Thottal Thodarum

Feb 1, 2019

தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா?


தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா

ஒரு ரெண்டு நாள் ஷோசியல் மீடியாவில் இல்லாமல் இருந்தா தான் தெரியும் தேவையில்லாம எதுக்கெல்லாம் நாம பொங்கிட்டிருக்கோம். அதைப் பத்தி மக்கள் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்காங்கன்னு என்றதுக்கு நண்பர் என்னை சங்கிக்களில் ஒருவராய் அடையாளம் கண்டு கொண்டதாய் சொல்லிப் போனார்.

இப்படித்தான் அறம் படத்தை பார்த்துவிட்டு வந்த போது. நண்பர்கள் படம் எப்படி என கேட்க” ஓகே” என்றதுக்கு ஒரு நல்ல படம் வந்தா அதைக் கொண்டாடுங்க.. அதை விட்டுட்டு நொட்டை சொல்லாதீங்க என்றார். நல்ல படமாய் இருந்தா நிச்சயம் சொல்லுவேன் நண்பா என்றதுக்கு பேஸ்புக்கைப் பாருங்க எப்படி கொண்டாடுறாங்க என்று உதாரணம் காட்டினார். ஆகாயத்தில ராக்கெட்டை பறக்க விடற நாம பூமியில குழியில விழுந்த குழந்தையை காப்பாற்ற முடியலை இந்த அரசாங்கத்தினால.. ஏழைகள் உயிர்னா அவங்களுக்கு அவ்வளவு ஏளனம்? என ஆரம்பித்து சாதி, அடையாளங்களோடு இணைத்து வீர ஆவேசமாய் பேசினார்.

நான் அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “நயந்தாரா மட்டும் அந்த படத்துல இல்லைன்னா இவ்வளவு பெரிய அங்கீகாரம் இல்லை.  நான் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறீங்களா?” என்றேன். வேகமாய் தலையசைத்தார்.

“படத்துல பையன் குழிக்குள்ள வீழ்ந்துட்டானா?. ரோடே சரியில்லாத ஊருக்குள்ள ஆம்புலன்ஸை வரவழைச்சு மெடிக்கல் ஹெல்ப் கொண்டாந்தாங்களா?”

“ஆமாம்”

“போலீஸ் வந்துச்சா?”

“ஆமா”

“வி.ஏ.ஓ, டாக்டர்ஸ் டீம் எல்லாம் வந்தாங்களா?’

“ஆமாம்”

“ஏரியா எம்.எல்.ஏ என்னதான் மிரட்ட வந்தாலும், அங்கே இருந்தாரா? அவரு எங்கயாச்சும் அந்த குழந்தைய காப்பாத்துற முயற்சிய தடுத்தாரா?’

“இல்லை”

“ நேஷனல் டிஸாஸ்டர் போர்ஸ் வந்துச்சா?”

“ஆமா”

”எல்லாத்துக்கும் மேல மாவட்ட கலெக்டரே அங்கே நின்னு வேலை பார்த்தாங்களா?”

“ஆமா”

“குழிய போட்ட லோக்கல் அரசியல்வாதியை எம்.எல்.ஏ வை எதிர்த்து கைது பண்ணாங்களா? கலெக்டர்”

“ஆமா”

“இதுக்கு மேல ஒரு அரசாங்கம் ஒரு குழந்தைய காப்பாத்த என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க?”

“இல்லை.. அங்கே இருக்குற ஏழை பாழைங்க உயிக்கு என்ன மதிப்பு தராங்க?”

”அவங்க எல்லாம் முயற்சியையும் பண்ணிட்டிருக்கும் போது அவங்க உணர்ச்சிவசப்பட்டு திட்டுறதும், சம்பந்தப்பட்ட குழந்தையோட அம்மா உடம்பு சரியில்லாம போறப்ப அங்க வந்து என் பொண்டாட்டிய் நான் தூக்கிட்டு போறேன்கிறது மக்கள் கொதிக்கிறது எல்லாம் எல்லாம் அங்க நடக்குற குழந்தையை காப்பாற்றும் முயற்சிக்கு இடையூறு செய்யுறாங்களேனுதான் எனக்கு தோணுது. ஒரு பிரச்சனைக்கு எதிர் பிரச்சனை கதைக்கு தேவை அதுதான் எமோஷனலா படத்தோட நம்மை இன்னும் கட்டிப்போடும். ஆனால் எனக்கு படம் பார்க்கும் போது அவங்களோட காட்சிகள் இடையூறாத்தான் இருந்துச்சே தவிர எமோஷனல் ஆக மாறலை”

“இல்லை ஒரு குழந்தை உயிர காப்பாத்த வெறும் கயிற வச்சி ட்ரை பண்னுறது எல்லாம் எவ்வளவு அராஜகம். ராக்கெட் விட மட்டும் எத்தனை கோடி செலவு பண்றோம்”

“அலோ.. எல்லா ஊர்லேயும் ஏன் எல்லா நாட்டுலேயும் வீடியோ ரெபரென்ஸ் வச்சி பார்த்தா அவங்க எல்லாரும் இதே போல பக்கத்துல பெரிய டனல் செய்து அதன் வழியாத்தான் குழியில விழுந்த குழந்தைகளை காப்பாத்துறாங்க. அதான் இதுக்கு இருக்குற ஒரே வழிமுறை.. குழிக்குள்ள ஆக்சிஜன், கேமரா லைட் எல்லாம் டெக்னாலஜி வளர்ச்சி.”

“இல்லையே நம்மூர்ல ஒருத்தரு அதுக்கு மிஷின் கண்டுபிடிச்சிருக்கான். அதை யூஸ் பண்ணலாம் இல்லை”

“அப்படி ஒரு மிஷின் கண்டுப்டிச்சதை நம்ம அரசாங்கதாம் கண்டுக்கலை. படத்திலேயாவது அத பயன்படுத்தி காப்பாத்துறதா காட்டியிருக்கலாம் இல்லை. ஏன் காட்டுலைன்னா.. அத காட்டினா நயந்தாரா இன்னொரு பையன உள்ள அனுப்பினதை வச்சி அரசியல் பண்ணத, அவங்க ஹைஸ்பீடுல நடந்து வர்றத காட்ட முடியாது. உள் நீச்சல் அடிச்சி பழகின பையன பயன்படுத்தி எமோஷன் ஏத்த முடியாது. சினிமாவுக்கான க்ளைமேக்ஸா இருக்காது. அப்படின்னுதானே அதை பயன்படுத்தல.

“இல்லியே அவரு ஊருல இல்லைன்னு டயலாக் வருமே”

‘சரி.. அட்லீஸ்ட் படம் பூரா அரசாங்கட்தை குறை சொல்லியிருக்காங்களே. அரை மணி நேரத்துக்கு மேல குழந்தை விழுந்ததை தவிர இயக்குனர் பல அரசியல்களை முன் வைச்சு பேசிக்கிட்டிருக்கிறா போல டிவி நீயூஸ் சேனல் டிஸ்கஷன் வருதே அதுலேயாவது அந்த பையன் கண்டுபிடிச்ச மிஷின் எப்படி வேலை செய்யும், அதை ஏன் அரசாங்க பயன்படுத்தலை? அதை ப்பத்தி பேசியிருக்கலாம் இல்லை. இவ்வளவு பெரிய கேன்வாஸ் கிடைச்சிருக்கு. அதுல அந்த கண்டுபிடிப்பாளரை காட்ட மனசு இல்லையா?. காட்டினா.. ஏன் அதை பயன்படுத்தலைங்கிற கேள்வி அதிகமாகிரும். எமோஷன் போயிரும். இத்தனை பெரிய சினிமாவுல காட்டுற வாய்ப்பு இருந்து நம்மளே காட்டாத போது எப்போதும் மெத்தனமாவே இருக்கும் அரசாங்க எந்திரம் எப்படி கண்டுக்கும்னு நினைக்கிறீங்க?’

நண்பர் அமைதியாய் இருந்தார்.

”அரசாங்கத்தை எதிர்த்து படம் பண்ணா அதுவும் எமோஷனலா படம் பண்ணா நம்மூர்ல எப்பவும் ஒர்க்கவுட் ஆகும். அதுவும் இப்ப நடக்குற ஆட்சிக்கு செம்மையா ஒர்க்கவுட் ஆகும். ஸோ.. உணர்ச்சிவசப்படும் தமிழர்களின் மனசை மட்டுமே குறிவைச்சு, படம் பண்ணிட்டா போதுமா?”

நண்பர் மேலும் அமைதியா என்னை பார்த்துவிட்டு “தமிழர்களின் வாழ்வுரிமை, அடக்கப்பட்டோரின் எழுச்சி..இதையெல்லாம் பேசின படம். “

“நண்பா.. பேஸ்புக்கு மூலமா படம் பாக்காதவன் தான் படத்தை ஹிட் பண்றான் அவனைப் போய் கேளுங்க. .படத்த ஏன் பார்த்தேன்னு? நயந்தாரா நடிக்குது. பாவம் அந்த புள்ள குழிக்குள்ள வீழ்ந்திருச்சு ஒரே படப்படப்பா ஆயிருச்சு. என்னால ஃபீரியா மூச்சு விட முடியலை. அழுத்துட்டே இருந்தேன் அந்த குழந்தைய காப்பாத்துற வரைக்கும், என்னால படம் பார்க்க முடியலை. அவ்வளவு எமோஷனல் ஆயிட்டேன். இப்படித்தான் அவங்களோட விமர்சனமா இருக்கும். எல்லாத்துக்கு ஜாதி, எதிர் அரசியல், கோட்பாடு, அது இதுன்னு சொல்லி, சும்மாவாச்சும் பி.பி ஏத்திக்கிட்டு அலையாதீங்க. சமீபத்துல ஒரு ஆய்வுல இளம் வயதினர் பலருக்கு இதய பிரச்சனை வரதுக்கு காரணம் சோஷியல் நெட்வொர்க்தானு கண்டு பிடிச்சிருக்காங்களாம். எப்பவுமே அங்கே பொங்கிட்டிருக்கிறதுனால  எமோஷனல் கனெக்ட் தான் படம். அது நல்ல படமாய் இருக்கணும்ங்கிற அவசியம் இல்லை.“

”என்ன இருந்தாலும் ராக்கெட் விட டெக்னாலஜி யுஸ் பண்ற நம்ம நாட்டுல.. பூமிக்கு அடியில.. “ சிரித்துக் கொண்டிருந்தேன்.


Post a Comment

2 comments:

Sreedhar said...

Completely agree with your views sir...

Unknown said...

பக்தாளா இருந்தா எப்படிலாம் முட்டுக் கொடுக்க வேண்டிருக்கு... 😅