Thottal Thodarum

Nov 16, 2006

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...3

சுரண்டல்......3

அந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று கண்கள் சிவந்து போய் உடலெல்லாம் சூடாகி,, ஏன் ?" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்.." என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் " சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்.." எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி " சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. " சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்.." என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..நம்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆனா...

தொடரும்...
கேபிள் சங்கர்
www.shortfilmindia.com
www.classiindia.com
Post a Comment

No comments: