Thottal Thodarum

Feb 27, 2019

Sacred Games - Web Series

Sacred Games
சினிமா அவ்வளவுதான் இனிமே. எல்லாரும் டிவி பார்க்க போயிட்டாங்கனு சொல்லிக் கொண்டிருந்த போதும், சிடி, டிவிடி, டவுன்லோட் காலம் என ஒவ்வொரு ப்ரீயட் வரும் போதும் அவ்வளவுதான் சினிமா என்பார்கள். ஆனால் சினிமா எனும் ராட்ஷனுக்கு அழிவே கிடையாது. எதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பவன். 

அது வெளிப்படும் டெக்னாலஜி வேண்டுமானால் மாறுமே தவிர சினிமா மாறுவதேயில்லை. 2010 நான் சினிமா வியாபாரம் புத்தகத்தில் இன்னும் பத்து வருடங்களில் நாம் சினிமாவை வீட்டில் தான் பார்க்கப் போகிறோம், அதுவும் இண்டர்நெட் வழியாய் என்று எழுதியிருந்தேன். அது ஆறு வருடங்களுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துவிட்டது.

பெரிய திரைகளில் சூப்பர் ஹீரோ படங்களும், வீட்டின் டீவியில் மொக்கை சீரியல்களும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் வெப் சீரீஸ் எனும் புதிய சீரியல் வடிவம். சினிமாவுக்கு சற்றும் குறையாத வகையில், அதே பிரம்மாண்டத்தோடு விதவிதமான கதைக்களன்களில், மிகச் சிறந்த நடிகர்களோடு, டெக்னீஷியன்களோடும், ஹாலிவுட்டில் களமிறங்க ஆரம்பிக்க. நாமெல்லாம் நெட்ப்ள்க்ஸிலும், அமேசானிலும் ஆவென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். நம்மூர்ல அந்த தரத்தோடு சீரிஸ் எல்லாம் வருமா? என்று. அதை அமேசானின் இன்சைட் எண்ட்ஜ் மூலம் கணக்கை தொடங்கினார்கள். இப்போது நெட்ப்ளிக்ஸ் தன் பலத்தை, அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே.. விக்ரம் சந்திராவின் நாவலை சீரீஸ் ஆக்கியிருக்கிறார்கள்.

சர்டஜ் சிங். நேர்மையான போலீஸ் ஆபீஸர். ஆயுதமில்லாமல் சரணடைய வந்த ஒர் அக்யூஸ்டை சுட்டதற்காக கமிஷன் முன்பு உண்மை சொல்ல விழைபவன். ஆன்ஸைட்டி ப்ரச்சனை, டைவர்ஸ் என கிட்டத்தட்ட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் அலைபவன். அவனை 16 வருடங்களாய் கண் காணாமல் இருக்கும் மும்பையின் டான் கணேஷ் கைக்கோண்டே அழைக்கிறான். மும்பை இன்னும் 25 நாட்களில் மொத்தமாய் அழியப் போகிறது. அனைவரும் சாகப் போகிறார்கள். திரிவேதியை தவிர என்கிறான். மேலும் தகவல்களை கேட்க அணுகுவதற்குள் கணேஷ் கைக்கோண்டே தற்கொலை செய்து கொள்கிறான். மும்பைக்கு என்ன ஆகப் போகிறது? யார் இந்த கணேஷ் கைக்கோண்டே, ரா, லோக்கல் அரசியல்வாதிகள் ஏன் இந்த பிரச்சனையில் இவ்வளவு ஆர்வர்ம் காட்டுகிறார்கள். எதிரிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட, மும்பை எப்படி காப்பாற்றப்படப் போகிறது என்பதை எட்டு நாற்பத்தைந்து நிமிஷ எபிசோடாக சொல்லியிருக்கிறார்கள்.

சூத்தியா, காண்ட் என ஹிந்தி, மராத்தியில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளை மிகச் சாதாரணமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட நிர்வாணக்காட்சிகள், உடலுறவு காட்சிகள் என, இந்திய சினிமாவில் சென்சாருடன் போராடினால் கூட வைக்க வாய்ப்பில்லாத பல விஷயங்கள் இந்த சீரீஸில் சாத்தியமாகியிருக்கிறது.

