Thottal Thodarum

Aug 31, 2015

கொத்து பரோட்டா - 31/08/15

கேட்டால் கிடைக்கும்
கேட்டால் கிடைக்கும்
ஐநாக்ஸ் விருகம்பாக்கம் திரையரங்கில் எப்போது 10 ரூபாய் டிக்கெட்டுக்கள் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், உடன் பெப்ஸி மற்றும் கோக்குகள் சகிதம் 120 கொடுத்தால் தான் டிக்கெட் தருவேன் என்பார்கள். இதற்காக ஒரு முறை சண்டைப் போட்டு, பத்து ரூபாய்க்கே டிக்கெட் வாங்கிய அனுபவத்தை எழுதியிருந்தேன். இது பற்றி மேனேஜரிடம் புகார் செய்த போது, இப்போதுபுதிய டீம் வந்துவிட்டது. அம்மாதிரியெல்லாம் இல்லை என்றார்கள். நேற்றிரவு பாண்ட்தம் படம் பார்ப்பதற்காக மீண்டும் ஐநாக்ஸ் படையெடுத்தோம். பத்து ரூபாய் டிக்கெட் தான் இருப்பதாகவும், பேக்கேஜ் டிக்கெட் தான் தருவோம் என்றார்கள். விலை 120 ரூபாய். 10 ரூபாய்க்கு டிக்கெட் மீதிக்கு கோக். நான் எதற்காக அப்படி நீங்க விற்க வேண்டும் என்று கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது. பேக்கேஜாகத்தான் விற்போம். இல்லாவிட்டால் மேனேஜரிடம் பேசிக்கங்க. என்றார். பின்பக்க வழியாய் மேனேஜரை பார்க்க போன இடத்தில் இருந்த செக்யூரிட்டி, மேனேஜர் யாரும் இல்லை. பார்க்க முடியாது என்றார். நான் தொடர்ந்து அங்கு நட்க்கும் விஷயத்தைப் பற்றி பேச, உன்னைப் போல நூறு பேரு வர்றாங்க என்று தெனாவெட்டாய் பதில் சொன்னார். வீடியோ எடுத்துக்கங்க.. என்றார். அதற்குள் மேனேஜர் அஹமத், ட்யூட்டி மேனேஜர் செந்தில் ஆகியோர் ஆஜரானார்கள். நாங்க அப்படி விற்பதேயில்லை என்றவர்.. சற்று நேரத்தில் அவங்க பேக்கேஜ் சஜஸ்ட் பண்ணியிருப்பாங்க.. என்றார். உங்க வேலை டிக்கெட் விற்பதோடுபோகிறது. நீங்க யாரு நான் பெப்ஸி சாப்பிடுவதா கோக் சாப்பிடுவதா? என்று கட்டாயப்படுத்த என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. வழக்கமான சால்ஜாப்பு.. அதன் பிறகு கீழே வ்ந்தால் எங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. 120ரூபாய் டிக்கெட். பத்து ரூபாய் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னது இன்னைக்கு பத்து ரூபா டிக்கெட்டுக்கு 110 ரூபா கோக் சாப்பிடணும்னு சொன்னீங்கன்னா.. நாளைக்கு டீக்கடையில பொறை வாங்கினாத்தான் டீ தருவேன் சொல்லக் கூடிய நிலை வரும். உங்களுக்காகத்தான் இந்த போராட்டமே.. என்றேன். வாசலில் இருந்த வாட்ச்மேனுக்கு புரிந்தது. சத்யம் போன்ற அரங்குகளில் பத்து ரூபாய் டிக்கெட் ஒன்று காலையிலேயே கொடுத்துவிடுவார்கள். அல்லது கொடுப்பதேயில்லை. சினிமாவுக்கு வரும் ரசிகர்களின் டவுசரை தொடர்ந்து இப்படி அவிழ்த்துக் கொண்டேயிருந்தால் ரசிகன் வீட்டை விட்டு வெளிவரப் போவதில்லை. இதனால் நஷ்டம் சினிமாவுக்குத்தான். அது மட்டுமில்லாமல் ஒரு வேளை டிக்கெட் விலை கட்டுப்படியாகவில்லையென்றால் அதை ஏற்றிக் கொள்ள அரசிடம் முறையிடுங்கள். இனி இம்மாதிரியான விஷயங்கள் யார் செய்தாலும், உடன் கேளுங்க.. கேளுங்க கேட்டுட்டே இருங்க.. Pl Do share and ASK
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kick 2
