நிச்சயம் பருப்பு 50ரூ கிடைக்கும். அதற்காக அடுத்த தேர்தலில் என் வோட்டு அதிமுக வுக்கு என்று சொல்லிவிடாதீர்கள். மனசாட்சியோடு அப்போது உள்ள நிலைமை படி வாக்களியுங்கள். இதைதான் உண்மையான தமிழர்கள் செய்திருக்கிறார்கள். என் வீட்டு துணி துவைப்பவருக்கு இருந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை பார்த்தீர்களா? அப்புறம் எதற்கு நமக்கு அறிவு, உணர்வு இதெல்லாம்?
ithu attitude thappu-nga... dont we need justice for all those corrupts who were involved in 2G scam...if DMK won, we dont know what would have happened to this case? so we need a change and this should be welcomed.. moreover, see the number of people who voted this time...see the majority in which ADMK has won..if all the people thought like 'i am not bothered', then they would not have voted..so we should be happy about all these events...not because ADMK won, but because DMK lost :)
நீங்கள் இப்படி உளறுவீர்கள் என்றேதான் அதை எழுதினேன். நான் சொல்வது அவரின் சமூக அக்கரையை பற்றி. அதை பற்றி அவரால் யோசிக்க கூட முடியாது. அவருக்கு இருந்த உணர்வு உங்களுக்கு இல்லையே. 50ரூ பருப்பை அவர் உங்களை விட அதிகமாக நம்பி இருப்பவர். அதனால்தான் அவரை சொன்னேன்.அவர் ஒன்றும் கொத்து பரோட்டா என்று எல்லோரையும் கொத்துபவர் அல்ல. விமர்சனம் என்று உளறுபவர் அல்ல. எப்படியோ நீங்கள், பக்கி இவங்களாம் கொஞ்சநாளைக்கு சரியாக பேசபோவதில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
raja rathnam.. கொஞ்சம் காலத்துக்கு முன்பு.. நான் உங்களை படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனதிலிருந்து தொடர்ந்து பின்னுட்டம் முதல் படித்து பதில் போடுமளவுக்கு தொடர் வாசகனாகி விட்டு.. பக்கி என்றெல்லாம் பேசுவது மலலாக்க படுத்துக் கொண்டு துப்புவதற்கு சமம்
நீங்கள் திமுக அனுதாபி என்று தெரியாமல் ஆரம்பத்தில் உங்களை பாராட்டி எழுதி கொண்டிருந்த சமயத்தில் உங்கள் திமுக பதிவை பார்த்து அப்படி சொன்னது. அப்புறம் நான் உங்களை ஆதரித்து ஒரு பின்னூட்டம் கூட போட்டதாக நினைவில்லை. போடவும் மாட்டேன். (அதில் எனக்கு வருத்தமில்லை என்று எனக்கு பதில் எழுத வேண்டாம்)
திமுக பிடிக்காது என்பதற்காக நான் தமிழ்நாட்டிற்கே வராமல் இருந்திருக்க முடியுமா? ஆனால் அவர்களை நான் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளேன். நான் மீண்டும் வருவேன் மறுபடியும் உங்களை எதிர்க்க.
உங்களின் தேர்தல் முடிவுகள் பதிவு தப்பான ஒன்று..... நீங்கள் தெளிவான முடிவெடுத்து சொல்லியிருக்க வேண்டும்....இப்படி சொல்வதை பார்த்தால் தேர்தல் முடிவில் உங்களுக்கு சந்தோசம் இல்லை என் ஆகி விடும்.....
சுதந்திரதின வாழ்த்துக்கள் அன்பான சேரன் அவர்களுக்கு, உங்களது இயக்கத்தில் வந்த படங்களை ரசித்து பார்த்து வந்த ரசிகன் எழுதுவது. மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும். கொஞ்சம் யோசித்து பார்த்தால் படத்தில் உங்கள் மகனாய் வரும் ஆர்யன் ராஜேசை ப்ளாஷ் பேக் ஹீரோவாக்கி விட்டிருந்தால் அட்லீஸ்ட் தெலுங்கிலாவது டப்பிங் ரைட்ஸ் போயிருக்கும். அது சரி கதைக்கு வருவோம். பழைய ட்ரங்க் பெட்டியில் இறந்து போன அப்பாவின் பழைய பொக்கிஷமாய் கருதும் கடிதங்களை, மகன் படித்துபார்க்க, அவரின் காதல் கதை 1970களில் விரிகிறது. உங்களின் தந்தை உடல் நலமில்லாமல் இருக்கும் போது பக்கத்து கட்டிலில் வந்து சேரும் வயதான பெண்ணின் மகளான நதிரா என...
நான் முன்பே சொன்னபடி இந்தியாவில் நடக்கும் சைல்ட் செக்ஸ் டிராபிகிங் பற்றிய படம் குழந்தைகளை வாழவிடுங்கள்.. அட்லீஸ்ட் அவர்களது குழந்தைத்தனம் அவர்களிடமிருந்து இயல்பாக விலகும் வரையாவது.. ஏதாவது செய்யணும் சார்..
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை. ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில்...
