Thottal Thodarum

Mar 19, 2010

Joyfull சிங்கப்பூர்-2

IMGA0240                                                      சிங்கையின் சுப்ரீம் கோர்ட் 
எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்.

குழம்பத்திலிருந்து வெளியே வருவதற்குள் உடுக்கை ஆங்கிலம் பேசுகிறேன் என்று சைனீஸில் உட்காருங்கள், சீட் பெல்ட்டை போடுங்கள் என்று சொல்ல, அடுத்த சில நொடிகளிள் 35,000 அடிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக கீழிறங்க ஆரம்பித்தது. முதல் வெளிநாட்டு பயணம், வெற்றிகரமாய் அயல் மண்ணில் கால் வைக்க போகிறோம் என்ற உணர்வே உள்ளுக்கும் லேசான சிலிர்ப்பை கொடுத்தது. இடப்பக்க ஜன்னல்களீன் வழியே மினுக்கும் சிங்கப்பூர் அந்த இருளில் நட்சத்திரமாய் ஜொலிக்க, சிங்கப்பூர்.

பட்ஜெட் டெர்மினல் என்று போட்டிருந்தார்களே? என்று யோசித்தபடி வெளியே வந்தால், படிகளில் ஹாண்ட் லக்கேஜுகளோடு கீழிறங்கி சிங்கப்பூர் காற்றை சுவாசித்தேன். அந்த இரவிலும் லேசான சூடு காற்றில் இருந்தது. அடுத்து நான் நடந்து வந்த பட்ஜெட் ஏர்போர்டை பற்றி பின்னால் விவரிக்கிறேன். சென்னையின் ஏர்போர்ட்டை விட 50 மடங்காவது பிரம்மாண்டமும், வசதிகளும் நிறைந்ததாய் இருந்தது.
arraival வழக்கமான எல்லா செக்கப்புகளும் முடிந்து  வெளியே வந்த போது வரவேற்க பிரபாகர், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், துக்ளக் மகேஷ், வெற்றிக் கதிரவன் (எ) விஜய், விஜய் ஆனந்த, அவரின் மகன் குட்டி விஜயானந்த், ஜெகதீசன், ரோஸ்விக், சாமியின் மாணவர் வைரவன், என்று ஒரு பாசக்கார  கும்பலே ஆரவாரமாய் வரவேற்றது. எனக்கு விசா போட்ட என் மாப்பிள்ளை வெற்றிக் கதிரவ்ன் என்னை பாசத்துடன் நான் யூத் தான் என்றாலும் உறவு முறையில் அங்கிள் ஆகிவிட்டதால் வரவேற்பு அட்டையை பிடித்திருந்து வரவேற்க, அண்ணன் கோவி.கண்ணன் அந்த அட்டையை பிடித்திருந்தது தான் கொஞ்சம் உள்குத்தாய் இருந்தது.:).
arraival1 வந்திருந்த நண்பர்களில் மகேஷ், ஜோசப், கோவியார், பிரபாகர் ஆகியோரை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. தெரிந்த நண்பர்களுடன் கூட அவர்கள் சென்னை வரும் போது ஒரிரு முறை சந்தித்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்படி கூட்டமாய் வந்து வரவேற்றாது மனதை நெகிழச் செய்தது.
arraival3 அங்கிருந்து சாமி அவருடய மாணவர் வைரவன் வீட்டிற்கு செல்ல, நான் பிரபாகரின் வீட்டில் தங்க அன்புடன் ஊருக்கு வருவதற்கு முன்பே போனிலும், மெயிலிலும், மிரட்டபட்டிருந்தேன். அதற்கு முன்பு நைட் சாப்பாட்டை முடிக்க நாம் லிட்டில் இந்தியா போவோம் என்று “ப்ளான்” செய்தார் ஜோசப், விட்றா வண்டிய என்று வெண்ணெயாய் வழுக்கி சென்றது அவருடய கார் 100 கி.மீட்டர் வேகத்தில். அடுத்த சில நிமிடங்களில் வண்டியை பார்க் செய்துவிட்டு என்னை எங்கு அழைத்து போகலாம் என்று  ஒரு தெரு முக்கில் நின்று விவாதித்தார்கள். அப்போது என் மாப்ளை விஜய் “தயவு செஞ்சு வேற பக்கம் நின்னு பேசுவோமா.? நம்மளை இந்த தெரு பக்கம் பார்த்தால் தப்பா நினைக்கப் போறாங்க” என்றதும், எனக்குள் இருந்த ஆர்வகுட்டி “ஏன்? என்னா.. இங்க?” கேள்விகளை கேட்க, “வந்தவுடனேயே இத பத்தி தெரிஞ்சிக்க வேணாம். வாங்க சாப்புடலாம்னு” சகுந்தலாஸுன் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிப்போய் எனக்கு ஒரு கொத்து பரோட்டா ஆர்டர் செய்தாரு ஜோசப்பு.
arrival2 சாப்பாடு முடிஞ்சு எல்லாரும் அவஙக் அவஙக் வீட்டுக்கு கிளம்ப, நானும் பிரபாவும் ஒரு டாக்ஸி பிடிச்சி யூசுனில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றேன். ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பின்பு, பிரியா படத்தில் வரும் ப்ளாட்டுகள் போன்ற ஒரு அடுக்காகத்துள் எட்டாவது ப்ளோரில் உள்ல அவரது வீட்டில் இறங்கி, செட்டிலானவுடன், பிரபா ஒரு போனையும், க்ரெடிட் கார்டையும் கொடுத்து இனிமே இதுதான் உங்க லோக்கல் போன், இது பஸ், மற்றும் எம்.ஆர்.டி கார்ட் என்று சொல்லிவிட்டு, நாளையிலேர்ந்து நாம் வெளியே போவோம் எனறபடி சில மணிநேரங்கள் பேசிவிட்டு, படுத்தோம். நடுவில் எழுந்து பார்த்த போது விடியற்காலையில்  ஐ போனில் பாட்டை கேட்டபடி, கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தது.  பிரபாகரின் உருவம். காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” என்றவரிடம் “நீங்க  ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார்.



