Thottal Thodarum

Jan 23, 2009

பதிவுகளை விகடன் படிக்கிறது..?

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..
விகடன் தமிழ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறது என்பதை பதிவுலகத்திலிருந்து வாரம் ஒரு பதிவை அறிமுகபடுத்துவதிலிருந்தே எல்லோருக்கும் தெரியும். பதிவர்கள் எல்லோரும் விகடன் தங்களை கவனிக்கிறது என்பதை பற்றி பெருமிதபட்டு கொண்டு மகிழ்ந்தார்கள்.

அதிலும் விகடன் பெயரிட்டு வெளிவரும் பதிவுகளில் உண்மையிருந்தால் அதை வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாய் தவறை களையவும் செய்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

அப்படி வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விகடன் ஏன் பெரும்பாலான வாசகர்களின் உணர்வை, எண்ணத்தை, மதித்து ஏன் விகடனை பழைய வடிவிலேயே கொடுக்க கூடாது..? நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

உங்களுடய புதிய வடிவமைப்பால் நெடுங்கால வாசகர்களை, விகடனை தங்கள் வாழ்கையின் ஒரு அங்கமாய் நினைக்கும் வாசகர்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். உதாரணமாய் என்னிடம் விகடனை கையில் கொடுத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே என்னுடய அம்மாதான். விகடன் பழைய வடிவில் வந்தவரை என்னுடய அம்மா வெள்ளிக்கிழமை விகடன் வந்தவுடன் முதலில் படிப்பது அவர்கள்தான். எப்போது விகடன் மாறியதோ அவர்கள் அதை தொடுவது கூட கிடையாது. அதே போல் என்னுடய உறவினர் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து எஸ்.டி.டி போட்டு புலம்பினார். இப்படி பல வாசகர்கள்.

நான் இதை ஒரு சர்வேயாக என்னுடய ப்ளாக்கில் போட்டேன். பெரும்பாலானவர்கள் பழைய விகடனையே விரும்பியிருந்தார்கள். நான் இதை செய்தது விகடன் கவனிக்கும் என் நம்பிக்கையில். இந்த பதிவை அப்படியே ஒரு முறை யூத்புல் விகடன்.காமில் பின்னூட்டமிட்டேன். அது போச்சா போகலையான்னு தெரியல..

அதிலும் பின்னுட்டமிட்டிருந்த வாசகர்கள் உங்களது பொக்கிஷத்தை பற்றி இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மணியனின் தொடர்கதையை நிறுத்தியதை பற்றி அவர் எழுதியவுடன் அடுத்த வாரத்திலிருந்து தொடர்வதே அதற்கு சாட்சி..

என்னுடய் ஏரியாவில் பேப்பர் ஏஜண்டிடம் கேட்டேன்.. புது விகடன்னால ஏதாவது எக்ஸ்ட்ரா புக் போகுதான்னு..? அதுக்கு அவர் ‘ அட அதையேன் சார் கேட்குறீங்க..? போட்டுகிட்டு இருந்ததில 5,10 குறைஞ்சதுதான் மிச்சம்..” என்றார். விகடன் மேலும் பல வாசகர்களை இழப்பதை என்னால் சகிக்க முடியவில்லை.

அதே போல் சமீப காலமாய் விகடன் விமர்சனங்கள் முன்பு போல் இல்லை. டுபாக்கூர் படத்துக்கெல்லாம் 38,39 என்று மார்க் அளிக்கிறது. ஒரு வேளை விகடனும் திரைப்பட தயாரிப்பில் இருப்பதினால் ஒரு சாப்ட் கார்னரோ..?

வெறும் படங்களாள் நிரப்பப்பட்ட ஒரு இதழாகவே தெரிகிறது.

ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.. சொல்லாமில்ல.. அது சரி.. நம்ம தாத்தாகிட்ட நாம சொல்லாம வேற யார் சொல்றது.


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

53 comments:

அத்திரி said...

//நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.//


ஆஹா........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

நீங்க சொல்றது சரிதான் அண்ணே.. விகடன் வடிவத்திலும் மாறி + காசும் அதிகமானதால நான் அதை வாங்கியே ஒரு வருடம் தாண்டுகிறது... ம்ம்ம்ம் எப்பவுமே ஓல்டு இஸ் கோல்டுதான்

Cable சங்கர் said...

//நீங்க சொல்றது சரிதான் அண்ணே.. விகடன் வடிவத்திலும் மாறி + காசும் அதிகமானதால நான் அதை வாங்கியே ஒரு வருடம் தாண்டுகிறது... ம்ம்ம்ம் எப்பவுமே ஓல்டு இஸ் கோல்டுதான்//

பாருங்க.. அத்திரி..உஙக்ளை போல உள்ள இளைஞர்களுக்கே பிடிக்கலைன்னா அப்புறம் எப்படி..?

அத்திரி said...

விகடன்னு சொன்னாலே அந்த சின்ன புத்தகம் தான் ஞாபகத்துக்கு வருது.... இத பத்தி அவங்க கவலைப்பட்டதா தெரியல.......

Rajaraman said...

தமிழ் வாசகர் பலரின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். விகடன் பரிசீலித்து மதிப்பளிக்கும் என்று நம்புவோம்.

கார்க்கிபவா said...

சமீ.. என்னைக் காப்பாத்து.. இவங்க ரெண்டு பேரும் இளைஞர்கள்ன்னா நான் என்ன குட்டிப் பாப்பாவா????????

75,000 வாழ்த்துகள் தல‌

narsim said...

//இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை//

good technic thala...

//விகடனும் திரைப்பட தயாரிப்பில் இருப்பதினால் ஒரு சாப்ட் கார்னரோ..?
//

soft attack..

good soft post.. with a strong view..

ஷங்கர் Shankar said...

அதையேன் கேட்குறீங்க ! போன வாரம் வரைக்கும் விகடன் விலை பிற மாநிலங்களில் 15 ரூபாய்தான் இருந்தது. ஆனால் இந்த வாரத்திலிருந்து 17 ரூபாய். இந்த விலைஎற்றதாலும் வாசகர்கள் குறைகிறார்கள்.
இதனால் பலனடைவது குமுதம்தான்!
கவனிக்குமா விகடன் நிர்வாகம்.

நையாண்டி நைனா said...

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். ஆனால் மாற்றங்கள் நல்லது தானே என்றும் எண்ணம் வருகிறது.

ஏன் என்றால்? பாரம்பரிய தொலைபேசி இருக்கும் போது செல் பேசி வந்தது, செல்பேசியினால் கதிர் வீச்சு, மூளைக்கு பாதிப்பு, கருவிற்க்கு பாதிப்பு, அது, இது, என்று சொன்னார்கள். இப்போ செல் இல்லா மனிதன், செல்லா மனிதன்.

எம்.எம்.அப்துல்லா said...

//இளைஞர்களான எங்களுக்கு //

போட்டீங்க பாருங்க ஒரு பிட்ட...சைக்கிள் கேப்புல :))

நையாண்டி நைனா said...

/*பிற மாநிலங்களில் 15 ரூபாய்தான் இருந்தது. ஆனால் இந்த வாரத்திலிருந்து 17 ரூபாய்.*/

நானும் எதிர் பார்க்கிறேன்.

கேபிலாரே, உடனே மாற்றம் நல்லது தானே என்று எனக்கு கிடுக்கி பிடி போட வேண்டாம். நான் சொல்வது விலை அதிகரிப்பை.

அத்திரி said...

//கார்க்கி said...
சமீ.. என்னைக் காப்பாத்து.. இவங்க ரெண்டு பேரும் இளைஞர்கள்ன்னா நான் என்ன குட்டிப் பாப்பாவா????????//

சகா நீ இன்னும் வயசுக்கு வராத இளைஞன்.........

Expatguru said...

விகடனின் புத்தக வடிவோ அல்லது விலையோ கூட பிரச்னை இல்லை. அதில் வரும் விஷயம் தான் பல வாசகர்களை இழக்க வைத்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்தினர் அனைவருமே விரும்பி படிக்கும் பத்திரிகையாக விகடன் இருந்தது. இப்பொழுது சினிமா செய்திகள் ஏதாவது பிரசுரித்தால் அதில் ஆபாசமாக ஏதாவது நடிகையின் புகைப்படம் வருகிறது. தொலைக்காட்சியில் ஏதாவது இப்படி நிகழ்ச்சி வந்தால் ரிமோட்டை கொண்டு வேறு channelக்கு மாற்றிக்கொள்ளலாம். சிறுவர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற பத்திரிகை இருந்தால் என்ன செய்வது? நாம் வாங்குவது விகடனா அல்லது ஏதாவது மஞ்சள் பத்திரிகையா என்ற சந்தேகமே வந்துவிட்டது. அதனால் விகடன் வாங்குவதையே நிறுத்தி விட்டேன்.

Cable சங்கர் said...

//75,000 வாழ்த்துகள் தல‌//

நன்றி கார்க்கி..

இளைஞர் சங்கர்

Anonymous said...

pu chinnappa vs thiyagaraja bhagavathar
Sivaji vs mgr
kamal vs rajni
ajit vs vijay
vikatan vs kumudam

common. blogs r 4 showing ur own power. y 2 get attention from kumudam and vikatan? after all they plagarize from the net.

Cable சங்கர் said...

//போட்டீங்க பாருங்க ஒரு பிட்ட...சைக்கிள் கேப்புல :))//

ஸ்டாலின் மட்டும் இன்னமும் இளைஞர் அணி தலைவரா இருக்கலாம்.. நாங்க.. (அத்திரி.. உங்களையும் சேர்த்துதான்.) நிஜ இளைஞர்கள் நாங்க சொல்லிக்க கூடாதா..? இளைஞர் அப்துல்லா..

Cable சங்கர் said...

//தமிழ் வாசகர் பலரின் உள்ளக்கிடக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். விகடன் பரிசீலித்து மதிப்பளிக்கும் என்று நம்புவோம்///

நம்புவோம்.. நம்புவோம்.. நம்பிதானே ஆகணூம்.. வேற யார் கிட்ட சொல்லி அழறது..

Cable சங்கர் said...

//
soft attack..

good soft post.. with a strong view..//

அது வொண்ணுமில்ல.. நாமளூம் படமெடுக்கத்தானே அலையிறோம்.. ஒரு வேளை விகடன்ல கதை கேட்க போய்.. அவனா நீயின்னு போட்டு பாத்துட்டாங்கன்னா.. எதுக்கும் ஒரு சேப்டிக்காகத்தான். நன்றி இளைஞர் நர்சிம்..

Cable சங்கர் said...

//உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். ஆனால் மாற்றங்கள் நல்லது தானே என்றும் எண்ணம் வருகிறது.
//

மாற்றங்கள் நல்லது தான் தலைவா. மாற்றம் ஒன்றே நிலையானது.. என்ன எளவு மாற்றம் பிடிக்கலைன்னா.. திரும்பவும் மாறிக்க வேண்டியதுதானே.. அதான் சொன்னேனே.. மாற்றம் ஒன்றே நிலையாதுன்னு.. நன்றி நையாண்டி..

Cable சங்கர் said...

//விகடனின் புத்தக வடிவோ அல்லது விலையோ கூட பிரச்னை இல்லை. அதில் வரும் விஷயம் தான் பல வாசகர்களை இழக்க வைத்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்தினர் அனைவருமே விரும்பி படிக்கும் பத்திரிகையாக விகடன் இருந்தது. இப்பொழுது சினிமா செய்திகள் ஏதாவது பிரசுரித்தால் அதில் ஆபாசமாக ஏதாவது நடிகையின் புகைப்படம் வருகிறது. தொலைக்காட்சியில் ஏதாவது இப்படி நிகழ்ச்சி வந்தால் ரிமோட்டை கொண்டு வேறு channelக்கு மாற்றிக்கொள்ளலாம். சிறுவர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற பத்திரிகை இருந்தால் என்ன செய்வது? நாம் வாங்குவது விகடனா அல்லது ஏதாவது மஞ்சள் பத்திரிகையா என்ற சந்தேகமே வந்துவிட்டது. அதனால் விகடன் வாங்குவதையே நிறுத்தி விட்டேன்.//

Forwarded to Vikatan

நன்றி எக்ஸ்பர்ட் குரு

Cable சங்கர் said...

//ommon. blogs r 4 showing ur own power. y 2 get attention from kumudam and vikatan? after all they plagarize from the net.//

அதுவும் நிஜம் தான் அனானி.. இந்த வார விகடனில் வில்லு விமர்சனத்தில் வரிகள்..” பீமன்கிட்ட கதை கேட்பதை விட்டு டைரக்டர்களிடம் கதை கேட்க” என்பது பரிசலின் வில்லு விமர்சனமும் மிகவும் ஒத்து போகிறது.

அது போல் என்னுடய் மகேஷ். சரண்யா. தியேட்டரில் சிலர் அப்படியே குமுதத்தில்..

Raj said...

//அத்திரி said...
//நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.//


ஆஹா........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

அப்படி போடு....ரிப்பீட்டேய்.

நாங்கள்ளாம் நெட்ல படிக்கறோம் இல்ல.

எம்.எம்.அப்துல்லா said...

//நிஜ இளைஞர்கள் நாங்க சொல்லிக்க கூடாதா..? இளைஞர் அப்துல்லா..
//

நம்பல்லாம் இளைஞர்கள் இல்லண்ணே...சின்னபுள்ளைங்க :)

Raj said...

நீங்க ஆஹா ஓஹோன்னு கொண்டாடிகிட்டிருக்கிற...சாருவோட வண்டவாளங்கலை...இந்த பதிவில் படிச்சு பாருங்க....http://suuniyam.wordpress.com/2009/01/22/சாரு-நிவேதிதா-நம்பர்-ஒன்/

Power Bala said...

//இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை//

ஹா.. ஹா.. ஹா..!!! சங்கர்...நான் இளைஞனா இருக்கும்போதே... நீங்க.. middle age. இப்ப நானே.. middle age-ன்னு என்னை நினைச்சிட்டு இருக்கும்போது... நீங்க ‘இளைஞன்’ ஆய்ட்டீங்களா..???!!!

இல்ல.. ஒருவேளை “The Curious Case of Benjamin Button”-ல வர்ற Brad Pitt மாதிரி... உங்க வயசு குறைஞ்சிட்டே வருதா...??!!! LOL!!!

==========
2 வாரம் விகடனை ‘ebook'-ஆ download செஞ்சி படிச்சேன். ஊர்ல இருந்தப்ப இருந்த ”விகடன்” மாதிரி இல்லயேன்னு சொல்லி நிறுத்திடேன்.

காசு கொடுக்காம படிச்ச நானே.. இத தூக்கி போட்டுட்டனே..., 10-15 கொடுத்து படிக்கற உங்க மாதிரி “இளைஞர்களுக்கு” எப்படி இருக்கும்..???!!!!

Unknown said...

ஆனந்த விகடன் வெறுமனே சினிமாவை மட்டுமே
கொண்டு உள்ளது . அதிகம் சினிமா தொடர்புடைய
கட்டுரைகளே . சமுக கருத்துகள் குறைவு .

Unknown said...

ஆனந்த விகடன் வெறுமனே சினிமாவை மட்டுமே
கொண்டு உள்ளது . அதிகம் சினிமா தொடர்புடைய
கட்டுரைகளே . சமுக கருத்துகள் குறைவு .

Unknown said...

ஆனந்த விகடன் வெறுமனே சினிமாவை மட்டுமே
கொண்டு உள்ளது . அதிகம் சினிமா தொடர்புடைய
கட்டுரைகளே . சமுக கருத்துகள் குறைவு .

நட்புடன் ஜமால் said...

\\எம்.எம்.அப்துல்லா said...

//இளைஞர்களான எங்களுக்கு //

போட்டீங்க பாருங்க ஒரு பிட்ட...சைக்கிள் கேப்புல :))\\

ஹா ஹா ஹா

மாப்பூ சூப்பரு ...

கண்ணன் said...

yes. I too dont like this new Vikatan. Waste of money. I stopped buying vikatan nowadays.

நித்யன் said...

விகடனின் தரம் வெகுவாய் இறங்கி வருகிறது என்பது வெள்ளிடை மலை. கடந்து ஆண்டு நான் எழுதிய இப்பதிவு அப்போதைய மனப்பதிவை வெளிப்படுத்துகிறது. இப்போதைய வடிவமும் உள்ளடக்கமும் அந்த கால விகடனை நினைத்து ஏங்க வைக்கின்றன என்பதே உண்மை.

பழைய பதிவின் லிங்க் :

http://nithyakumaaran.blogspot.com/2008/02/blog-post_25.html

ப்ரியமுடன் நித்யன்

Anonymous said...

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. நாங்கள் பரிசீலனையில் எடுத்துக்கொள்கின்றோம்.

Jackiesekar said...

படிக்கிறது என்பதற்க்கு விகடன் பின்னுட்டமே பதில் சொல்லி இருக்கிறது. பரிசிலினையில் எடுத்து கொள்வதாக

Cable சங்கர் said...

//நீங்க ஆஹா ஓஹோன்னு கொண்டாடிகிட்டிருக்கிற...சாருவோட வண்டவாளங்கலை...இந்த பதிவில் படிச்சு பாருங்க....http://suuniyam.wordpress.com/2009/01/22/சாரு-நிவேதிதா-நம்பர்-ஒன்///

சாரு ஒரு நம்பர் ஒன் திருடன்ங்கறத பத்தி நானும் படிச்சேன்.. அது சரி.. இந்த பதிவை பத்தி ஒண்ணும் சொல்லலியே..

Cable சங்கர் said...

//ஹா.. ஹா.. ஹா..!!! சங்கர்...நான் இளைஞனா இருக்கும்போதே... நீங்க.. middle age. இப்ப நானே.. middle age-ன்னு என்னை நினைச்சிட்டு இருக்கும்போது... நீங்க ‘இளைஞன்’ ஆய்ட்டீங்களா..???!!!

இல்ல.. ஒருவேளை “The Curious Case of Benjamin Button”-ல வர்ற Brad Pitt மாதிரி... உங்க வயசு குறைஞ்சிட்டே வருதா...??!!! LOL!!!//

பாலா.. ஆனாலும் ரொம்பத்தான் லொள்ளு.. நான் தான் சொன்னேனே.. திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலினே இன்னும் இளைஞரா இருக்கும் போது.. 39 வயசான நான் இளைஞர் தானே.. அது சரி பிராட்பிட் படம் எப்படி இருக்கு.?

Cable சங்கர் said...

//==========
2 வாரம் விகடனை ‘ebook'-ஆ download செஞ்சி படிச்சேன். ஊர்ல இருந்தப்ப இருந்த ”விகடன்” மாதிரி இல்லயேன்னு சொல்லி நிறுத்திடேன்.

காசு கொடுக்காம படிச்ச நானே.. இத தூக்கி போட்டுட்டனே..., 10-15 கொடுத்து படிக்கற உங்க மாதிரி “இளைஞர்களுக்கு” எப்படி இருக்கும்..???!!!!//


அதானே ஒரு இளைஞனோட மனசு இன்னொரு இளைஞனுக்குதானே தெரியும்.

Cable சங்கர் said...

//ஆனந்த விகடன் வெறுமனே சினிமாவை மட்டுமே
கொண்டு உள்ளது . அதிகம் சினிமா தொடர்புடைய
கட்டுரைகளே . சமுக கருத்துகள் குறைவு .//

நன்றி வாமுகோமு.. நீங்கள்தானே “கள்ளி” என்கிற நாவலை மிக அருமையான எழுதிய அந்த கோமுவா? மிக்க நன்றி கோமு உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

Cable சங்கர் said...

//yes. I too dont like this new Vikatan. Waste of money. I stopped buying vikatan nowadays.//

விகடன் தாத்தா கவனிக்கவும். மிக்க நன்றி கண்ணன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு. கண்டிப்பாய் விகடன் ந்ம்முடய எண்ணங்களுக்கு செவி சாய்க்கும் என்று நம்புவோமாக..

Cable சங்கர் said...

//படிக்கிறது என்பதற்க்கு விகடன் பின்னுட்டமே பதில் சொல்லி இருக்கிறது. பரிசிலினையில் எடுத்து கொள்வதாக//

அட நீங்கதான் அந்த மனசாட்சியா..?

Cable சங்கர் said...

//விகடனின் தரம் வெகுவாய் இறங்கி வருகிறது என்பது வெள்ளிடை மலை.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

நன்றி நித்யா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் சின் புத்தகம்தான் மனசுக்குள்ள இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

கார்க்கியோட கமன்ட்டுக்கு ரிப்பீட்டு..:)

ISR Selvakumar said...

நாம் விகடனையும், குமுதத்தையும் படித்த காலங்கள் போய், பதிவுகளை பத்திரிகைகள் படிக்கிற காலம் வந்தாச்சு என்று உறுதியாக நம்புகிறேன்.

முதல் காரணம் -
உடனடி பதிவு (வாரக் கணக்கு, மாதக் கணக்கெல்லாம் கிடையாது)
அதனால் ஆனந்த விகடன், குமுதமெல்லாம் தயாராவதற்கு முன்னர் சுடச் சுட எல்லாமே பதிவுகளில் கிடைக்கிறது.

2வது காரணம் -
ஒரு விஷயத்தைப் பற்றி பல்வேறு பதிவர்களின் பல்வேறு கோணங்கள்

3வது காரணம் -
உடனடி எதிர் வாதங்கள், பாராட்டுகள்
ஆசிரியர் கடிதம் போட்டு வருமா வராதா என்று காத்திருக்கத் தேவையில்லை)

Power Bala said...

//அது சரி பிராட்பிட் படம் எப்படி இருக்கு.?//

ஆஸ்கர்-க்கு செலக்ட் ஆன எல்லா படத்தையும் பார்த்தாச்சி...!!!

2-3 நாள்ல எழுதி தள்ளிடுறேன்...!!!

:-0()

Power Bala said...

இந்த “இளைஞன்” மேட்டரை வச்சே நிறைய ‘கமெண்ட்ஸ்’ வாங்கிட்டீங்களே...!!

‘பின்னூட்டம் வாங்குவது எப்படி’-ங்கற போன பதிவுல இந்த ‘ஐடியா’-வயும் சேர்த்துடுங்க...!!! :-))))

Anonymous said...

I too stopped reading vikatan

Reasons

1.no family subjects
2. half baked writeup's from Maruthan kind of peoples ( ex . passport)

There were couple of false propaganda going on most of the area's

3. LTTE support and promoting tamil fanatic idea's
4.vulgur

Rajesh

Anonymous said...

i too stopped reading vikatan

reasons

1. the magazine content is changed very much..no room for family readers.

2. Half baked articles from maruthan kind of peoples.. (passport)
he is using vikatan as his red flag propaganda media

3. LTTE support and sponsoring tamil fanatic idea's

4. vulgur

5. There is no such chapter can be said is excellent.

பரிசல்காரன் said...

75000க்கு வாழ்த்துக்கள் இளைஞரே!

RAMASUBRAMANIA SHARMA said...

