண்டு தனியே மைக் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது செல்ப் எடுத்துவிட மாட்டோமா என்கிற ஒரு ஆசையில். அவங்களுக்கே தெரியும் அவங்க லடசணம் தமிழ்நாட்டுல என்னன்னு..
இந்த பத்திரிக்கைகாரர்கள் இவங்களுக்கு வேற பிரச்சனை, ஒரு பத்திரிக்கைக்கு அரசு விளம்பரஙக்ள் போயிருமேங்கிற கவலை.. இன்னொரு பத்திரிக்கைக்கு எற்கனவே பட்ட அடி ஜாஸ்தி, அப்புறம் எதுக்கு தேவையில்லாம அதை பத்தி எழுதி மக்கள் கிட்ட ஏதாவது எழுச்சி வந்திட்டா, நமக்கு வீழ்ச்சி வந்திருமோன்னு மையமா.. இன்று பந்த்.னு போட்டுட்டு, தமிழ் நாட்டில் எந்த பாதிப்பும் இல்லைன்னு அடுத்த நாள் போட்டோ போட்டுட்டு போயிட்டாங்க.
இந்த பெட்ரோல் விலையை இனிமே சப்ஸிடியில்லாமல் மார்கெட் நிலவரத்துக்கு ஏற்றார்ப் போல ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம் என்று கை கழுவிக் கொள்ள நினைக்கிறது அரசு, இதனால் யாருக்கு ஆதரவாக இருக்கிறது மக்களுக்காகவா? அல்லது முப்பது நாப்பது எம்பிக்களை வைத்துக் கொண்டு குட்டி ராஜ்ஜியம் நடத்தும் ரிலயன்ஸ் போன்ற கார்பரேட்டுகளுக்காகவா..?
எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. மத்தவங்களெல்லாம் அவங்க அவங்களுக்கு ஏதாவது மறைமுகமாகவோ, நேரடியாகவோ வருமானமும், ஆதாயமும் இருக்கு அதனால அமுக்கி வாசிக்கலாம். என்ன ஆச்சு நம்ம பொதுஜனத்துக்கு.? விலைவாசி ஏற்றத்தால கண்ணு முழி பிதுங்கி என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கிறவங்க.. ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலையேறும் போது, ஏறுற விலைவாசி அதுவே ஒரு இரண்டு ரூபாய் குறையும் போது குறையவில்லையே? என்று யாரையும் கேட்பதில்லை. கேட்பது என்றால் யாரிடம்? அரசிடமா.? நீங்கள் அன்றாடம் வாங்கும் கடைக்காரரிடம், ஆட்டோக்காரகளிடம் என்று உங்கள் எதிர்ப்பை ஒவ்வொருவரும் காட்டினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இம்மாதிரியான எதிர்ப்பை காட்டியிருக்கிறோம். டாஸ்மாக்கில் கடைக்காரர்கள் எம்.ஆர்.பியிலிருந்து அடிக்கும் கொள்ளையிலிருந்து பக்கத்து மளிகைகடைக்காரன் எக்ஸ்பயரி டேட் ஆனா பொருட்களை விற்பதையும், வாராவாரம் ஏறும் பருப்பு விலைகளையும், காய்கறி விலைகளையும், பார்த்து போய் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நமக்கெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. ஒருமித்த குரலாக உணர்வாக, நம் எதிர்ப்பை, ஆதரவை காட்ட இந்த கடையடைப்பை பயன்படுத்தியிருக்கலாம். இந்த அரசியல் கட்சிகளை நம்பாமல்,எவ்வளவோ பொது நல இயக்கங்கள் இதை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியிருக்கலாம். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் விலை வாசி ஏற்றத்துகாக கடையடைப்பு தினம் அன்று, நம் எதிர்ப்பை காட்டியிருந்தால் அரசுக்கு உரைத்திருக்கும் அல்லவா?
