Posts

வம்சம்.

Image
வழக்கம் போல இரண்டு ஊர்காரன் பகை. மறவனுங்க எல்லாரும் வீரனுங்க. அந்த தலைகட்டு, இந்த தலைகட்டு என்று பில்டப். தலைக்கட்டு பஞ்சாயத்து என்று சாதாரண லைன் தான். ஆனால் அதை கொடுத்திருக்கும் விதத்தில் தான் பாண்டிராஜ் நிற்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பேசிக் கொள்கிறார்கள். திருவிழாவுக்கு பாதுகாப்பு பலமாக போட வேண்டும் என்று.. ஏன் அவ்வளவு முக்கியம் என்று கேட்க, கொஞ்சம், கொஞ்சமாய் களம் விரிக்கப்படுகிறது. திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் மெல்ல அன்போல்ட் செய்யப்பட்ட பிறகு.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் மரியாதை செய்யப்பட, அங்கே கடைசியாய் தன் தலைமுறைக்கே ஒத்தையாய் இருக்கும் அருள்நிதி வர, க்ராஸ் செய்யும் போது வில்லன் ஜெயப்ரகாஷ்.. “டேய்.. இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொன்னதும். சும்மா பக்கென பத்திக்குது. எங்கப்பன் சாவுறதுக்குள்ள உன் கையை எடுத்துட்டு வர சொன்னாரு.. என்று அருள்நிதியின் கையை வெட்ட சாவகாசமாய் வந்து நிற்...

Don Seenu

Image
சின்ன வயதில் பழைய அமிதாப் படங்களை பார்த்து, தானும் பெரியவன் ஆனவுடன் டான் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வளரும் ரவிதேஜா. ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி வருகிறான். எப்படியாவது டான் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஹைதராபாத்தின் பெரிய டான் ஆக வளைய வரும் சி  ஷிண்டேவிடம் போய் சேருகிறார். ஷாயாஜியின் பிரதம எதிரி நர்சிங்கம் என்கிற ஸ்ரீஹரி. மஹேஷ் மஞ்ரேகரின் மகனுக்கு நர்சிங்கத்தின் தங்கையை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கும் வேளையில், ஷாயாஜி ரவியை அவளை எப்படியாவது காதலித்து, அந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறான். ஜெர்மனி போய் நர்சிங்கத்தின் தங்கையை காதலித்தாரா? திருமணம் நின்றதா? என்பது வெள்ளித்திரையில். அக்மார்க் ரவிதேஜா டெம்ப்ளேட் படம்.  நிறைய காமெடி, ஆக்‌ஷன், கொஞ்சம் டபுள் மீங்க் டயலாக்குள், கவர்சியான கதாநாயகிகள் என்று. இவையனைத்தும் சரியான விகிதத்தில் தூவினால் ரவிதேஜா படம் ரெடி. அந்த ரெஸிப்பியை கரெக்டாக செய்திருக்கிறார்கள். ரவிதேஜா வழக்கம போல காமெடி செய்கிறார், ஆடுகிறார்,பாடுகிறார், சண்டையிடுகிறார். நோ… கம்ப்ளெயிண்ட். ரவிக்கும் ஷ்ரேயாவுக்குமான காதல் காட்சிகள் நல்ல கேட் அண்ட் மவுஸ் கேம். ப்ரம்மானந...

Aisha (2010)

