Thottal Thodarum

Feb 15, 2009

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..
ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது.

தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் காங்கிரஸிலிருந்து மூப்பனார் தா.மா.க என்று தனியே கட்சி ஆரம்பித்திருந்தது, அது மட்டுமில்லாமல், ஜெயலலிதா, சசிகலா, நகை கடை பொம்மைகளாய் உலா வந்த வளர்ப்பு மகன் திருமணமும், அவர்களின் ஆட்சியில் சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், சன் டிவியின் பிரசாரமும் செய்யாத விஷயத்தை ரஜினி சொன்னதால் நடந்தது என்று கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது..?

அடுத்து நடந்த தேர்தலில் அதே போல் “ஜெ’யின் எதிர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஜெயித்தது என்னவோ ‘ஜெ’தான். அப்போது எங்கே போனது ரஜினி என்கிறவரின் மந்திரச்சொல்..??

அதற்கு அப்புறம்,அவர் விட்ட அறிக்கைகள், அவரின் சினிமா பஞ்ச் டையலாக்குகளை விட பெரிய ஸ்டெண்ட். அப்படி ஜெயலலிதாவை பற்றி சொன்னவர், அப்படியே உட்டாலக்கடி அடித்து, ஜெயா பங்கு பெற்ற ஒர் விழாவில் அவரை பாராட்டினார். அதே போல் இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒர் அறிக்கை, ஆனால் என்ன நடந்தது என்று நாடறியும். கேட்டால் என்ன சொல்வார் திட்டத்தை ஆரம்பித்தால் செய்கிறேன் என்பார்.

இவரது பாபா படத்தை எதிர்த்து பமகவினர் செய்த பிரச்சனைக்கு எதிராய், அவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் நடந்தது என்ன என்பது..??
அதே போல் தற்போது நடந்த குசேலன் பட பிரச்சனைக்காக, கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டது..? என்று இவர் அடித்த அந்தர் பல்டிகளை, தமிழ்நாடே பார்த்தது சிரித்தது,அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரியும். அரசியலுக்கு வருவேன், எப்ப வருவேன், யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் வருவேன் என்று ஒவ்வொரு படம் ரிலீஸுக்கு முன்பும், தன் ரசிகர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஏற்கனவே பரபரப்பாய் இருக்கும் தன்னுடய படம் பற்றிய ஒரு பிரி ரிலீஸ் ஹைப்பை ஏற்படுத்திவிட்டு பின்னால் அதெல்லாம் சினிமாவுல டைரக்டர் சொல்லி பேசுறது அதுக்கு எனக்கும் சம்மந்தமில்லைனு சொல்லுவார். ரஜினியை நம்பி எவ்வளவு முறை அவரது ஆதரவாளர்கள் அவமானப்பட்டு ஏமாந்தார்கள் என்பதை எண்ணி கணக்கிலடங்காது. இருந்தாலும் கண்மூடிதனமாய் அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியிருக்க, சமீபத்தில் ரஜினி பாலாவின் நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.

ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு ஏற்படும் ஒரு எதிர்பார்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய ஒரு மாபெரும் இயக்குனர் பாலா. ஒரு இயக்குனருக்காக, அதுவும் இந்நாள் வரை வித்யாசமான சீரியஸ் படங்களை வெற்றி படஙகளாய் தந்த ஒரு இயக்குனருக்கு உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் ஓபனிங் பாலாவை தவிர வேறு யாருக்கும் கிடைத்திருக்க முடியாது.

ரஜினி பாராட்டினா படம் ஓடிரும்னா அவரோட நாட்டுக்கு ஓர் நல்லவன்,பாபா, குசேலன் எல்லா ஓடியிருக்க வேண்டியது தானே..? குசேலன் படத்து க்ளைமாக்ஸுக்கே 25 வாரம் ஓடும்னு சொன்னாரு, 25 நாள் கூட ஓடல, இவரால ஒரு பெரிய கம்பெனி இழுத்து மூடுற நிலைமைக்கு வந்ததுதான் மிச்சம். அந்த கம்பெனி பாவம் சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம இருக்காங்க. குசேலன் படம் ஹிட்டுதான் சொல்ற ஆதரவாளர்களுக்கு படம் வாங்கி வெளியிட்டு,அடிபட்டு நொந்து போன ஒரு தியேட்டர் ஓனரை என்னால உதாரணம் காட்ட முடியும்.

ஏன் இவரு தன்னுடய ஆதரவாளர்களை பார்க்க சொல்லி சொன்ன சேரனின் தேசிய கீதம், சந்திரமுகி ஹிட் கொடுத்ததினாலே வாசுவோட புள்ளை நடிச்ச தொட்டால் பூ மலரும் போன்ற படங்களை பத்தி கூட சூப்பர், அது இதுன்னு போட்டோ போஸ் கொடுத்து சொன்னாரு அப்ப அது ஏன் ஓடல.? படம் ஓடுறதுக்கு ரஜினி வச்சு விளம்பரம் பண்ணா போதும்னா, எதுக்கு கதை, நடிகர்கள்,டைரக்டர் எல்லாம்? ரஜினி போட்டோ போதுமே..?

இவரது இயந்திரன் படத்தை பணப்பிரச்சனையால் எடுக்க முடியாமல் போகும் போது கூட அவர் தன்னுடய பணத்திலேயோ.. அவ்வளவு ஏன் தன்னுடய மகளின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவோ எடுத்திருக்க முடியும். இத்தனைக்கு அந்த கம்பெனியின் பார்டன்ர்கள் உலக புகழ் வார்னர் பிரதர்ஸ், அப்படியிருக்க ஏன் கலாநிதி மாறனை வீடு தேடி ஓடிப்போய் படமெடுக்க சொல்ல வேண்டும்?.

ரஜினி என்கிற ஒரு நடிகருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது அது உண்மை. அவரின் படம் பற்றி செய்திகள் வெளிவந்தால் அவரின் ரசிகர்களால் விரும்பப்படுகிறது அதுவும் உண்மை. ஏன் இந்த பதிவை கூட படிக்க வந்தவர்கள் ரஜினியின் பெயரில் இருப்பதால் இருக்கலாம். ஆனால் அவரின் படம் கூட மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாய் அமைகிறது என்பது நிதர்சன உண்மை.

ஏற்கனவே அவர் ஒரு குழப்பவாதி, அவரின் குழப்ப சுயநல பேச்சுக்களால் ஏற்கனவே அவரின் மேல் மக்களுக்கு இருக்கும் மரியாதை குறைந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்கிறேன், அவரின் பெருமையை போற்றுகிறேன், புகழ் பரப்புகிறென் என்று இம்மாதிரியான் செய்திகளை வெளியிட்டு ரஜினியை இமேஜை உயர்த்துவதாய் நினைத்து, பாலா போன்ற் ஜீனியஸ்களை அவமான படுத்தாதீர்கள். ரஜினிக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி

டிஸ்கி:
இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல.. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்கிற ஆதங்கத்தோடு ரஜினியின் நடிப்பை விரும்புகிறவனின் அன்பான வேண்டுகோள்.மீண்டும் நன்றி .. வணக்கம்.

உண்மைதமிழனின் பதில் பதிவை படிக்க இங்கே அமுத்தவும்<



Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

123 comments:

Vidhya Chandrasekaran said...

me the 1st:)

நட்புடன் ஜமால் said...

எந்திர(ச்)சொல்

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம். மீடியாக்களின் போதைக்கு ஊறுகாய் ஆகிட்டார் ரஜினி. ஒரே வார்த்தை எனக்கு அரசியலில் விருப்பமில்லைன்னு சொல்லிட்டாருன்னா பிரச்சனையே இல்லை. அத சொல்லவிடாம தடுக்கறது, மீடியா கொடுத்த போதை இறன்கிடுமோங்கற பயம்தான். ஆனா ஒன்னுங்க ஸ்டைலுக்கு என்னிக்குமே அவர் மன்னன் தான்.