மாஸ் மஹாராஜாக்கள் படங்கள் எல்லாம் வர வர ஒவ்வொரு சீனுமே க்ளைமேக்சாய் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் தெலுங்கு ரைட்டர்கள், இயக்குனர்கள் இருப்பதால் காட்சிக்கு காட்சி, தடாலடியாய் எத்தையாவது செய்வது வழக்கம். அப்படி காட்சிக்கு காட்சி, கிக் படத்தில் தடாலடி கேரக்டராய் வந்த ரவிதேஜா இதில் அவருக்கு பிள்ளை பொறந்து, அது கிக்குக்கு பதிலாய் தான் கம்பர்ட்டாய் இருக்க, எதை வேண்டுமானாலும் செய்யும் புள்ளையை பெற்றெடுக்க, அது வளர்ந்து செய்யும் அட்டகாசமே கிக் 2. முதல் பாதி முழுவதும் ப்ரம்மானந்தமும், ரவி தேஜாவும் அட்டகாசப் படுத்துள்ளார்கள். சிரிச்சு மாளலை. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் ஏதோச் செய்யப் போகிறார்கள் என்றெண்ணி தயாராய் இருந்தால் முதல் பாதியில் வர வேண்டிய அத்துனை பில்டப்புகளும் க்ளைமேக்ஸ் வரை பண்ணி, தெலுங்கு படமென்றால் லாஜிக் பார்க்கக்கூடாது என்கிற விதி தெரிந்திருந்தாலும், லாஜிக் பற்றி யோசனை செய்ய வைத்துவிட்டார்கள். ஊரே ரவிதேஜாவுக்காக பிகாரியிலிருந்து ரெபிடெக்ஸ் மூலம் தெலுங்கு கற்றுக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிக் 3 வருகிறதாம். 
@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் - ஸ்திரீபார்ட்
பரத் நீலகண்டன் எனும் உதவி இயக்குனரின் குறும்படம். டீசர், ட்ரைலர் வந்த போது கொஞ்சம் போல்டான படமாய் தெரிந்தது. பெண்ணுரிமை பேசும் படமாகவும் தெரிந்தது. அதன் ப்ரீமியர் விழாவுக்கு சென்றிருந்தேன். கல்யாணம் ஆகி மனைவிக்கு துரோகம் செய்பவன் (ள்).  அம்மாதிரியான உறவை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் பெண்கள். பெண்களைப் பற்றி ஆண்களுக்கும் இச்சமூகத்திற்கும் இருக்கும் மதிப்பீடு என்ன? என்பது போன்ற சீரியஸ் விஷயங்களை மிக அழகான எழுத்துக்களால் சிறப்பாகவே கையாண்டிருந்தார்கள். கதையாய் இம்மாதிரியான அதிரடி க்ளைமேக்ஸ்கள் தமிழிலே பார்த்து பழக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் திடுக்கிட முடியாவிட்டாலும், ஆம்பளைங்க மட்டுமே தப்பா? என்ற கேள்வியை படம் பார்த்த பெண்களுக்கு ஏற்பட வைத்ததே வெற்றி. கிடைத்த வசதியில் மிக சிறப்பாகவே படத்தை கையாண்டிருந்தார்கள். ஒளிப்பதிவாகட்டும், பின்னணியிசையாகட்டும் நடித்த அனுபமாகுமாரிலிருந்து, சின்ன கேரக்டர் வரைக்கும் அனைவரும் சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்களுக்கான ஆதரவு படமெடுத்த பரத் நீலகண்டன் அதற்கு கைமாறாய் ஆண்பாவத்தைப் பற்றி படமெடுத்தாக வேண்டும் :)
@@@@@@@@@@@@@@@@@@@@@
Manjhi -The Mountain Man
தசரத் மாஞ்சி  தனியொரு ஆளாய் 22 வருடம் தொடர்ந்து வேலை செய்து பிஹாரின் ஒரு குக்கிராமத்திற்கு ரோடு போட்டவர். ட்ரைலர் அட்டகாசமாய் இருந்தது. தற்போதைய சென்சேஷன் ராதிகா ஆப்தே, நவாசுதீன் சித்திக் வேறு நல்ல எதிர்பார்ப்போடு போய் உட்கார்ந்தால், பயோகிராபியாகவும் இல்லாமல், கற்பனைக்கதையாவும் இல்லாமல், சிறந்த டாகுமெண்டரியாகவும் உருவாகாமல் மனதோடு ஒட்டாமல் போய்விட்டது.  ராதிகா ஆப்தே மட்டும் இப்படத்தின் கேஸ்டிங்கில் சேர்க்கப்படாவிட்டால் ஒரு நிச்சய அசுவாரஸ்ய டாகுமெண்டரியாகியிருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@
தனிஒருவன்
