Thottal Thodarum

Sep 24, 2018

கொத்து பரோட்டா 2.0-66

கொத்து பரோட்டா 2.0-66
Raju Kari Gadhi 2
முதல் பாகம் முழுவது சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. அதிரிபுதிரி வெற்றியின் காரணமாய் அதே தயாரிப்பாளர் இம்முறை மாமனார் மருமகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். நாகார்ஜுன், சமந்தாவைத்தான் சொல்கிறேன். வழக்கம் போல ஒரு தனி பங்களா. அதை விலைக்கு வாங்கி ரிஸார்ட் நடத்தும் மூன்று இளைஞர்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர் ஒரு பிகரை உசார் செய்து அறைக்கு போகும் போது வித்யாசமான அனுபவங்கள் கிடைக்கிறது. போர்ன் படம் பார்க்க விரும்பும் போதும், இன்னொரு இளைஞர் தன் காதலியுடன் ஸ்கைப்பில் அவரை டாப்லெஸாக காட்டு என்று கேட்கும் போதும், அமானுஷ்யங்கள் நடக்க, வியாபாரம் படுத்து விடும் என்று பயப்பட ஆர்மபிக்கிறார்கள். அப்போது வருகிறார் நம் நாகார்ஜுன். பேய் ஓட்டுகிறவர் என்று சொல்லாமல் அவரை மெண்டலிஸ்ட் என்கிறார்கள். பேசும் போதே எதிராளியின் மனங்களை படித்து, போலீஸுக்கு ஒரிஜினல் குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்குமளவுக்கு மிகுந்த திறமைசாலி. அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கேயிருப்பது பேய் தானா? அப்படியானால் ஏன் அது அங்கேயிருக்கிறது. கில்மா விஷயங்கள் நடக்கும் போது மட்டும் ஏன் ஆக்ரோஷமாகிறது என்பதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்கிறார் நாகார்ஜுன்.

கிட்டதட்ட மெல்லிசை படமும், இந்த படமும் ஒரே கொரியன் படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மெல்லிசை காதல் படம், இது லவ் கம் ஹாரர் படம். அம்புட்டுத்தான் வித்யாசம். பட் படம் முழுக்க நாகார்ஜுனை பார்த்துக் கோண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அம்புட்டு ஸ்மார்ட். சமந்தா அழகுப் பேய். முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு காமெடி பெரிசாய் எடுபடவில்லை என்றாலும், நாகார்ஜுன் படத்தை காப்பாற்றியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Raja the Great
ஜி.எஸ்.டி மற்றும் அராஜக தமிழக கேளிக்கை வரிக் கொள்கைகள் காரணமாய் தமிழ் நாட்டில் மாற்று மொழிப்படங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பாக்க முடியாமல் போன படங்களில் இதுவும் ஒன்று. அமேசான் ப்ரைம் வீடியோ புண்ணியத்தில் பார்த்தாகிவிட்டது. தீபாவளிக்கு வெளியாகி பெரும் கலக்‌ஷன் பெற்ற படம் என்பதாலும், ரவி தேஜாவின் தொடர் தோல்விகளுக்கு பிறகான வெற்றி என்பதாலும் உடனடியாய் பார்த்தாகிவிட்டது.

இதில் ரவிதேஜா கண்பார்வையற்றவர். ஆனால் அதை உணரா வண்ணம் அவரை சிறு வயதிலிருந்தே எல்லாவற்றுக்கும் ட்ரைனிங் பெற்று வளர்ந்தவர். கண் பார்வையுள்ளவர்களை விட துல்லியமாய் பல விஷயங்களை ஏன் ஓடுகிற ட்ரைனின் மேல் கூட நடப்பவர். எப்படி என்றெல்லாம் கேட்க கூடாது. தெலுங்கு படம். பட் யூஷுவல் ரவிதேஜாவின் காமெடி பட நெடுக.. செம்மையாய் போகிறது.
வழக்கமான கதை தான். நேர்மையான போலீஸ் ஆபீஸ்ர் பிரகாஷ் ராஜ் கொடூர வில்லனின் தம்பியை கொன்று விடுகிறார். அதற்காக அவரை கொன்று விட்டு எப்படி என் தம்பியை கொன்றாயோ அதே போல உன் மகளையும் கொல்வேன் என்று அவளை தேடி அலைகிறான். அவளுக்கு அப்பாவின் போலீஸ் நண்பர்கள் பாதுகாப்பு கொடுக்க, ரவி தேஜா போலீஸின் நண்பனாய் அவளை பாதுகாக்க எப்படி முயல்கிறார்? காப்பாற்றுகிறார் என்பது மீதி.

சுவரஸ்யமான கலகல டயலாக்குகள். அழகான நாயகி, விறுவிறுப்பான பைட். அதிலும் முக்கியமாய் எல்லா வில்லன்களுடன் இருட்டு அறையில் முரட்டு குத்து போல இருட்டு குடோனில் நடக்கும் காட்சிகள் அதிரிபுதிரி. தீவிர தெலுங்கு மசாலா விரும்பிகளுக்கு மட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவத்தை படித்த போது சினிமா எவ்வளவு பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது என்பதையும் ஏன் ஆந்திரா மக்கள் லாஜிக் இல்லாத சினிமாக்களை நம்புகிறார்கள் என்பதும் புரிய வந்தது.  தெலுங்கானாவில் உள்ள  நாகா கர்னூல்  எனும் டவுனில் வசிக்கும் நர்ஸ் சுவாதிக்கும் சுதாகர் ரெட்டி என்பவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகி , ஒரு குழந்தையும் உள்ளது. இந்நேரத்தில் சுவாதிக்கும் அவருடன் பணிபுரியும் பிஸியோதெரப்பிஸ்ட்  ராஜேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு இடையூறாய் கணவன் இருக்க, அவரை ஆட்டத்திலிருந்ஹ்து விலக்க ஒரு ப்ளான் செய்தாள் சுவாதி.

கணவருக்கு அனஸ்தீஷியா இன்ஜெக்‌ஷன் போட்டு, அவனை தூக்கிக் கொண்டு போய் மண்டையில் அடித்து கொலை செய்து, அவனது உடலை எரித்துவிட்டார்கள். கணவன் சுதாகர் ரெட்டியின் மறைவை மற்றவர்கள் உணரும் முன்பே ஒரு ஸ்மார்ட் ப்ளானை செய்ய முடிவெடுத்தாள். ராஜேஷை சுதாகராய் மாற்ற முடிவெடுத்தாள் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம்.

அதற்காக அவனின் முகத்தில் சிறிது ஆஸிட்டை ஊற்றி காயப்படுத்திவிட்டு, ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துவிட்டு, உறவினர்களிடம் யாரோ முகம் தெரியாத எதிரிகள் அவரின் மீது இப்படி செய்துவிட்டார்கள் என்று அழுதிருக்கிறாள். டாக்டர்களும் ப்ளாஸ்டிக் சர்ஜரி தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து ஆப்பரேஷனுக்கு நாள் குறித்து தயாராக, எல்லாம் சுபமாய் போகும் நேரத்தில், மட்டன் சூப் மூலமாய் மாட்டிக் கொண்டார்கள்.

ரெட்டியின் உறவினர்கள் ரெட்டிக்கு மட்டன் சூப் கொடுக்கப் போக, ஒரிஜினல் ராஜேஷ் எனக்கு மட்டன் வேண்டாம் நான் வெஜிட்டேரியன் என்று சொல்ல, உறவினர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. உடனடியாய் பிரச்சனையை கிளப்ப, சுவாதியும், ராஜேஷும், மாட்டிக் கொண்டார்கள். கேட்பதற்கு லாஜிக் இல்லாத கதையாய் தெரிந்தாலும் நிஜத்தில் இது நடந்தேறியிருக்கிறது.

டெக்னாலஜியும், படிப்பறிவும் நன்மை பயக்கிறதோ இல்லையோ? தீமையை ஈஸியாய் பயக்கிறது.
http://www.thenewsminute.com/article/how-mutton-soup-exposed-telangana-womans-plot-kill-and-swap-her-husband-73066
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உள்ளிருப்பு போராட்டம், பொதுக்குழுவில் பிரச்சனை, நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பொன்வண்ணனின் ராஜினாமா என தமிழக அரசியல் களேபரத்தை விட, பரபரப்பாய் இருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷயம். விஷாலின் அரசியல் பிரேவேசத்தினால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்கிற கோஷம் என்னைப் பொறுத்த வரைக்கும் மொக்கையான விஷயம்தான்.  ஒரு குழு பதவிகளை ஏற்று இருக்கிறது. அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இரண்டாண்டு காலம் நேரமிருக்கிறது. அது வரை அவர்களை செயல்பட விடாமல் குற்றம் குறை சொல்லி பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று சொல்வதும், போராடுவதும் நியாயமானதாக தெரியவில்லை. பல வருடங்களாய் மாற்றம் என்பதே யில்லாத குழுவில் மாற்றம் வருவதற்கு நாட்கள் எடுக்கத்தான் செய்யும். அதற்காக இவர்களின் தொடர் அறிக்கைகள் எல்லாம் சரி என்று சொல்லவில்லை. மாற்றம் வர முயற்சி செய்கிறவர்களை உடனடியாய் தடுக்க வேண்டாமே என்று தான் சொல்கிறேன். லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரை ஆணவக் கொலை செய்த ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறது கோர்ட். மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள் ஒரு புறம். இன்னொரு புறம் இவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்ற ஆதரவுக் குரலும் எழும்ப ஆரம்பித்துவிட்டது. பெற்ற மகளின் வாழ்க்கை என்றும் பாராமல் ஜாதி வெறி மட்டுமே முன்னிருத்தி சங்கரை பட்டப்பகலில் வெட்டி கொன்றது மகா கொடூரம். அந்த கொடூரத்தை தாங்கிக் கொண்டு, சங்கர் குடும்பத்துடனே வாழ்வேன் என்ற முடிவெடுத்து, கேஸை பெற்றோர்களுக்கு எதிராய் நின்று நடத்தி, தண்டனை வாங்கி கொடுக்க போராடிய கவுசல்யாவின் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த தீர்ப்பிலிருந்து விடுபட, அவர்கள் மேல் கோர்ட்டுக்க் போனாலும், வழக்கு தொடுப்பேனென்றும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாய், மாமன், ஆகியோரின் மரணதண்டனையை உறுதி செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

நிச்சயம் இம்மாதிரியான ஜாதி வெறியர்களுக்கு மரண தண்டனை தான் சரியான தீர்ப்பு. மரணத்துக்கு பதில் மரணம் என்பது சரி கிடையாது என்ற கொள்கை சரிதான் என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து மரண தண்டனை கிடைப்பதற்கும், தான் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம் என்று அறிந்து, அதனால் வரும் பிரச்சனைகளை உணர்ந்து ஜாதிதான் முக்கியம் என அந்த வெறியில் ஒரு உயிரை எடுக்க துணிந்த குடும்பத்துக்கு அவர்களின் மரணம் மூலமாய்த்தான் வலியை உணர்த்த முடியும். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை விட மனித உயிர் பெரிதென புரிய வைக்க முடியும்..

ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போது மனித உரிமை கோரி போராடுகிறவர்களுக்கு தெரியாது. அவர்களால் பாதிப்படையும் மக்கள் அவர்களின் சாவிற்கு பிறகு எத்தனை நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று. வெறும் தண்டனைகள் அதனில் இருக்கும் ஓட்டைகளை வைத்து வெளிவந்து அரசியல்வாதியாகி, மந்திரியாகும் நாட்டில் முளையிலேயே கிள்ளும் இந்த மரண தண்டனை சரி தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




Post a Comment

1 comment:

srik said...

Why all these old articles are repeating again