Thottal Thodarum

Oct 5, 2015

கொத்து பரோட்டா - 05/10/15

குற்றம் கடிதல் கலந்துரையாடல்
படம் பார்த்ததிலிருந்து இயக்குனரை சந்தித்து பாராட்ட வேண்டுமென்று இருந்தேன். ஏன் அதை ஒரு கூட்டமாய் நடந்தக்கூடாது என்று யோசித்த போது வேடியப்பனும் உடனே நடத்தணும் என்றார். அந்த பரபரப்பில் ஏற்பாடானதுதான் இந்த கலந்துரையாடல் கூட்டம். வழக்கம் போல அறை கொள்ளாத கூட்டம்.  குற்றம் கடிதல் படத்தை எப்படி ஆரம்பித்தோம் என்பதில் ஆரம்பித்து படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு வந்திருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இயக்குனர் பிரம்மா. இயக்குனர் சசி, கேள்விகள் கேட்க ஆரம்பித்து வைத்தார். பின் நான் தொடர்ந்தேன். நாங்கள் அதிகம் பேசாதவர்கள் எங்களை பேசச் வைத்தது இக்கூட்டத்தின் உண்மையென்றார் பிரம்மா. வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு விதமாய் பாராட்டி தள்ளினார்கள். விவாதித்தார்கள். பதில் பெற்றார்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது மூலம். நன்றி வேடியப்பன். நன்றி சசி சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நமக்கு சம்மந்தமேயில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு கருத்து சொல்வதற்கு அதீத திறமை வேண்டும். அது எனக்கு கொஞ்சம் இருக்குன்னு நேத்து புரிஞ்சது

ஆதாயத்துக்காக பாராட்டுகிறவர்களை அதை பெற்றவர்கள் மிக சுலபமாய் கண்டு கொள்கிறார்கள். ஏனென்றால் உண்மை என்னான்னு அவங்களுக்கு தெரியும்

குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று நாமே மறுக்கா மறுக்கா சொல்லியே திணீப்பது சைல்ட் அப்யூஸில் வருமா

நான்கு வாரம் ஆகியும் மயிலாடுதுறையில் சிங்கிள்ஸ்கீரினில் தனியொருவன் ஓடுகிறது என்பது அதன் நிஜ வெற்றியை குறிக்கிறது.

உதவியை பெற்றவர்கள் நாலு பேர் எதிரில் எல்லாத்தையும் நானே தான் செய்தேன் என்று சொல்லும் போது வருத்தமாயிருந்தாலும், ஒரு பக்கம் சந்தோஷம் ‪#‎நிஜம்‬

சுயநலம் புத்திசாலித்தனமல்ல என்பதை புரிந்து கொள்ள வேறொரு சுயநலமி அவனிடம் புத்திசாலியாய் காட்டிக் கொள்ளும் போது புரியும்

What a movie. Guys support good cinema. ‪#‎KuttramKadithal‬

இணையத்தில் மட்டுமே புழங்குகிறவர்களுக்கு 50 கோடியெல்லாம் தமிழ் சினிமாவிற்கு சாதாரணமப்பா என்று நினைப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் நிஜம் வேறு:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் நியூஸில் பேண்டஸி படங்களைப் பற்றி பேசக் கூப்பிட்டிருந்தார்கள். அதற்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் தந்தி டிவியிலும் பேசக் கூப்பிட, இதை முடித்துவிட்டு, பரபரப்பாக நேரே பெருங்குடிக்கு காரை விட்டேன். பாதி நிகழ்ச்சியில் தான் போய் சேர்ந்து கொண்டேன். நடிகர் சங்க ப்ரச்சனை பற்றிய நிகழ்ச்சி. ஒரு விதத்தில் இக்கட்டான நிலையில் தான் இருந்தேன். நல்ல வேளையாய் இம்மாதிரியான நேரங்களில் திறமையாய் சமாளிக்கும் திறன் எனக்கிருக்கிறது என்பதை நேற்றுதான் அறிந்து கொள்ள முடிந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் -The God Father
நெகிழ வைக்கும் குறும்படம். தந்தையும் மகனுமாய் முதியோர் இல்லத்தில் அமர்ந்திருப்பதில் ஆரம்பிக்கிறது காட்சி. மிக பாசமாய் அவரின் வசதிகளுக்காக கேட்டுப், பார்த்து, சேர்க்கும் மகன். அவ்வசதிகளை வேண்டாம் எதுக்குப்பா வீண் செலவு? என்று மகனுக்காக கரிசனத்தோடு பேசும் தந்தை என போகும் காட்சியில் க்ளைமேக்ஸ் அட்டகாசம். டோண்ட் மிஸ். இயக்குனர் பிரஜேஷ் திவாகரனுக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் - மரணம்
மரணம் எனும் எமன் நம் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டு, “நான் தான் மரணம்.உன் உயிரை கொண்டு போக வந்திருக்கேன்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி தான் இப்படத்தின் சுவாரஸ்யம். கொஞ்சம் டார்க் வகை படம் தான் என்றாலும் சுவாரஸ்யமான படம். இயக்கிய அன்புவுக்கு வாழ்த்துக்கள். 
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A trucker who has been out on the road for two months stops at a brothel outside Atlanta. He walks straight up to the Madam, drops down $500 and says, "I want your ugliest woman and a grilled cheese sandwich!" The Madam is astonished. "But sir, for that kind of money you could have one of my prettiest ladies and a three-course meal." The trucker replies, "Listen darlin’, I’m not horny – I’m just homesick."
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: