Thottal Thodarum

Feb 20, 2009

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.

2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..?

3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..?

4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.?

5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?

6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..?

7 . அதிலும் சில பேர்(கே.சங்கர் போன்றோர்) போட்டோ போடறேன்னு படு கேவலமான கேமராவில இங்கிலிஷ் பேய் படம் பார்கிற எபக்டுல லைட்டே இல்லாம பதிவர்கள் படங்களை போட்டு பயமுறுத்துவது ஏன்..?

8 . பதிவு பூராவும் அந்த விஜ்ஜெட், இந்த விஜ்ஜெட்னு கண்டதையும் போட்டு, பேஜ் ஓப்பன் ஆவறதுக்குள்ள எங்க தாவு தீர வைக்கிறது ஏன்? மொக்கை பதிவெல்லாம் கூட தமிழ்மண சூடான பதிவில் வருவது எப்படி?

9 . சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?

10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?



Blogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

54 comments:

வெட்டிப்பயல் said...

//1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.//

இப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)

//2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..?//

300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

me the first

வெட்டிப்பயல் said...

//5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?//

சாரி... இதை இன்னும் சரி பண்ண முடியல :)

மீதி எல்லாத்தையும் சாய்ஸ்ல விட்டுடறேன் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாமே யதார்த்தமான கேள்விகள்..உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்

aahaa..first pochche :-((

வால்பையன் said...

//ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?//


இது என்னைப்போல் புதிய பதிவர்களும் உங்களை பார்த்து கேட்கும் கேள்வி!

Anbu said...

me the 5 th

Cable சங்கர் said...

//300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)//

:(:(

அத்திரி said...

அண்ணே நீங்களுமா?

வால்பையன் said...

//உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Cable சங்கர் said...

//எல்லாமே யதார்த்தமான கேள்விகள்..உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்
//

சே..சே.. அப்படியெல்லாம் நினைக்காதீரகள்

Anbu said...

நன்றாக இருக்கு அண்ணா. முதல் வோட் நான்தான்...

Anbu said...

எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?//

என்னுடைய பதிவில் இல்லை என்று நினைக்கிறேன்..இருந்தாலும் சொல்லிவிடுங்கள்..

அத்திரி said...

//அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.?//


உண்மைத்தமிழன் ...............
இதுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகனும்...............

பாலா said...

ஹய்யோ.. ஹய்யோ... சிரிச்சி சிரிச்சி... வாய் வலிக்குதுங்க தல..!!

சில கேள்விகள் எல்லாம்.. நாக்கை பிடுங்கிக்கற மாதிரி.. இருக்கு...!! கலக்கல்.. கலக்கல்!!!

அத்திரி said...

//பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..?//

அதிஷா,முரளிகண்ணன்,லக்கி............கவனிக்க

நட்புடன் ஜமால் said...

\\ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?\\


ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\வால்பையன் said...

//உண்மையிலேயே..பல மூத்த பதிவர்கள் ..என் போன்றோர்க்கு பின்னூட்டம் இடுவதை கேவலமாக எண்ணுகிறார்கள் என எண்ணுகிறேன்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\\

மறுக்கா மறுக்கா

மறுக்கா மறுக்கா

மறுக்கா மறுக்கா

கூவிக்கிறேன் ...

அத்திரி said...

//சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?//

ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருண்ணே..... உங்களை பத்தி நீங்களே........

அத்திரி said...

//ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?//


பிரபல பதிவர்களே, மூத்த பதிவர்களே.......பதில் சொல்லுங்க

அத்திரி said...

அண்ணே பின்னூட்டம் போதுமா?............ ஏன்னா நான் இன்னும் புது பதிவர்தான்......ஆங்

narsim said...

1,4 &5 கலக்கல்..

முரளிகண்ணன் said...

//1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.//

இப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)


repeatee

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இப்படியெல்லாம் நியாயமா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது பாஸ்.
torture ஆவுது.சரி சரி போனா போவுது மன்னிச்சு விட்டுத் தள்ளுங்க.

Vidhya Chandrasekaran said...

\\10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?\\

naanum pudhu pathivar than:))

ஷண்முகப்ரியன் said...

ஓஹோ பதிவர்களில் கூட மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்கள் என்றெல்லாம் உண்டா ஷங்கர்?இந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதா?புது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமா?நன்றி.

Anonymous said...

// சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?//

உங்க தன்னடக்கத்தை பார்த்து கண் கலங்குறேன் சார்!!

வெற்றி said...

சந்துல சிந்து..?!

பல கொசீன்ஸ் மெய்யாலுமே கரீட்டு.

நல்லா கீதுபா.

RAMASUBRAMANIA SHARMA said...

இந்த தலைப்பில் இன்று 3 வேறு வேறு பதிவுகளா.....!!!!

நையாண்டி நைனா said...

உங்க கேள்விகளை படிச்சாச்சு...

நானும் என் பங்கு கேள்விகளை போட்டாச்சு... என்னோட பதிவுலே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒழுங்கா படிக்க முடியாம உங்க ப்லாக் பேஜ் ரொம்ப நேரத்து ரெட் கலராவே இருப்பது ஏன்?

ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?
இஃதே இஃதெ இஃதே

எம்.எம்.அப்துல்லா said...

//உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க.. //


செஞ்சாச்சு எசமான்.

நானும் புதுப் பதிவர்தான்(நீங்க யூத் மாதிரி)

வெட்டிப்பயல் said...

//Cable Sankar said...
//300 பதிவுக்கு அப்பறமும் அப்படி தான் :)//

:(:(//

அது சும்மா ஒரு காமெடிக்கு சொன்னேங்க... இப்ப தான் ஒரு ரெண்டு மூணு போஸ்ட்டை நானே தமிலிஷ்க்கு அனுப்பினேன். அப்பறம் தமிழ்மணம் ஓட்டு எல்லாம் நானே போட மாட்டேன். என்னோட பதிவுக்கு எல்லாம் மிஞ்சி போச்சுனா ரெண்டு, மூணு தான் இருக்கும் :)

ஹிட்ஸ் மட்டும் எப்பவும் பார்த்துக்குவேன் :)

அறிவிலி said...

நானும் புதுசு தாங்க. ஆனா எல்லா பதிவுக்கும் ஒரு பின்னூட்டம்தான்.
கணக்கு வேற கொஞ்சம் வீக்கா, மத்தவங்களாட்டம் நூறு வரைக்கும் எண்ணத்தெரியாது.

Cable சங்கர் said...

//நானும் புதுசு தாங்க. ஆனா எல்லா பதிவுக்கும் ஒரு பின்னூட்டம்தான்.
கணக்கு வேற கொஞ்சம் வீக்கா, மத்தவங்களாட்டம் நூறு வரைக்கும் எண்ணத்தெரியாது.//

:):):) ரொம்ப நன்றி அறிவிலி..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

Cable சங்கர் said...

//ஹிட்ஸ் மட்டும் எப்பவும் பார்த்துக்குவேன் :)//

அப்ப பிஸியான பதிவர் ஆயிட்டீங்கன்னு சொல்லுங்க.. வெட்டி ப்யல்.

Cable சங்கர் said...

//செஞ்சாச்சு எசமான்.

நானும் புதுப் பதிவர்தான்(நீங்க யூத் மாதிரி)//

இது தான் கரெக்ட் கமெண்டு. நன்றிண்ணே..

Cable சங்கர் said...

//ஒழுங்கா படிக்க முடியாம உங்க ப்லாக் பேஜ் ரொம்ப நேரத்து ரெட் கலராவே இருப்பது ஏன்?//

அப்படியா கவனிக்கிறேன். நீங்க மேடமா? சாரா?.. யாராக இருந்தாலும் மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//உங்க கேள்விகளை படிச்சாச்சு...

நானும் என் பங்கு கேள்விகளை போட்டாச்சு... என்னோட பதிவுலே.//

அப்படியா நைனா.. வந்து பாக்குறேன்.

Cable சங்கர் said...

//இந்த தலைப்பில் இன்று 3 வேறு வேறு பதிவுகளா.....!!!!//

இது ஒரு தொத்து வியாதி மாதிரி.. அப்ப்டித்தான் வரும்.. மிக்க நன்றி ராமசுப்ரமணியன்.

Cable சங்கர் said...

//சந்துல சிந்து..?!

பல கொசீன்ஸ் மெய்யாலுமே கரீட்டு.

நல்லா கீதுபா.

