Posts

கொத்து பரோட்டா - 30/05/16

கேட்டால் கிடைக்கும் மெட்ப்ளஸில் மருந்து வாங்க சென்றிருந்தேன். வலது பக்கத்தில் ஒரு விளம்பரம் போட்டிருந்தார்கள். அதில் 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் 20 ரூபாய் மதிப்புள்ள டூத் ப்ரஷ் இலவசம் என. அது போல ஓவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு பொருட்களை பட்டியலிட்டிருந்தார்கள். என் மனதில் என்னவோ இதில் ஒரு டகால்டி வேலையிருக்கிறது என்று தோன்றியது. எனது பில் 172 ரூபாய். சரி.. என் போன் நம்பர் கொடுத்தால் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் தருவதாய் சொன்னார்.. இல்லையே போன் நம்பர் இல்லாமலேயே உங்க மருந்தகத்தில் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் உண்டே என்று கேட்டதற்கு யோசித்து நம்பர் இருந்தா கொடுங்களேன் என்றார். உங்க டேட்டா பேஸுல நம்பர் ஏத்துறதுக்கும் டிஸ்கவுண்டுக்கும் என்ன சம்பந்தம் என முனகிக் கொண்டே நம்பர் அளித்தேன். மருந்தையும், பில்லையும் கொடுத்தவரிடம் அந்த இலவச விளம்பரத்தைக் காட்டி அந்த பொருட்களை கொடுங்கள் என்றேன். அது டிஸ்கவுண்ட் பெற்றவர்களுக்கு கிடையாது என்றார்கள். அப்படியென்றால் இந்த விளம்பரத்திலேயே அதை போட்டிருக்கணும் இல்லையா? என்று கேட்டபோது அது வரை மொபைலில் கேம் ஆடிக் கொண்டிருந்த அந்த கடை இன்சார்ஜ் அதெல்லாம் தர முட...

சாப்பாட்டுக்கடை - கறி விருந்து

வளசரவாக்கத்தில் நல்ல உணவகங்கள் கொஞ்சம் குறைவுதான். நிறைய உணவங்கள் இருந்தாலும், நல்ல குவாலிட்டியான உணவகங்களை விரல் விட்டே எண்ணி விடலாம். ஜில் ஜில் ஒயின்ஸ் என்றாலே அந்த ஏரியாவில் பிரபலம். என்ன தான் அரசு டாஸ்மாக் ஆனாலும்  அந்த வகையில் இந்த கறி விருந்து ரொம்ப வருடங்களாய் நான் சென்று வரும் உணவகம். நாட்டாமை பிரியாணிக்கு பிறகு ஓரளவுக்கு நல்ல தரமான சீரக சம்பா மட்டன் பிரியாணி இங்கு சிறப்பு. மட்டன் சுக்கா, முட்டை சுக்கா, ஆகியவை நல்ல சுவை. முக்கியமாய் சுக்கா நன்கு சாப்டாக வெந்து மசாலாவுடன் கலந்து கொடுக்கபடுகிறது. மதியத்தில் ராஜ விருந்தெல்லாம் 1700 ரூபாய்க்கு நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடும் பேக்கெஜெல்லாம் இருக்கிறது. மீல்ஸில் மட்டன், சிக்கன், மீன் மீல்ஸ் அப்பளத்துடன் தருகிறார்கள். ரசமும், சிக்கன் குழம்பும் நன்றாக இருக்கிறது. ஹேவ் எ ட்ரை

கொத்து பரோட்டா - 23/05/16

Image
ஸ்கீரின் ப்ரெசென்ஸ் என்பது ஒரு வரம். ரஜினிக்கு, கமலுக்கு, அஜித்துக்கு, விஜய்க்கு என்று இருப்பது போல, டிவிக்களில் எஸ்.பி.பியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இன்ஸ்பயரிங் அண்ட் க்யூட் என்றே சொல்ல வேண்டும். மிக சுவாரஸ்யமாக, பேசக்கூடியவர். முடிந்த் வரை யாரையும் புண்படுத்தாமல், நகைச்சுவை இழையோட, மிகவும் தன்னடக்கத்தோடு பேசுவார். பாடுவார். மிமிக்கிரி செய்வார். அவருடய நாஸ்டால்ஜியா பயணங்கள் படு சுவாரஸ்யமாய் இருக்கும். இவரின் பேட்டிகளை பார்க்கும்போது மனதினுள் ஒரு விதமான பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் நடுநடுவே பாஸ்கியின் இடைச்சொருக இடைஞ்சல்கள் இருந்தாலும் அருமையான, சுகமான பேட்டி. டூ வாட்ச் இட்.

கொத்து பரோட்டா - 16/05/16

Image
ஓட்டு போட்டு வந்தாயிற்று. எங்கள் தெரு பூத்தில் அவ்வளவாக கூட்டமில்லை. எதிர் வரும் நபர்களிடமெல்லாம் தீபாவளி ஸ்நானம் ஆயிருச்சான்னு அந்த காலத்துல கேட்டா மாதிரி ஓட்டுப் போட்டாச்சா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பரொருவர் சூசகமாய் ரெண்டுக்கோ, மூணுக்கோ ரெண்டுத்துல ஒண்ணைத்துக்குத்தான் செலக்ட் பண்ணணும் என்று அதிமுக, திமுகவின் வரிசையை சொல்லிவிட்டு சென்றார். யாரும் மொபைல் பேசவில்லை. விநாயகபுரம், பார்சன் நகர், ஹாஸ்பிட்டல் ரோடு ஏரியாக்களில் கொஞ்சம் கூட்டம். புதிதாய் ஓட்டுப் போடும் இளைஞர்களின் முகத்தில் ஆர்வம் அதிகமாய் இருந்தது.   இளைஞிகளுடன் வந்த அம்மாக்கள் “லீவு நாள்ல சீக்கிரம் எழுந்துருன்னா பதினோரு மணிக்கு எழுந்திருக்கிறவ இன்னைக்கு விடியற்காலையிலேயே எழுந்து மேக்கப் போட்டு ஓட்டு போட கிளம்பிட்டா.. எல்லாம் செல்பி எடுத்து போட்டு லைக் வாங்குறதுக்காக” என்றபடி போனார்கள். ஓட்டுப் போடும் இடம் தாண்டி வந்து புது ஓட்டர்கள் கூட்டமாய் விரல் உயர்த்தி க்ரூப் செல்பி எடுத்துக் கொண்டார்கள். பழைய ஓட்டர்கள் என்னத்த ஓட்டப் போடு, என்னத்த என்ற சலிப்போடு, வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்த திருப்த...

கொத்து பரோட்டா -09/05/16

Image
இசை என்பதற்கான விருது என்பது பாடலுக்கு தனியாக, பின்னணியிசைக்கு தனியாய் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இளையராஜா தேசிய  விருதை வாங்க மறுத்திருக்கிறார். அதற்காக கங்கைஅமரனின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், என்னை போன்ற இளையராஜா ஃபேன்களுக்கு மகிழ்ச்சியே.. அந்த விருதுக்கான எந்த ஒரு தகுதியும் இல்லாத அப்படத்திற்கு விருதை கொடுப்பதும் அதை வாங்குவதும் மகா கேவலம். எனவே நாக்கு சால சந்தோஷம். @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா-02/05/16

Image
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க நண்பர் ஒருவரை சந்தித்தேன். உங்கள் தொகுதியில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று பேசிக் கொண்டிருந்த போது சுரத்தே இல்லாமல் பேசினார். கீழே யாரும் வேலை செய்ய மாட்டேன்குறாங்க.. காரணம்? என்னவென்று பார்த்தால் ராஜாவை சொன்னார்கள். மேலும் பேசிக் கொண்டிருந்த போது கலைஞர் ஏன் மீண்டும் இந்த கனிமொழி, ராஜா, என பேசிக் கொண்டிருந்தவர் சட்டென உணர்ச்சிவசப்பட்டு, இந்த தயாநிதி மாறனையும் கூட கூட்டிட்டு அலையிறாரு.. போன ஆட்சியில நம்ம கட்சி பேரக் கெடுத்ததே இவனுங்க தான் இவனுங்க கூட இருந்தா எவன் நமக்கு ஓட்டுப் போடுவானுங்க என்று மிக வருத்தத்துடன் பேசினார். என்ன அப்படியே செயிச்சாலும் ஒரு 140 சீட்டுக்குள்ள தான் வருமென்றார். அவரின் வருத்தம் நியாயமாத்தான் இருக்கு. @@@@@@@@@@@@@@@@ ஞாயிறன்று மகன்களுடன் ஒய்.எம்.சி.ஏ நீச்சல் குளத்திற்கு போயிருந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. 150 ரூபாய் அனுமதிக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு. பல வருடங்களுக்கு பிறகு நீச்சல் அடித்ததில் மகிழ்ச்சி. தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் பகபகவென பசித்தது. பேலியோவாய் ஏதுமில்லாததால் வேறு வழியில்லாமல் வரும் வழியில் ஒரு ஹோட்ட...

செய்வீர்களா தி.மு.க தலைவரே?

இத்தனை நாள் மீடியாவின் முன்னால் கண்காணாமல் இருந்த தயாநிதி மாறன் தற்போது மீண்டும் தி.மு.க தலைவருடன்.  அதைப் பார்த்திலிருந்து மீடியா, இண்டெர்நெட், கேபிள் டிவி, என பல துறைகளில் உள்ள தொழிலதிபர்கள், லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்களால் நிச்சாயம் இம்முறை கழக ஆட்சி வந்தால் அம்மாதிரியான இடர்பாடுகள் கொடுக்காது. சுதந்திரமாக தொழில் செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறியிருந்தாலும், இத்தனை நாள் இல்லாத ஆள் கிடைக்கிற கேப்பில் கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டிருப்பது. கண்கள் பனித்து, இதயம் இனித்து போல ஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் மாறன் குடும்பத்தின் வியாபாரம் ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு இருந்தது என அனுபவித்தவர்கள் அவர்கள். இதை வெளிப்படையாகவே சொல்லி அதற்காகவே தி.மு.கவிற்கு ஓட்டுப் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அவர்களின் ஆளூமையில்லையா என்று கேட்டீர்களானால் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் தொழில் செய்கிற்வரக்ளுக்கு தொல்லை இல்லை. என்பது உண்மை. ...

கொத்து பரோட்டா- 25/04/16

Image
பெங்களூரில் தமிழ் நூலகம் ஒன்றை காலி செய்யச் சொல்லி ப்ரச்சனையாகி, அந்நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் நடு ரோட்டில் வீசியெறிந்த கொடுமை நடந்தேறியது. செய்தி கேள்விபட்ட நடுநிலையாளர்கள், தமிழார்வலர்கள், பேஸ்புக், ட்விட்டர் இணைய ஆட்கள் கொதிதெழுந்து தமிழர்கள்மீதான வெறியாட்டம், அது இது என்று ஏற்றிவிட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் தேர்தல் சமயமாய் இல்லாவிட்டால் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கிறேன் என்று அரசியல் பிரச்சனையாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள். எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் அதை குப்பையாய் வீதியில் கொட்டுவது மகா கொடுமைதான். அது தமிழ் புத்தகமாய் இருந்துவிட்டால் தேவையில்லாத மொழிப் பிரச்சனையாய், தமிழர்களுக்கு எதிரான ப்ரச்சனையாய் புரிந்து கொள்வது அபத்தத்தின் உச்சம்.  @@@@@@@@@@@@@@@@@@@@ பேலியோவை பேணுகிறவன், அதன் பயனை அடைந்திருக்கிறவன் என்கிற முறையிலும், பேலியோ டயட் பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். நல்ல டீசெண்டான கூட்டம். மருத்துவர்கள் புடை சூழ கேள்வி பதில் செஷனோடு சிறப்பாக நடந்தது. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள்...

