Thottal Thodarum

Sep 17, 2008

ஸ்ஸ்ஸ்....அம்மா...??

ஸ்ஸ்ஸ்ஸ்.... அம்மா...ம்ஹூம்.. அவ்வளவுதான்..அவ்வளவுதான்..போதும்..போதும்...


கடைசியா நல்லா இழுத்து,உறிஞ்சி, புகையை இழுத்துக்கங்க.. அவ்வளவுதான் இனிமே ஞாயமா பாத்தா எங்கேயுமே எந்த இடத்திலேயும் உங்களால பப்ளிக்கா அதை அத அதை பண்ணமுடியாது. அதான்ங்க தம் அடிக்க முடியாது. அடிச்சா 200 ரூபா பைனாம்.



இதுல என்ன காமெடின்னா.. தம் மட்டும் எல்லா கடையிலேயும், கிடைக்குமாம்.

தம் அடிக்கிறது தப்புன்னா.. ஓண்ணு அதை தயாரிக்கறதை நிறுத்தணும்.. அதவிட்டுட்டு தம் அடிக்கிறவங்களை போய் பிடிச்சி பைன் போட்டா என்ன நியாயம்?


பொது இடத்துல பிடிக்க கூடாதுன்னு சொல்ற அரசு.. அதை எல்லா பொது இடங்கள்யும் கிடைக்க வைக்கிறது என்ன அர்த்தம்? பொது இடங்கள்ல தம் அடிக்கிறது குற்றம்னா..குற்றம் நடக்க வாய்பை உருவாக்கிட்டு, மக்களை குற்றம் செய்ய தூண்டிவிட்டுட்டு, அவங்ககிட்ட்யே பைன் வாங்கினா என்ன அநியாயம். இந்த அரசிடம் யார் பைன் போடுவார்கள்?

எனக்கென்னவோ.. ITC போன்ற பெரிய சிகரெட் கம்பெனிகளீடமிருந்து கட்டிங் பெறுவதற்கான முயற்சியாகத்தான் தோண்றுகிறது. அது இருக்கிறது கொஞ்ச மாசம் தான் அதுக்குள்ள தேத்தினாத்தானே..

அதெல்லாம் சரி ஏன் தம் அடிக்கிறத விடக்கூடாது????
Post a Comment

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

சார்,, எலக்ட்ரானிக் சிகரெட்டு பத்தி தெரியுமா?
உங்கள் பதிவினை படித்ததற்கு அப்புறம் கூகிள்-லில் தேடியபோது கிடைத்தது.
http://www.electroniccigarette.in/
http://www.youtube.com/watch?v=9XUD9lwgQYQ
http://www.youtube.com/watch?v=Bd_sZNsVuy0&feature=related
இந்த சிகரெட்டினை பிடிச்சா கண்டிப்பா பைன் கிடையாது.

யூர்கன் க்ருகியர் said...

எலக்ட்ரானிக் சிகரெட்டு பத்தி யாராவது பதிவு போடுங்கப்பா!

Cable சங்கர் said...

நான் தேடி பிடிக்கிற்துக்குள்ளே நீங்களே பிடிச்சிட்டீங்க.. நன்றி ஜூர்கேன் க்ருகேர்

Unknown said...

So happy to support your organization.