Thottal Thodarum

May 18, 2011

நண்டு


“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா..? இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார்.

“அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன..? ஏதாவது சீரியஸா..? ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே..? பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே..? என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள்.

“அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல் டாக்டர் வரதராஜன் காத்திருந்தார். இந்தமாதிரி பல பேர்களின் அழுகையை, கதறலை, தன்னுடய இந்த சென்டரில் பார்த்திருக்கிறார். பழகி போய்விட்டது.

கமலா கொஞ்சம், கொஞ்சமாய் அழுவதை நிறுத்த ஆரம்பிக்க, காத்திருந்த வரதராஜன் மெல்ல, ”இதபாரும்மா.. கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல. இப்படி அழறத விட்டுட்டு, அவர ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ.. உடனடியா ஐ.சி.யூல வச்சு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலைன்னா.. நாலு நாளோ, அஞ்சு நாளோதான், அப்புறம் ரொம்பவே கஷ்டம். இப்பவே 20% தான் சான்ஸ் இருக்கு.”

கமலா மூக்கை உறிஞ்சியபடி, “ அப்படின்னா .. அவர் பொழைக்க மாட்டாறா..? நீஙக் சரியா பாத்தேளா..? சினிமாவுல வர்றாப்புல ரிப்போர்ட் எதாவது மாறியிருக்க போறது..? எப்படி அவருக்கு போய்.. இது..  வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்..? என்று மீண்டும் குலுங்க, ஆரம்பிக்க,

“சிலருக்கெல்லாம் காரணமே சொல்ல முடியாது.. வந்துடுத்து.. ஆக வேண்டியதை பார்க்கணும்” என்றார்.

கமலா சட்டென்று சுதாரித்து, “கேன்சர்தானே டாக்டர்.. பெருமாள் மேல பாரத்தை போட்டுட்டு, அட்மிட் பண்ணா.. ஒரு வாரமோ, பத்து நாள்லேயோ.. அப்படியே சிரிச்சிண்டே எழுந்து வர்ராப்புல பெருமாள் பண்ணிடுவார்.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..?”

வரதராஜனுக்கு என்ன சொவதென்றே தெரியவில்லை. இவ்வளவு இன்னொசென்ஸா..? ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா..? இருந்தா வரச்சொல்லுங்கோ..”

கமலாவுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “எங்களுக்கு குழந்தைகள் ஏதுமில்ல, பொறக்கல டாக்டர்.. அதவிடுங்கோ.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..? எவ்வளவு செலவாகும்..? தம்பிக்கு ஒண்ணுன்னா அண்ணங்கார செய்ய மாட்டாறா என்ன..? நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும்?”

“உடனடியா அப்பல்லோவோ.. அல்லது அடையார் கேன்சர் இன்ஸ்டிடூயூட்லயோ அட்மிட் பண்ணனும். ஒரு நாலஞ்சு நாள் டீரீட்மெண்ட்டுக்கு அப்புறம், ஹீமோக்ளோபின், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஒரளவுக்கு ஏறினதுக்கு அப்புறம்தான் தெரபி ஸ்டார்ட் பண்ணுவா.. இதுக்கே குறைஞ்சது ரெண்டு மாசம் ஆயிடும். சுமார நாலுலேர்ந்து அஞ்சு லட்சமாகிடும்.. அதுக்கு அப்புறம் அவர் தெரபிக்கு ரெஸ்பாண்ட் செஞ்சார்ன்னா திரும்பவும் அவருக்கு கேன்சர் செல் உருவாகாம இருக்கணும். அதுல சொஸ்தமாகி ’போன் மேரோ டிரான்ஸ்பிளேஷன்’ செய்து வெளிய வரதுக்கு கிட்டத்தட்ட பதினைஞ்சு லட்சம் ஆகிடும். இதெல்லாம் இதுக்கு இருக்கிற டிரீட்மெண்ட். ஆனா முதல் தெரபிய அவர் பாடி ஏத்துக்கிட்டு ரியாக்ட் ஆகாம இருக்கணும். அதுக்கு அப்புறம் கடவுள் விட்ட வழி..” என்று சொல்லிவிட்டு போக,

கமலாவுக்கு உலகமே இருண்டது என்று சொன்னால் அது சாதாரண வார்தை. ’அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். நிஜமாகவே போயிடுவாரோ?.. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. ? பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை..? எத்தனை அர்சனைகள்? பத்து பதினைஞ்சு லட்சத்துக்கு எங்கே போவேன். தட்டி முட்டி இன்சூரன்ஸ், அது இதுன்னு மொத்தமா ஒரு லட்சம் வரைக்கும் தேறும்.. பேங்க்ல பெரிசா எதுவுமில்ல.. நகையா பாத்தாக்கூட பெரிசா தேறாதே..? வேற எங்க எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியல.. இருபத்தி அஞ்சு வருஷமா அடிமாடு கணக்கா சேல்ஸ் ரெப்லேர்ந்து ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு இப்பத்தான் ஒரு கம்பெனியின் மேனேஜராய் இருப்பவரிடம் என்ன இருந்து விட போகிறது. பெரிசா சாமர்த்தியம் இல்லாட்டாலும், சமத்து.. என்று நினைக்கும் போது ரகுவின் முகம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டியது.

அவரோட நிழல்லேயே சுகமா இத்தனை நாள் இருந்துட்டு.. இதுவரைக்கு எதுக்காகவும் என்னை அலையவிட்டதேயில்லை. எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். ஆனா அடிக்கடி சொல்லுவார்..” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோடின்னு” அப்ப கேட்கல.. யாரை கேட்பது, யார் எனக்கு தருவார்கள்..? அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே..? கமலாவுக்கு துக்கம் புரட்டி, புரட்டிக் கொண்டு வந்தது. எங்கயாவது ஓவென உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. தனக்குன்னு அழுவதற்கு கூட ஒருத்தரும் இல்லையே என்பது இப்போது குறையாய் தோன்றியது.

ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு வந்து தன் கைப்பையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து அதிலிருந்த ரகுவின் அண்ணனின் நம்பருக்கு போன் செய்தாள். எதிர் முனையில் ரொம்ப நேரம் ரிங் போய் கடைசி நேரத்தில் எடுக்கப்பட

“அண்ணா.. நான் தான் கமலா பேசறேன்..” என்று பேச ஆரம்பித்ததும், ஓவென அழ ஆரம்பித்தாள். சுற்றி உள்ளவர்கள் எல்லாம் பூத்தினுள் அழும் கமலாவையே பார்த்து கொண்டிருக்க, எதிர் முனையில் ”கமலா.. என்னம்ம்மா ஆச்சு..? என்ன ஆச்சு சொல்லும்மா.?” என்று மறுபடி, மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் பதட்டம் அடங்கி, மற்றவர்கள் தன்னை பார்பதை உணர்ந்த கமலா, நிதானமாகி, மூக்கை உறிஞ்சி தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னாள். எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தது.

”ஹலோ.. அண்ணா.. ஹலோ.. அண்ணா.. இருக்கேளா..லைன்ல..?”

”ம்.. ம்.. இருக்கேன். என்னம்மா கடவுள் இப்படி உன் தலையில் எழுதிட்டான். இப்ப என்ன பண்றதுன்னே தெரியல.. நெஞ்செல்லாம் படபடன்னு வருது.. சித்த நேரம் கழிச்சு உன் செல்லுல பேசறேன்” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு அவர் மீண்டும் பேசினால் என்ன சொல்வார் என்று இப்பவே ஊகிக்க முடிந்தது. யாராய் இருந்தால் என்ன.. செலவு செய்தால் பிழைப்பார் என்றால் அங்கே இங்கே புரட்டுவார்கள். இப்படி நம்பிக்கையே இல்லாத வியாதிக்கு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் என்று யார்தான் என்ன செய்வார்கள்.. போன பணம் திரும்பி வருமா..? சிறிது நேரம் ஒரு வெறுமை பார்வை போனை பார்த்தபடி இருக்க, வெளியே கடைகாரன் கதவை தட்ட, வெளியே வந்து எவ்வளவு என்று கேட்டு, பணம் கொடுத்து விட்டு அண்ணாவின் போனுக்காக காத்திருந்தாள். மணி அடித்தது. எடுத்து கொஞ்சம் சத்தமில்லாமல் இருந்த ரோட்டின் முனைக்கு நடந்தபடியே பேச ஆரம்பித்தாள். “சொல்லுங்கோண்ணா..”

“கமலா. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. எனக்கும் அறுவதிரண்டு வயசாச்சு.. இருந்த காசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி மூழ்கியாச்சு.. இரண்டாமவ ஏதோ இப்பத்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கா.. என் பென்ஷன்ல எங்க ரெண்டு பேரோட கதை ஓடிண்டுருக்கு. நினைக்க, நினைக்க அவனுக்கு இப்படி ஒரு வியாதியான்னு துக்கம் நெஞ்ச அடைக்கிறது. ஒரு பத்தாயிரம், இருபதாயிரம்னா அப்படி இப்படி புரட்டிடுவேன். நாலு அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவேன், எங்கே போவேன். அப்படியே பண்ணினாலும்..? ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா..? என்னடா அண்ணா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத.. நான் சொல்றத கேட்கிறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். வேற வழியில்லை, பகவான் இருக்கான் , பாரத்தை அவன் மேல போட்டுட்டு போ, அவன் பாத்துப்பான்.. நானும் இங்க வேண்டிக்கிறேன். எதாவது ஒரு பண்ண மாட்டானா அந்த பெருமாள்.. பாத்துக்கோ.. தைரியமா இரு...” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். எனக்குன்னு என்ன இருக்கிறது இவருக்கு அப்புறம்?. கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா..? எதை வைத்து கொடுப்பார்..? இருக்கிற வீடும் வாடகைதான். அவள் பக்கம் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. வயதான அம்மா, அப்பா.. இப்போது இதை சொன்னால் தாங்குவார்களா..? என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் டாக்டரிடம் போய் நின்றாள்.

“டாக்டர்.. உடனடியா அட்மிட் பண்றதுக்கு பணம் புரட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். அது வரைக்கும் இங்கயே ஏதாவது பண்ண முடியுமா..? இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே..?” டாக்டர் வரதராஜன் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு கமலாவை நிமிர்ந்து பார்த்து,

“அம்மா இது என்ன குளிர் ஜூரம் மாதிரியா.. அவர் ரொம்ப அட்வான்ஸ்டு லெவல்ல இருக்கார். இங்க என்னால பேசிக் டிரீட்மெண்ட் மட்டும்தான் பண்ண முடியும். ப்ளட் ஏத்தலாம், ப்ளேட்லெட்ஸ் ஏத்தலாம். ஆனா பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருப்பார். எந்த நேரத்திலேயும் எது வேணும்னாலும் நடக்கலாம். ப்ளேட்லெட்ஸ் கொறைஞ்சா அப்புறம் ப்ளட்கூட ஏத்த முடியாது. ப்ளட் ஹூஸ் ஆக ஆரம்பிச்சிடும். ஹார்ட், கிட்னி, ப்ரெயின், எது வேணும்னாலும், எப்ப வேணுமின்னாலும் அட்டாக் ஆகலாம். ஏன் திடீர்னு கோமாவுல கூட போகலாம். அவர் உடம்புல எதிர்பு சக்தியே கிடையாது. ஹி இஸ் பவுண்ட் டு பி இன்பெக்டெட்.. தீடீர்னு தொண்டை கட்டிக்கும், ஜலதோஷம் பிடிக்கும், அப்படியே நிமோனியால கூட கொண்டு விடும். அப்படி ஏதாவது ஆயிடுத்துன்னா மேட்டர் ஆப் ஹவர்ஸ். ரொம்ப சீக்கிரமா பரவிடும். உடம்புல ஏதாவது பார்ட்லனா ஆபரேட் பண்ணி அறுத்தெரிஞ்சிடலாம். ஆனா ப்ள்ட் கேன்சர்ல.. இப்போதைக்கு மருந்து, ப்ளட் எல்லாம் ஏத்தியிருக்கேன். சீக்கிரமா அட்மிட் பண்ணியான்னா.. அந்த 20% சான்ஸை யூஸ் பண்ணலாம்” என்று ஒரு கதவை திறக்க, அமைதியாய் வெளியேறினாள்.

வேறு வழியில்லை.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரமாட்டார். சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் என்று யோசித்தபடி, வார்ட் ரூமுக்குள் நுழைந்தவளை பார்த்ததும், ஆர்வமாய் சந்தோஷத்துடன், கையில் மாட்டியிருந்த சலைன் டியூப்புடன் எழுந்து உட்கார்ந்த ரகு, கமலாவை பார்த்து..

“என்ன சொன்னார்.. டாக்டர்.. எல்லாம் நார்மல்னு சொல்லியிருப்பாரே.. பயப்படாதேடி லூசு.. இப்பத்தான் ப்ளட், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஏத்துன உடனே.. ரொம்ப ப்ரெஷா ஃபீல் பண்றேன். அநேகமா ஹிமோக்ளோபின் 4.5லேர்ந்து 9க்கு ஏறியிருக்கும்.. பாரு எனக்கு இப்ப மூச்சே வாங்கலை, உடம்புல தான் அங்க, அங்க ப்ள்ட் களாட் குறையல.. மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாம் சரியா போச்சு.. இன்னும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ.. ப்ள்ட் ஏத்துனதும் சரியாயிடும். சரியானவுடனே குலதெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திடுவோம். ஏதோ ஒரு குறை வச்சிட்டம் போலருக்கு. அதான் இப்படி படுத்தறது” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டை கட்டியது போலிருக்க,. கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்.
******************************************************************************
லெமன் ட்ரீயும் .. ரெண்டு ஷாட் டக்கீலாவும் தொகுப்பிலிருந்து.. 

Post a Comment

65 comments:

மேவி... said...

thala

me the first

மேவி... said...

idam potachu....

padichittu varen

வால்பையன் said...

வேற சொந்தகாரர்களே இல்லாதது கொஞ்சம் செயற்கையா இருக்கு!

உணர்வு போராட்டம் ஒகே!

நையாண்டி நைனா said...

எதுக்கு இப்ப மீள் பதிவு...? எதுக்கு இப்பன்னு கேட்குறேன்..? ஹக்காங்..????

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எதுக்கு இப்ப மீள் பதிவு...? எதுக்கு இப்பன்னு கேட்குறேன்..? ஹக்காங்..????//
அதானே ,, இத நான் முதல்லேயே படிச்ச மாதிறி இருக்கேன்னு பாத்தேன்.. ஏண்ணே இப்படி? எந்த முன்னறிவிப்பும் இல்லாம??

ஷண்முகப்ரியன் said...

தலைப்பையும்,முதல் வரியையும் படித்தவுடனேயே எனக்கு ஏற்கனவே படித்த ஞாபகம் பொறிதட்டியது,ஷங்கர்.

Rajaraman said...

இந்த கதை சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலின் (தலைப்பு நினைவில்லை) அப்பட்டமான தழுவலாக உள்ளதே.

Cable சங்கர் said...

/இந்த கதை சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலின் (தலைப்பு நினைவில்லை) அப்பட்டமான தழுவலாக உள்ளதே.
//

இந்த அனுபவம் நான் அருகிலிருந்து பெற்றது..

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

அறுமையான கதை.. என்னை மிகவும் பாதித்துவிட்டது உங்களது கதை...

Baby ஆனந்தன் said...

அருமை...ஏற்கனவே படித்திருந்தாலும்...

thamizhparavai said...

நன்றாக இருக்கிறது...கனம் குறையவில்லை...

GHOST said...

கத நல்லா இருக்கு, ஆனா உடனெ சிவசங்கரி எழுதின கத ஞாபகம் வருகின்றது

யோ வொய்ஸ் (யோகா) said...

:(

Ashok D said...

//கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்//
’அவரை’ என்று இருந்தால் நன்று.

நெறைய study பன்னியிருக்கீங்க.
டாக்டர், கமலா, கமலா அண்ணன் டயலாகஸ் அருமை, you differentiate well. lemon tree எழுதன யூத்தா ’நண்டு’ எழுதனது ஆச்சரியம்.

சுஜாதாவின் ஆளுமையை உங்களால் மீறமுடியாததது எழுத்தில் தெரிகிறது.

மொத்ததில் கதை கொஞ்சம் பழசு.

தராசு said...

இது மீள்பதிவாண்ணே,

உணர்வுகளை வார்த்தைகளில் சொல்லியிருக்கறீங்க. வாழ்த்துக்கள்.

ஆனா முடித்த விதம் சூப்பர்.

கார்ல்ஸ்பெர்க் said...

அண்ணா, கதை Super.. நான் இதான் First time'a படிக்குறேன்.. அதனால ரெம்பவே நல்லா இருக்கு..

Sanjai Gandhi said...

நல்லா தான் இருக்கு. இது சிறுகதை என்பதைவிட ஒரு நல்ல தகவல் பதிவு என்பது சரியாக இருக்கும். அம்புட்டு மேட்டர் இருக்கு. சில தகவல்களும் தெரிஞ்சிகிட்டேன். நன்றி.

Raju said...

உணர்வுச் சிதறல் தல..
டெலிபோன் பூத் மேட்டர் கலக்கல்.
இது நிதர்சன் கதைகள் லிஸ்ட்ல வரலாமா தலைவரே..!

பின்னோக்கி said...

கேன்சர் .ம்ம்ம்.. :-(.

உரையாடல் மூலம் கதை சொன்ன விதம் அருமை.

அதுவும் அந்த கடைசி பத்தி கலங்க வெச்சுடுச்சு.

க.பாலாசி said...

நல்லாதான் இருக்கு...மீண்டும் படிக்கிறோம் என்ற உணர்வு வரவில்லை...

தலைப்பை மட்டும் மாத்திட்டீங்கன்னா...எங்கேயோ படிச்ச ஞாபகம் மட்டும் வரும்....

Prabhu said...

இது மீள் பதிவோ?

சங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்!
நல்ல யூத்து கதையா போடுங்கோ!

Prabhu said...

இது மீள் பதிவோ?

சங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்!
நல்ல யூத்து கதையா போடுங்கோ!

Jawahar said...

சிறுகதைக்கு ஆரம்பமும் வேண்டாம் முடிவும் வேண்டாம் அது சின்னதாகவும் இருக்க வேண்டாம். முரண்பாடுகளை சுவாரஸ்யமாக சொல்வது ஒரு வகை சிறுகதை என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு உன்னதமான சிறுகதை. பாராட்டுக்கள் சங்கர்.

http://kgjawarlal.wordpress.com

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

A Class. பிரிச்சுட்டீங்க.சூப்பர்.அருமையான narration.

Cable சங்கர் said...

/dam potachu....

padichittu varen//

வர்றேன்னு சொன்னவரு இதுவரிக்கும் ஆளையே காணம்..

Cable சங்கர் said...

/dam potachu....

padichittu varen//

வர்றேன்னு சொன்னவரு இதுவரிக்கும் ஆளையே காணம்..

Cable சங்கர் said...

/வேற சொந்தகாரர்களே இல்லாதது கொஞ்சம் செயற்கையா இருக்கு!

உணர்வு போராட்டம் ஒகே!
//

இந்த கதை வேறு சொந்தஙக்ளை தேடி அலைவதல்ல வாலு.. தனக்கு உதவி செய்ய உடனடியாய் ஞாபகம் வருபவர் தன் கணவனின் அண்ணன் ஒருவர் தான் அவளுக்கு.