கேபிள் சங்கர்
Post a Comment

39 comments:

பிரபாகர் said...

பாகம் ரெண்டும் அப்படியே ஜிவ்வுன்னு போகுது!

கலக்குங்க!

பிரபாகர்.

Paleo God said...

அண்டார்ட்டிக்கா போனாக்கூட கொத்து பரோட்டா விட மாட்டீங்க போல..:)

தராசு said...

ரைட்டு

Anonymous said...

என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying
miss pannitten. Im Crying

Vijay Anand said...

//விட்றா வண்டிய என்று வெண்ணெயாய் வழுக்கி சென்றது அவருடய கார் 100 கி.மீட்டர் வேகத்தில்.//
இது ரொம்ப சாதரண வேகம் சிங்கப்பூர்ல....
Joyfull சிங்கப்பூர்-3 இக்கு waiting

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என்ன அண்ணா crime story மாதிரி போகுது , குறட்டை விட்டு பிரபா சாரை தூங்க விடலையா.?

ஜோ/Joe said...

//“அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” என்றவரிடம் “நீங்க ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார். //

:)))))))

கர்ர்ர்ர்ர்.. புர்ர்ர்ர்ர்

சைவகொத்துப்பரோட்டா said...

பார்ட் - 2 இல் குறட்டையா.

Unknown said...

அது என்ன சம்பவம்னு சொல்லவேயில்லயே??

vasu balaji said...

குறட்டை பரோட்டாவா:))

Anonymous said...

//அடுத்த சில நிமிடங்களில் வண்டியை பார்க் செய்துவிட்டு என்னை எங்கு அழைத்து போகலாம் என்று ஒரு தெரு முக்கில் நின்று விவாதித்தார்கள். அப்போது என் மாப்ளை விஜய் “தயவு செஞ்சு வேற பக்கம் நின்னு பேசுவோமா.? நம்மளை இந்த தெரு பக்கம் பார்த்தால் தப்பா நினைக்கப் போறாங்க” என்றதும், எனக்குள் இருந்த ஆர்வகுட்டி “ஏன்? என்னா.. இங்க?”//

நீங்க நல்லவர்னே, நீங்க எந்த இடத்தில் இருந்து பேசினா என்னண்ணே ??...நம்ம மனசு சுத்தமா இருக்கு.....

அப்புறமா, அந்த தெருவுல நிறைய மசாஜ் கடை இருக்குன்னு கேள்விபட்டேனே உண்மையா விஜய் :)

மூன்றாம் பாகம் எப்போ அண்ணா ?? -- ஆவலுடன் !!!!

நல்லவன்
சிங்கை கருப்பு...

Veliyoorkaran said...