நண்பர் கே.ஆர்.பி ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தார். மன்னார்குடி போகும் போது ஒரு நடை வந்து சாப்ட்டு பார்த்துட்டு எழுதுங்க. அம்பூட்டு நல்லாருக்கு என்று. எனவே இம்முறை மன்னார்குடி ப்ளான் போட்ட போதே அங்கே போக வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன்.
ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது. தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்...
என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள் எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன். ”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.” “எனக்கும் தான் ” டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது. ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..? ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான். என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில்...
35 கோடி பட்ஜெட் படம், நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்த படம், கிட்டத்தட்ட மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த படம். ஆண்ட்ரியாவின் மாலை நேரம் பாடல் முதல் கொண்டு ஹிட் பாடல்களை கொண்ட படம், செல்வராகவனின் ஃபாண்டஸி படம், கிட்டத்தட்ட மூன்று வருடஙக்ளுக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவரும் படம் என்று பல சர்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த படம். படத்தின் ஆரம்ப காட்சியில் சோழ மன்னன் தன் மகனை வேறொருவனிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லி அனுப்பும் தெருக்கூத்தோடு ஆரம்பிக்கிறது.அதன் பிறகு அப்படியே ஒரு பாழடைந்த இடத்தில் பிரதாப்போத்தன் உள்ளே செல்ல பின்னால் தொடரும் நிழல் அவரை விழுங்க.. அவரை தேடி அவரது பெண்ணும், அவர் செய்த சோழர் கால ஆராய்ச்சியை தொடர அமர்த்தப்படும் பெண் ரீமா, அவர்களுக்கு அடி பொடி வேலை செய்ய அழைக்கப்படும் கார்த்தி. இவர்களுடன் நம்முடய சோழர்களை தேடும் படலமும் ஆரம்பிக்கிறது. கப்பலில் ஏறும் காட்சியிலிருந்து சல,சலவென ஓடும் ஆறு போல ஓடுகிறது படம். பெரியதாய் கதை ஏதும் நகராவிட்டாலும், ரீமாவின் அதிரடி கேரக்டரும், ஆண்ட்ரியாவின் அமைதியான கேரக்டரும், கார்த்தியின் அடாவடி, தடாலடி வெட்டி பேச்சு க...
மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ப்ளாக் எழுதறதே பைசாக்கு பெறாத வேலையத்த வேலை, ராத்திரி பகலெல்லாம் லொட்டு, லொட்டுனு அந்த பொட்டிய தட்டிட்டி இருக்கீங்களே. என்னைய கட்டிகிறதுக்கு பதிலா அந்த பொட்டிய கட்டிக்க வேண்டியதுதானேன்னு திட்டு வாங்கிட்டாவது எழுதிட்டிருக்கிறா நிலமையில ஒரு பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணு முழி பிதுங்கி போவுது. ஆயிரம் தான் நாம பதிவு எழுதினாலும், மார்கெட்டிங்குனு ஒண்ணு இல்லியானா எதுவுமே வேலைக்காவாது. அதனால ஒரு டெலி மார்கெட்டிங் கம்பெனி மூலமா மார்கெட் பண்ணினா என்னான்னு தோணுச்சு. அதுக்கான முதல் கள பலியா நம்ம அண்ணன் (நான் யூத்தில்ல) ஆதிக்கு ஒரு ட்ரிங்..ட்ரிங்.. ”ஹலோ.?” “நாங்க கேபிள் சங்கர் ப்ளாக்லேர்ந்து ரீட்டா பேசறேன். நீங்க மிஸ்டர் ஆதிதானே?’ “ஆமாங்க.. தாமிரா என்கிற ஆதிமூல கிருஷணன் நாந்தான்.” உள்ளேயிருந்து ஆதியின் தங்கமணி “ஆமா இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல.. கடைக்கு போய் நாலு வெள்ளை பூண்டு வாங்கிட்டு வாங்கன்னா அதுக்கு கிளம்பக்காணும் என...
காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...
கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
Comments
dont we need justice for all those corrupts who were involved in 2G scam...if DMK won, we dont know what would have happened to this case? so we need a change and this should be welcomed..
moreover, see the number of people who voted this time...see the majority in which ADMK has won..if all the people thought like 'i am not bothered', then they would not have voted..so we should be happy about all these events...not because ADMK won, but because DMK lost :)
நீங்கள் இப்படி உளறுவீர்கள் என்றேதான் அதை எழுதினேன். நான் சொல்வது அவரின் சமூக அக்கரையை பற்றி. அதை பற்றி அவரால் யோசிக்க கூட முடியாது. அவருக்கு இருந்த உணர்வு உங்களுக்கு இல்லையே. 50ரூ பருப்பை அவர் உங்களை விட அதிகமாக நம்பி இருப்பவர். அதனால்தான் அவரை சொன்னேன்.அவர் ஒன்றும் கொத்து பரோட்டா என்று எல்லோரையும் கொத்துபவர் அல்ல. விமர்சனம் என்று உளறுபவர் அல்ல. எப்படியோ நீங்கள், பக்கி இவங்களாம் கொஞ்சநாளைக்கு சரியாக பேசபோவதில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
திமுக பிடிக்காது என்பதற்காக நான் தமிழ்நாட்டிற்கே வராமல் இருந்திருக்க முடியுமா? ஆனால் அவர்களை நான் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளேன். நான் மீண்டும் வருவேன் மறுபடியும் உங்களை எதிர்க்க.