Thottal Thodarum

Feb 12, 2019

Lust Stories

Lust Stories
செக்ஸுவல் உணர்வு சார்ந்த கதைகளை தமிழில் எடுத்தால் பெரும்பாலும் ஹிப்போக்கிரேட் ஷோஷியல் மீடியா சூழ் உலகில் அவைகளை பிட்டுப்படங்களாய் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் உலக சினிமாவென்றால் அதே பிட்டுக் காட்சிகள் பிரஸ்தாபிக்கப்படும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை டார்கெட் செய்து இரண்டு வெளிநாட்டு ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களான நெட்ப்ளிக்ஸும், அமேசானும்  தங்களது கண்டெண்டுகளால் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

பெரிய நடிகர்கள் ஃபீல் குட் படங்களில் நடிப்பதில்லை. சிறிய நடிகர்கள் நடித்த ஃபீல் குட் படங்கள் ஓடுவதில்லை. ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இந்திய சினிமாவுக்கு இந்த ப்ளாட்பார்மகள் பெரும் வரப்பிரசாதம். லவ் பர் ஸ்கொயர் ஃபீட், போன்ற படங்கள் மூலம் நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் படங்கள் சீரீஸை ஆரம்பித்திருக்க, இன்னொரு பக்கம் அமேசான், தமிழ், தெலுங்கு நடிகர்களை வைத்து கிட்டட்தட்ட மசாலா படம் லெவலுக்கு படங்களையும் சீரீஸ்களையும் இறக்குகிறது.

நெட்ப்ளிக்ஸ் தேர்ந்த கலைஞர்களுடன் கைகோர்த்து சமீபத்தில் அளித்திருக்கும் ஒரிஜினல் படம் தான் இந்த “லஸ்ட் ஸ்டோரீஸ்”. காமம் சார்ந்த கதைகள். அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபங்கர் பனர்ஜி, கடேசியாய் கரன் ஜோஹர் ஆகிய நால்வரும் இயக்கிய நான்கு காமம், வாழ்க்கை சார்ந்த படங்கள் வரிசைக் கட்டியிருக்கிறது.

அனுராக்கின் படம் வழக்கம் போல கொஞ்சம் மனோதத்துவம் சார்ந்து, உறவுகளில் உள்ள சிக்கல், அதுவும் டீச்சர், மாணவனிடையே உருவான செக்ஸுவல் உறவு. அதன் சார்ப்பாய் எழும் மனவெழுச்சி ப்ரச்சனைகள், கொஞ்சம் டாக்குமெண்டரித்தனமாகவும், அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் கையாண்ட கதை. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் நச். வசனங்களும், ராதிகா ஆஃப்தேவின் நடிப்பும் வழக்கம் போல் ஆசம்.

ஜோயா அக்தரின் படம் ஆரம்பிக்கும் போதே தீயாய் ஒரு உடலுறவில் ஆரம்பிக்கிறது. வீட்டு வேலைக்காரிக்கும், முதலாளி இளைஞனுக்குமிடையே நடக்கிறது. நெருக்கமாய் பேசிக் கொள்கிறார்கள். சில நாட்கள் பிறகு அவனுடய பெற்றோர்கள் வருகிறார்கள். ஒழுக்கமான பையனாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவளுடனான தனிப் பேச்சு அந்த வீட்டிலேயே நடக்கிறது. வேலைக்காரியின் மனம் படும் அவதிதான் படம். அவளுக்கு தெரியும் அவனை அடைய முடியாது என்று. நெருக்கமும், காமமும், கொடுத்த உறவு அதை இழக்க விரும்பாது அலைபாய்கிறது. அதிலிருந்து எப்படி வெளி வருகிறாள் என்பதுதான் இவரது கதை. பூமிபட்னெகரின் நடிப்பு சிறப்பு.

திபங்கர் பேனர்ஜியின் கதை ரொம்பவே மெச்சூர்ட். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மனிஷா கொய்ராஜா. ஸ்விம் ஸூட்டில் பீச்சில் குளித்து எழுந்து கரையில் காத்திருப்பவரிடம் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போல என்கிறார் இவர். கரையில் இருப்பவர் அவளது கணவனில்லை. கணவனின் நண்பன். இவளுக்கு கல்லூரி நண்பன். கல்லூரி காலத்தில் இவள் மேல் காதல் கொண்டிருந்து வெளியே சொல்லாதவன். சொல்லிய சல்மானுக்கு மனைவியாகி, ரெண்டு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்ப வாழ்க்கையில் தன்னிறைவு இல்லாமல், தனக்கென அடையாளம் இல்லாமல், ஆணாதிக்க அழுத்தத்தில் வாழ்கிறவள். பழைய நண்பனான சுதிருடன் உறவு. அது அவளது கணவனுக்கு சந்தேகத்தை வரவழைக்க, இதை சரி செய்ய அவனையும், சுதிருடன் இருக்கும் பீச் ஹவுஸுக்கு அழைக்கிறாள். தனக்கும் சுதீருக்குமிடையே ஆன உறவை சொல்லுகிறாள் பின்பு என்ன நடந்தது என்பது கதை. மிக அழகாய் இக்கதையை கையாண்டிருக்கிறார் இயக்குனர் திபங்கர் பேனர்ஜி.  மனிஷாவின் க்ளைமேக்ஸ் ரியாக்‌ஷன் ஒன்று போதும் அவரது நடிப்பை பற்றி சிலாகிக்க. கார்பரேட் மனிதர்களின் காமம்.

மொத்த படத்திலேயே கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சீரியஸ் கதை கரண் ஜோகரின் கதை தான். திருமணம் என்பது குழந்தைப் பிறப்புக்கு மட்டுமே என்ற குடும்பத்தில் பெண்ணின் செக்ஸுவல் ஆசை என்பது மறுத்தளிக்கப்படுகிற நிலையில். அவள் தோழியின் வைப்பரேட்டரை நாடுகிறாள். நாடிய அந்த நாளில் நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவையாய் இருந்தாலும், செம்ம இண்ட்ரஸ்டிங்.
இந்த நான்கு கதைகளும் பெண், அவளின் தேவை, அவளது காமம் சார்ந்த தேடல். அதன் சார்ந்த பிரச்சனைகள். இதை அணுகும் ஆண்களின் மனப்பான்மை. ஏன் பெண்களின் மனப்பான்மை கூட பேசுகிறது. என்ன எல்லாவற்றையும் மேலோட்டமாய் பேசுகிறது. சென்ஸார் உள்ள சினிமாவில் கூட புரட்சியாய் காட்சி வைப்பவர்கள் இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாய் பேசியிருக்கலாம். படமாக்கியிருக்கலாம். பட்.. நல்ல முயற்சி. இவைகள் தமிழில் வருவது எப்போது என்று வழக்கம் போல காத்திருப்போம்.



Post a Comment

No comments: