புத்தக சந்தை இனிதே முடிந்தது. இனி அடுத்த வருஷம் தான் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சென்ற வருட சந்தையில் நிறைய எழுத்தாளர்களை சந்தித்து என்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருந்த நேரம். இந்த வருடம் அடுத்த கட்ட வளர்ச்சியாய் நிறைய பேர் என் பேரை சொன்னதுமோ, அல்லது பர்த்தவுடனேயே “என்ன கேபிள்.. எப்படி இருக்கீங்க..?” என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு ஒரு நெருக்கத்தையும், எங்கு பார்த்தாலும், பதிவர்களை குழு குழுவாய் சந்தித்ததும், போனிலோ, மெயிலிலோ மட்டுமே அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்தித்ததும், நிறைய வாசகர்கள் மெல்ல அருகில வந்து “நீங்க கேபிள்தானே?” என்று கேட்டுவிட்டு அளவளாவியதும், தினம், தினம் பதிவுலக நண்பர்களை சந்தித்ததும் இந்த வருட புத்தக சந்தை கொடுத்த சந்தோஷம் எல்லாம் இந்த பதிவுலகுக்கே சமர்பணம்.
*************************************************************************************
செவிக்கினிமை “கோவா” படப்பாடல்கள் வெளியாகிவிட்டது. கோவா டைட்டில் பாடல் நிச்சயம் ஹிட். அருமையான பெர்கூயூஷன்.”ஏழேழு தலைமுறைக்கும்” பாடல் பழைய இளையராஜாவின் கார்பன். கார்த்திக்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் குரலகளில் என்பதுகளின் இளமையான குரல் பழைய இளையராஜா, கங்கை அமரன் குரலில் கேட்ட சுகம். “வாலிபா வா..வா.. “ என்கிற பாடலை இளையராஜா, எஸ்.பி.பி, சித்ரா பாடியிருப்பது வெங்கட்பிரபுவின் கிண்டல் கலாட்டாவாக இருக்கும் உள்குத்து தெரிகிறது இதுவும் பழைய ராஜாவின் ரிமிக்ஸ்தான். பாடல் முழுவதும் கேட்ட போது பழைய இளையராஜாதான் தெரிகிறாரே தவிர யுவன் ஷங்கர் ராஜா தெரியவிலலை என்பது வருத்தமே.மற்ற பாடல்களும் பெரிதாக இம்பரஸ் செய்யவில்லை. முழுசாய் கேட்டு முடிக்கும் போது டைட்டில் பாடலான கோவாவும், ஆண்டிரியாவின் “இதுவரை” மட்டும் மனசில் நிற்கிறது.
*************************************************************************************
மீண்டும் ஒரு வருத்தம்
சமீபத்தில் ஒரு மொக்கை, கும்மி பதிவர் ஒருவர்,பதிவுலகிலிருந்து சில பேருடய கவிதைகள், கதைகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்பட்டிருக்கும் புத்தகங்களை பற்றி, மொக்கை பதிவர்கள் எழுதி வெளியாகியிருக்கும் நூல் என்று பாராட்டியிருக்கிறார் இந்த சாகித்ய அகாதமி, புலிட்சர், புக்கர் விருது பெற்ற பதிவுலக எழுத்தாளர், அவருக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். புத்தகம் கண்காட்சியில் கிடைக்கிறது. எழுதி பேர் வாங்கி அடுத்த கட்டத்திற்கு நகரும் பதிவுலக ஆட்கள் இருக்குமிடத்தில் சர்ச்சை ஏற்படுத்தி பெயரை நிறுத்தி கொள்ள விரும்பும், பதிவுலகிலிருந்து இன்னமும் எழுதி பழகிக் கொண்டு, இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் மொக்கை பதிவுலகத்திலிருந்து வெளியேறி இலக்கியவியாதியாக சாரி வாதியாக எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்.
*************************************************************************************
குறும்படம்
மிடில் ஈஸ்ட் பார்டரில் இருக்கும் பிரச்சனையை மிக குறுகிய நேரத்தில்,ஒரு டிரான்ஸிஸ்டரையும், அதில் வரும் புட்பால் கமெண்டரியையும் வைத்து மிக அழகாக திரைக்கதை அமைத்து வந்திருக்கும் படம்.