முரளிகண்ணன் said...

\\இப்படியிருக்க, சமீபத்தில் ரஜினி பாலாவின் நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.

\\

நெத்தியடி

Athisha said...

டிஸ்கி ரொம்ப தமாசா இருந்துச்சு..

பதிவு சூட்ட தணிக்கவா..!

Anbu said...

இன்றைய தமிழகம், நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி போராட்டம் நடத்துதல்..நல்ல பதிவு அண்ணா..

Anbu said...

உங்களுடைய ஒரு இலட்சம் ஹிட்ஸ்-க்கு வாழ்த்துக்கள் அண்ணா..

விரைவில் பத்து இலட்சம் என்ற குறிக்கோளை அடைய வேண்டும்..
அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...

எம்.எம்.அப்துல்லா said...

//இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.

//

நச்!நச்!நச்!

Anonymous said...

முழுவதும் ஏசி விட்டு, பின்பு ரஜினியை பற்றியான எதிர் மறை கட்டுரை இல்லை என்கிறீர்கள்!..

அவர் தோல்வி படங்களை பட்டியலிடகூட மூன்று படங்கள் மேல் கிடைக்காமல் இருப்பதே அவர் மேல் மக்கள் வைத்துருக்கும் ப்ரியதைதான் காட்டுகிறது. நீங்கள் குறிப்பிடும் அந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வெற்றிபெற்று மூப்பனார் கூறிய வார்த்தை என்ன தெரியுமா - ரஜினி, நீங்கள் எப்போது முதல்வர் அரியணைக்கு முயற்சித்தால், முதலில் ஆதரிக்க வருபவன் நான்ந்தான்.... மருவி எழுதி உண்மையை மறைக்காதிர்கள்!.

Anonymous said...

தூ... உன்னை மாதிரி மனநோயாளிகளை என்னவென்று சொல்வது... ஏண்டா தெரியாம உளர்ற. பாலா ஒன்னும் முனிவர் இல்லை. லூசுப் பயலே... அவர் பேசினதை என்னிக்காவது கேட்டிருக்கியா... என்ன தெரியும்னு நினைச்சி பெரிய புடுங்கி மாதிரி எழுதறே...?

நையாண்டி நைனா said...

/* Anbu said...
... அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...*/

பாருங்கண்ணா.... எப்படி காண்டா இருக்காங்க உங்க மேல என்று...

வெண்பூ said...

"நச்"சுன்னு சொன்னீங்க சங்கர், கொஞ்சம் காட்டமாவே...

Anonymous said...

yea very nice becasue i came to read as you told " the heading work of Rajani).
I think Rajani is a good man but medias and fans are going to show differnt angle...

regards..
asfar

Shajahan.S. said...

மிகவும் நல்லதொரு பதிவு, வாழ்த்துக்கள்.ரஜினி அவர்கள் இனி நான் கடவுள் போன்ற நல்லதொரு திரைப்படம் வரப்போவதில்லை என்று கூறியதன் மூலம் தனது எந்திரனின் உண்மை நிலைபற்றி (வியாபார நோக்குமட்டுமே என்று)ரசிகர்களுக்கு அறிவித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

Anonymous said...

Rajini is a very good business man, he knows the ways for his survival. Due to ongoing Economic Slowdown, be a Movie Production or other Business Investment, nobody will take risk by investing huge amount. Thats the reason, he refrained from taking up risk. Definitely, "Endhiran" project won't be a profitable venture and regarding Bala's Naan Kadavul, we should praise him for his daring efforts for taking up such a different subject, in the midst of USELESS masala movies done by our so called "SUPER'S"

Bala doesn't need any support for promoting his movies. I think, Rajini and his followers trying to gain cheap publicity, by talking about "Naan Kadavul"

Whatever it is, we should praise Rajini for utilising the idiocracy of our Tamil People solely for his "SURVIVAL".

Ramesh, Sydney

Cable சங்கர் said...

//அத சொல்லவிடாம தடுக்கறது, மீடியா கொடுத்த போதை இறன்கிடுமோங்கற பயம்தான். //

சரியாக சொன்னீங்க வித்யா..

அவரின் ஸ்டைலை நான் மறுக்கவேயில்லை.

Cable சங்கர் said...

//நெத்தியடி
//

ரொம்ப நன்றி முரளிகண்ணன்.

Cable சங்கர் said...

//டிஸ்கி ரொம்ப தமாசா இருந்துச்சு..

பதிவு சூட்ட தணிக்கவா..!

//

எப்படி சமாளிச்சேன் பாத்தீங்களா..? ஹி.ஹி.. வெளிய சொல்லாதீங்க..

Cable சங்கர் said...

//விரைவில் பத்து இலட்சம் என்ற குறிக்கோளை அடைய வேண்டும்..
அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...
//

அப்ப இருக்குதுடி உனக்கு ஆப்பு என்று மனசுக்குள் சொல்வது தெரிகிறது.. இனிமே கொஞ்சம் விமர்சனத்தையெல்லாம் கொறைச்சுக்கணும்னு தோணுது.

Cable சங்கர் said...

//நச்!நச்!நச்!
//

நன்றி அப்துல்லாண்ணே..

Cable சங்கர் said...

//அவர் தோல்வி படங்களை பட்டியலிடகூட மூன்று படங்கள் மேல் கிடைக்காமல் இருப்பதே அவர் மேல் மக்கள் வைத்துருக்கும் ப்ரியதைதான் காட்டுகிறது. //

அதான் நான் சொன்னேனே..அவர் படஙகள் கூட நன்றாயிருந்தால் ஓடத்தான் செய்யும். அதனால் மரியாதை என்று நினைப்பது தவறு.. அப்போ படம் ஓடாத போது அவர் மேல மரியாதையில்லையா..?

Cable சங்கர் said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தனசேகரன் அண்ணே..

Cable சங்கர் said...

//தூ... உன்னை மாதிரி மனநோயாளிகளை என்னவென்று சொல்வது... ஏண்டா தெரியாம உளர்ற. பாலா ஒன்னும் முனிவர் இல்லை. லூசுப் பயலே... அவர் பேசினதை என்னிக்காவது கேட்டிருக்கியா... என்ன தெரியும்னு நினைச்சி பெரிய புடுங்கி மாதிரி எழுதறே...?

//

பாருங்க சார்.. தைரியமா பேரை போட்டு எழுதறவன் புடுங்கியா..? பயந்து போய் பேர போடாம எழுதறவன் மனநோயாளி புடுங்கியான்னு ஜனங்களே நீங்களே சொல்லுங்க..

Cable சங்கர் said...

அதானே இந்த மாதிரி பின்னூட்டம் ரஜினி ஆதரவாளர்கிட்டேயிருந்து வரலேன்னாதான் அதிசயம்..

Cable சங்கர் said...

//பாருங்கண்ணா.... எப்படி காண்டா இருக்காங்க உங்க மேல என்று...
//

அதான் தல்.. பேசாம பேர மாத்திக்கிட்டு படமெடுக்கணும் போலருக்கே..//

Cable சங்கர் said...

நன்றி வெண்பூ..

ஷாஜகான்.. அஸ்பர். உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்

நையாண்டி நைனா said...

/*அவர் தோல்வி படங்களை பட்டியலிடகூட மூன்று படங்கள் மேல் கிடைக்காமல் இருப்பதே அவர் மேல் மக்கள் வைத்துருக்கும் ப்ரியதைதான் காட்டுகிறது.*/

அனானிக்கு,
ரஜினி நடித்த பல வெற்றி படங்கள் ரீமேக் படங்கள்.

ஹிந்தி:
தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)
* * * * * * * * * * *
தெலுகு:

போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
* * * * * * * * * * * * *
கன்னடம் :

பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
* * * * * * * * * * * * * *
மலையாளம்:

முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)

Cable சங்கர் said...