Cable சங்கர் said...

/அதானே ,, இத நான் முதல்லேயே படிச்ச மாதிறி இருக்கேன்னு பாத்தேன்.. ஏண்ணே இப்படி? எந்த முன்னறிவிப்பும் இல்லாம??
//

ஆமா இதுக்கெலல்மாவா முன அறிவிப்பு செய்வாங்க..?

Cable சங்கர் said...

/தலைப்பையும்,முதல் வரியையும் படித்தவுடனேயே எனக்கு ஏற்கனவே படித்த ஞாபகம் பொறிதட்டியது,ஷங்கர்//

ஆமாம் சார்.. மீள் பதிவுதான். நிறைய புது வாசகர்கள் வந்திருப்பதால் போட்டேன்.

Cable சங்கர் said...

/அறுமையான கதை.. என்னை மிகவும் பாதித்துவிட்டது உங்களது கதை...
//

நன்றி அச்சிலீஸ்..

Cable சங்கர் said...

/அருமை...ஏற்கனவே படித்திருந்தாலும்//

மிக்க நன்றி பிரதீப் பாண்டியன்

Cable சங்கர் said...

/நன்றாக இருக்கிறது...கனம் குறையவில்லை..//

நன்றி தமிழ் பறவை

நன்றி கோஸ்ட்..

Cable சங்கர் said...

/’அவரை’ என்று இருந்தால் நன்று.//

அவரை என்று போட்டால் அந்த கேரக்டர் மேலிருக்கு ஒரு அனுதாபம் போய்விடும் என்று நினைத்தேன்.

//நெறைய study பன்னியிருக்கீங்க.
டாக்டர், கமலா, கமலா அண்ணன் டயலாகஸ் அருமை, you differentiate well. lemon tree எழுதன யூத்தா ’நண்டு’ எழுதனது ஆச்சரியம்.//

ஆமாம் அசோக் நிறைய ஸ்டெடி செய்துதான் எழுதினேன். ஏன் என்றால் அந்த பேஷண்ட் என் சித்தப்பா.. மனைவி என் சித்தி

//சுஜாதாவின் ஆளுமையை உங்களால் மீறமுடியாததது எழுத்தில் தெரிகிறது.

மொத்ததில் கதை கொஞ்சம் பழசு.//

என்ன பண்னுவது தானா வருது.
//

Cable சங்கர் said...

/உணர்வுகளை வார்த்தைகளில் சொல்லியிருக்கறீங்க. வாழ்த்துக்கள்.

ஆனா முடித்த விதம் சூப்பர்.
//

நன்றிண்ணே..

Venkatesh Kumaravel said...

சுஜாதாவின் 'நகரம்' சாயலில் இருப்பதென்னவோ உண்மை தான். ரொம்ப சுருக்கமாக முடிந்துவிட்டதாகப் படுகிறது, ஆனாலும் தொய்வில்லாமல் செல்கிறது. நண்பர் ஒருவர் சொன்னது போல, நிதர்சனக்கதைகள் லேபிளுக்கு ஒத்துவரக்கூடிய இடுகை தான்.

Cable சங்கர் said...

/அண்ணா, கதை Super.. நான் இதான் First time'a படிக்குறேன்.. அதனால ரெம்பவே நல்லா இருக்கு.//

பிடிச்சிருககா ரொமப் சந்தோஷம் கார்ல்ஸ்பெர்க்

Cable சங்கர் said...

/நல்லா தான் இருக்கு. இது சிறுகதை என்பதைவிட ஒரு நல்ல தகவல் பதிவு என்பது சரியாக இருக்கும். அம்புட்டு மேட்டர் இருக்கு. சில தகவல்களும் தெரிஞ்சிகிட்டேன். நன்றி.
//

எப்படியோ உபயோகமாயிருந்தா சரி..ண்ணே..

Cable சங்கர் said...