@@நடுவில் எழுந்து பார்த்த போது விடியற்காலையில் ஐ போனில் பாட்டை கேட்டபடி, கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தது. பிரபாகரின் உருவம்.//
////////////////////////
அப்போ பிரபாகர் அண்ணன் எங்க போயிருந்தாரு...ஏன் அண்ணேன் திகில் கதையா சொல்லி பயமுறுத்தறீங்க..சிங்கபூர்ல பேய் இருக்குன்னு என்கிட்டே சொன்னது உண்மைதான் போலவே..!! (பிரபாகர் அண்ணேன் நைட் ஷிப்ட் வேலைக்கு போறதா பட்டாப்பட்டி ப்ளாக்ல எழுதிருந்தாரு.அப்போ, நீங்க பார்த்தப்போ கம்பியூட்டர நோண்டுன உருவம் யாரோடது...)

Veliyoorkaran said...

அண்ணேன் இங்க கேலாங்னு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஏரியா இருக்கு..அந்த எடத்துக்கு போனீங்களா இல்லையா..??..(போனீங்கன்னா அத பத்தி எப்போ எழுத போறீங்க...?)

panasai said...

<.....நான் நடந்து வந்த பட்ஜெட் ஏர்போர்டை பற்றி பின்னால் விவரிக்கிறேன். சென்னையின் ஏர்போர்ட்டை விட 50 மடங்காவது பிரம்மாண்டமும், வசதிகளும் நிறைந்ததாய் இருந்தது........>

appadi ellam illai nanbare..
budjet terminal small.. ok.
welcome...

ஈரோடு கதிர் said...

//பாகம் ரெண்டும் அப்படியே ஜிவ்வுன்னு போகுது!

பிரபாகர்.//

அவரு விட்ட கொறட்டையிலா?

ரோஸ்விக் said...

//சீட் பெல்ட்டை போடுங்கள் என்று சொல்ல, அடுத்த சில நொடிகளிள் 35,000 அடிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக கீழிறங்க ஆரம்பித்தது.//

பாத்தீங்களா... பெல்ட்டை போட்டவுடன் 30,000 அடில இருந்து கீழ இறங்கிருச்சு.... (Flight-ணே) :-)

இப்ப புரியுதா உடுக்கை எதுக்கு இடுப்புல பெல்ட் போட்டிருக்குன்னு...

பித்தனின் வாக்கு said...

// என் மாப்ளை விஜய் “தயவு செஞ்சு வேற பக்கம் நின்னு பேசுவோமா.? நம்மளை இந்த தெரு பக்கம் பார்த்தால் தப்பா நினைக்கப் போறாங்க” என்றதும், எனக்குள் இருந்த ஆர்வகுட்டி “ஏன்? என்னா.. இங்க?” கேள்விகளை கேட்க, “வந்தவுடனேயே இத பத்தி தெரிஞ்சிக்க வேணாம் //
அண்ணே, உங்களை எல்லாரும் ஏமாத்திட்டாங்க. அந்தத் தெருவிலதான் என் ஆசிரமம் இருக்கு, அதுனால சொல்லியிருக்காங்க.
அந்த இரண்டு தெருக்களும் திரு நங்கைகளின் ஏரியா.
சரி பாகம் - 3 க்கு வெயிட்டிங்.

CS. Mohan Kumar said...

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது மேட்டர் சொல்லவே இல்லையே? அல்லது எங்காவது சொல்லிட்டீங்களா ?? (பின் நவீனதுவம்??)

//நான் யூத் தான் என்றாலும் உறவு முறையில் அங்கிள் ஆகிவிட்டதால் // ம்க்கும் .... எனக்கு இந்த பதிவில் ரொம்ப பிடிச்சது அந்த கேபிள் அங்கிள் போட்டோ தான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Veliyoorkaran
அப்போ பிரபாகர் அண்ணன் எங்க போயிருந்தாரு...ஏன் அண்ணேன் திகில் கதையா சொல்லி பயமுறுத்தறீங்க..சிங்கபூர்ல பேய் இருக்குன்னு என்கிட்டே சொன்னது உண்மைதான் போலவே..!! (பிரபாகர் அண்ணேன் நைட் ஷிப்ட் வேலைக்கு போறதா பட்டாப்பட்டி ப்ளாக்ல எழுதிருந்தாரு.அப்போ, நீங்க பார்த்தப்போ கம்பியூட்டர நோண்டுன உருவம் யாரோடது...)
//

பயமாயிருக்கே..
இதுல வேற பித்தன் சார் , ஆசிரமம் நடத்திட்டு இருக்கேனு சொல்றாரு..
என்னமோ நடக்குது?.

சார்.. உங்களை சின்ன சிங்கப்பூருக்கு கூட்டிட்டுபோயி
ஏமாத்தியிருப்பாங்களோ?..

நாங்க இருப்பது தான் ஒரிஜினல் சிங்கப்பூர்.. வேறு எங்கும் கிளைகள் இல்லை..

selvangood said...

"எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்"


தயவு செய்து அந்த சம்பவத்தை சொல்லுங்கள்

க.பாலாசி said...

அந்த தெருவப்பத்தி...........

வடுவூர் குமார் said...

100 கி.மீட்டர் வேகத்தில்.90 தானே அதிகபட்சம்??

வடுவூர் குமார் said...

யூசுனில் இருக்கும் அவரது வீட்டிற்கு
ஒரு காலத்தில் இது தான் என் ஏரியா.

Ashok D said...

//உடுக்கை ஆங்கிலம் பேசுகிறேன்//

சரியா சொல்லுங்க தம்பி..அது உடுக்கை ஆங்கிலமா... உடுக்கைகிட்ட ஆங்கிலமா????

நைட் புள்ளா அப்டி என்ன disturb panninga பிரபாகரra...???

நேசமித்ரன் said...

சுவாரஸ்யமா சொல்லுறீங்க பாஸ் !

waiting ...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்.

அறிவிலி said...

//Written by பித்தனின் வாக்கு
12:48 PM
அண்ணே, உங்களை எல்லாரும் ஏமாத்திட்டாங்க. அந்தத் தெருவிலதான் என் ஆசிரமம் இருக்கு, அதுனால சொல்லியிருக்காங்க.
அந்த இரண்டு தெருக்களும் திரு நங்கைகளின் ஏரியா.
சரி பாகம் - 3 க்கு வெயிட்டிங்//


அப்போ..... ??????

அறிவிலி said...

//Written by பித்தனின் வாக்கு
12:48 PM
அண்ணே, உங்களை எல்லாரும் ஏமாத்திட்டாங்க. அந்தத் தெருவிலதான் என் ஆசிரமம் இருக்கு, அதுனால சொல்லியிருக்காங்க.
அந்த இரண்டு தெருக்களும் திரு நங்கைகளின் ஏரியா.
சரி பாகம் - 3 க்கு வெயிட்டிங்//


அப்போ..... ??????

அறிவிலி said...
This comment has been removed by the author.
ஜோசப் பால்ராஜ் said...

சீக்கிரம் பாகம் 3 வெளியிடுங்க. விட்டா அப்துல்லா அண்ணே எழுதுனமாதிரி அனுபவப் பதிவு எழுதுவீங்க போல இருக்கு.
ஏன்யா இன்னும் சிங்கை அனுபவப் பதிவ முடிக்கலன்னு கேட்டா, அதான் பயணமே இன்னும் முடியலையே அடிக்கடி அங்க வந்துக்கிட்டு இருக்கோம்லன்னு சொல்றாரு அவரு. அதுமாதிரியில்லாம சீக்கிரம் முடிச்சாதான் அடுத்த தடவ விசா போடுவோம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//எனக்கு விசா போட்ட என் மாப்பிள்ளை வெற்றிக் கதிரவ்ன் //

அப்ளை பண்ணினது என்னமோ நான்தான் ஆனா அத செய்ய சொல்லி கிரிடிட் கார்ட் எல்லாம் கொடுத்தது சாட்ச்சாத் டேமேஜரே தான்

ஆயிரம் கதை சொல்லி பதிவெழுதினாலும் நீங்க அங்கிள் அங்கிள் அங்கிள் தான்

Unknown said...

4 * budget terminal= terminal 3

ஜெகதீசன் said...

//
நான் நடந்து வந்த பட்ஜெட் ஏர்போர்டை பற்றி பின்னால் விவரிக்கிறேன். சென்னையின் ஏர்போர்ட்டை விட 50 மடங்காவது பிரம்மாண்டமும், வசதிகளும் நிறைந்ததாய் இருந்தது
//
அவ்வளவு பிரம்மாண்டம் எல்லாம் இல்லை பாஸ்...
வேணுமின்னா சென்னை விமானநிலையத்தின் வெளிநாட்டு முனையம் அளவு பெரிய, ஆனால் சுத்தமானதுன்னு சொல்லலாம்...
:)

Cable சங்கர் said...

@பிரபாகர்
நன்றி

@ஷங்கர்
அது சரி.. நானா கேட்டேன். ப்ளான் செய்து கொடுக்கிறாங்க..

@தராசு
ஓகேண்ணே

@ஆர்.கே.சதீஷ்குமார்
ஹி..ஹி..

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
விடுங்க..பாஸ்.. திரும்ப வராமயா போகப் போறேன்

@விஜய் ஆனந்த்
எழுதிட்டே இருக்கேன்

@ஸ்ரீகிருஷ்ணா
வையிட்டீஸ்

@ஜோ
என்ன ஒரே சவுண்டா இருக்கு

@சைவக் கொத்துபரோட்டா
வெயிட்டிங்

வானம்பாடிகள்
ஹி..ஹி

@கருப்பு
அதானே பாரு உனக்கு தெரிஞ்சிருக்கு. என் மனசு

@வெளியூர்காரன்
விரைவில்

@பனசை
சும்மா ஒரு பில்டப் கொடுக்கறதில்லையா..?

@ஈரோடு கதிர்
மூச்

@ரோஸ்விக்
அதுசரி

@பித்தனின் வாக்கு
வந்திட்டேருக்குண்ணே

@மோகன்குமார்
வரும்..வரும்

@பட்டாபட்டி
சிங்கப்பூர்.. சிங்கப்பூர் பஸ்ஸ்டாண்ட், விவேகானந்தர் தெருவா..?

@செல்வன்குட்
இருங்க

@க.பாலாசி
ம்ம்ம்ம்ம்ம்

@வடுவூர் குமார்
இப்ப இன்கிரீஸ் செஞ்சிட்டாஙக் போலருக்கு குமார்..

@அசோக்
இருங்க சொல்லுவோமில்லை

@நேசமித்ரன்
நன்றி

@ஸ்ரீ
நீங்க கேட்டிருக்கலாமில்ல..:)

@அறிவிலி
அப்போன்னா....

@இராமசாமி கண்ணன்
:)

@ஜோசப் பால்ராஜ்
இருய்யா.. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.. :)

@வெற்றிக் கதிரவன்
டேமேஜர் தான் செஞ்சாருன்னு தெரியும்.. இருந்தாலும்

Cable சங்கர் said...

@பிரபாகர்
நன்றி

@ஷங்கர்
அது சரி.. நானா கேட்டேன். ப்ளான் செய்து கொடுக்கிறாங்க..

@தராசு
ஓகேண்ணே

@ஆர்.கே.சதீஷ்குமார்
ஹி..ஹி..

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
விடுங்க..பாஸ்.. திரும்ப வராமயா போகப் போறேன்

@விஜய் ஆனந்த்
எழுதிட்டே இருக்கேன்

@ஸ்ரீகிருஷ்ணா
வையிட்டீஸ்

@ஜோ
என்ன ஒரே சவுண்டா இருக்கு

@சைவக் கொத்துபரோட்டா
வெயிட்டிங்

வானம்பாடிகள்
ஹி..ஹி

@கருப்பு
அதானே பாரு உனக்கு தெரிஞ்சிருக்கு. என் மனசு

@வெளியூர்காரன்
விரைவில்

@பனசை
சும்மா ஒரு பில்டப் கொடுக்கறதில்லையா..?

@ஈரோடு கதிர்
மூச்

@ரோஸ்விக்
அதுசரி

@பித்தனின் வாக்கு
வந்திட்டேருக்குண்ணே

@மோகன்குமார்
வரும்..வரும்

@பட்டாபட்டி
சிங்கப்பூர்.. சிங்கப்பூர் பஸ்ஸ்டாண்ட், விவேகானந்தர் தெருவா..?

@செல்வன்குட்
இருங்க

@க.பாலாசி
ம்ம்ம்ம்ம்ம்

@வடுவூர் குமார்
இப்ப இன்கிரீஸ் செஞ்சிட்டாஙக் போலருக்கு குமார்..

@அசோக்
இருங்க சொல்லுவோமில்லை

@நேசமித்ரன்
நன்றி

@ஸ்ரீ
நீங்க கேட்டிருக்கலாமில்ல..:)

@அறிவிலி
அப்போன்னா....

@இராமசாமி கண்ணன்
:)

@ஜோசப் பால்ராஜ்
இருய்யா.. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.. :)

@வெற்றிக் கதிரவன்
டேமேஜர் தான் செஞ்சாருன்னு தெரியும்.. இருந்தாலும்

சுரேகா.. said...

ஒரு தொடர்கதை படிக்கிற உணர்வு வருது!

சூப்பரு!

thanjai gemini said...

அப்ப இந்த வாரம் கொத்து புரோட்டால சாப்பாட்டு கடை லிட்டில் இந்தியா தானா

Romeoboy said...

சூப்பரா இருக்கு தலைவரே. :)