கணேஷ் கைக்கோண்டேவாக நவாசூதீன் சித்திக். மனுஷனுக்கு எங்கே நடிக்கிறார்?. அவ்வளவு கேஷுவல். ஆனால் கணேஷ் ஏன் இப்படி ஆனான் என்று ஆரம்பித்து அவன் தாதாவாக வரும் அத்தனை காட்சிகளும் காட்பாதரில் ஆரம்பித்து, நம்மூர் நாயகன் வரை சலிக்க, சலிக்க பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அனுராக்கின் கைவண்ணம் நம்மை கட்டிப் போடுகிறது.   சீரீஸ் நெடுக நவாசூதீன் பேசும் வசனங்களில் ஏகப்பட்ட சர்க்காஸம். சீரீஸின் தலைப்பைப் போலவே

மொத்தம் 190 நாடுகளில் ஒரே நேரத்தில் பார்க்ககூடிய வகையில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தயாரித்திருக்கும் முதல் சீரீஸ். ஒர் கமர்ஷியல் படத்துக்கு கொடுக்கப்படும் அத்துனை விளம்பர முக்யத்துவமும் இதற்கும் கொடுத்து களமிறக்கியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.

இந்த சீரீஸ் மூலம் நிறைய அரசியல் பேசியிருக்கிறார்கள். எமர்ஜென்சி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, காங்கிரஸ், மும்பை குண்டு வெடிப்பு, பாப்ரி மஸ்ஜித் என ஒவ்வொரு காலகட்டதையும் கதையோடு இணைத்து பேசுகிறார்கள்.

உண்மையில் சொல்லப் போனால் இந்த சீரிஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை வரும் விமர்சனங்களை வைத்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் நெட்ப்ளிக்ஸின் நார்கோஸ் போன்ற சீரீஸ்களை பார்த்தவர்களுக்கு இது ஓகே ரகமாய்த்தான் தெரியும். காரணம் நாம் ஏற்கன்வே பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளால்தான். ஆனால் அதே வேளையில் நார்கோஸ்  போன்ற சீரீஸ்கள் மூலமாய் அந்நாட்டு அரசியல், அதில் நடக்கும் ஊழல்கள், லோக்கல் பாலிட்டிக்ஸ். கலாச்சாரம் போன்றவற்றோடு பார்க்கும் போது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

இந்த சீரீஸை வெளிநாட்டினர் பார்க்கும் போது அதே உணர்வு நிச்சயம் அவர்களுக்கும் ஏற்படும். குறிப்பாய் இந்திய அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வைத்து அமைத்திருக்கும் திரைக்கதை. அட்டகாசமான சர்காஸ்டிக் வசனங்கள். தரமான நடிப்பு. இந்த்ய படங்களில் இத்தனை தைரியமான காட்சிகளா? என்று ஆச்சர்யபடுத்த தவறாது.

இது அத்தனையும் சாத்தியமானதற்கான காரணம் நெட்ப்ளிக்ஸ், அதன் பட்ஜெட் . சுமார் ஆறு கோடி வரை ஒரு எபிசோடுக்கு செலவ் செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.  பின் ஏன் வராது தரம். நவாசூதீன் சித்திக்கின் எபிசோடை அனுராக் தான் இயக்கியிருக்கிறார் என்று சொல்லாமலேயே புரிகிறது. அவரது முந்தைய படங்களின் சாயல் இக்காட்சிகளில் இருந்தாலும் பம்பாய் வெல்வெட் படத்தில் வரும் பழைய மும்பை. காபரே லோக்கல் தாதா வளரும் காட்சிகள் எல்லாம் தரமோ தரம்.

இந்திய அளவில் இந்த சீரீஸ் ஒர் பெரிய மைல் கல். ஆனால் அதே நேரத்தில் போலியான மறு உருவாக்கமாகவும் தெரிகிறது. சாக்ரெட் கேம்ஸின் வெற்றி மேலும் பல சிறந்த கலைஞர்களின் சுதந்திர களங்களை, படைப்புகளை வெளிக்கொணர நெட்ப்ளிக்ஸ் வழி வகுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.


Post a Comment

No comments: