Thottal Thodarum

May 30, 2011

கொத்து பரோட்டா- 30/05/11

நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம்.  ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும் போது உற்சாகம் கரை புரண்டது ஒன்றும் அதிசயமில்லை. பல பட்டிமன்ற பேச்சாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள்  வந்திருந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் அவரைப் பற்றி அவரது குடும்பத்தினரின் பகிர்தல் வீடியோ க்யூட் அண்ட் ஸ்வீட். நல்ல கம்பைளிங் மீரா நாகராஜன். எனக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் ஞாபகம் வந்தது. நெடுநாளைக்கு பிறகு நான் கிட்டத்தட்ட  அரை நாளுக்கு மேல் நிகழ்வில் கலந்து கொண்டு மோகன் தம்பதியரின்  ஆசியை பெற்று வந்தேன். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா.
#############################


ரஜினியை கடைசி வரை கண்ணில் காட்டாமல் வெறும் குரலை வைத்து பூச்சாண்டிக் காட்டிவிட்டு கூட்டிப் போய்விட்டார்கள்.  அந்த குரலை ரெக்கார்ட் செய்தவர்களுக்கு வீடியோ எடுக்க எவ்வளவு நேரமாகும். இன்னும் சிலர் இது அவர் வாய்சே இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னவோ நிஜத்தில் அவர் குரலாய் இருந்தால், அந்தக் குரலில் இருக்கும் நெகிழ்ச்சியும், அயர்ச்சியும் கொஞ்சம் கவலை கொள்வதாய்த் தானிருக்கிறது. நிச்சயம் இத்தனை மக்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது என்ற நம்பிக்கை அவருக்கு மட்டுமல்ல எனக்குமிருக்கிறது. ரஜினியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாய் நினைத்தாலே இனிக்கும், பொல்லாதவன், எங்கேயோ கேட்ட குரல், தில்லுமுல்லு போன்ற படங்களில் அவரிடமிருந்த வெர்ஸடைலிட்டியை நான் மிகவும் ரசித்தவன். எந்திரன் ஆடியோ ரிலீஸுக்கு மலேசியாவுக்கு விமானத்தில் செல்லும் போது நடிகர்கள் பேட்டி எல்லாம் இங்கே லோக்கல் ஸ்டியோவில் டப் செய்யப்பட்டது. இதில் சொல்ல வருவது என்னவென்றால் அதில் ரஜினிக்கு பேசியது மயில் சாமி.
####################################
நிதிகளின் பிடியில் தமிழ் சினிமா உலகம் என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இதோ அடுத்து சில பெயர்களை உங்கள் வாய்க்கு அவலாய் தருகிறேன். இனி விநியோகஸ்தர்கள் சங்கங்களிலிருந்து, இருக்கிற 24 கிராப்ட்டிலும் தலைமை மாற்றங்கள் வரும். அப்படிப் பட்ட மாற்றம் தான் எஸ்.ஏ.சியை பதவியை விட்டு விலகச் சொல்லிய கோர்ட் மேட்டர். எஸ்.ஏ.சி செய்தது ஞாயமில்லை என்றாலும். இதற்கு பின்னணியில் இருக்கும் கே.ராஜன், பாபுகணேஷ், கே.ஆர்.ஜி, கே.ஆர் எல்லோரும் ஜெ விசுவாசிகள். மீண்டும் தேர்தல் நடக்கும் போது இவர்கள் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்த மன்னார்குடி குடும்பம் தங்களது ஆக்கிரமிப்பை சினிமாவில் பதிக்க ஜே.ஜே டிவி பாஸ்கரன் மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது.  தலைவன் என்கிற பெயரில் ஹீரோவாக நடிக்கிறாராம். இன்னும் சில மாதங்களில் இவர்களின் ஆக்கிரமிப்பு பற்றி ஆளாளுக்கு புலம்பத்தான் போகிறார்கள். ஆனால் ஒன்று இவர்களின் ஆக்கிரமிப்புகளினால் சன் டிவியோ, ரெட்ஜெயண்டோ, தயாநிதி அழகிரியோ படம் தயாரிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இவர்களுடனே கை கோர்த்து அவர்கள் தொழில் நடத்திக் கொண்டுதானிருப்பார்கள்.
#####################################
ஹெல்மெட் அணியும் படியான கட்டாய சட்டம் ஆரம்ப நாளுக்கு முன்னமே சொதப்ப ஆரம்பித்து விட்டது. நூறு ரூபாய் ஃபைன், லைசென்ஸ் கேன்சல் என்றதை,  லைசென்ஸ் கேன்சல் எல்லாம் கிடையாது.  வெறும் அபராதம் தான் அதுவும் வெறும் ஐம்பது ரூபாய்தான் என்றார்கள். நேற்று முந்தினம் அதுவும் கிடையாது வெறும் அறிவுரைதான் என்றார்கள். கேட்டால் சட்டம் போட்டு நிர்பந்திப்பதைவிட ஹெல்மெட் அணிவதை மக்களுக்கு புரிய வைத்து வெற்றி பெறுவோம் என்கிறார்கள். இதெல்லாம் சரி.. இனி போலீஸ் காரர்களுக்கு பாடு பாதி திண்டாட்டம், பாதி கொண்டாட்டம். ஏனென்றால் ஐம்பது ரூபாய் என்றால் கட்டிங் பத்து இருபதோடு போய்விடும். அது அவர்களுக்கு திண்டாட்டம். கொண்டாட்டம் என்ன வென்றால் நிச்சயம் பத்து ரூபாய் கிடைக்கும் என்பதுதான். என்னைப் பொறுத்த வரை ஒரு சட்டம் போட்டால் அதை முழுமையாய் இம்ப்ளிமெண்ட் செய்ய முடியாதவர்கள் சட்டமே போடக்கூடாது.  இதே சட்டத்தை சென்ற ஆட்சியில் போட்ட கலைஞருக்கும் பொருந்தும். அது சரி.. கலைஞர் போட்ட சட்டம்ங்கிறதுனால்தான் மம்மி மீண்டும் தானே இந்த சட்டத்தை கொண்டு வந்தாமாதிரி கொண்டு வந்து ஃபைன் கட்டணைத்தை குறைச்சதா சொல்றாங்களே? நிஜமா?. 100-50 அய்ய்யா.. விலை வாசி குறைஞ்சிருச்சு.
####################################
இருக்கிற டாஸ்மாக்குகளையே மூட வேண்டும். முழு மதுவிலக்கு வேண்டும், என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த டாக்டர். மம்மி உயர்வகை மதுவகைகளுக்காக தனி டாஸ்மாக் என்று அறிவித்திருப்பதற்கு ஏதும் சொல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அடுத்து அங்கே போய் நிற்க வேண்டிய நிலை இருக்கலாம் என்ற யோசனையோ. எது எப்படியிருந்தாலும் புள்ளைக்கு ராஜ்யசபா எம்.பி கிடையாது. அப்புறம் எவன் குடிச்சா என்ன? குடிக்காட்டி என்ன? அங்கேயும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் எக்ஸ்ட்ராவா வாங்குவாங்களா மம்மி?
#####################################
இணையத்தின் மூலம் தன்னைவிட்டு ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து அவனது இரண்டாவது திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் ஒரு பெண். வரதட்சணை பிரச்சனையினால் தன்னை ஒதுக்கி வைத்த கணவன் ஒரு நாள் திடுதிப்பென காணாமல் போக, அவரைப் பற்றிய எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல் தவித்த அப்பெண்ணுக்கு தன் கணவன் அரபு நாட்டில் இருப்பதாகவும், வேறு ஒரு திருமணத்திற்கு பெண் பார்பதாகவும் தகவல் வர, உடனடியாய் தானும் ஃபேஸ்புக்கில் ஒரு போலியான ஐடி ஒன்றை கிரியேட் செய்து அவருடன் நட்பாகி, திருமணத்திற்கு பெண் இருப்பதாய் சொல்லி பேசி வழிக்கு வரவழைத்திருக்கிறார். அவர் தான் என்று உறுதியான பிறகு போலீஸில் அவர் மேல் புகார் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண்மணி. இச்செய்தியை நான் பேப்பரில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர் ரவணப்பன் சேட்டில் வந்து இதே செய்தியைப் பற்றிச் சொல்லி அப்பெண் அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர் என்றார். இணையம் சில பேருக்கு நல்லதும் செய்கிறது.
###################################
கணவன்: நான் ஊருக்கு போறேன் வர அஞ்சு நாளாவும்
மனைவி; நல்லது சீக்கிரம் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கணுமின்னு திடீர்னு வந்து நிக்காதீங்க. அப்புறம் நான் கொடுக்கிற சர்ப்ரைஸை தாங்க முடியாது.

டெலிபோன் பூத்தில் ஒருவன் இருபது நிமிடங்களாய் இருக்க, அதை பார்த்த வெறுப்படைந்த வெளியில் நின்றவன் “சார். நானும் பாக்குறேன் இருபது நிமிஷமா ஏதும் பேசாம போனை வச்சிட்டு என்னதான் செய்றீங்க? நாங்க காத்திட்டிருக்கோமில்ல?”
”நான் என் பொண்டாட்டிக் கிட்ட பேசிட்டிருந்தேன்.” என்றான்.
#########################################
தத்துவம்
நம் சிந்தனையை பேச்சாக்கும் ஒரு வஸ்து எதுவென உங்களுக்கு தெரியுமா?
ஆல்கஹால்.

நாம் பன்சுவலாய் இருப்பதில் உள்ள ப்ரச்சனை என்னவென்றால் அதை பாராட்டுவதற்கு யாருமிருப்பதில்லை. ப்ராங்கிளின் பி. ஜோன்ஸ் சொன்னாராம்
####################################
ப்ளாஷ்பேக்
இதுவும் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்திலிருந்துதான். அற்புதமான மெலடி. இப்படி அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் படம். மோகன்லாலின் கேரியரில் உச்சபட்ச உயர்வுக்கு அடிகோலிட்ட படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் வரும் அத்துனை பாடல்களும் க்ளாஸிகல் ஹிட். இந்த பாடலை தவிர எம்.ஜி. ஸ்ரீகுமார் பாடிய நாதமயூரம் என்ற பாடல் அட்டகாசம்.
################################
மிஜிக்
நம் புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஆங்கிலப் பாடல்களின் மேல் ஈர்க்கப்பட்டு, அதன் இன்ஸ்பிரேஷனில் ட்யூன் போட முயற்சி செய்து போகிற போக்கில் அதே பாடலை போட்டு விடுவது உண்டு. அப்பாடல்களின் ஆக்கிரமிப்பு அப்படி. இந்த வாரம் மிஜிக்கில் நம்ம. ஜி.வி.பிரகாஷ்குமார்.
 
################################
மை கார்னர்


################################################# 
அடல்ட் கார்னர்
ஒருநாள் பத்து வயசு பையன் நைட்ல தூக்கம் வராம எழுந்து உக்காந்தான். அப்போ அவன் அம்மாகாரி அப்பாவுடன் கேரளா ஸ்டைலில் மேட்டர் செய்து கொண்டிருக்க, செக்ஸ் பத்தி எதுவும் தெரியாததுனால அம்மா என்ன செய்யிறாங்கன்னு அவனுக்கு புரியல. மறுநாள் காலையில அம்மாகாரிகிட்ட, 'அம்மா நேத்து நைட்டு அப்பா வயித்து மேல உக்காந்து ஏம்மா குதிச்சிட்டு இருந்த?' என்று கேட்டான். பையன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தயங்கிட்டு அம்மாகாரி, 'அது வந்து, உங்க அப்பாவுக்கு தொப்பை பெருசாகி போச்சா, தினமும் இப்படி அவரு வயித்து மேல உக்காந்து குதிச்சா தொப்பை குறையுமாம். அதான் குதிச்சேன்' என்றாள். உடனே பையன், 'அதுக்கு சான்சே இல்லைம்மா.. நீ ஆபிஸ்ல இருந்து வரதுக்குள்ள பக்கத்துக்கு வீட்டு ஆண்டி வந்து ஊதி அப்பா வயித்தை பலூன் மாதிரி பெருசாக்கிடுறாங்க' என்றான்.

###########################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

18 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Like Newspaper !!!! Released in Midnight !!!

Guru said...

மீஜிக் எல்லாம் காப்பி இல்லீங்க.. எல்லாம் இன்ஸ்பிரேஷன்..

இணையம் எல்லாம் பண்ணும்.. நல்லதும் செய்யும் பல சமயங்களில்...

தலைவர் வாய்ஸ் உண்மை மாதிரியும் இருக்கு..பட் நீங்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை..

youtubeuser said...