************************************************************************************
ஏஜோக்
ஜாக்கும் ஜேனும் ஒருவரை ஒரு வெறி கொண்டு காதலிக்க, ஒரு நாள் ஆபீஸ் வேர் ஹவுசில் தனியாய் நேரம் கிடைக்க, காஞ்ச மாடு கம்பில் பாய்ந்தார் போல் அவள் மீது பாய்ந்தான் ஜாக். அவளுள் நுழைவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட ஜாக் ஒரு வழியா வேலைய முடித்துவிட்டு “ நீ ஒரு கன்னிகழியாத பெண் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துருப்பேன்” என்றான். “உனக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் என் பேண்டீசை அவிழ்த்திருப்பேன்” என்றாள் ஜேன்
***************************************************************************************
சந்தோஷ செய்திவருகிற 11.01.2010 முதல் 16.01.2010 வரை தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சென்னை சங்கமம் விழாவின் ஒரு அங்கமாய் குறும்படம் மற்றும் ஆவணப்பட விழாவை மெரினாவில் அண்ணா சமாதிக்கு எதிரே லேடி வெலிங்டன் என்கிற இடத்தில் தொடர்ந்து திரையிடுகிறார்கள். திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம். குறும்பட, ஆவணப்பட ரசிகர்கள் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். இதில் என்னுடய குறும்படமான “விபத்து” திரையிட தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
**************************************************************************************
சாப்பாட்டுக்கடை
பூந்தமல்லி ஹைரோடில் முரளிகிருஷணா திருப்பத்தை தாண்டியவுடன், இடதுபக்கமாய் நடந்தால் குட்டியாய் ஒரு நுழைவாயில் இருக்கும். உள்ளே போனால் ஒரு பழங்கால வீட்டை உணவகமாய் மாற்றியிருப்பார்கள். அதுதான் ஆற்காடு மெஸ். மிக சுவையான இட்லி, தோசை, சிக்கன், பரோட்டா, என்று அதிர வைக்கும் சுவையோடு ஞாயமான விலையில் அளிக்கிறார்கள். இவர்களின் ஸ்பெஷாலிடி ஞாயிறு மதிய சாப்பாட்டுடனான கருவாட்டு குழம்பாம். மதிய சாப்பாடு மிக அருமையாய் இருக்கும் என்று சாப்பிட்டவர்கள் சொல்கிறார்கள். நேற்று இரவு இட்லி, ஆனியன் தோசை, பரோட்டா, எரா, சிக்கன் மசாலா, என்று எல்லாமே சும்மா அதிராடிக்கும் சுவை. அவர்கள் கொடுக்கும் கிரேவியும், வெஜிட்டேரியனுக்கு கொடுக்கும் காரக் குழம்பும் ம்ம்ம்ம்ம்ம்.. வெகு காலமாய் இந்த ஏரியாவில் சுவைபட தந்துக கொண்டிருக்கிறார் இந்த கதர் சட்டைக்காரர். இந்த கடையில் சிறப்பே முதலாளியே ஒவ்வொரு டேபிளிலும், வந்து கஸ்டமர்களை கவனித்து பரமாரச் சொல்வதுதான். நிச்சயம் நல்ல சுவையான இரவு டிபன், மற்றும் மதிய சாப்பாட்டிற்கு.. நம்பி போகலாம். ஆற்காடு மெஸ்.
**************************************************************************************
என்ன கொடுமை இது?
திருநெல்வேலியில் ரவுடிகளால் வெடி குண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கிடந்த சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் உதவிக் குரலுக்கு செவி சாய்க்காமல், வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கும் நம் மக்கள், அவங்களை விடுங்க.. அந்த சமயத்தில் அங்கு வந்து இரண்டு அமைச்சர்கள், கலக்டரின் கார்கள் இருந்து உயிருக்கும் போராடும் அவரை காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கும் காட்சி காட்சி மிக கொடுமை. அதிக ரத்த வெளியீட்டால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நின்று பார்க்கும் நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து போயிருந்தால், இன்று அவரின் குடும்பம் அநாதரவாய் நிற்காது.