1:01 PM//

நன்றி தேனியார் அவர்களே.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//உங்க தன்னடக்கத்தை பார்த்து கண் கலங்குறேன் சார்!!//

ரொம்ப நன்றிங்கண்ணா..

Cable சங்கர் said...

//ஓஹோ பதிவர்களில் கூட மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்கள் என்றெல்லாம் உண்டா ஷங்கர்?இந்த சீனியர், ஜூனியர் இல்லாத இடமே வாழ்க்கையில் கிடையாதா?புது விளையாட்டு என்று வந்தால் இங்கேயும் rules and regulation formalities எல்லாமா?நன்றி.//

நிறைய இருக்கு சார்.. இங்கே பதிவரசியல், நுண்ணரசியல், அந்த அரசியல், இந்த அரசியல்ன்னு நிறைய விஷயஙக்ள்..

Cable சங்கர் said...

//இப்பவும் நானெல்லாம் அது தான் சொல்லிட்டு இருக்கேன் :)


repeatee//

என்னா ஒரு தன்னடக்கக்க்க்க்க்க்ம் முரளி.. நன்றி

Cable சங்கர் said...

//1,4 &5 கலக்கல்..//

அப்ப மிச்சதெல்லாம் சொதப்பலா நர்சிம்.. சும்மா ஒரு ஜாலிக்காக எழுதப்பட்டது.

Cable சங்கர் said...

//ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருண்ணே..... உங்களை பத்தி நீங்களே........//

சரி..சரி.. எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல்ல.. சரி.. சரி.. ந்னறி.

Cable சங்கர் said...

//ஹய்யோ.. ஹய்யோ... சிரிச்சி சிரிச்சி... வாய் வலிக்குதுங்க தல..!!

சில கேள்விகள் எல்லாம்.. நாக்கை பிடுங்கிக்கற மாதிரி.. இருக்கு...!! கலக்கல்.. கலக்கல்!!!//

நிஜமாகவே நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தான் பாலா.. எந்த விதமான உள்குத்தும் இல்லை..

Cable சங்கர் said...

//naanum pudhu pathivar than:))//

அப்படியா.. நான் உங்க்ளை சமீபத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன். நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்.. மிக்க நன்றி வித்யா..

Cable சங்கர் said...

//என்னுடைய பதிவில் இல்லை என்று நினைக்கிறேன்..இருந்தாலும் சொல்லிவிடுங்கள்..//

அன்பு இது யாரையும் கிண்டல் செய்யவோ, குறை சொல்லவோ எழுதப்ப்ட்டது கிடையாது. சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.. அப்படி பார்த்தால் என்னுடய பதிவில் கூட பிழைகள் இருக்கும்.

GNU அன்வர் said...

அண்ணன் கே.சங்கருக்கு பத்து குத்து மதிப்பான பதில்கள் http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_21.html

ரமேஷ் வைத்யா said...

/உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க.. //
nallaa irunthaa naangkaLee ottu podamaatomaa?

CA Venkatesh Krishnan said...

நானெல்லாம் புதுப்பதிவர்தான்..

இதுல சில கொஸ்டின்ஸ் புதுப்பதிவர் பிரபல பதிவர்களைப் பாத்து கேக்கற மாதிரியும் இருக்கு.

ஆனா ஒண்ணு,

இந்த கொஸ்டின் சீரீஸ்ல ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு. யார் யாருக்கு என்னென்ன கேக்கணும்னு தோணிச்சோ எல்லாரும் நல்லா கொட்டிட்டாங்க.

Cable சங்கர் said...

//இந்த கொஸ்டின் சீரீஸ்ல ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு. யார் யாருக்கு என்னென்ன கேக்கணும்னு தோணிச்சோ எல்லாரும் நல்லா கொட்டிட்டாங்க.//

ஹா..ஹா.. :):):)

Prabhu said...

/புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?./

தலைவா! நீ எழுதுறது நல்லா இல்ல, நீயெல்லாம் ஏன் எழுதுறனு யாரவது கேட்டா,... "நாந்தான் அப்பவே சொன்னேனே 'நான் புதுசு'னு" அப்படினு பிட்டு போட்டு பொழச்சிக்குவோம்ல!

இப்னு ஹம்துன் said...

அடடா!
இதப் பார்க்காம நான்கூட ஒண்ணு எழுதிட்டனே, இங்கப் பாருங்க