/உணர்வுச் சிதறல் தல..
டெலிபோன் பூத் மேட்டர் கலக்கல்.
இது நிதர்சன் கதைகள் லிஸ்ட்ல வரலாமா தலைவரே..!//

இது ஏற்கனவே நிதர்சன கதைகள்ல 4வதா வந்ததுதான் டக்ளஸ் மிக்க நன்றி

Cable சங்கர் said...

/கேன்சர் .ம்ம்ம்.. :-(.

உரையாடல் மூலம் கதை சொன்ன விதம் அருமை.

அதுவும் அந்த கடைசி பத்தி கலங்க வெச்சுடுச்சு//

மிக்க நன்றி பின்னோக்கி..

Cable சங்கர் said...

/நல்லாதான் இருக்கு...மீண்டும் படிக்கிறோம் என்ற உணர்வு வரவில்லை...
//

நன்றி பாலாஜி

Cable சங்கர் said...

/சங்கர்வாள் நெஞ்ச ரொம்ப தொடாதேள்!
நல்ல யூத்து கதையா போடுங்கோ!
//

அடுத்து வருவது ஒரு யூத்தின் கதைதான் பப்பு..

Cable சங்கர் said...

/சிறுகதைக்கு ஆரம்பமும் வேண்டாம் முடிவும் வேண்டாம் அது சின்னதாகவும் இருக்க வேண்டாம். முரண்பாடுகளை சுவாரஸ்யமாக சொல்வது ஒரு வகை சிறுகதை என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு உன்னதமான சிறுகதை. பாராட்டுக்கள் சங்கர்.//

எல்லாம் அவர் கிட்ட கத்துக்கிட்டதுதான்

Cable சங்கர் said...

/A Class. பிரிச்சுட்டீங்க.சூப்பர்.அருமையான narration.//
நன்றி ஸ்ரீ

Cable சங்கர் said...

/சுஜாதாவின் 'நகரம்' சாயலில் இருப்பதென்னவோ உண்மை தான். ரொம்ப சுருக்கமாக முடிந்துவிட்டதாகப் படுகிறது, ஆனாலும் தொய்வில்லாமல் செல்கிறது. நண்பர் ஒருவர் சொன்னது போல, நிதர்சனக்கதைகள் லேபிளுக்கு ஒத்துவரக்கூடிய இடுகை தான்.
//

என் சித்தப்பாவின் ஆஸ்பிடல் அனுபவம்தான் கதையாகியிருக்கிறது. கேன்சர் என்று கண்டு பிட்டித்து 15 நாளில் 21/2 லட்சம் செலவு செய்து, இறந்து போனார்.

கதிரவன் said...

இந்தக்கதையைப்படித்தவுடன், இப்படி வெளி உலகம் அதிகம் தெரியாத பெண்மணிகள் நினைவுக்கு வந்து போனார்கள்

இந்தக்கதையில் ’நண்டு’ யார் ?

’நண்டு’ன்ற தலைப்பைப்பார்த்தப்ப,
‘அடுத்த நண்டை முன்னேற விடாத இந்திய நண்டுகள்’ மாதிரியான கதையாக இருக்கும்னு நினைத்தேன் :-)

sriram said...

கத நல்லாருக்கு யூத்து,
நண்டு பேர்க்காரணம் என்ன?
டாக்டர் எடுத்த உடனேயே இவ்வளவு
அவநம்பிக்கையா சொல்வாறானு தெரியல

Cable சங்கர் said...

/கத நல்லாருக்கு யூத்து,
நண்டு பேர்க்காரணம் என்ன?
டாக்டர் எடுத்த உடனேயே இவ்வளவு
அவநம்பிக்கையா சொல்வாறானு தெரியல//

நன்றி ஸ்ரீராம்
நண்டு வலது, இடது கண்ட மேனிக்கு ஓடும், அதே போல் தான் லுகேமியாவும் எப்போது எங்கே அபெக்ட் செய்யும் என்று தெரியாது.. பரவிக் கொண்டேயிருக்கும். இன்னொரு காரணம் கேன்சரின் சின்னம் நண்டு சோடியாக் சைனில்

கடைசி நேரத்தில் தெரிந்தால் இப்படி தான் சொல்வார்கள்.. அதை நேரில் கேட்ட அனுபத்தில் தான் எழுதியிருக்கிறேன்.