*************************************************************************************
தமிலிஷிலேயும், தமிழ் மணத்திலேயும் குத்துங்க எசமான்..குத்துங்க
Comments
வழக்கம் போல் கொத்து சூப்பர்.....
தண்டோரா அண்ணனுக்கு என்மேல ஏன் இவ்வளவு கோபம், இப்படியா திட்டுவது?
அண்ணே! நீங்க சமன் செய்து சீர் தூக்கும் துலாக்கோல்..
அந்த பதிவருக்கு
என் கடுமையான கண்டனங்கள் . மொக்கை கதைகள் கவிதைகள் என்று சர்டிபிகேட் தருவதற்கு அவர் யார்? ஒரு புத்தகம் வெளிவருதற்கு பின்னாலிருக்கும் உழைப்பு அசாதா'ரணமானது'. மேலும் தானும் ஒரு பதிவராக இருந்து பின்புதான் எழுத்தாளராக மாறியதையும் மறந்துவிடக்கூடாது.
வாழ்த்துக்கள்
என்ன கொடுமை இது - மனித நேயமில்லாதவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும். கேவலம்.
உண்மை தான்.. ஆனா ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்தா பர்ஸ் தாங்காதே!!
கொஞ்சம் லிங்க் கொடுத்தா.. போய் கும்மியடிச்சிட்டு வரலாமே..!!!
யாருங்க அப்படி எழுதினது???
கொஞ்சம் லிங்க் கொடுத்தா.. போய் கும்மியடிச்சிட்டு வரலாமே..!!!
//
பாலா கொஞ்சம் மானிட்டர் அடிங்க..
is that sujatha story one ?? my wishes.
அந்த 2 அமைச்சர்களும் நாசமா போக!
(அமைச்சர்களும், போலிஸூ உயர் அதிகாரிகளும் இல்லையேனில் பொதுமக்கள் உதவியிருப்பார்கள்!)
சந்திப்புகள் இனிமை. சாப்பாடு அருமை. குறும்படத்திற்கு வாழ்த்து. ஆக மொத்தம் கொத்து காரம், மணம் சுவையுடன் அருமை.
இந்த வருடம் உங்களுக்கு நல்ல செய்தி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்தும் நன்றியும் கேபிள்ஜி.
//தண்டோரா ...... said...
அங்கு என் குறும்படமும் திரையிடுகிறார்கள்.//
தேதி, நேரம் சொன்னா, வந்துடுவோம்
யாருங்க அப்படி எழுதினது???
கொஞ்சம் லிங்க் கொடுத்தா.. போய் கும்மியடிச்சிட்டு வரலாமே..!!!//
அந்தப் பக்கம் போகாம இருக்குறது தான் நல்லதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு
உங்கள் வருத்தங்களைப் பொதுவில் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது உங்களுக்கு மனவருத்ததைத் தந்திருந்தபோதும் ஒரு சிறு புன்னகையுடன் கடந்து செல்லலாம். காரணம் அவர் உங்களுக்கும் எப்படிப்பட்ட நண்பர் என்பதை அறிவேன்.
இதிலேயே பாருங்கள்: தண்டோராவின் பின்னூட்டம் எனக்கே வருத்தத்தைத் தருகிறது.
கொத்துபரோட்டாவில் இந்த அம்சங்கள் வளர்வது, இலக்கிய உலகு என்றால் சர்ச்சை என்பதுபோல பதிவுலகையும் எண்ண வைக்கும்.
கன்சிடர் ப்ளீஸ்!
வேறு வழி தெரியவில்லை. சில விஷயங்களில் ஜெயமோகனை ஃபாலோ செய்ய வேண்டியிருக்கிறது.
அனேகமாக 2006 ஏப்ரலில் இருந்து நம்முடைய நட்பு தொடங்கியது என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் இணையத்தில் என்னுடைய முதல் நண்பன் என்று என்னை நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தது உங்களுக்கு இப்போது மறந்து போயிருக்கலாம்.
பிரச்சினையில்லை.
'துஷ்டர்களை கண்டால் தூரவிலகு' என்ற பழமொழியில் எனக்கு முன்பெல்லாம் நம்பிக்கையில்லை. ஆயினும் தூரவிலகியதற்குப் பின்னர் கிடைத்த மன ஆறுதல்கள் இப்போது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இனி உங்களைப் பார்க்கவோ, பேசவோ எந்தவகையிலும் நான் விரும்பப் போவதில்லை. என்னிடம் தனிமனித துவேஷத்தை தவிர வேறேதையும் காட்ட விரும்பாத உங்களோடு நட்பாக இருப்பது போல நானும் எத்தனை நாளுக்குதான் நடித்துக் கொண்டிருக்க முடியும்?
அவ்வப்போது அவர்களாகவே அவரவரை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் என் நன்றிக்குறியவர்கள். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இவர்களைப் போன்றவர்கள் எதிர்படுவதால் வேகத்தைக் குறைத்து, இலக்கை விரைவில் அடைய முடியாமல் தடையாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து மிகச்சரியாக இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு கொண்டு முன்பை விட இப்போது வேகமாக ஓட முடிகிறது. இப்பதிவு வேறு சிலரையும் அதுபோல அடையாளம் காட்டியிருப்பதற்கு நன்றி.
இங்கே பின்னூட்டம் போட்டு ‘நல்ல பதிவராக' காட்டிக் கொண்டிருக்கும் நர்சிம் போன்றவர்களையும் அறிந்துகொள்ள இப்பதிவு உதவியது. மீண்டும் மிக்க நன்றி!
என்னையெல்லாம் என்னிக்காச்சும் ஒரு நாளாவது "என் நண்பன்" அப்படீன்னு என்கிட்ட வேண்டாம்.. வேற யார்கிட்டயாவதுகூட சொல்லிருக்கியா..?
துரோகி..!!!
கொத்து பரோட்டாவில் “வருத்தம்” பகுதியைத் தவிர மற்றவை எல்லாமே சுவை. உங்களை ஒரு முறை எங்க ஊருக்கு அருகில் இருக்கும் “புத்தூர் ஜெயராமன் கடை”க்கு அழைத்துப் போகவேண்டும்.
பூந்தமல்லி ஹைரோடில்
//
எந்த ஏரியா கேபிள்??? கேக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுது...
உங்கள் பதிவு ஏற்படுத்தாத பாதிப்பை தண்டோரா & லக்கியின் பின்னூட்டங்கள் ஏற்படுத்துகின்றன. ஜெமோவும் சாருவும் அடித்துக் கொள்ளும்போது "இவனுங்களுக்கு வேற வேலை இல்லை" என்று சலிப்படைவதைப் போலவே நம்மைப் படிக்கும் வாசகர்களும் சலிப்படைவார்கள் கேபிள். இந்த விஷயத்தில் பரிசலுடன் ஒத்துப்போகிறேன்.
இதோ இந்த பதிவில் நீங்கள் எழுதியிருக்கும் ஏழு விசயங்களில் மற்ற ஆறைவிட இந்த ஒரு விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது!!!
இப்போதுதான் பதிவுலகம் இதுபோன்ற தனிமனித சண்டைகள் இல்லாமல் இருப்பது போல் தோன்றியது, 2010ன் துவக்கத்திலேயே அதுவும் கட்டுடைக்கப்பட்டிருப்பது வருத்தமே....
என்ன சொல்ல வருகிறீர்கள் லக்கி??????? நல்ல பதிவர் மீன்ஸ்? உங்கள் பதிவைப் படித்தேன்..பகடி என்று நீங்கள் நினைத்தது பகடியாக எனக்குப் படவில்லை..வருத்தமாக இருந்தது. அதை நாகரீகமாகச் சொன்னென்.. இதில் நல்லவனாக என்னைக்காட்டிக்கொண்டு என்ன ஆகப் போகிறது??
நீங்கள் என்னையும் தான் சந்தித்தீர்கள் ..என் பதிவும் தான் அந்தப் புத்தகத்தில் வந்துள்ளது..மொக்கை என்று சொன்னது வருத்தமாக இருந்தது. அதைப் பதிவது தவறா?
பை த வே...
என் நேர்மை பற்றி எனக்கு நன்றாக தெரியும் லக்கி..அதை எதற்காகவும் யாருக்காகவும் ஒரு நாளும் விட்டுத் தந்ததில்லை.
