Thottal Thodarum

Jan 22, 2019

பொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)



அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங். டிஸ்கவுண்ட் புக்கிங். கிண்டில் என எல்லா இடத்தில் நல்ல விற்பனை என்றும் கேள்விப்பட்டேன். நான் இதை எழுதுவது  பொண்டாட்டியின் விற்பனையைப் பற்றி கூற அல்ல.  பொண்டாட்டி நாவலைக் குறித்து பேச.

பொண்டாட்டி ஒரு செக்ஸ் நாவலா? என்றால் ஆமாம். பொண்டாட்டி ஒரு ஆணாதிக்க நாவலா? என்.. ஆமாம். பொண்டாட்டி எப்போதும் புதிராகவே இருக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் பர்வர்ஷன் பற்றி, தடுமாற்றங்களைப் பற்றி, ஆசாபாசங்களைப் பற்றிய மனோதத்துவமான பதிவா? ஆமாம். யாரு யாருக்கு உறவுன்னு நானாறு பக்கத்தையும் மாத்தி, மாத்தி புரட்டியே தாவூ தீர்ந்து போச்சு. வடசென்னை கேரக்டர் மேப்பை விட மோசம். இது மயிரு நாவல். ஃபேக் நாவலில்லை ஃபோர்ன் நாவல். அபீஷியலான மஞ்சள் பத்திரிக்கைத்தர நாவலா? புத்தகம் படித்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் வழக்கொழிந்து விட்டநிலையில் அதற்காக நானூறு பக்க புத்தகம் தேவையா?  இது இலக்கியமா? இல்லை. அராத்துவின் பர்வர்ஷன். அவர் பார்த்த, ஒழுத்த பெண்களைப் பற்றிய கற்பனை என்பீர்கள் என்றால் அதுவும் ஆமாம் தான். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு எவ எவன் கூட படுத்தான் (அ) ள். அவனுக்கு குறி எப்படி இருந்துச்சு. முலை எப்படி இருந்துச்சுங்கிறத எழுதுறதுக்கு ஒரு விமர்சனம் வேற என கரித்துக் கொட்டுவீர்கள் என்றால் தினசரிகள் வரும் உறவு சார்ந்த, செக்ஸ் சார்ந்த குற்றங்கள் குறித்து படித்துவிட்டு எங்கேயோ ஒரு பெண், ஒரு குடும்பம் அவரவர்கள் பிரச்சனை நினைப்பவர்களானால் இனி வரும் வரிகளை படிக்காமல் நாட்டை காப்பாற்ற போய்விடுங்கள். அப்படித்தான் அச்செய்திகளை கடக்கிறோம்.   

காதல் இருக்கிறதோ இல்லயோ காமம் இல்லாத ஆண் பெண் இல்லை. காமம் தான் காதலை வளர்க்கிறது. சமயங்களில் காதலை அழிக்கவும் செய்கிறது. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், நம்பிக்கை துரோகம் முதலிடம் வகிக்கிறது. பெண்கள் இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள். ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை என்று ஒரு பக்க வாதம் செய்யக்கூடும். ஆனால் உண்மையில் இதைப்படிக்கும் பல பெண்கள் தங்களை இக்கதையில் வரும் கேரக்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் பொதுவெளியில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆணிற்கு நிகராய் பெண்களும் நம்பிக்கை துரோகம் செய்யவல்லவர்களே. பல சமயங்களில் பெண் குடும்பம்,குட்டி என முக்கியத்துவம் மாறிப் போய் செக்ஸை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள். ஆதிரைப் போல.

இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை எனும் கூற்றுக்கு ஏற்ப ஆணின் கற்பனையில் உள்ள பெண்ணாய் வலம் வரும் பொற்செல்வி போல. எப்போதும் தன்னை, தன் அழகை முன் வைத்து, வழியும் ஆண்களை பழக்கப்பட்ட நாய் போல ஒரு சில முத்தங்களையும், அணைப்புக்களையும் தந்து காரியம் சாதித்துக் கொள்ளும் புத்திசாலி தீப்தியைப் போல, அவளை அடைய ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும், சாரு நிவேதிதாவும் செய்யும் தகிடுதிங்களைப் போல, காதலன் என்று ஆகிவிட்டான் என்ன செய்ய? என கிட்டத்தட்ட மசோகிஸ்டாய் வலம் வரும் ஆதிரை போல, எவ வந்தாலும் என் உறவை தக்க வைத்துக் கொள்ள எதை வேணும்னாலும் செய்வேன் என விழையும் வந்தனா, ஆண்களின் பிட்டுப்பட கற்பனையான சுமதி ஆண்டி. ஏஞ்சலீனா, கதையே இல்லாத இன்பா குறி சொல்லும் கலா. இக்கதையை வழிநடத்தும் ஆத்தா மகமாயி. என பெண்கள் கூட்டம்,

நாவல் முழுவதும் கெட்ட வார்த்தை வீச்சம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழிந்தோடுகிறது. நம்மையும் அறியாமல் வாய்விட்டு சிரிக்க வைக்கும் வரிகள். ‘மான்கள் இல்லாத காட்டில் இயற்கையாய் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்து இறங்கிப் பார்த்து, தீப்திக்கு முதுகு சிராய்த்ததும், ஜெயமோகனுக்கு ஏதோ ஒரு காட்டு வண்டு கடித்ததும் தான் மிச்சம். அந்த விடுமுறை முழுவதும் மூன்று கொட்டைகள் கொண்ட அதிசய மனிதாய் வலம் வந்தான் ஜெயமோகன்

சுவாரஸ்யமான நான் லீனியர் கதை சொல்லல். சமயங்களில் இவ இவனை வச்சிக்கப் போறா? அதானே.. எதுக்கு ரெண்டு பக்கம் என்கிற அசுவாரசியமும் இணைந்தே பயணிக்கும் எழுத்து. ஆங்காங்கே நிரவி விடப்பட்டிருக்கும் கனோசியர் வகை வர்ணனைகள். உயர் மட்ட வாழ்க்கை முறை. இதை நாவல்னு சொல்லலாமா? இல்லை பேஸ்புக் குறுங்கதைகள் போன்ற ஏதோ ஒன்றாய் நினைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டீர்களானால் அது உங்க இஷ்டம்.  சாருவின் தாக்கம் சிஷ்யப் பிள்ளை அராத்துவிடம் அதிகம் இருக்கிறது.

“ஆத்தா நீயும் ஒரு பொண்டாட்டி தானே?”

“இல்லடா நான் ஆத்தா. ஊருல உள்ள அத்தனை பொண்டாட்டியும் ஆத்தாடா”
என்கிறாள் ஆத்தா கலாவின் வாயிலாய். கிட்டத்தட்ட அதுதான் உண்மை. என்ன தான் ஆண் தான் பெரிய பூ.. என்று நினைத்து ஆட்டம் ஆடினாலும் ஆட வைப்பவள் பெண்தான்.

என்னா மசுருக்குடா  எழுதணும். எங்களைப் பத்தி எங்களுக்கு தெரியும். நீ எழுதுறது ஆம்பளைங்களுக்கு.அவனுங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு வேணும். உனக்கும் கிளுகிளூப்பு வேணும். உங்க அரிப்புக்கு பொண்டாட்டித்தான் கிடைச்சாளா?” என அம்பாள் கலா மூலமாய் கேட்பதுதான் பலரது கேள்வியாய் இதைப் படித்ததும் இருக்கக் கூடும்.

வாழ்வியல் என்பது வறுமை. பணம். அதிகாரம். அதிகார துஷ்பிரயோகம். தலித்தியம். நீலம். ஆரஞ்சு. மஞ்சள். பிச்சைக்காரன். இசை. கவிதை. ஸ்த்ரீ சம்போகம். ஃப்ரீ செக்ஸ். பெரியாரிசம். அம்பேத்காரிசம். அந்த இசம். இந்த இசம் என்பதும் அதான் இலக்கியம் என்பதுமாய் நினைக்கிறவர்கள் இந்தப் நாவல் பக்கம் போக வேண்டாம். ஆச்சாரக் குறைவாய் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஒரு மொக்க நாவலுக்கு இத்தனை பெரிய கட்டுரை தேவையா? என என்னை கூட அராத்துவை சேர்த்து திட்டக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும். எனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.
நாவலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. சாரு அப்படி பார்த்திருக்கிறார். இப்படி பார்த்திருக்கிறார். என்றார் அராத்து. கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும். திடீரென ஒரு வரியில் ஜெயமோகன் வீட்டிலிருந்து தீப்தி ஹோட்டலுக்கு போய் மீண்டும் ஜெயமோகன் வீட்டிலேயே இருக்கிறாள். தீப்தி ப்ரியநந்தினி ஆவது போன்ற சிற்சில தவறுகள் இருக்கிறது. கேட்டால் தெரிந்தே வைத்தோம் என அராத்து சொல்வார்.

நான் அடிக்கடி என் தோழிகள், தோழன்களிடம் சொல்லு ஒரு விஷயம். “ஒரு ஆம்பளை பொறந்ததுலேர்ந்து யாராச்சும் ஒரு பெண்ணிற்காகதான் இயங்கி கொண்டிருக்கிறான். அம்மா, அக்கா, தங்கை, கல்யாணம், பொண்டாட்டி, அவள் மூலமாய் கிடைக்கப் பெறும் குழந்தைகள், அவர்கள் மூலமாய் கிடைக்கப் பெறும் பேரன் பேத்திக்கள் என கடைசி வரை அவன் அவர்களைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறான். நீ வீரன் சூரன். நீ ஆம்பளை. உன்னால முடியும். நீயில்லாட்டி நான் என்ன செய்வேன் என உசுப்பேத்தி, உசுப்பேத்தி ரணகளப்படுத்தி, குழந்தையின் அரணாக்கயிற்றில் கயிற்றைக் கட்டி சுதந்திரமாய் இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு கொடுத்து, அது தாண்டிப் போகும் போது “இந்தாடா” என பிடித்திழுத்து மீண்டும் முதலிலிருந்து தவழவிடுகிறவர்கள் பெண்கள். ஆண்கள் எல்லாரும் அட்டக்கத்திகள் தான்:”.

இந்த பொண்டாட்டியும் அப்படியான பெண்களினால் இயக்கப்பட்ட அட்டக்கத்தி ஆண்களின் கதைதான்.

கேபிள் சங்கர்



Post a Comment

1 comment:

Unknown said...

நேர்மையான விமர்சனம். உங்கள் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியுள்ளீர்கள்.