கொத்து பரோட்டா - 05/05/14
கேட்டால் கிடைக்கும்
டொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ்? என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன் பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு? என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க சரியா கேட்கலை உங்க கிட்ட டாக்ஸ் எல்லாம் சேர்த்து பத்து ரூபாய் இந்தாங்க என்று மிச்சம் கொடுத்தார். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள். எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அமைதிப் பூங்காவெனப்படும் தமிழகத்தில் குண்டு வெடிப்பு லேசாய் ஆட்டித்தான் போட்டது. இம்மாதிரியான கபளீகரத்துக்கு பழக்கப்படாத மக்கள் அன்றைய நாள் முழுவதும் வெளியே போகாமல் வீட்டிற்குள் அடைந்தனர். அமைதிபூங்காவான தமிழகத்தின் மீதான அச்சுறுத்தலுக்கான ஆரம்பமாய்த்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவமாகத் தெரிகிறது. உன் ஆட்சியில் மட்டும் ஒழுங்கா? வந்த தகவல்களைப் பற்றி ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளாளுக்கு குற்றம் சொல்லாமல் அட்லீஸ்ட் இதில் ஒன்றிலாவது ஒற்றுமையாய் இருந்து மக்களுக்காக நடவடிக்கை எடுத்தார்களேயானால் நன்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Amazing SpiderMan2
வர வர சூப்பர் மேன் கேரக்டர்களையெல்லாம் சாதாரண மனிதனின் உணர்வுகளுடனே படைக்கும் டெம்ப்ளேட்டில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ வர ஆரம்பித்துவிட்டது. அதே ப்ரச்சனைத்தான் இதிலும், முந்தைய படங்களை விட சிஜியிலும், 3டியிலும் ஒரிரு காட்சிகள் அட போட வைத்தாலும், மும்முனை தாக்குதலாய் ரெண்டு வில்லன்களை வைத்து ஏதேதோ பண்ண முயற்சி செய்கிறார்கள். உட்சபட்சமாய் சூப்பர் ஹீரோ தன் காதலியை காப்பாற்ற முடியாமல் சாகவிடுவது வரை.. எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து பழகிய நமக்கு இதெல்லாம் நாங்க பாத்தாச்சுடா..என்று உரக்க கத்துவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
அனாமிகா
கஹானியோடு அனாமிகாவை கம்பேர் செய்து படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் ரசிக்க முடியாமல் கூட போகலாம். சேகர் கம்மூலா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவரின் முதல் த்ரில்லர் ஜெனர் படம், நயந்தாரா வேறு எனவே ஆர்வம் அதிகமாய் இருந்தது. நிச்சயம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாய் எடுப்பதாய் சொல்லி, பாதி வைட் ஆங்கிள் காட்சிகளை டப் செய்துவிட்டு க்ளோசப்பில் மட்டுமே தமிழ் படமாய் எடுப்பார்கள் என்பதால், தெலுங்கிலேயே பார்த்தேன். நிறைமாத கர்பிணியாய் வித்யாபாலன் மீது வரும் பரிதாபமும், கரிசனமும், போலி ஐ லாஷுடன் வரும் நயந்தாரா மீது வருவது கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கிறது. பட்.. அவரது பர்பாமென்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தான் ஒர் சிறந்த நடிகை என்று நிருபிப்பது போல ஒவ்வொரு காட்சியிலும் சுற்றி நடிப்பவர்களை ஓவர் டேக் செய்து கொண்டே வருகிறார். நவாசுதீன் சித்திக்கின் இடத்தில் நம்மூரு பசுபதி..மாற்று குறைவே. சப் இன்ஸ்பெக்டராய் வைபவ். இன்னும் கொஞ்சம் உடல் மொழியிலும், டயலாக் மாடுலேஷனிலும் கவனம் செலுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். படத்தின் மைனஸ் செட்டுக்குள் படமெடுத்தது. கஹானியில் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அதனை சுற்றியிருக்கும் இடமெல்லாம் அந்த கசகசப்புக்கும், கூட்டத்திற்கும் நடுவே கர்ப்பிணிப் பெண்ணில் அலைச்சல் இன்னும் நமக்கு பரிதாபத்தையும், அனுதாபத்தையு கொடுத்தது அது இதில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் மரகதமணியின் பின்னணியிசை அட்டகாசம். ஒரிஜினலை