கேபிள் சார்,
“அந்த குரலை ரெக்கார்ட் செய்தவர்களுக்கு வீடியோ எடுக்க எவ்வளவு நேரமாகும். ”
குரல் கேக்கவே அவ்வளவு கஷ்டமா இருக்கு அத பார்த்தா இன்னும் கஷ்டமா இருக்கும்..
அதனால கட்டமா இருந்ததே நல்லது நு தோணுது எனக்கு

"அதில் ரஜினிக்கு பேசியது மயில் சாமி. "
- அதில் நு மலேசியா trip சொல்லு றீங்களா இல்லை இப்ப வந்து இருக்குறதை சொல்லுறீங்களா ?

அருண்

VISA said...

Adult corner :)))

Cable சங்கர் said...

நன்றி விசா

ஆமாம் அருண் நான் எந்திரன் ஆடியோ ரிலீஸின் போதுதான் சொல்கிறேன்.

வந்தியத்தேவன் said...

இரண்டு பாடல்களையும் ஒரே நேரத்தில் கேளுங்கள் பல இடங்களில் ஒத்திசைகின்றது.

Ŝ₤Ω..™ said...
This comment has been removed by the author.
Ŝ₤Ω..™ said...

//நிஜத்தில் அவர் குரலாய் இருந்தால், அந்தக் குரலில் இருக்கும் நெகிழ்ச்சியும், அயர்ச்சியும் கொஞ்சம் கவலை கொள்வதாய்த் தானிருக்கிறது//

ஆமாண்ணே.. இது அவர் குரல் இல்லை.. அப்படியே இருந்தா, கேட்கவே கஷ்டமா இருக்கு.. அந்த வாய்ஸ் அவர் படும் வேதணையைச் சொல்லுது.. ஆண்டவன் தமிழகத்தைத் தான் அவரையாவது காப்பாத்தனும்.. பிரார்த்திப்போம்..

//இவர்களுடனே கை கோர்த்து அவர்கள் தொழில் நடத்திக் கொண்டுதானிருப்பார்கள்.//

இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்??? - சிங்கமுத்து

//100-50 அய்ய்யா.. விலை வாசி குறைஞ்சிருச்சு. //

:-)))))))))))

//உயர்வகை மதுவகைகளுக்காக தனி டாஸ்மாக்//

தகவலுக்கு நன்றிங்கண்ணா..

//”நான் என் பொண்டாட்டிக் கிட்ட பேசிட்டிருந்தேன்.”//

ஹிஹிஹி

youtubeuser said...

"ஆமாம் அருண் நான் எந்திரன் ஆடியோ ரிலீஸின் போதுதான் சொல்கிறேன்"

- நன்றி கேபிள் சார்
உங்க ஜெயா டிவி வீடியோ இப்ப தான் பாத்தேன் நல்லா உடம்பு குறைஞ்சுடீங்க வாழ்த்துக்கள்...

அருண்

King Viswa said...

//நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா.//

இப்படியெல்லாம் சொல்லி வயசை வெளிப்படுத்தி விட்டீர்களே பாதர்? உங்களோட யூத் இமேஜ் என்ன ஆவது?

கிங் விஸ்வா
அருமையான கிளாசிக் நாவல்கள் - காமிக்ஸ் வடிவில் - இன்டியா காமிக்ஸ்

hayyram said...

// ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும்// இலவசமாவா பண்ணி வெச்சாறு!

ரவி said...

தங்களை போன்ற பிரபல பதிவர் தமிழக முதல்வரை மம்மி என்று கிண்டல் அடிப்பதை நிறுத்தவேண்டும். அம்மா என்று சொல்லுங்க. அல்லது முதல்வர் என்று சொல்லுங்கள். அல்லது பெயரை சொல்லியாவது அழையுங்கள்.

Cable சங்கர் said...

மம்மி என்பது எனக்கும் முதல்வருக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுகிறது.. மம்மி.. இந்த ரவிய பாருங்க.. உங்களை மம்மின்னு கூப்பிடக்கூடாதாம்.. அவ்வ்வ்வ்..

Cable சங்கர் said...

heyram
இலவசமாய் செய்து வைத்தால்தான் சரியா?

ஷண்முகா said...

என்னா பேச்சு பேசுற அவ ....LOL

தருமி said...

//ஒரு சட்டம் போட்டால் அதை முழுமையாய் இம்ப்ளிமெண்ட் செய்ய முடியாதவர்கள் சட்டமே போடக்கூடாது. //

நமக்கு தெரியுது ... ஆள்றவங்களுக்கு, காவல்துறைக்கு தெரியலையே

Sivakumar said...

தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே!!

Rajesh V Ravanappan said...

நன்றி நண்பரே !!