:-(
:-(
Putthur Jayaraman Kadai is not good as it used to be. I am also from that area. I have tried couple of times in the recent months and found other than fish, nothing is to the old taste we had long back. I asked them, they complained that quality of Chicken they get is very from Suguna Chickens. Fully harmone injected chicken which attains 3 kgs in 3 months. Doctor advised me to have nattu kozhi only. Even aattukari is better than Suguna Chicken. Atleast we know attukari increases cholestral and have visual effects. But with harmone chicken, you will not understand hidden bad effects. So I agree with Jayaraman kadai guys told me. I still remember in early 2001, I used to go by bike to Puthur to eat there.
Cable,
Some comments are going too personal from the way I see. can't we avoid personal attacks.
May be I am ignorant about your situation.
Regards,
Bala.
+2347089996984
Congraaaaaaaaaaaaatttttttttttttssssssssssssssssssssss!!!!!!11
வருத்தம் நமக்கு இல்ல தலைவரே. மொக்கைக்கு தான் .
நான் பயந்தது நடந்துவிட்டது. அல்லது நடந்துகொண்டிருக்கிறது.
:-(
//
உண்மைய சொல்லுங்க, இந்த பின்னூட்டம் போடுரப்ப உங்களுக்கே சிரிப்பு வரல ? -:))))
***
அன்புள்ள கேபிள்
சிங்கைல இருந்து பேசின அந்த கோபகார பதிவர் நாந்தேன் -:)))
உங்களுக்குள் பிரச்சனை இருந்தால், பேசித்தீர்க்கலாம். இப்படி பொதுவில் வைத்து எல்லோரும் பஞ்சாயத்து செய்யுற மாதிரி செய்யாதீர்கள், இல்லோரும் கருத்து கந்த சாமி ஆக இடம் கொடுக்காதீர்கள்.
இப்பவும் பரிசலின் மெச்சூர்டான பின்னூட்டம் பாராட்டுக்குரியது.
கேபிள் / நர்சிம்:
உங்களுக்கு லக்கி எழுதியது தவறாகவோ அல்லது பிடிக்காமலோ இருந்தால் போனில் அழைத்து ஏண்டா இப்படி எழுதினன்னு கேளுங்கள், உங்களுக்குள் இருக்கும் நட்பு அத்தகையது. அவரின் பதில் உங்களுக்கு திருப்தி அளித்தால் விசயம் அத்தோடு போச்சு, திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர் எழுத்தை புறக்கணியுங்கள் (அவரையல்ல). ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன் - ஜ்யோவ் - ரோசா மேட்டரையே பொதுவில் வைத்தது தேவையற்றதுன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கேன், இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர்..
லக்கி:
இது மட்டுமே பிரச்சனையென்றால் (இதுக்குள்ள இன்னும் என்னென்ன இருக்குன்னு தெரியல), இதுக்காக உன்னோடு கா, இனிமே பேசமாட்டேன்னேல்லாம் சொல்வது சரியல்ல..
நர்சிம் : உங்களுக்கு இது பற்றி கருத்து இருப்பது உங்களின் உரிமை. லக்கிக்கு உங்க பதிவில் இருந்த ஒரு பின்னூட்டம் ஆட்சேபனைக்குரியதாக இருந்த போது அவர் உங்களுக்கு போன் பண்ணார், நீங்களும் - லக்கி உன் நட்புதான் பெரிசுன்னு சொல்லி பின்னூட்டத்தை தூக்கினீர்கள் - இப்போ ஏன் நீங்க அவரிடம் தனியே இதைப் பற்றி சொல்லி இருக்கக் கூடாது?
அப்புறம் தண்டோராஜி / ஹாலிவுட் பாலா - தயவு செய்து இங்கு கும்மி வேண்டாமே...
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
இந்த பின்னூட்டதுக்காக எனக்கு கருத்து கந்தசாமி பட்டம் கிடைத்தால் நான் வருத்தப் படப் போவதில்லை.. இந்த மாதிரி பின்னூட்டம் போட வேண்டி இருந்ததை நினைத்து வருந்தியதே போதும்...
:)
:(
:)
:))))))))
:))))))))))
:((((((((((((
பரிசில்காரரிடம் : கேபிளார் எழுதியது தவறென சொல்லி இருக்கின்றீர் ,சரி ஆனால் இந்த தவறை எழுத தூண்டிய பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் என்ன? .. ஆக உங்கள் உண்மையான நோக்கம் யாரோ ஒருவரை திருப்தி படுத்துவதாக அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?
இல்லை உண்மையாகவே நீங்கள் சமாதான படுத்தும் நோக்கில் எழுதினால் உங்கள் எண்ணங்களை தவறு நடந்த இடத்தில் பதிவு செய்து விட்டு வந்து இங்கே அறிவுரை சொல்லி இருக்கலாம்!!! ஆனால் அங்கே விட்டு இங்கே அறிவுரை சொல்ல முயல்வது பற்றி நீங்கள் தான் விளக்க வேண்டும்...
திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு தீர படித்தே சமாதான புறா பட்டம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!!!
அப்புரம் நான் கருத்து கந்தாசாமி இல்லை நிறைய நொந்தசாமி !!!!
பதிவைப் படித்ததும் ரொம்ப கஷ்டமாக இருந்தது, மூவரும் எனக்கு நண்பர்களே.. மூவரிடமும் அவ்வப்போது தொலைபேசுவது வழக்கம். இன்றும் கேபிளுக்கு போன் போட்டேன் - மீட்டிங்கில் இருக்கிறார், லக்கி போனை எடுக்கவே இல்லை. என் கருத்தை பின்னூட்டமாகப் போட்டேன், சம்பந்தப் பட்ட மூவரும் தவறாக எடுத்துக்கொள்ள மட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நான் எழுதியதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் சொல்லுங்கள், என் மீது தவறு இருப்பின் திருத்திக்கொள்ள நான் எப்போதுமே தயார்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சரி.. சரி.. எல்லாரும்..., நம்ம ஏரியா பக்கம் வாங்க..! ஒரு 18+ போட்டு மேட்டரை கூல் பண்ணிடலாம்.
--
யாருப்பா என்னை கும்மி அடிக்கக் கூடாதுன்னு சொல்லுறது. அப்புறம் என்னை ஆஃபீஸ் டைம்ல வேலையில்லாம இருக்கச் சொல்லுறீங்களா???!!
நடக்காது!!! :) :)
Cable, Lakky, narsim you all should be friends as always.
Just by writing 2 or 3 books you people should not get pride or fall into fame.
You have to see the freindship of Kamal and Rajni, Even after reaching such a great height they never criticises each other.
When you3 have this much ego, proud what is the wonder that Barathiraja, ilayaraj, vairamuthu were fighting
தேர்ந்தெடுத்த வழியில் சென்றுகொண்டே இருங்கள். கண்டிப்பாக ஒருநாள் சிகரம் எட்டுவீர்கள்!
வணக்கங்க சார்!
//பரிசில்காரரிடம் : கேபிளார் எழுதியது தவறென சொல்லி இருக்கின்றீர்//
எங்க சொல்லிருக்கேன்? தவறு சரி என்பதை விடுத்து, நட்பைக் குலைத்துக் கொள்ளும் வண்ணம் பொதுவில் எழுத வேண்டாமே என்றுதான் சொல்லிருக்கேன்.
//ஆனால் இந்த தவறை எழுத தூண்டிய பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் என்ன? //
போய்ப் பாருங்கள். என் பின்னூட்டத்தை விடுங்கள். கேபிள் சங்கரும் அங்கே ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார் தெரியுமா?
//ஆக உங்கள் உண்மையான நோக்கம் யாரோ ஒருவரை திருப்தி படுத்துவதாக அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?//
ஆமாம். ஆனால் ஒருவரல்ல. இருவர் என்றிருந்தது. நர்சிம்மின் பின்னூட்டத்திற்குப் பிறகு மூவர் ஆகிவிட்டது!
// இல்லை உண்மையாகவே நீங்கள் சமாதான படுத்தும் நோக்கில் எழுதினால் உங்கள் எண்ணங்களை தவறு நடந்த இடத்தில் பதிவு செய்து விட்டு வந்து இங்கே அறிவுரை சொல்லி இருக்கலாம்!!!//
கேபிளும் அங்கேயே அவர் வருத்தத்தை பதிவு செய்திருக்கலாமே என்பதுதான் என் வருத்தமும்!