கம்பேர் செய்யாமல் பார்த்தால் தெலுங்கில் ஒர் நல்ல த்ரில்லர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அமைதிப் பூங்காவெனப்படும் தமிழகத்தில் குண்டு வெடிப்பு லேசாய் ஆட்டித்தான் போட்டது. இம்மாதிரியான கபளீகரத்துக்கு பழக்கப்படாத மக்கள் அன்றைய நாள் முழுவதும் வெளியே போகாமல் வீட்டிற்குள் அடைந்தனர். அமைதிபூங்காவான தமிழகத்தின் மீதான அச்சுறுத்தலுக்கான ஆரம்பமாய்த்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவமாகத் தெரிகிறது. உன் ஆட்சியில் மட்டும் ஒழுங்கா? வந்த தகவல்களைப் பற்றி ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளாளுக்கு குற்றம் சொல்லாமல் அட்லீஸ்ட் இதில் ஒன்றிலாவது ஒற்றுமையாய் இருந்து மக்களுக்காக நடவடிக்கை எடுத்தார்களேயானால் நன்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Amazing SpiderMan2
வர வர சூப்பர் மேன் கேரக்டர்களையெல்லாம் சாதாரண மனிதனின் உணர்வுகளுடனே படைக்கும் டெம்ப்ளேட்டில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ வர ஆரம்பித்துவிட்டது. அதே ப்ரச்சனைத்தான் இதிலும், முந்தைய படங்களை விட சிஜியிலும், 3டியிலும் ஒரிரு காட்சிகள் அட போட வைத்தாலும், மும்முனை தாக்குதலாய் ரெண்டு வில்லன்களை வைத்து ஏதேதோ பண்ண முயற்சி செய்கிறார்கள். உட்சபட்சமாய் சூப்பர் ஹீரோ தன் காதலியை காப்பாற்ற முடியாமல் சாகவிடுவது வரை.. எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து பழகிய நமக்கு இதெல்லாம் நாங்க பாத்தாச்சுடா..என்று உரக்க கத்துவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
அனாமிகா
கஹானியோடு அனாமிகாவை கம்பேர் செய்து படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் ரசிக்க முடியாமல் கூட போகலாம். சேகர் கம்மூலா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவரின் முதல் த்ரில்லர் ஜெனர் படம், நயந்தாரா வேறு எனவே ஆர்வம் அதிகமாய் இருந்தது. நிச்சயம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாய் எடுப்பதாய் சொல்லி, பாதி வைட் ஆங்கிள் காட்சிகளை டப் செய்துவிட்டு க்ளோசப்பில் மட்டுமே தமிழ் படமாய் எடுப்பார்கள் என்பதால், தெலுங்கிலேயே பார்த்தேன். நிறைமாத கர்பிணியாய் வித்யாபாலன் மீது வரும் பரிதாபமும், கரிசனமும், போலி ஐ லாஷுடன் வரும் நயந்தாரா மீது வருவது கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கிறது. பட்.. அவரது பர்பாமென்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தான் ஒர் சிறந்த நடிகை என்று நிருபிப்பது போல ஒவ்வொரு காட்சியிலும் சுற்றி நடிப்பவர்களை ஓவர் டேக் செய்து கொண்டே வருகிறார். நவாசுதீன் சித்திக்கின் இடத்தில் நம்மூரு பசுபதி..மாற்று குறைவே. சப் இன்ஸ்பெக்டராய் வைபவ். இன்னும் கொஞ்சம் உடல் மொழியிலும், டயலாக் மாடுலேஷனிலும் கவனம் செலுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். படத்தின் மைனஸ் செட்டுக்குள் படமெடுத்தது. கஹானியில் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அதனை சுற்றியிருக்கும் இடமெல்லாம் அந்த கசகசப்புக்கும், கூட்டத்திற்கும் நடுவே கர்ப்பிணிப் பெண்ணில் அலைச்சல் இன்னும் நமக்கு பரிதாபத்தையும், அனுதாபத்தையு கொடுத்தது அது இதில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் மரகதமணியின் பின்னணியிசை அட்டகாசம். ஒரிஜினலை கம்பேர் செய்யாமல் பார்த்தால் தெலுங்கில் ஒர் நல்ல த்ரில்லர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ராஜா மொட்டை ஐ லவ் யூ டார்லிங் மெளனராகம்
Comments
உங்களை நெனைச்சு எனக்கு பெருமையா இருக்கு சார். அப்டியே இலவசமா குடுக்க வேண்டிய சுத்தமான தண்ணிய விலைக்கு விக்கிறாங்களே அரசாங்கம். அவங்கள எப்ப கேட்க போறீங்க?
சந்தோஷம். அடுத்த தலைமுறை வாரிசு உருவாகிவிட்டது ! வாழ்த்துக்கள்..