Thottal Thodarum

Oct 13, 2011

நான் – ஷர்மி – வைரம் -9

9.நான்
Toby_and_the_weather_bidders_by_Halohid
முதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது? என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.


அக்கா என்னிடம் நடமாடும் பண விஷயத்தை மோப்பம் பிடித்ததிலிருந்து என்னை மரியாதையாய் கவனிக்க ஆரம்பித்திருந்தாள். நைட் அடித்த சரக்கினால் காலையில் எழுந்திருக்க லேட்டாகும். ஆனால் எழுந்திருக்கும் போது சரியாய் அவள் போன் வரும் டிபன் செய்து வைத்திருப்பதாகவும் சாப்பிட்டு போகும் படியாகவும் சொல்வாள். இதெல்லாம் புதுசு எனக்கு. தினம் அவள் எனக்கு போன் செய்யும் போது மனசுக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த வாரத்தில் இரண்டு முறை ஐந்நூறு ரூபாயாக பணம் கேட்டு வாங்கிக் கொண்டாள். என்னிடம் பணம் கேட்கும் சமயங்களில் பக்கத்தில் உட்கார்ந்து அமைதியாய் ஒரு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் என் கையை பிடித்துக் கொண்டோ, அல்லது தலையை வருடியோ பேசியபடி கேட்பது எனக்கு பிடித்திருந்தது. என்றோ இறந்த அம்மாவின் கை. அதற்காகவே கொடுத்து விடுவேன். இவளின் இந்த அதரவான தடவலுக்காக இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது.

யாதவ் போன் செய்தான் உடன் வரும்படி. செல்வத்திற்கு போன் செய்து சொன்னேன். அவனுக்கு ஏதுவும் வரவில்லை என்றான். அவனையும் என்னுடன் வரச் சொன்னேன். மீண்டும் அதே நுங்கம்பாக்கம் ப்ளாட். வெளியிலிருந்து ஒரு முறை யாதவின் நம்பருக்கு போன் அடித்து நான்கு ரிங் போனதும் கட் செய்துவிட்டு, மூன்று முறை கதவை தட்டினேன். அப்படித்தான் செய்யச் சொல்லியிருந்தான். ஒரிரு நிமிடங்களுக்கு பிறகு கதவை திறந்தான். உடன் வந்த செந்திலைப் பார்த்ததும் அவன் முகம் சுருங்கியது. ஏதும் பேசாமல் கதவை முழுதாய் திறந்து எங்களை உள்ளே விட்டு உடன் கதவை சாத்தினான்.

“நான் சொல்லாமல் இனிமே யாரையும்.. யாரையும்.. செல்வம் உள்பட கூட்டி கொண்டு வராதே..” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான். அவன் வெளியே வரும் போது உடன் நான் முதல் முறை சென்ற குண்டுப் பெண்மணி வந்தாள். எனக்கு அய்யோ இவளே இன்னொரு முறையா? என்று வெறுத்துப் போன போது, அவள் செல்வத்தைப் பார்த்து சிரித்தாள். செல்வத்தின் முகம் லேசாய் சுவாரஸ்யம் இழந்தது. நான் நமுட்டு சிரிப்பை சிரித்துக் கொண்டே செல்வத்தின் காதில் ‘எனஜாய்” என்றேன். அவன் முறைத்தான். யாதவ் செல்வத்திடம் அவளுடன் போ என்பது போல சைகை காட்டிவிட்டு, அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தான். அதில் ஒரு விலாசமும், போன் நம்பரும் இருந்த்து.

“உனக்கு சோழா ஓட்டல் தெரியும் தானே..?”

”ம்.. நன்றாக தெரியும்.”

”தென் ஓகே.. சரியாய் இரவு மணி ஒன்பதுக்கு போய் சோழாவுக்கு பக்கத்திலிருக்கும் ரஷ்யன் கல்சுரல் அகாடமியின் வாசலில் நில். அரை மணி நேரத்திற்குள் உனக்கு போன் வரும். அவள் பெயர் அஞ்சனா. அவளின் கார் நம்பர் ........ மிகப் பெரிய இடம். வழ்க்கமாய் அசோக் தான் இதற்கெல்லாம் தாங்குவான். நீதானே ஆள் கூட்டிக் கொண்டு வந்து நின்றவன். உன் ’தாக்கத்” என்ன என்று இன்றைக்கு தெரிந்துவிடும்.” என்று என்னைப் பார்த்து சிரித்தான். அதில் ஒரு விதமான குரூரம் தெரிந்தது.

நான் ஏதும் பேசாமல் அந்தப் பேப்பரை எடுத்து பாக்கெட்டி வைத்துக் கொண்டேன். செல்வம் ருமிற்கு போயிருந்தான். எனக்குள் அவளுடய போனவார நிர்வாணம் ஓடியது. சிரித்துக் கொண்டேன். பஸ்ஸ்டாண்டிற்கு வந்த போது பஸ் வரவேயில்லை. மணி எட்டாயிருந்தது. பாக்கெட்டிலிருந்து கிங்ஸை எடுத்து பற்ற வைத்தேன். புகையை ஆழ உள்ளுக்குள் உறிஞ்சும் போது குண்டுப் பெண்ணின் மார்பகங்கள் ஞாபகத்திற்கு வந்தது. பஸ் வராததால் ஸ்டாப்பில் கும்பல் ஏறிக் கொண்டிருந்தது. சட்டென கைதட்டி ஒர் ஆட்டோவை அழைத்து உள்ளேறி “சோழா” என்றேன். அவன் ஏதும் பேசாமல் வண்டியை விட்டான். யாதவ் சொன்ன அசோக்கையும் அஞ்சனாவைப் பற்றிய கற்பனை ஓடிக் கொண்டிருந்தது.

மழை தூற ஆரம்பித்திருந்தது லேசாக. ஆட்டோவினுள் சாரல் அடித்தது. அடுத்த பத்து நிமிடங்களில் சென்னையில் மூச்சு முட்டும் ட்ராபிக்கில் உட்புகுந்து பிதுங்கி வழிந்து சோழாவின் முன் நிறுத்தினான். சோழா ஓட்டல் முன் நின்று அண்ணாந்து பார்த்தேன். ’ஒரு நாள்.. ஒரு நாள் இதனுள் போக வேண்டும்’. மணி எட்டரை கூட ஆகவில்லை. மனதினுள் ஒருவிதமான பரபரப்பு இருந்த்து ஏன் என்று தெரியவில்லை. ஹோட்டல் வாசலில் நிறைய இளம் பெண்கள் நின்றிருந்தார்கள். ஒவ்வொரு பெண்ணுடனும் இரண்டு ஆண்களாவது நின்றிருந்தார்கள். மிக இயல்பாய் இருவரும் தொட்டுக் கொண்டார்கள். ஒருவர் மற்றவரை அறிமுகப் படுத்தும் போது நெஞ்சோடு சேர்த்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர்கள். பெரும்பாலும் பெண்கள் லைட்ஸ் சிகரெட் பிடித்தார்கள். சிகரெட்டை ஆணமையின் அடையாளமாய் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இவர்களைப் பார்த்தால் என்ன தோன்றும் என்று புரியவில்லை. சில பெண்களிடம் ஒரு சின்ன தயக்கமும், சில பேரிடம் பெரிய அலட்சியமும், இன்னும் சில பெண்களிடம் திமிர் கலந்த ஆண்மையும் தெரிந்தது. உடனிருந்த இளைஞர்களில் பல பேர் சிகரெட் பிடிக்கவில்லை என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ரோட்டில் போகிற அரசு பஸ் பார்டிகள் எல்லாம் கண் விரித்து ஆச்சர்யமாய பார்த்துக் கொண்டே சென்றார்கள். நான் இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். எட்டு ஐம்பது ஆகிவிட்டிருந்த்து. மெல்ல சோழாவை தாண்டி, இட்து பக்கமாய் திரும்பியவுடன் ரஷ்யன் கல்சுரல் அகடமி தெரிந்தது. இப்போது தூறல் நின்று விட்டிருந்தது. மெல்ல நடந்து அங்கிருக்கும் ஒரு சின்ன மரத்தின் கீழ் நின்றேன். சுற்றிப் பார்த்தேன். கார்களும், பைக்குகளும் சீறிப் போய்க் கொண்டிருந்த்து. என்னை தாண்டி இன்னொரு இட்த்தில் இரண்டு இளைஞர்கள் நிமிட்த்திற்கு இரண்டு “Fuck u” சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சில் என் ஸ்லாங் இருந்தது. அப்போது மெதுவாய் ஒரு கார் என்னருகில் வந்து நின்று காரின் ஹெட்லைட் என் மீது படுமாறு வண்டியை நிறுத்தி. ஒரு சில நொடிகள் உள்ளிருந்து பார்ப்பது தெரிந்தது. நான் கண் கூச்சம் விடுத்து வண்டி நம்பரை பார்ப்பதற்குள் வண்டி கிளம்பி எனக்கடுத்து நின்ற இளைஞர்களைப் பார்த்து நிறுத்த, அதே போல் அவர்கள் மேல் காரின் வெளிச்ச வெள்ளம் பாய, இப்போது கண்ணாடி இறக்கபட்டு, அதிலிருந்த ஒரு வெளிர் முகப் பெண் ஏதோ பேச, அவர்கள் இருவரும் காரினுள் ஏறிச் சென்றார்கள். எனக்கு இப்போதுதான் புரிந்தது. அவர்களும் என்னைப் போன்றவர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போது “டூட்” என்ற ஹாரன் ஒலிக்க, திரும்பினேன். அதே நேரத்தில் என் செல்போன் ஒலிக்க,

