Thottal Thodarum

Jan 29, 2009

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்


சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான கதையும், அதை அழகாய் படமெடுத்தால் போதும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும்,என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு.

தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் விளையாடப்படும், ஸ்பான்ஸர்கள் யாருமில்லாமல் சீந்துவாரற்ற நிலையில் உள்ள விளையாட்டான கபடிதான் அது. சிறு வயதிலிருந்தே கபடி மீது வெறி கொண்டு விளையாடும் கிராமத்து இளைஞர்கள், ஊருக்குள்ளேயே வெண்ணிலா கபடி குழு என்று ஒரு குழுவை ஆரம்பித்து, பக்கத்து ஊரில் விளையாடி தோற்பதுமாய் இருப்பவர்கள், தங்களது ஊர் திருவிழாவை முன்னிட்டு, பக்கத்து ஊர் டீமை தோற்கடிக்கும் நேரத்தில் சண்டையில் முடிகிறது. திருவிழாவுக்கு வரும் மதுரைக்கார பெண்ணிடம் காதல் கொள்கிறான் மாரி என்கிற் மாரிமுத்து, திருவிழா முடிந்ததும் ஊருக்கு செல்கிறாள் அவள். மீண்டும் அடுத்த திருவிழாவுக்கு வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறாள்.

அதற்குள் மதுரையில் ஒரு கபடி போட்டி நடப்பதாய் தெரிய அதில் கலந்து கொள்ள இவர்கள் கிளம்புகிறார்கள். கடைசி நேரத்தில் டீமில் ஒருவர் வர முடியாமல் போக, செண்ட் ஆப் பண்ண வந்த டீக்கடை அப்புகுட்டியை தூக்கி கொண்டு போகிறது டீம்.

கடைசி நிமிடத்தில் ஒரு டீம் கலந்து கொள்ள முடியாமல் போகிற நேரத்தில் ஏற்கனவே இவர்களின் விளையாட்டை ஊரில் பார்த்த கோச் கிஷோகுமார் இவர்களை சேர்த்து கொள்ள, எப்படி கப்பை ஜெயிக்கிறார்கள், என்ன என்ன தடைகள் வருகிறது, மாரியின் காதல் என்னவாயிற்று என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் சுசீந்தரனை பாராட்டியே ஆகவேண்டும், நீட்டான திரைக்கதை, இயல்பான வசனங்கள், வாய்ஸ் ஓவரிலேயே மண்ணின் வாசத்தை காட்டும் திருவிழா காட்சி உத்திகள், ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான ஆட்களை தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளார். புது கல்யாண பார்டியாக வருபவர் மனதை கொள்ளை கொள்கிறார்.அதிலும் அவர் பரோட்டா கடை போட்டியில் அழுகுணி ஆட்டமாடும் கடைகாரனிடம் மீண்டும் போட்டியை ஆரம்பிக்க சொல்லுமிடம் சூப்பர்.

சரண்யா மோகன் அழகாயிருக்கிறார். அவ்வளவாக வசனமே பேசாமல் அழகழகான பாவாடை தாவணியில் நடக்கிறார், ஓடுகிறார்.. மற்றபடி பெரிதாய் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமில்லை.

கோச்சாக வரும் கிஷோருக்கு அருமையான கேரக்டர்.. திருநெல்வேலி ஸ்லாங்கில் பேசியபடி வரும் அவரின் பார்வை ஒன்றே பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. ஊருக்கு போக வைத்திருக்கும் காசை பிடிங்கிக் கொண்டு நீங்க ஜெயிச்சாத்தான் ஊருக்கு போக முடியும் என்று சொல்லி அவர்களை ஏற்றி விட்டு ஆடவைக்கும் முறை ஷார்ப். வழக்கமாய் இமமாதிரியான நேரத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் உறையாற்றுவார்கள். அதை தவிர்த்திருப்பது நன்றாகவே உள்ளது.

சின்ன சின்ன கேரக்டரில வரும் ஊர்கார பெரியவர், அவரது மகள்,அப்புகுட்டியின் மாமியார், ப்து பெண், குண்டு பையனின் அப்பா, என்று பல கேரக்டர்களை நம் முன்னே வளைய வர விட்டிருக்கிறார்கள்.

லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் கபடி காட்சிகளில் கூடவே ஒடுகிறது கேமரா..

விக்கு வினாயக்ராமின் மகன் செல்வ கணேஷின் இசை ஒகே ரகம். பிண்ணனி இசை பரவாயில்லை ஆங்காங்கே கடம் கேட்கிறது. ஒரு பாடல் ஓகே.

படத்தில் குறையே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, இருக்கிறது மெதுவாய் செல்லும் காதல் காட்சிகள், சுப்ரம்ணியபுரம் பாதிப்பு காதல் காட்சி நெடுகிலும், அதே சுண்ணாம்பு அடித்த புது சுவர்கள், அவள் நடக்க, இவன் நடக்க, இவ்ள் சிரிக்க, அவனும் சிரிக்க, அ.. ஓட, இ..ஓட என்று படத்தை முதல் பாதியில் கொஞ்சம் ஓட்டத்தான் செய்கிறார்கள். க்ளைமாக்ஸ் பெரிதாய் ஒட்டவில்லை. கதையில் கபடி மேட்ச் முடிந்ததுமே படம் முடிந்து விட்டது அதற்கு அப்புறம் காட்டப்படும் க்ளைமாக்ஸை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

படம் வருவதற்கு முன்பே ஓரளவுக்கு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது, தியேட்டரில் முதல் காட்சியில் இயக்குனர்கள், பாலாஜி சக்திவேல், நா. முத்துக்குமார், அமீர், அவரது சீடர்கள், இசையமைபாளர் பூ குமரன், லிங்குசாமி மற்றும் பல பிரபல டெக்னீஷியன்கள் வந்திருந்ததே படத்தின் எதிர்பார்புக்கு ஒர் சாட்சி..

வெண்ணிலா கபடி குழு - வெற்றி கூட்டணி.


Blogger Tips -அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள்”ளை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

53 comments:

கணேஷ் said...

இவ்வளவு சூடா விமர்சனமா?

Cable சங்கர் said...

பாத்துடம்னா எழுதிட வேண்டியதுதானே.? நிச்சயமாய் படத்தை தியேட்டரில் பார்த்து இம்மாதிரியான படங்களுக்கு ஆதரவை தெரிவியுங்கள். நன்றி ராம்சுரேஷ்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

அத்திரி said...

படம் பாக்கலாமா?... முதல் நாளே விரைவான விமர்சனம்

அத்திரி said...

//என்று படத்தை முதல் பாதியில் கொஞ்சம் ஓட்டத்தான் செய்கிறார்கள். க்ளைமாக்ஸ் பெரிதாய் ஒட்டவில்லை.//

விசய் படத்திலெல்லாம் முழுக்க ஓட்டத்தான் செய்றாங்க.......

அதுக்கு இது பரவாயில்லை?

வினோத் கெளதம் said...

கலக்கல் விமர்சனம் தல. படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்

Cable சங்கர் said...

/;/படம் பாக்கலாமா?... முதல் நாளே விரைவான விமர்சனம்//

கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள் அத்திரி.. நன்றாக இருக்கிறது.

அப்துல்மாலிக் said...

உங்க விமர்சனம் படித்தால் பாதி படம் பார்த்த திருப்தி சங்கர்.. நல்ல இருக்கிறது உங்கள் எழுத்தில்.. கூடிய சீக்கிரம் ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு என் வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

//கலக்கல் விமர்சனம் தல. படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்//

தியேட்டரில் பார்க்கவும்.. நன்றி கவுதம்

puduvaisiva said...

'' இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம்''

படிகாதவன் தப்பா விட்ட வில்லை இப்படி கபடி விளையாடிடாவுசரை கிழித்த சங்கர் வாழ்க!!!



''என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு''

வாழ்த்துகள் சங்கர் நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் முதல் படம் 'எங்க ஊரு கேபுள்காரன்' எப்பொது வரும்??

புதுவை சிவா

Cable சங்கர் said...

//முதல் நாளே விரைவான விமர்சனம்//

இம்மாதிரியான படங்களுக்கு தான் விமர்சனங்களும், மவுத் டாக்கும் வேண்டும், அதனால்தான் உடனடி விமர்சனம்..

Cable சங்கர் said...

//கூடிய சீக்கிரம் ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு என் வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅப்சர்

Anbu said...

விமர்சனம் சூப்பர் அண்ணா!!
விரைவில் நீங்கள் டைரக்ட் பண்ண வேண்டும் என்பதே என் ஆசை.
எப்படி அண்ணா எல்லா படமும் வெகு சீக்கிரமாகவே பார்க்கிறிங்க?

Anonymous said...

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சக்கரவர்த்தி அவர்களின் அலுவலகம் சென்னையில் உள்ள எங்கள் வீட்டில் தான் இயங்குகிறது ... இத் திரைப்படத்தைப்பற்றிய நலெண்ணங்களை வெளி இட்டதற்கு நன்றி ...

Anbu said...

சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கண்டிப்பாக அண்ணா சமீப கால படங்கள் பார்க்கவே சகிக்கலை!! ஏதோ நீங்கள் இருக்கப்போய் விமர்சனம் படித்து தப்பித்துக் கொள்கிறோம்! நன்றி அண்ணா!!!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே உங்க விமர்சனத்தைப் படித்து படம் பார்க்க எண்ணி டிக்கெட் முயற்சித்தால் ஐநாக்சிலும், சத்யத்திலும் இரவுக்காட்சி இல்லை என்கிறார்கள். நாளை பார்த்துவிடுகிறேன். :))

நவநீதன் said...

நல்லா விமர்சனம் பன்னிருகீங்க...

Anonymous said...

ஒரு தெலுங்குப் படம்...
ஜெகபதிபாபு,கல்யாணி நடித்தது...
இது போல் வந்துள்ளது.

உண்மைத்தமிழன் said...

நான் வேலையை விட்டுட்டு உங்ககிட்ட அஸிஸ்டெண்ட்டா வேலைக்கு வரலாம்னு இருக்கேன்..

இதே மாதிரி மொத நாளே, மொத ஷோவே படத்தை பார்த்துட்டு ஒரு பதிவைப் போட்டுட்டு திருப்தியாயிரலாம்..

இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டுமப்பா..

முருகன் அமோகமா கவனிக்கிறான் போலிருக்கு..

உண்மைத்தமிழன் said...

ஸாரி..

படத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே.. மறந்திட்டேன்..

படத்தைப் பார்த்திட்டு அப்புறமா சொல்றேன்..

முரளிகண்ணன் said...

அப்பாடா படம் பார்க்காம கண்ணெல்லாம் ஏங்கிக்கிட்டி இருந்துச்சு. இந்த ஞாயிறு விருந்துதான். நன்றி சாரே.

Anonymous said...

இந்தப் படத்தின் பாடல்களைக கேட்டவுடனேயே அதில் நடித்திருக்கும் என் இனிய நண்பன் நிதிஷ் பாண்டியன் மூலம் அதன் இயக்குநருக்கும்,இசை அமைப்பாளருக்கும் ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்.தங்கள் விமர்சனம் அதை உறுதி செய்தி ருக்கிறது குறித்து நிரம்ப மகிழ்ச்சி,ஷங்கர். விரைவான விமர்சனத்துக்கும் அந்த இளைஞ்ர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கள்.

shabi said...

ELLA PADATTHIRKUM VIMARSANAMA EZHUTHI KURAI NIRAIHALAI SOLLUM NEENGAL ENNA MADHIRIYANA PADAM EDUUKKA THITTAMITTULLEERHAL

ரவி said...

chennai28 only ? what about gilli ? is that not a film with game ?

Cable சங்கர் said...

//ELLA PADATTHIRKUM VIMARSANAMA EZHUTHI KURAI NIRAIHALAI SOLLUM NEENGAL ENNA MADHIRIYANA PADAM EDUUKKA THITTAMITTULLEERHAL//

இதே போல குறை நிறைகளோட உள்ள படத்தைதான் ஷபி.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//விரைவான விமர்சனத்துக்கும் அந்த இளைஞ்ர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கள்.//

இது என் கடமை சார்.. இம்மாதிரியான சின்ன படங்கள் ஓடினால் தான் நல்ல திரைப்படஙக்ள் வெளிவரும் என்பது என் நம்பிக்கை.. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி சார்..

Cable சங்கர் said...