Cable சங்கர் said...

இந்தக்கதையைப்படித்தவுடன், இப்படி வெளி உலகம் அதிகம் தெரியாத பெண்மணிகள் நினைவுக்கு வந்து போனார்கள்

இந்தக்கதையில் ’நண்டு’ யார் ?

’நண்டு’ன்ற தலைப்பைப்பார்த்தப்ப,
‘அடுத்த நண்டை முன்னேற விடாத இந்திய நண்டுகள்’ மாதிரியான கதையாக இருக்கும்னு நினைத்தேன் :-)

11:41 PM//

நன்றி கதிரவன். அம்மாதிரியான பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

www.sirippupolice.blogspot.com

அண்ணா உங்கள மாதிரி seniors எங்க blogs படிச்சு நிறை குறைகளை சொல்லலாமில்லை. please

தினேஷ் ராம் said...

உள்ளே அழுவதும், நோயாளிகள் முன் இன்முகம் காட்டுவதும்... கொடுமை.

// சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் //

அந்த பதற்றத்திலும் அடுத்து என்ன என்று தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வர அனைவருக்கும் சாத்தியப்படாது.

Cable சங்கர் said...

/அண்ணா உங்கள மாதிரி seniors எங்க blogs படிச்சு நிறை குறைகளை சொல்லலாமில்லை. please
//
நிச்சயமா நிறைய தட்வ வந்திருக்கேனே ரமேஷ்..?

Cable சங்கர் said...

நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.. உங்கள் முதல் வருகைக்க்கும் கருத்துக்கும்

நாஞ்சில் நாதம் said...

அருமையான கதை

Thamira said...

படிச்சாச்சு. செமை.!

Cable சங்கர் said...

நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி ஆதி..

Rajasurian said...

super :)

அருண் said...

ஏற்கனவே வாசிக்காம மிஸ் பண்ணிருந்தேன்,வாசிச்சதுல சந்தோசம்.நல்ல டீடைலிங்,அருமையான உணர்வு போராட்டம்.
-அருண்-

Anonymous said...

எல்லாருக்கும் பதில் சொல்லி இருக்காரு..இது கேபிள் ப்ளாக்கான்னு சந்தேகமா இருக்கு? புலன்விசாரனைக்கு உத்தரவிடணும்.....

Balaji S said...

நண்டு படித்த உடன் முதலில் எதாவது இன்சூரன்ஸ் எடுக்கனும் என தோன்றியது

Suthershan said...

மரணத்தை வலியை உணர்த்தும் வேதனை உங்கள் வரிகளில் - its very painful story. புது வாசகர்களுக்கு மீள் பதிவு இட்டதற்கு நன்றி.

ரோகிணிசிவா said...

mm how is ur uncle ?
how is she ?

ஸ்ரீ அப்பா said...

ஏற்கனவே வாசிக்காம மிஸ் பண்ணிருந்தேன்,வாசிச்சதுல சந்தோசம்.நல்ல டீடைலிங்,அருமையான உணர்வு போராட்டம் --- me too !!!

Kumaresh said...

என்னைபோன்ற புது வாசகர்களுக்காக மீள்பதிவு போட்டதற்கு நன்றி கேபிள் சார்.

படித்து முடித்த பொழுது வந்த இறுக்கம் இன்று ஒரு நாள் முழுவதும் நீடித்து, இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு வளிகள பற்றி கொஞ்சம் கற்று அறிந்தேன்.

இதற்கு தனி நன்றி

குமரேசன்...

Vinoth S said...

nice story

Seshadri said...

Cable!

this story anything related to
Mr. RAJINI matter.

as per my assumption you are not a ordinary person. (did you smell anything)

i pray for negative result.
he should come back.