“ஹாய் ஐம் அஞ்சனா..காரினுள் ஏறு”

என்று கொஞ்சம் கட்டளையாய் சொன்னாள். ஏதும் பேசாமல் போனை கட் செய்துவிட்டு, காரின் பின் கதவை திறக்க முயற்சிக்க, முன் கதவு திறந்தது. உள்ளே போனதும்தான் திரும்பிப் பார்த்தேன் பின் சீட்டில் ஒரு வயதான ஆண் உட்கார்ந்திருக்க, வண்டியை ஓட்டியவள் மூச்சு முட்டக் கூடிய அழகாய் இருந்தாள். அவள் பார்வையில் தெரிந்த அலட்சியம் கிக்காய் இருந்தது. என்னை ஏற இறங்க பார்த்து,

”அசோக் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓகே.. ஸ்மார்டாய்த்தான் இருக்கிறாய். புதுசாமே?”

“ஆமாம்” என்றேன்.

சட்டென என் தலையின் பின்புறம் கையை வைத்து தன்பால் இழுத்து என் உதட்டை ஒரு உறுஞ்சு உறிஞ்சினாள். கிட்ட்த்தட்ட முழு உதட்டையும் உள்ளிழுத்தாள். உடலெங்கும் கைகளை பரவ விட்டு, என் பேண்டின் கீழ் கைவைத்து உள்ளங்கையோடு அழுத்தியபடி, முத்த்தை முடித்து பின் பக்கமாய் பார்த்து..”டியர்.. பையன் ப்ரெஷ்தான். உடலில் கூச்சம் ஓடுகிறது” என்றபடி காரை விருட்டென கிளப்பி, சடுதியில் மெயின் ரோடுக்கு வந்து பீச் ரோட்டை நோக்கி ஓட்டினாள். நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Gujaal said...

//சட்டென என் தலையின் பின்புறம் கையை வைத்து தன்பால் இழுத்து என் உதட்டை ஒரு உறுஞ்சு உறிஞ்சினாள். கிட்ட்த்தட்ட முழு உதட்டையும் உள்ளிழுத்தாள்.//

சட்டுன்னு தோணியது.

ச்சே! வாயெல்லாம் தெருப்புழுதியா இருந்திருக்குமே. அஞ்சனா வீட்டுக்குப் போற வரைக்கும் பொறுமையா இருந்திருக்கலாம். :)

rajamelaiyur said...

tamilmanam 2 vote

rajamelaiyur said...

அருமையான தொடர்

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு.

jayaramprakash said...

super.thodarin atuthatutha athiyaayankalukkana idaiveliyai konjam kurayunkal ji.

மயில் றெக்க said...

அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள கூடிய பதிவு நல்ல பதிவு எனப்படும்
இதை பதிவை பகிர நான் வாழ்ந்த வாழ்க்கை முறை அனுமதிக்கவில்லை
இது எனக்கு தெரியாத உண்மையாக இருக்கலாம்
சில உண்மைகள் யாருக்குமே தெரியாமல் இருப்பதே சிறந்தது

மயில் றெக்க said...

இது உங்களிடம் போன் பேசுவதற்கு முன்பு கொடுத்த comment

IlayaDhasan said...

ஐயோ கிக் ஏறுதே!

ஏழாம் அறிவு , இப்ப Online ல் available

பித்தனின் வாக்கு said...

next part eppa varum.