//அப்பாடா படம் பார்க்காம கண்ணெல்லாம் ஏங்கிக்கிட்டி இருந்துச்சு. இந்த ஞாயிறு விருந்துதான். நன்றி சாரே.//

நிச்சயமாய் முரளி.. படம் பார்த்துட்டு உங்க கருத்தை தவறாம சொல்லுங்க..

Cable சங்கர் said...

//அண்ணே உங்க விமர்சனத்தைப் படித்து படம் பார்க்க எண்ணி டிக்கெட் முயற்சித்தால் ஐநாக்சிலும், சத்யத்திலும் இரவுக்காட்சி இல்லை என்கிறார்கள். நாளை பார்த்துவிடுகிறேன். :))//

அண்ணே பார்த்துவிட்டு கண்டிப்பாய் எனக்கு உங்கள் கருத்துகளை சொல்லவும்..

Cable சங்கர் said...

//படிகாதவன் தப்பா விட்ட வில்லை இப்படி கபடி விளையாடிடாவுசரை கிழித்த சங்கர் வாழ்க!!!//

நன்றிங்கண்ணா...

Cable சங்கர் said...

//வாழ்த்துகள் சங்கர் நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் முதல் படம் 'எங்க ஊரு கேபுள்காரன்' எப்பொது வரும்??
//

எங்க ஊரு கேபுள்காரனா..? விரைவில்.. தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறேன்.

Cable சங்கர் said...

//இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சக்கரவர்த்தி அவர்களின் அலுவலகம் சென்னையில் உள்ள எங்கள் வீட்டில் தான் இயங்குகிறது ... இத் திரைப்படத்தைப்பற்றிய நலெண்ணங்களை வெளி இட்டதற்கு நன்றி ...//

நன்றி அசோக், முடிந்தால் இந்த விமர்சனத்தை படிக்க சொல்லுங்களேன். நீங்களும் படத்தில் ஏதோஒரு கேரக்டரில் நடித்திருக்கீர்களா..?

Cable சங்கர் said...

//chennai28 only ? what about gilli ? is that not a film with game ?//

கில்லியின் கதை கபடி ஆடுவது கிடையாது.. கபடி ஆட போகும் இடத்தில் நடந்த பிரச்சனைகள்.. ஆனால் சென்னை28, இந்த படமும், முழுக்க,முழுக்க விளையாட்டை சுற்றியே பின்னப்பட்ட கதை..ரவி சார்.

Cable சங்கர் said...

//விமர்சனம் சூப்பர் அண்ணா!!
விரைவில் நீங்கள் டைரக்ட் பண்ண வேண்டும் என்பதே என் ஆசை.//

மிக்க நன்றி அன்பு.. உஙகள் ஆசையும், என் ஆசையும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்..

Cable சங்கர் said...

//ஒரு தெலுங்குப் படம்...
ஜெகபதிபாபு,கல்யாணி நடித்தது...
இது போல் வந்துள்ளது.//

என்ன படம்.. எனக்கு தெரிந்து அப்படி நினைவில்லை.. படம் பேர் தெரிந்தால் நன்றாக இருக்கும்..

இராம்/Raam said...

Eppo release?

/நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் முதல் படம் 'எங்க ஊரு கேபுள்காரன்' எப்பொது வரும்??/

LOL...

butterfly Surya said...

நல்ல திரைப்படம் வெற்றியடைய வேண்டும்.

குப்பை படங்களுக்கு ஒவர் பில்ட் அப் கொடுத்தாலும் ஓடாது என இன்னும் சில மர மண்டைகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது..

திருந்தட்டும்.

வாழ்த்தும் நன்றியும்.

Nilofer Anbarasu said...

//கபடி காட்சிகளில் காமெரா கூடவே ஒடுகிறது கேமரா..//
புரியவில்லையே...

Anonymous said...

நேர்த்தியான் விமர்சனம்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

T.V.ராதாகிருஷ்ணன் said...

விமர்சனம் சூப்பர்

Raj said...

//வாய்ஸ் ஓவரிலேயே மண்ணின் வாசத்தை காட்டும் திருவிழா காட்சி உத்திகள்//

வாய்ஸ் ஓவர் ன்னா இன்னா தல

Cable சங்கர் said...

voice overன்னா. காட்சிகளின் பிண்ணனியில் பேசப்படும் வசனங்கள். உதாரணமாய் டாகுமெண்டரி படங்களில் பிண்ணனி குரல் கொடுப்பதும் வாய்ஸ் ஓவர்தான். அது போல திரைபடங்களில் சில காட்சிகளில் நிகழ்வுகள் நடைபெறும் போது, பிண்ணனியில் உள்ள கேரக்டர்கள், பேசும் வசனங்களில் நடிகர்கள் இல்லாமல், குரலை மட்டுமே வைத்து காட்சிகளீன் பிண்ண்னியை வெளிப்ப்ப்டுத்தும் முறை

Cable சங்கர் said...

////கபடி காட்சிகளில் காமெரா கூடவே ஒடுகிறது கேமரா..//
புரியவில்லையே...//

சாரி தல.. மிஸ்டேக் ஆயிருச்சு.. சரி பண்ணிடறேன்.. சுட்டி காட்டியமைக்கு நன்றி..

Cable சங்கர் said...

//விமர்சனம் சூப்பர்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்..

பரிசல்காரன் said...

//தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது./

Lee?

Cable சங்கர் said...

//Lee?//

அந்த படத்தை நான் பார்க்கவில்லை.. பரிசல்

Cable சங்கர் said...

நன்றி

வண்ணத்துபூச்சி,,
ராம்
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Anonymous said...

don't you have any feeling towards the death of muthukumar.??? in this time you are writing about a movie?

அக்னி பார்வை said...

கில்லி மிஸ் பண்ணிடீங்கா....

அப்போ படத்துக்கு டிக்கட் போட வேண்டியது தான்

மாலி நடராஜன் said...

"தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது"

தமிழில் மவுலி இயக்கி அஸ்வினி நாச்சப்பா நடித்த 'அஸ்வினி" கூட விளையாட்டை வைத்து எடுத்த படம்தான்
நடராஜன்

சிம்பா said...

படத்தின் அழகு சிறிது கூட குறையாமல் உங்களது விமர்சனம். அருமை அண்ணா... அந்த கணக்கன்பட்டி தான் நான் பிறந்த ஊரு...

படத்தின் காதல் காட்சிகளின் நீளத்தை தவிர்த்தால் படம் அருமை அருமை...

எதிர்பாராத முடிவு... மொத்தத்தில் திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய படம்.

Cable சங்கர் said...

//தமிழில் மவுலி இயக்கி அஸ்வினி நாச்சப்பா நடித்த 'அஸ்வினி" கூட விளையாட்டை வைத்து எடுத்த படம்தான்
நடராஜன்//

அட ஆமாமில்ல.. பரிசல் சொன்ன மாதிரி லீ கூட ஸ்போர்ட்ஸ் பேஸ்டு படம் தான்.. நன்றி நடராஜன்.

நான் நரேந்திரன்... said...

முதல் ஷோவிலயே ஒரு படத்தின் தலைவிதியை சாதாரண ரசிகர்களால் தீர்மானிக்க முடியும் போது, ஏன் அதே சினிமாக்கரர்களால் முடிவதில்லை, இல்லை படத்தை எடுத்து விட்டோம், இனிமேலும் செலவு செய்ய முடியாது, வருவது வரட்டும் என்று திரைக்கு வருகிறதா? பட வெளியீட்டிற்குப் பிறகு வரிந்து வரிந்து விமர்சனம் செய்யும் பத்திரிகைகள், நிருபர்கள், Preview-க்கு முன்னரே படம் பார்த்து இயக்குனரிடமோ தயாரிப்பிடமோ சொல்ல முடியாதா? இல்லை, நம் இயக்குனர்களின் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையா? ஒன்றிரண்டு ஹிட் கொடுத்தவுடன் தனக்கு எல்லாம் திரியும் என்ற ego-வா?, பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படம் வெற்றி பெற்றும் காணாமல் போவதேன்? இல்லை தொடர் தோல்விகள் ஏன்?

பாலா said...

//தமிழில் மவுலி இயக்கி அஸ்வினி நாச்சப்பா நடித்த 'அஸ்வினி" கூட விளையாட்டை வைத்து எடுத்த படம்தான்
நடராஜன்//

அது தெலுங்கில் எடுத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்.

பிரேம்குமார் அசோகன் said...

இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று, சன் டிவியின் உட்டாலக்கடி விளம்பர பேத்தல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!!