Image
ஒரு அழகான, புத்திசாலியான, Self Centered,  சுயநலவதியான, மற்றவர்கள் விஷயத்தில், அவர்களது வாழ்க்கை முடிவில் மூக்கை நுழைக்கும்,  பெண்ணை கண்டால் உங்களூக்கு எரிச்சல் வரும் ஆனால் இவளை கண்டால் உங்களால் ரசிக்காமல், காதலிக்காமல் இருக்க முடியாது. எ லவ்வபிள், அரகண்ட் பியூட்டியான அயிஷாவை பற்றிய கதை. அயிஷா டெல்லியில் வாழும் ஒரு உயர்தர வகுப்பை சேர்ந்த பெண், அவளுடய பொழுது போக்கு, அப்பாவின் பணத்தை செலவு செய்து கொண்டும், ஷாப்பிங் செய்து கொண்டும், டெல்லியில் நடக்கும் உயர்தர மக்களின் பார்டிகளில் கலந்து கொள்வதும், ஜோடி பொருத்தம் பார்த்து இவன், இவள்தான் உன் ஜோடி என்று தான்  நினைப்பதை மற்றவர்களிடம் திணிப்பவள். அவளுடய ஆண்டிக்கு ஒருவரை பார்த்து செலக்ட் செய்தவள். அடுத்து அவளுடய டார்கெட்டில் வருபவள் மிடில் க்ளாஸ்  பெண்ணான ஷிபாலியை தன்னைப் போலவே மாற்றி, அவளுக்கு சரியானவன் ரந்திர் என்கிறவன் தான் என்றும். அவனை தான் ஷிபாலி காதலிக்கவேண்டும் என்றும் அவன் தான் உனக்கு சரியான் ஜோடி என்று ஏத்திவிட்டு தன் எண்ணத்தை அவள் மூலம் செயல்படுத்த நினைக்கிறாள். அயிஷா ஷிபாலியை ஒரு ப்ராஜெக்டாகவே நினைக்கிறாள். ...

டாக்டர்…

Image
”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூட தெரிகின்றது” என்று மிக,மிக பதட்டத்துடன் உட்காருவதற்கு முன்னமே படபடவென பேசியபடியிருந்தவனை பார்த்து “முதலில் நீங்கள் உட்காருங்கள்.. ரிலாக்ஸ்” என்று தண்ணீர் க்ளாஸை அவன் முன் நகர்த்தினேன். அவன் மிகுந்த ஆயாசத்துடன் தண்ணீரை எடுத்து ‘மடக்..மடக்’கென குடித்தான். சுமார் முப்பது வயதிருக்கும். கண்களின் கீழ்  கருவளையமாய் இருந்தது. நான் ஒரு மனநல மருத்துவன். என் பெயர் ஆத்மாநாம். என் அப்பா ஆத்மாநாம் பைத்தியம். அதனால் அந்த பெயர். கடைசி பேஷண்டாக வந்திருக்கிறான். மெல்ல எதிர் சீட்டில் தண்ணீரை குடித்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை ஆழ்ந்து பார்த்தேன். அவன் கருவளையங்களை வைத்தே சொல்லிவிட முடியும் அவன் ஒழுங்காய் தூங்கி பல நாட்களாகியிருக்கும் என்று. இக்கால இளைஞர்களுக்கு ஸ்டெரெஸ் லெவல் அதிகம். அவனுடய பைலை ஒரு பார்வை ஓட்டினேன். பெயர் நரேன். வேலை சாப்ட்வேர். எதிர்பார்த்தது. ம்..சொல் என்பது போல அவனை பார்த்தேன். “டாக்டர்..  நான் ஏற்கனவே சொன்னதுதான் நடக்கப் போவது தெரிகிறது. அதுவும் விபத்துக்கள...

பச்சை வயல் கனவு

Image
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், விலைவாசி கண்ட மேனிக்கு ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீககமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி கேட்டீர்களானால் அதற்கு சரியான பதிலை மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இல்லை. பெட்ரோல் விலையுர்வை ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளின் ப்ரஷருக்கு தலைவணங்கி விட்டு, மாநில அரசுகள் வரிகளை குறைத்து மக்களுக்கு விலையை குறைக்கலாமே என்கிறது.  ஏன் அதையே மந்திய அரசு செய்யலாமே?. ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காரணம் சொல்கிறார்களே தவிர பிரச்சனைக்கான சொல்யூஷனை யாரும் தருவதாய் இல்லை. ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் ஏறிய விலைவாசி மீண்டும் அது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் குறைந்தால் குறைய வேண்டுமல்லவா.. ஆனால் குறைவதேயில்லை. அதனை மக்களும் கேட்பதில்லை. அரசும் கேட்பதில்லை. எதிர்கட்சி எழவும் எப்படியாவது மத்திய அரசு கட்சியின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக மெளனியாகவே இருந்து உறுத்தாமல் போராட்டம் நடத்துகிறேன் பேர்விழி என்று “போர்” ஆட்டம் ஆடுகிறது. தமிழ் நாட்டில் விளைகின்ற காய்கறிகள் எல்லாம் இப்போத...

கொத்து பரோட்டா- 9/08/10

Image
கடந்த இரண்டு மூன்று வாரமாக ப்ரொபைல் இல்லாத பெயரில் நான் இதை எழுத வேண்டும், அதை எழுத வேண்டும், இது ஆபாசம், அது இது என ஒரே ஆள் பல பெயர்களில் வந்து ஏதோ எனக்கு நல்லது செய்வதாய் நினைத்துக் கொண்டு,  அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருக்கிறாரகள். அதிலும் சில பின்னூட்டங்கள் ஒரு படி மேலே போய் உங்கள் எதிர்காலத்துக்கு இதை எழுதினால் நல்லதல்ல. என்பது போன்ற பாசப்பிணைப்பான அட்வைஸ்கள் வேறு. அய்யா ப்ரொபைல் இலலாத நண்பரே.. நான் பதிவெழுத வந்த போது இதை தான் எழுத வேண்டுமென்று, முடிவெடுத்தோ, அல்லது எதை எதையெல்லாம் எழுதலாம் என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டோ எழுதவில்லை. எனக்கு தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என் பதிவுகளை குறித்தான  உங்களின் தார்மீக ரீதியான  மாற்று கருத்துகளுக்கான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன், எதிர்பார்க்கிறேன். அதனால் தான் முகவரியில்லாத பின்னூட்டங்களை பதிவு பற்றிய விமர்சனமாய் இருந்தால் வெளியிடுகிறேன். ஆனால் தொடர்ந்து அதை எழுது, இதை எழுதாதே என்று Insist செய்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொல்வதால் நிச்சயம் நான் என் வழக்கத்தை மாற்ற போவதில்லை. எனக்காக ...

உங்கள் பக்கம்

Image
ஒரு கவிதை எழுதியிருக்கேன், சிறுகதை எழுதியிருக்கிறேன். கட்டுரை எழுதியிருக்கிறேன் உன் பதிவில் போட முடியுமா? என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா? என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு நான் வலைப்பூ ஆரம்பித்து கொடுத்திருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில்  பதிவர்கள், எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் எழுத விரும்புபவர்கள் அவர்களுடய கதை, கட்டுரை, கவிதைகளை  எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பிரசுரிக்கப்படும்.  கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி.. *************************************************************************** இக்...

பாணா காத்தாடி

Image
ஸ்கூல் படிக்கும் வடசென்னை ஸ்லம் பையனுக்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்படும், காதல், மோதலை பற்றிய படம். நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமாயிருக்கும் படம். சத்யஜோதியின் பேனரில் வரும் படம் என்பதால் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம். ஒவ்வொரு க்ளாஸிலும் இரண்டிரண்டு வருடங்கள் நின்று நிதானமாய் படித்து வரும் ரமேஷ், காத்தாடி விடுவதில் மன்னன். ஒரு டீலில் அறுந்த காத்தாடியை பிடிக்க ஓடும் போது சமந்தாவின் மேல் மோதிவிட, அவள் கழுத்தில் மாட்டியிருக்கும் பென் ட்ரைவ் அதர்வாவின் பைக்குள் மாட்டிவிட, இது தெரிந்து சமந்தா அவனை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பாக்கெட்டில் பென் ட்ரைவ் இருப்பதை கண்டு அவளிடம் கொடுக்க, இருவரும் நண்பர்களானார்கள். நட்பு காதலாகிறது. அதர்வா தன் காதலை சொல்லப் போகும் போது நடக்கும் பிரச்சனையில் இருவரும் பிரிய. முடிவில் காதலர்கள் இருவரும் சேர்ந்தாரக்ளா? இல்லையா என்று சொல்லியிருக்கிறார்கள். நடிகர் முரளியின் மகன் அதர்வா.. ஆள் நன்றாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயி...

எந்திரன்

எந்திரன் பாடல்கள் வெளியாகிவிட்டது. எலக்ட்ரானிக் டவுன்லோட் காலத்தில் சொற்ப பணத்துக்கு ஆடியோ ரைட்ஸ் விலைக்கு போகும் நேரத்தில், சமீப காலத்தில் ஆடியோ உலகில் பெரிய விலை போன படம் இதுவாகத்தான் இருக்கும். மிக பிரம்மாண்டமாய் மலேசியாவில் வெளியிட்டார்கள். முதல் முறையாய் கலாநிதி மாறன் தன் சினிமா கம்பெனி சார்பில் கலந்து கொண்ட படம். அபீஷியலாய் பார்த்தால் இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம். மற்ற படமெல்லாம் மற்றவர்கள் தயாரித்து, அதை விநியோகிக்க, மொத்தமாய் வாங்கிய படம் தான். ஆனால் முதல் படமே மிக பிரம்மாண்டமான படமாய் அமைந்திருப்பது கலாநிதியின் தைரியத்தையும், தொழில் மேல் உள்ள வெறியையும் காட்டுகிறது. பாடல்கள் கொஞ்சம், கொஞ்சமாய் சுருதி ஏற ஆரம்பித்திருக்கிறது. நிச்சயமாய் தியேட்டரில வெளியாகும் போது மூன்று பாட்டுகள் சூப்பர் ஹிட் நிலையில் இருக்கும். ரிலீசான நாளில் அரிமா,,அரிமா மட்டும் பிடித்த எனக்கு இப்போது விஜய்பிரகாஷின் குரலில் வரும் காதல் அணுக்கள் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸோ.. ஆஸ் யூஷ்வல் ரஹ்மான் டாமினேட்ஸ். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் விடியோவை பார்த்த போது.. அதில் ரஜினியின் பேச்சில் செம உற்சாகம். ...

Salt

Image
படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் படத்துக்கான விளம்பரம் போல சேனல்களில், பத்திரிக்கைகளில் யார் இந்த சால்ட்? என்ற கேள்வியை விளம்பரமாக்கி மக்களின் கவனத்தை கவர்ந்திருந்த படம். இது ஒரு பெண்ணாதிக்க படம் என்றே சொல்லலாம். படம் முழுக்க ஏஞ்சலினாவே ஆக்கிரமித்திருக்கும் படம். சி.ஐ.ஏவின் ஏஜெண்டான சால்ட்டை கொரியா சிறையிலிருந்து வேறு ஒரு ஆளுக்காக எக்ஸ்சேஞ் மூலம் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா வருகிறாள். அவளின் விடுதலைக்காக போராடிய ஒரு எழுத்தாள்ரையே அவள் காதலித்து திருமணம் முடித்து இரண்டாவது திருமண நாளன்று. அவளது அலுவலகத்திற்கு அழைத்துவரப்படும் உளவாளி ஒருவன். இன்றைய தினம் அமெரிக்க வைஸ் பிரசிடெண்ட் இறுதி சடங்கு மரியாதையில் கலந்து கொள்ள வரும் ரஷ்ய அதிபரை கொல்லப்பட போவதாகவும்.  அதை செய்யப் போவது சால்ட் தான் என்று சொல்ல, அவர்களது துறையே அவளை சந்தேகப்படுகிறது. தன்னை நிருபிக்கும் முன்பு தன் கணவனை பார்க்க வேண்டும் என்று கேட்கும அவளை விடுவிக்க மறுக்க, அங்கிருந்து தப்புகிறாள். வீட்டிலிருக்கும் கணவன் கடத்தப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஒரு பக்கம் தன் கணவனை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், இன்னொரு பக்கம் தன் மேல் விழுந்த...