Thottal Thodarum

Nov 17, 2006

சரண்டல்... பார்ட்..4

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4

ஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், "சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.

சரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து..." வாட் கேன் ஐ டூ பார் யூ?"
நான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால் " சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... " என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. " சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்?" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் " அப்படியா? சொன்னாங்க? :" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....

தொரும்...
கேபிள் சங்கர்
போரடிச்சா சொல்லிடுங்க..
www.shortfilmindia.com
www.classiindia.com
Post a Comment

1 comment:

வேந்தன் said...

போரடிக்கலைங்க .. ஆனா நீங்க அதற்காக இதை சீரியலா இழுக்காம ஒரே பதிவா போட்டா எல்லோருக்கும் பயன்படறமாதிரி இருக்கும்.ஏன்னா நீங்க இப்படி part- parta பதிபிக்கும் போது சிலவற்றை படிக்காமல் தவறவிட வாய்ப்பிருக்கிறது.
அவசியமான பதிவு