Posts

தமிழ் சினிமாவின் 30 நாட்கள் - ஜூன்09

Image
சென்ற மாத கடைசியில் வெளியான தோரணை யோட ரிசல்ட் ஒண்ணும் சொல்லிக்கும்படியா இல்லை. ஐ.பி.எல்., டி20 கப், எல்லாம் முடிஞ்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் திற்ந்திருச்சு. சரி இந்த மாச வந்த படஙக்ளை பத்தி பார்ப்போம் மாயாண்டி குடும்பத்தார். பத்து இயக்குனர்கள் படத்தில் நடித்தது படத்துக்கு ஒரு நல்ல பப்ளிசிட்டியை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். வெகு சுமாரான ஓப்பனிங்..  பல இடங்களில் டப்பு.. டுப்புன்னு விழுந்திருச்சு, தட்டு தடுமாறி எழுந்து நிக்க முயற்சி செய்யுது மாயாண்டி குடும்பம். கோவையில் மட்டுமே சுமார் 20 லட்சம் லாஸ் வரும்னு சொல்றாஙக். பாப்போம்   குளிர் 100 மாயாஜால் ஓனர் பொண்ணு அனிதா உதிப் இயக்கி வெளிவந்த படம். படத்தோட பாடல்கள் இளைஞர்களை உள்ளே இழுத்தது என்னவோ உண்மைதான். அதுவும் மல்ட்டி ப்ளக்கில் மட்டுமே கும்பல் இருந்தது. ஆனால் அந்த ஆடியன்ஸ் எதிர்பார்ப்பையும் திருப்ப்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். மாசிலாமணி வழக்கம் போல் சன் டிவியின் மூளை மழுக்கும் விளம்பரத்தினால் பெரிய ஓப்பனிங் இல்லையென்றாலும், திரும்ப, திரும்ப வரும் விளம்பரத்தினால் சொற்ப கூட்டம...

பைத்தியக்காரனுக்கு பைத்தியம் பிடிகக போகுது…

ஆம் பைத்தியக்காரனுக்கு பைத்தியம்தான் பிடிக்க போகுது.. பின்ன  பிடிக்காம.. ஒரு வேகத்துல உரையாடல் சிறுகதை போட்டி வச்சாலும் வச்சாரூ..  சும்மா கதையா குமிஞ்சிருச்சில்ல. மொத்தம்  219 கதைங்க வந்திருக்கு. சும்மா ஆளாளுக்கு பின்னி பெடலெடுத்துட்டாங்க. ஒரு பக்கம் பெரிய, பெரிய ஜாம்பவானெல்லாம் எழுதாம் இருந்தத பார்த்து ஓ.. இவங்கதான் நடுவரான்னு நினைச்சிட்டுருந்தா.. கடைசி நேரத்துல ஆளாளுக்கு கதைய போட்டு வயித்தகலக்கிட்டாங்க..  நம்ம உண்மைதமிழன் பாட்டுக்கு பெரிசு, பெரிசா ஹைக்கூ எழுதிட்டு இருந்தாரு. திடீர்னு அவ்ரு ஒரு கதைய போட்டுட்டாரு. ஒழுக்கமா டாக்டரூ வேலை பாத்துட்டு, இருந்தவரு அவரு ஒரு கதை எழுதிப்போட்டாரு.. இப்படி புதுசுபுதுசா களம் இறங்கிறாங்கன்னா.. இன்னொரு பக்கம், பெரும்பதிவர்கள், லக்கி, பாலபாரதி, அதிஷா, பரிசல், நர்சிம், வடகரைவேலன், முரளிகண்ணன், அபிஅப்பா, ன்னு நிறைய பேர் பின்னி எடுத்திருகாங்க.. இதுக்கு நடுவுல நானெல்லாம் கதை எழுதியிருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம். இவ்வளவு பேர் எழுதின கதைகளுக்கு நடுவில 20 கதைய எடுக்கிறதுன்னா சும்மாவா.. அதான் சொன்னேன் பைத்தியக்காரனுக்கு பைத்தியம் பி...