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு சுவாரஸ்ய திரைக்கதை. தகுதியான காஸ்டிங்கினாலும், சிறந்த தயாரிப்பினாலும் தரமாய் வெளிவந்திருக்கிறது. உன் எதிரி யார் என்று சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்கிற புதிய தாரக மந்திரத்தை மிக அருமையான லாஜிக்கல் ஓட்டை குறைவாய், தேவையில்லாத பாடல், மற்றும், காமெடி இம்சைகள் இல்லாத, கிரிப்பிங் திரைகக்தை, எங்கேஜிங் டெக்னிக்கல் விஷயங்கள், சிறந்த நடிகர்கள் என வரிசைக் கட்டி சிக்ஸரடித்திருக்கிறார்கள். அரவிந்த்சாமியை இந்த கேரக்டரில் போட்ட மாத்திரத்திலேயே படத்தின் வெற்றி 50 சதவிகிதம் உறுதிப்பட்டிருக்கிறது. மீதியை மற்ற விஷயங்கள் பாத்துக் கொண்டிருக்கிறது. எப்போது உலக அளவில் வில்லன் ஸ்ட்ராங்காக இருக்கும் எந்த படமும் தோல்வியடைந்ததில்லை. இதிலும் அப்படியே.. ஜெயம் ரவிக்கு ஈடான கேரக்டர் அரவிந்த்சாமிக்கு. மனுஷன் நல்லா நடிச்சிருக்காருன்னு சொல்றத விட, சரியா சூட் ஆகியிருக்கார்னுதான் சொல்லனும். ஷுயூர் ஷாட் வின்னர். இனி இவர்கள் தனியொருவன் கிடையாது. மக்கள் கூட்டத்தில்.
@@@@@@@@@@@@@@@@@@@
PHANTOM
தாஜ் ஓபராய் பாகிஸ்தானிய தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், அதற்கு காரணமான முக்கிய தீவிரவாதிகளை அவர்களிடத்திலேயே சென்று கொல்லச் சொல்லும் ரா உளவுப்படையின் பழிவாங்குதல் தான் கதை. கதை அமைப்பாய் சுவாரஸ்யம்தான். வழக்கம் போல, அதற்கு அடையாளமே இல்லாமல் வாழும் ஒருவனால்தான் இதை செய்ய முடியும், கார்ணம் அவன் ஒர் எக்ஸ் ஆர்மி மேன், அவனிடம் கேட்டால் அவன் மாட்டேன் என்பது, பின்பு நாட்டின் சேவைக்கு உன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வோம் நீ இழந்த பதவியை, பெருமைய அளிப்போம் என்ற உறுதியின் பேரில் எல்லாவறையும் அவன் அழிக்கிறான். எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. ஆரம்ப காட்சிகளில் படு சுறுசுறுவென போன கதை. பின்பாதியில் புராதான காலத்து கர்பிணிப்பெண் டெக்னிகையெல்லாம் யூஸ் செய்து பாகிஸ்தானிய அரசு போலீஸிடமிருந்து தப்பிப்பது போன்ற விஷயங்கள், உதவி செய்வதற்காக வரும் காத்ரீனா கைப்பின் பின் கதை போன்ற மொக்கைகளால் சுவாரஸ்யமிழந்து ஹைஃபை ஹாலிவுட் ஸ்டைல் விஜயகாந்த படமாகிப் போனது துரதிஷ்டமே.
@@@@@@@@@@@@@@@@@@
நாங்க அப்படித்தான் - குறும்படம்
வழக்கமான இளைஞர்களின் ஆதர்ச பிரச்சனையான பிகர் மடிக்கும் பிரச்சனைதான். நண்பர்கள் என்றாலே அதில் ஒருவர் குண்டாக இருப்பது எப்படி க்ளீஷேவோ, அது போல இளைஞர்கள் என்றால் பிகர் தேடும் கதை என்பது போன்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் சுவாரஸ்யமாய் சிரிக்க முயற்சிக்க வைத்து சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கொஞ்சம் அறிவுப் பூர்வமாய், ஜிந்திக்கிறவர்கள் இக்குறும்படத்திலிருந்து சற்றே.. சற்றே என்ன காத தூரம் விலகியே இருக்க வேண்டுகிறேன்.
@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
after a long time.. though got some extrodinary cinematography and tech creepy.. half way walk out happend frown emoticon @ ‪#‎DoubleBarrel‬