ஒரு வேளை தமிழ்நாட்டில் மட்டும் விலைவாசி உயர்வு பாதிக்கவில்லையோ..? எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறோமோ..? நமக்காகத்தான் அரசே தவிர அவர்களுக்காக நாம் என்றில்லை. அப்படியிருக்க நம்மை ஆளும் உரிமையை கொடுத்த நமக்கு, அதே அரசை தட்டிக் கொடுக்கவும், எதிர்ப்பை காட்டவும் உரிமையிருக்கத்தானே செய்கிறது. ஏன் அதை பயன் படுத்தாமல் வெறும் ஊமைகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்? ம்ஹாராஷ்ட்ராவில் ஆளும் ஆட்சியை எதிர்த்து பந்த் வெற்றிகரமாய் நடத்தியிருக்கிறார்கள்.? ஏன் இங்கு மட்டும் இப்படி? இலவச டிவிக்களும், டாஸ்மாக் சரக்குகளூம், மற்றும பல இலவசங்களூம் போதுமோ..?
Comments
தமிழக தலைநகரில் வேண்டுமானால் கடையடைப்பு நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் பல மாநில, மாவட்ட மக்கள் வாழும் திருப்பூரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே போல் 90 சதவீத பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்த்தன. சில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை.
ஆனால் மறைமுக எதிர்ப்பு எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது தேர்தல் காலமாகி இருந்தால் உடனடியாக விளைவை தெரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.
ஆட்சி மாறினாலும் நிலமைகள் சகஜமாக காலங்கள் பிடிக்கும் என்பதால் - நீங்கள் சொன்னதுபோல் சுரணை இல்லாமல் தான் இருக்க வேண்டியதாயிருக்கிறது.
ஜெயா டீவியில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
இந்த பந்த் அன்றும் அதே மனநிலைதான்.
சூடு சொரனையற்ற கூட்டத்தில் ஒருவனாக பிறந்ததில் வெட்கப்படுகிறேன்.
எப்படித்தான் பிச்சைக்காரர்களாக மாறுவதில் இத்தனை அக்கறை காட்டுகிறார்களோ!!!
மும்பை ஒரு சரியான உதாரணம் பந்த்ன் வெற்றிக்கு
வணக்கம். இலவசங்களை நாடிப் போகும் நான் வாழும் வரைக்கும், ஓட்டுக்கு பணம் கிடைக்காதா என ஏங்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும், இரண்டு ரூபாய் விலையேற்றத்தால் என்ன நஷ்டம் வரப் போகுது, என்னால சமாளிக்க முடியும் என நினைக்கும் நான் வாழும் வரைக்கும்,
எந்த கொம்பனாலும் எங்கள் தலைவர்களை அசைத்து விட முடியாது.
வாழ்க பணநாயகம், வளர்க பொறுப்பற்ற நாங்கள்.
நீங்க எப்படி எதிர்ப்பை காட்டுனீங்க தல ?
படிச்சு பாருங்க
http://thatstamil.oneindia.in/news/2010/07/07/admk-bjp-bandh-failed-tamil-nadu-karunanidhi.html
ஆங்காங்கே போராட்டத்திற்கு எதிர்போராட்டம் செய்த தி.மு.கவினரை என்னவென்று சொல்லுகிறீர்கள்
//ப்ளாக்கர் கூட பின்னூட்டமெல்லாம் அடைப்பு செஞ்சு பங்கெடுத்துகிட்டது பாஸ். பாராட்டாம விட்டுட்டீங்களே:) //
:-))
நண்பர்கள் சொன்னதுபோல நீங்கள் இதுபோன்ற பதிவுகளையும் நிறைய எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.
அன்பு உடன்பிறப்புக்களே இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..
இப்படிக்கு
தமிழக முதல்வர்
ஓஓஒகோ ..அதான் மேட்டரா! :)
--
ஜெயா டிவில வந்ததுக்கே இப்படியா?? :))
வரப் போகும் சட்ட மன்ற தேர்தலின் பொழுது நம் வாக்குகளை என்ன விலைக்கு விற்கலாம்.(Rs.8000 per vote or 9000)
இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம்.மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழ் மாநிலத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதும், மானிய விலையில் மளிகைச் சாமான்களை பெற முடியும் என்பதும், பஸ் கட்டணம் உயர்வில்லை என்பதும், விலைவாசி உயர்வின் பாதிப்பை சாதாரண சாமன்ய மக்களிடமிருந்து அகற்றியிருப்பதை எண்ணி பார்த்தால் முழு உண்மையும் புலப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
this is news came in dinamalar e paper.
may be this is the reason, i think people r satisfied
உங்க கிட்ட இருந்து ஒரு நல்ல பதிவு.. பந்த் நடத்தினாங்க ஆனா அதனால என்ன பயன் சொல்லுங்க.. பந்துன்னு சொன்ன உடனே எல்லாரும் ஒக்காந்து டிவி பாக்க ஆரம்பிச்சிடறோம்.. இதுக்கு பந்த் அனுசரிக்காலமேயே இருக்கலாமே?
பின்ன என்னங்க.. ?
@சரவணன்
அப்படி சுரணை இல்லாமல் இருப்பதால் தான் நம்மை ஏறி மேய்க்கிறார்கள் என்பது என் எண்ணம்.
:(
@தராசு
நாங்களுக்கு வாழ்த்துக்கள்.
@சுகுமார் சுவாமிநாதன்
அவஙக் எங்க ஆதரவுதெரிவிச்சாங்க.. ?
@தனிகாட்டு ராஜா..
இதோ இந்த பதிவு கூட ஒரு வகையில் எதிர்ப்புத்தான். நான் எதிர்ப்பு காட்டும் விஷயமெல்லாம் என் நண்பர்களுக்கு தெரியும் இங்கே சொன்னால் சுயபுராணம் என்று பொலம்புவார்கள்.:)
:)
@சிவகாசி மாப்பிள்ளை
அவருக்கு தெரியாத சால்ஜாப்பா..?
@வினோத்
நீங்களாவது அப்படி நினைக்காம.. உங்களுக்கு தப்புன்னு படுவதை, உங்களை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தால் நிச்சயம் குரல் கொடுங்க.. பதில் கிடைக்கும்..
நிச்சயம்..
@மது
ஒரு நாள் ஒரு தெரு பூரா ஆட்டோ, ஏற மாட்டோம்னு அறிவிச்சிட்டு செஞ்சி பாருங்களேன். அதுக்கப்புறம் உங்களுக்கு கிடைக்கிற பீட் பேக்..
நன்றி
@விசா
அது என்னவோ சரிதான்
@ரவிகுமார் திருப்பூர்
இங்கே என்ன பெரிதாய் கிழித்தார்கள்.. ? ரவி..?
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அது சரி
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
ஓகே..ரைட்டு
@பா.ராஜாராம்
அட.. ரொமப நாள் ஆச்சு. வ்ருகைக்கு நன்றி
அவங்க எப்படி கலந்திப்பாங்க.. ஆட்சிய பகைச்சுக்க முடியாதில்லை..
@காபிராஜா
அப்படியா..?
@செ.சரவணக்குமார்
நன்றி நிச்சயம்
நன்றி தமிழக முதல்வரே.. போன்ல பேசுறேன்..:)
@ஜோ..
:)
@ஷங்கர்
அடப்பாவிங்களா..நீயுமா..?:)
@ஜோவிமல்
நிச்சயம் .நன்றி
உங்க ஓட்டுசெல்லாதே.. வெளிநாட்டுல இல்லை இருக்கீங்க..?
@செந்தில்1426
தினமலரும். அப்பப்ப.. சொம்படிப்பாங்க..
2ச்ந்தோஷ்
அதுக்குத்தானே எல்லாருக்கு இலவச டீவி கொடுத்திருக்கிறது.