வால்மீகி - திரைவிமர்சனம்

Image
திருடனாய் இருந்த வால்மீகி பின்னர் திருந்தி இராமாயணம் எழுதினார் அந்த வால்மீகி.. சென்னையின் பிக்பாக்கெட்டான பாண்டி தன் காதலியின் நினைவாய் தன் வாழ்கையை மாற்றி எழுதிக் கொள்கிறான் இந்த வால்மீகி. வர வர தமிழ் சினிமாவில் படித்த பெண்கள் எல்லாம், ரவுடி, பிக்பாக்கெட், விபசாரம் செய்பவன்,  மொள்ளமாறி, முடிச்சவுக்கியைதான் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தவறில்லை ஆனால் அவர்கள் எதனால் காதல் வயப்படுகிறார்கள் என்று காட்சிப்படுத்த தவறுகிறார்கள்.  அந்த தவறை தன் மோசமான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் சொதப்பி எடுத்திருக்கிறார்கள். பாண்டி என்பவன் சென்னையின் ப்ரொபஷனல் பிக்பாக்கெட், ஹீரோயின் வந்தனா ஒரு பணக்கார ஷோஷியல் கான்ஷியஸ் உள்ள, குழந்தைகளை காதலிக்கும், ப்ளே ஸ்கூல் நடத்தும் பெண், இப்படி ஒரு கேரக்டரை வைத்துவிட்டு, ஆங்காங்கே பார்க்கும், பிச்சைக்காரன், அனாதை சிறுவர்களை பாராட்டி சீராட்டினால், நடு ரோடில் பிக்பாக்கெட் அடிக்கும் பாண்டியை காதலிப்பதற்கு  காரணம் கேட்க முடியாதில்லையா..? படத்தின் இன்னொரு கதாநாயகியாக வரும் பூக்கடை கனகாவுக்கு பாண்டியின் மேல் வரும் காதலுக்கான அழுத்தமான கா...

நாடோடிகள் - திரைவிமர்சனம்

Image
காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள்? இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா..? அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் மாஜி எம்.பியின் மகன் சரவணன், அவன் ஒரு பணக்கார ஏரியா பெரிய ஆளான ஒருவரின் பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல் தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க் எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட நண்ப...

முத்திரை - திரைவிமர்சனம்

Image
டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ஸ்ரீநாத, யுவன், என்று கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி.  கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதிக்காமல் போய்விட்டார்கள். இரண்டு ஸ்மால் டைம் திருடர்கள், ஒருவன் ஹைடெக், இன்னொருவன் லோக்கல் பிக்பாக்கட், இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.  ஹைடெக் லஷ்மிராயையும், நிதின் மஞ்சரியையும், காதலிக்கிறார்கள். அவர்களின் ப்ளாட்டில் வசிக்கும் சேத்தனிடம் ஒரு அரசியல் கொலை ரகசியம்  மாட்ட அவனிடமிருக்கும் ரகசியம் அடங்கிய  லேப்டாப் இவர்களிடம் மாட்டுகிறது. ஒரு பக்கம், போலீஸ், இவர்களை துரத்த, மறுபக்கம், வில்ல்ன் பார்ட்டிகள் துரத்த, என்று மாறி, மாறி ஓடுகிறார்கள். திடீரென திரும்பி நிற்கிறார்கள்.  அதற்கு அப்புறம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ். பரபரப்பாக சொல்ல வேண்டிய கதை. படு சொதப்பலாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் முதல் பாதியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள்,  என்று ஒரே உட்டாலக்கடி, இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள வைத்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் டூமச்சாய், ஏதோ முடிக்க வேண்டும் என்ற அவரச...

வந்திட்டோமில்ல…

Image
ஒரு வாரமாய் உங்களுக்கெல்லாம் ஜாலியாய் இருந்திருக்கும், என்னுடய தொல்லையில்லாமல். எப்போதும் நல்லதே நடந்திட்டிருந்தா போரடிக்கும், அதனால நான் திரும்ப வந்திட்டேன். ஒரு திரைப்பட டிஸ்கஷனுக்காக என் நண்பர்கள் குழாமுடன் ஏதாவது வெளியூர் போகலாமென  முடிவெடுத்து, என் புரொடியூசரிடம் சொல்ல, அவர் கொடைக்கானலை சொன்னார் அடிக்கிற வெய்யிலுக்கு கொடைக்கானல் பேரை சொன்னாலே குளிருதுல்ல என்று குளீரடிக்க, கிளம்பினோம். புதன் இரவு. அற்புதமான பஸ் பயணம். போகிற வழியில், நர்சிம், முரளிகண்ணன், தண்டோரா, ரமேஷ் வைத்யா எலோரும் பேசினார்கள். அதிகாலை தேனியில் இறக்கி விட்டார்கள். அங்கே அருகே ஒரு ஓட்டலில் டபுள் ஏசி போட்ட ரூமில் போய் செட்டில் ஆனோம். காலையில் ஒரு ஒன்பது மணிக்கு ஒரு காரை அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். “இன்று ஒரு லொக்கேஷனை பார்க்க போகிறோம்.” நாளை தான் கொடைக்கானல் என்றார். போகிற வழியில் செவ்வெளனி வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவை. இம்மாதிரியான சுவை இருபது ரூபாய் கொடுத்து சென்னையில் குடிக்கும் இளனியில் வந்ததில்லை. இளனி 5 ரூபாய். அந்த கடைக்காரர் அன்று தான் முதன் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு...

ராகவன் -திரைவிமர்சனம்

Image
செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது. சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ். ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை.  படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண்  மட்டும் எந்நேரமும் கிளிவேஜ...

ஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு

போன வாரம் வியாழன் அன்று ”ஹலோ ஜெயாடிவி” நிகழ்ச்சியில் நேரலையாகவும், மறு ஒளிபரப்பாகவும், நான் பங்கு பெற்ற நேயர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள்.  பல பதிவர்கள் நிகழ்ச்சியில் போன் செய்து கலந்து கொண்டார்கள், பல முயற்சி செய்து, முயற்சி செய்து நொந்து போனதாகவும், சொன்னார்கள். பார்த்தவர்கள்  பாராட்டினார்கள், பலர் வலையேற்ற சொன்னார்கள். வழக்கமாய் நான் பங்கு கொள்ளும் பல நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காகவே என்னுடய கணினியில் டிவி டியூனர் கார்ட் வைத்திருக்கிறேன். அந்த சனியன் பிடித்த கார்டு அன்னைக்கு பார்த்து மக்கர் செய்துவிட்டது. (அதானே வேணுங்கிற போது வேலை செய்யாதே.) அந்த கடைசி நேரத்தில், யாரிடம் சொல்லி ரிக்கார்ட் செய்ய என்று ஒன்றும் புரியவிலலை.  மாலை மறு ஒளிபரப்பு வந்த போது கோவை நண்பர் சஞ்செயிடம் சொல்ல, அவர் பதிவர், நண்பர் கும்கியிடம் சொல்லி ரிக்கார்ட் செய்வதாய் சொன்னார்.  அவர் இதற்காக அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து ,வீட்டுக்கு வந்து பதிவு செய்ய ஆரம்பிப்பதற்குள், பத்து நிமிட நிகழ்ச்சி போய்விட்டது. இருந்தாலும் பதிவு செய்து டிவிடியை அனுப்பினார். அந்த அன்பான நெஞ்சுக்கு மிக்க ந...

மாசிலாமணி – திரை விமர்சனம்.

Image
புதிதாய் வேறு படங்கள்  ஐ.சி.சி மேட்ச் காரணமாய் வெளியிடபடாமல் இருக்க, இந்த நேரத்தில், சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் வந்திருக்கும் வழக்கமான படம் தான் மாசிலாமணி. ஹீரோ ஒரு லோகிளாஸ் காலனியில் இருப்பவன், காலேஜ் மாணவனாம், அந்த காலனியே அவனை பாட்ஷா ரேஞ்சுக்கு மதிக்கிறதாம் அவர்களின் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் அவன் சுனைனாவை கண்டதும் காதலிக்கிரான், அவளின் பார்வையில் இவன் செய்யும் விஷயங்கள் எல்லாம் ரவுடியாய் தெரிய வர,  அவனை வெறுக்கிறார் சுனைனா.. சுனைனாவை மணக்க, அவரின் வீட்டிற்கு மணி என்கிற பெயரில் சென்று அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருடைய அன்பையும் வென்று, சுனைனாவின் காதலை வெல்கிறான் மணி என்கிற மாசி என்கிற மாசிலாமணி.  இதற்கு நடுவில் ஒரு வில்லன் போலீஸ் ரூபத்தில் வர,  அவனிடம் முடிஞ்சா நான் மணியா, இல்ல மாசியா புருவ் பண்ணிக்கன்னு சவால் வேற, க்ளைமாக்ஸூல சுனைனாவுக்கு மணியும், மாசியும் ஒண்ணுதான் தெரிஞ்சிச்சா, அவங்க காதல் என்னாவாச்சுங்கிறதுதான் கதை. சொல்லும் போது அட பரவாயில்லையேன்னு நினைப்போம் ஆனா படம் முழுசா பாக்க முடியல . பல படங்களில் பார்த்த அரத பழசான சீன்கள்...

Dasvidaniya - Hindi Film Review

Image
தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம். அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது. அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்...