Stylish Vijaykanth type pakistan revenge patriotic film by kabir khan nothing more than that ‪#‎Phantom‬

சாமி காரியமா நான் பேலியோ அயிட்டங்கள் சாப்பிடுவதால் பேலியோ சாமி மன்னிச்சூ ஊஊஊ

Ennamma ippodi pannureengalemma http://t.co/9LoDdW8gy5

Gripping.. Engaging.. ‪#‎ThaniOruvan‬
@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why was the guitar teacher arrested?
For fingering a minor
கேபிள் சங்கர்


Post a Comment

6 comments:

Unknown said...

அட்டகாசம்.

Unknown said...

கேட்டால் கிடைக்கும் - சத்யம்(ராயப்பேட்டை)யில் மட்டுமே பத்து ரூபாய் டிக்கெட்டிற்கென்று தனியாக counter வைத்து ஒரு நாளைக்கு நாலு முறை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் கொடுப்போம் என்று மாற்றிவிட்டார்கள்.

மற்றபடி escape-ல் பத்து ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டுமானால், எந்தக் காட்சியாக இருந்தாலும், காலை ஆறு மணிக்கெல்லாம் போய் வாங்க வேண்டும்.

Luxe அதைவிடக் கொடுமை.. மாலிற்கு வெளியே ஒரு ஓரத்தில் டிக்கெட் கொடுக்கப் படுகிறது, 11 Screen இருக்கும் இடத்தில் screen-க்கு பத்து டிக்கெட் வைத்தாலே 110 டிக்கெட் ஆச்சு.ஆனால் அதற்கு மேலேயே அங்கே இடம் இருக்கிறது. படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னால் வந்து 100-150 பேருக்கு மேல் நிற்கும் க்யூவில் வெறும் 20 பேருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு முடிந்து விட்டது என்கிறார்கள். மீதியை லவட்டி உள்ளே இருப்பவர்களே black-ல் விற்று விடுகிறார்கள். அந்த 20-ல் ஒருவனாக டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே சென்றால், அருகில் நாம் க்யூவில் பார்த்திராத முகமெல்லாம் அமர்ந்திருக்கும்.

எதாவது பேசினால் counter-ல் இருப்பவர்கள் காதில் வாங்குவதில்லை. சத்யம் நிர்வாகதிருக்கு ட்வீட் தட்டியாச்சு, மெயிலும் பண்ணியாச்சு. No Response.

- புலம்பல்ஸ் of இந்தியா.

sarav said...

Very True !
Ella theatre la snacks kodumai irukku. Theatre kku povadhu enakku pidicha mathiri padam pakka thaan. but athu nadakathu nna why should i go to theatre ?

Water bottle eduthukittu poga koodatham enna kodumai sir ithu

yarachum water bottle eduthukittu successfulla intha theatre kulla poi irukkangala ?

குரங்குபெடல் said...

"தனிஒருவன்
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு சுவாரஸ்ய திரைக்கதை. "


ஒண்ணும் பெருசா இல்ல அண்ணே . . .

ஆனா ஒண்ணு . . .
சில விபத்துகள் எல்லாம் திட்டமிடப்பட்ட கொலைகள் என்கிற போது . . .

தொட்டால் தொடரும் படம் ஞாபகம் வந்துச்சு அண்ணே . . .

SANKAR said...

சென்னை மாதிரி ஒரு பெருநகரத்தில் அதிகபட்ச கட்டணம் 120, ஆனால் எங்க திருநெல்வேலியில் கட்டணம் 200 150 100 ஆனாலும் டிக்கெட்டுக்கு பதில் ரிசர்வேசன் சிலிப் தான்.நம்மையும் ஏமாற்றி வரி ஏச்சு அரசையும் ஏமாத்தும் இவர்களை பழி வாங்க ஒரே வழி டோர்ரென்ட் தான் சங்கர் திருநெல்வேலி

BALAMADRAS said...

This is what happened to kannada industry. It used to be very good in early days. many films won national award. But eventually cine stars became greedy and the cost went very high. due to that they cannot make kannada films easily. So audience started watching tamil, telugu, hindi movies.

if people starts hating theatre and starts watching everything in internet for free, then even good movies couldn't make money. slowly tamil induustry will go down.