I have been a conscious reader of "ANANDA VIKATAN" & JU.VE. for many years from my school days...The Primary customers for AA.VE supposed to be the readers of the serial stories written by LEGENDS..."SUJATHA"., "R.K.RENGARAJAN".,J.R.S., S.A.P.,P.K.B.,RAJESH KUMAR., AND MANY OF THE VETERAN WRITER STORIES REPUBLISHED....which in turn increased their circulation also like ONCE "KALKI"...CAME OUT WITH "PONNIYIN SELVAN" IN THE YEASTER YEARS....Now the main draw back for AA.VE is there were no big weekly serial novels in the pipeline...Just adjusting with their existing agenda's, with lots of older articles, by famous people especially from cinema field...some old jokes and old articles....The authros observation is correct, since regular readers need some youthful changes, which I am sure, "ANANDA VIKATAN" TEAM IS CAPABLE OF DOING...HOWEVER, AA.VE IS ONE OF THE FINEST WEEKLY IN TAMIL...FOR MORE THAN, I SHOULD SAY 75 YEARS...LET US WAIT FOR THE CHANGES TO BE INCORPORATED...

Cable சங்கர் said...

//LET US WAIT FOR THE CHANGES TO BE INCORPORATED...//

நாங்கள் எல்லோருமே அதற்காகத்தான் காத்திருக்கிறோம் ராம சுப்ரமணிய சர்மா.. நன்றி உங்கள் வருகைக்கும், நீண்ட கருத்துள்ள பின்னூட்டத்திற்க்கும்..

Cable சங்கர் said...

//i too stopped reading vikatan

reasons

1. the magazine content is changed very much..no room for family readers.

2. Half baked articles from maruthan kind of peoples.. (passport)
he is using vikatan as his red flag propaganda media

3. LTTE support and sponsoring tamil fanatic idea's

4. vulgur

5. There is no such chapter can be said is excellent.//

ஃபார்வர்டட் டூ விகடன் நிர்வாக ஆசிரியர் குழு..

Cable சங்கர் said...

//இந்த “இளைஞன்” மேட்டரை வச்சே நிறைய ‘கமெண்ட்ஸ்’ வாங்கிட்டீங்களே...!!

‘பின்னூட்டம் வாங்குவது எப்படி’-ங்கற போன பதிவுல இந்த ‘ஐடியா’-வயும் சேர்த்துடுங்க...!!! :-))))//

அது சரி இது கூட நல்லாயிருக்கே.. அப்ப நான் நல்லா எழுதி பின்னூட்டம் வாங்கலைன்னு சொல்றீங்களா..?

Cable சங்கர் said...

//நாம் விகடனையும், குமுதத்தையும் படித்த காலங்கள் போய், பதிவுகளை பத்திரிகைகள் படிக்கிற காலம் வந்தாச்சு என்று உறுதியாக நம்புகிறேன்.//

நிச்சயமாய் செல்வகுமார்..

//முதல் காரணம் -
உடனடி பதிவு (வாரக் கணக்கு, மாதக் கணக்கெல்லாம் கிடையாது)
அதனால் ஆனந்த விகடன், குமுதமெல்லாம் தயாராவதற்கு முன்னர் சுடச் சுட எல்லாமே பதிவுகளில் கிடைக்கிறது.//

அதுவும் உண்மை.. வில்லு மொக்கை என்பதை ரிலீஸான அடுத்த காட்சிகுள்ளேயே தெரிந்துவிடுவதாலும், விகடனின் கருத்தும் ஒத்துயிருப்பதாலும்.. மிகச் சரியே..

//2வது காரணம் -
ஒரு விஷயத்தைப் பற்றி பல்வேறு பதிவர்களின் பல்வேறு கோணங்கள்//

இதுவும் மிகச்சரியே.. ஒன் சைட் கோல் என்பதே கிடையாது..

//3வது காரணம் -
உடனடி எதிர் வாதங்கள், பாராட்டுகள்
ஆசிரியர் கடிதம் போட்டு வருமா வராதா என்று காத்திருக்கத் தேவையில்லை)//

இதுவும் மிகச் சரியே..

நன்றி செல்வகுமார்.. உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும்..