கொத்து பரோட்டா - 18/04/16

Image
தெறி படத்தை பாலிமர் டிவி ஓனர் சென்னையிலிருந்து திருட்டி விடியோ எடுக்கச் சொன்னதாக சொல்லி கோவையில் ஒரு தியேட்டரில் அவர்களது கேமராமேன் படமெடுத்ததாகவும், அதை ரசிகர்கள் கையும் களவுமாய் பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்ததாகவும், இது போல பல வருடங்களாய் பாலிமர் சேனல் செய்து கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார் தாணு. அதை சன் நியூஸ் தொலைக்காட்சி ம்ட்டும் மறுக்கா.. மறுக்கா ஒளிபரப்பியது. வெளியே விசாரித்த போது அவர்கள் தியேட்டர்களில் அரசு அனுமதித்த விலைக்கு மேலே விற்றதை வீடியோ எடுக்க போனதால் நடந்த பிரச்சனை என்றும். பொய்க் குற்றச்சாட்டில் போலீஸார் வீடியோ கேமராவை செக் செய்த போது அதில் படம் ஏதும் இல்லையென்றும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மீடியாவும் பெரிது படுத்தவேயில்லை. ஆனால் சமீபகாலமாய் பாலிமர் டிவி வளர்ச்சி சன் டிவியின் கண்களை உறுத்த, அவர்களை மட்டம் தட்ட செய்த சூழ்ச்சியாகவே தெரிகிறது. இதற்கு பலி கடா தயாரிப்பாளர் தாணு. உடந்தை தயாரிப்பாளர் சங்கம். எவனாச்சும் கையில கேமரா வச்சிட்டு பப்ளிக்கா திருட்டு வீடியோ எடுப்பாங்களா யுவர் ஆனர்.? திரும்பத் திரும்பச் சொன்னா பொய் உண்மையாகிருமா.. இன்னுமா ...

சாப்பாட்டுக்கடை- தட்டுக்கடை போளி ஸ்டால்

Image
போளி என்றால் நிறைய பேருக்கு மேற்கு மாம்பலம் தான் நியாபகத்துக்கு வரும். போளிக்கான நிறைய கடைகள் அங்கே பிரபல்யம். அதே போல இந்த தட்டுக்கடையும். தி.நகர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சப்வேயில் ஏறியவுடன் வலது பக்கத்தில் உள்ள கோயிலுக்கு முன் அமைந்த சிறு கடை. ஸ்வீட், மற்றும் கார வகைகள் காலையில் போட்டிருப்பார்கள். மாலை வேலையில் வடை, போண்டா, மசாலா போண்டா, தேங்காய் போளி, பருப்பு போளி, மசாலா போளி என வரிசைக் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சுடச்சுட போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும் கடை. டிமாண்டுக்கு ஏற்றார்ப் போல ஐயிட்டங்களை போட ஆர்மபிப்பார்கள் பெரும்பாலும் இரவு எட்டு  மணிக்குள் எல்லா போண்டா, போளி வகைகள் காலியாகிவிடும். எனக்கு இங்கே பிடித்தது தேங்காய் மற்றும் மசாலா போளி வகைகள். சைசில் சின்னதாய் இருந்தாலும், தேங்காயை வெல்ல பாகுடன் ஊற வைத்து அதை சூடான போளியாய் சாப்பிடும் போது தேங்காயும், வெல்லப்பாகின் ஜூஸும், நெய் வாசனையும் வாவ்வ்.. வாவ்வ்..