// ஆனால் அங்கே விட்டு இங்கே அறிவுரை சொல்ல முயல்வது பற்றி நீங்கள் தான் விளக்க வேண்டும்...//
நண்பா.. தனியா உங்களுக்கு மெயில் போட்டு விளக்கறேன். ஐ.டி. ப்ளீஸ்..
ஸ்ரீராம் என் பின்னூட்டத்தை மெச்சூர்டு என்று சொன்னதுதான் உங்கள் பிரச்சினையென்றால் உங்களைத் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டு நான் மெச்சூர்டு இல்லை என்று காண்பிக்க விரும்புகிறீர்களா நண்பா?
கேபிள்-லக்கி-நர்சிம் மூவரையும் கொஞ்சம் நெருக்கமாக அறிந்தவன் என்ற ஆதங்கத்தில்தான் எழுதினேன். மூவருமே என் வாழ்வின் முக்கியமாக கட்டங்களில் உடனிருக்கிறார்கள். இப்போதும்.
எந்த நட்பும் முறியும்போது மரம் ஒடிந்துவிடும் சத்தம் கேட்கிறது! :-(
கோவா எனக்கு ஏமாற்றுமே
@தண்டோரா
வாழ்த்துக்கள்
@தராசு..
வருகைக்கு நன்றிண்னே
@ஸ்ரீகிருஷ்னா
நன்றி
@மோகன் குமார்
நல்ல புத்தகம் அது மோகன்
@நிலாரசிகன்
:((
@ஆரூரன் விசுவநாதன்
நன்றி
@கார்க்கி
:((
@வரதராஜுலு
ஆமாம் வரதராஜுலு.. வாழ்த்துக்கு நன்றி
@பலாபட்டறை
நன்றி
@ஈரொடு கதிர்
நிஜம்
@சாம்ராஜ்யப்பிர்யன்
ஆமா. அதுவும் கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது
@மயில்ராவணன்
அப்படியா..
@சைவகொத்து பரோட்டா
நன்றி
@இராஜப்ரியன்
நன்றி
@செந்தழல் ரவி
நன்றி.. ஆமா
@மணிப்பக்கம்
வருகைக்கு நன்றி
@பட்டர் ப்ளை சூர்யா
நன்றி
@இம்சை அரசன
:)
@நடராஜ்
இதுவும் நல்ல கேள்விதான். அட்லீஸ்ட் அவர் உதவ ஆரம்பித்திருந்தால் மற்ற்வர்களுக்கும் அது உரைத்திருக்கும்
@சங்கர்
நன்றி
@சுப.தமிழினியன்
அட ஆமாமில்ல.. சாரி தலைவரே.. எனக்கும் ஏதோ ஒரு குழப்பம் இருந்திச்சு..
@பரிசல்
ஓகே ரைட்டு
@உ.த
நீயெல்லாம் என் ந்ண்பனாய்யா
@கேவிஆர்
நன்றி
@வெண்பூ
வாங்க போயிருவோம்
@கணேஷ்
:((
@பட்டிக்காட்டான்
:((
@புண்ணாக்கு மூட்டை
ஒரு வாட்டி கூட்டிட்டு போயிட்டு வந்து நாம் எல்லோரும் பேசுவோம்..:))
@குறை ஒன்றும் இல்லை
நன்றி
@ரோமிபாய்
:)
@வெற்றி கதிரவன்
நன்றி தலைவரே
என்னது நீங்க கோபமா பேசினீங்களா../:))
@பித்தன்
:(
@ஸ்ரீராம்
கருத்து கந்தசாமி..:))
@அறிவிலி
:)
:)நன்றி
@ஹாலிவுட் பாலா
வந்திட்டா போச்சு
@சாதாண கிராமத்தான்.
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
@குப்பன் யாஹு..
there is no ego between us.. nothing to worry
¾ñ§¼¡Ã¡ §À¡ýÈ ¾ñ¼í¸¨Ç þÉõ ¸¡½ Óʸ¢ÈÐ