//அனானிக்கு,
ரஜினி நடித்த பல வெற்றி படங்கள் ரீமேக் படங்கள்.

ஹிந்தி:
தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)
* * * * * * * * * * *
தெலுகு:

போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
* * * * * * * * * * * * *
கன்னடம் :

பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
* * * * * * * * * * * * * *
மலையாளம்:

முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)//

அட்ரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்கன்னானாம்.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க.. அய்யா நைனா.. உன்னை வெறும் நையாண்டி நைனாவா நினைச்சது தப்பு. புள்ளிவிவர நைனா வாகிட்டியே.. சூப்பர்..

Cable சங்கர் said...

//you are a an useless pig ! you cant accept our thalaivar's fame that is what making you to write such a cheap post about out thalaivar. dmk-tmc 's victory land sliding victory is because of our thalaivar's campaign. moopanar and MK also know that well.//

திட்டினதுக்கும், வந்து படிச்சிட்டு பேர போட்டு பின்னூடமிட்டதுக்கு மிக்க நன்றி..

அவனுங்கங்கதான் அரசியல்வாதிங்க.. அப்படிதான் அறிக்கை விடுவானுங்க.. அதையெல்லாம் நம்புறீங்களே.. அய்யோ.. அய்யோ.. பாவம் நீங்க.. அது சரி புரிஞ்சிருந்தா நீங்க ஏன் இப்படி பொங்கி எழுந்து பின்னூட்டம் போடுறீங்க..

Anbu said...

//விரைவில் பத்து இலட்சம் என்ற குறிக்கோளை அடைய வேண்டும்..
அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...
//

//அப்ப இருக்குதுடி உனக்கு ஆப்பு என்று மனசுக்குள் சொல்வது தெரிகிறது.. இனிமே கொஞ்சம் விமர்சனத்தையெல்லாம் கொறைச்சுக்கணும்னு தோணுது.//



அண்ணா ஆப்பு என்று எல்லாம் எதுவும் கிடையாது..

இனிமே கொஞ்சம் விமர்சனத்தையெல்லாம் கொறைச்சுக்கணும்னு தோணுது.

அண்ணா அப்படி ஒரு முடிவை மட்டும் எடுத்துவிடாதீர்கள்...அப்புறம் நாங்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டிருக்கும்...

நீங்கள் விமர்சனம் எழுதுவதை கண்டிப்பாக தொடர வேண்டும்

Anbu said...

நையாண்டி நைனா said...

/* Anbu said...
... அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...*/

பாருங்கண்ணா.... எப்படி காண்டா இருக்காங்க உங்க மேல என்று...

அப்படி எல் லாம் எதுவும் இல் லை அண்ணா..


//பாருங்கண்ணா.... எப்படி காண்டா இருக்காங்க உங்க மேல என்று...
//

அதான் தல.. பேசாம பேர மாத்திக்கிட்டு படமெடுக்கணும் போலருக்கே..//


அண்ணா நான் தவறாக எதுவும் சொல்லவே இல்லையே..

சிவாஜி த பாஸ் said...

Thanks Vidya,
Super star means beyond comments...!
You have wasted one post!
ha ha ha ha........
:):):)

நவநீதன் said...

நல்ல நடு நிலை பதிவு...!

// அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...//

என்ன நைனா நமக்கு போட்டியா வந்திருகீயா....!

நவநீதன் said...

நல்ல நடு நிலை பதிவு...!

// அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...//

என்ன நைனா நமக்கு போட்டியா வந்திருகீயா....!

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு தல‌
காட்டமான அதே நிலையில் தெளிவான பதிவு

GNU அன்வர் said...

அண்ணா எப்ப அண்ணா இந்த சீரியஸ் பதிவு போட அரம்பிச்சிஙுக தொடர என் வாழ்த்துக்கள்

Anonymous said...

Rajinikanth & his fans are very good comedians.

thamilmagan said...

anna rajini rasigarkalikku nethiadi,melum thodara valthukkal.

Vidhya Chandrasekaran said...

\\ சிவாஜி த பாஸ் said...
Thanks Vidya,
Super star means beyond comments...!
You have wasted one post!
ha ha ha ha........
:):):)\\

இல்ல பாஸ். நான் என் கருத்தை மட்டும் தான் சொன்னேன். ஒரு நடிகராய் அவர் ஒகே. ஆனா அவர் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவர் என்று சொல்லாதீர்கள். ஒரு ஸ்திரமான முடிவெடுக்க ரஜினி தயங்கூவது ஏன் என தெரியவில்லை.

Cable சங்கர் said...

//ஆனா அவர் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவர் என்று சொல்லாதீர்கள். ஒரு ஸ்திரமான முடிவெடுக்க ரஜினி தயங்கூவது ஏன் என தெரியவில்லை//

பாருங்க வித்யா.. ரஜினிய அவமானபடுத்தாதீங்க..ன்னு சொல்லி பதிவு போடறோம். அதை கூட புரிஞ்சிக்காம திட்டி பின்னூட்டம் போடறாஙக்.. அனானியா.. இப்படி பட்டவங்களை வச்சி என்ன பண்ணுவாரு அவஙக் தலைவர்.. சும்மா பதிவெழுத வந்த நம்மளை பத்தியே கருத்து சொல்ல உரிமையிருக்கும் போது.. அவ்ளோ பெரிய நடிகரை பத்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?

Anonymous said...

வணக்கம் அய்யா.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு நடிகர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்கு நல்ல உதாரணம். அந்த காலத்தில் எம். ஜி.ஆர். உண்டாக்கிய ஒரு மாயை இன்றுவரையில் தொடர்கிறது. அவர்காலத்தில் ஓரளவுக்கு நல்லதா பண்ணிட்டு போய்ட்டார். அந்த மாயையை பயன்படுத்தி இப்ப உள்ளவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழர்களும் இதுகளை நம்பி வீனாய் போகிறார்கள். அட அதை விடுங்க. இப்ப வந்த விஜய்க்கு கூட அதே தோற்றத்தை அவரோட தந்தையே உண்டாக்குகிறார். எங்கு பொய் முடியுமோ தெரியவில்லை. இவர்கள் இப்படித்தான் மனிதன் சிந்தித்து செயல்படும்வரை.
Do not dwell in the past.
Do not dream of the future.
Concentrate the mind on the present moment.
நல்லதை பார்போம். நல்லதை கேட்போம். நல்லதை செய்வோம்.

நன்றி.
க. பாலாஜி

Bleachingpowder said...

நான் கடவுள் படத்தை பார்த்து பெருந்தன்மையுடன் அனைவரையும் பாரட்டியவருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? அவருடைய ரசிகர்கள் ஆயிரம் எழுதலாம், இதனால் தான் நான் கடவுள் நல்லா ஓடுதுன்னு அதுக்காக நீங்க ரஜினியை இவ்வளவு காட்டமா விமர்சித்திருக்க கூடாது.

நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்.

எதையுமே எதிர்பார்க்காமல், நல்ல படத்தை யார் எடுத்தாலும் ஓடி போய் பார்த்து பாராட்டும் ஒரு நல்ல மனிதரை பற்றி அதுவும் நீங்கள் எழுதியிருக்க கூடாது சங்கர்.

குசேலனும் பாபாவும் தோல்வி படம். தான். யாரும் மறுக்கவில்லை. அதே நேரம் பாபா படத்தினால் நஷ்டமடைந்த எல்லாருக்கும் அவர் பணத்தை திருப்பி கொடுத்ததும், குசேலம் படத்தின் ரிசல்ட் தெரிந்தவுடம் அவர் வாங்கிய பணத்தில் இருந்து பெரிய தொகையை திருப்பி கொடுத்ததை மட்டும் சௌகரியமாக மறந்துவிட்டீர்கள்.

பாபா படம் தோல்வி அடைந்ததால் பணத்தை திருப்பி கொடுத்ததற்கு கூட கமல் முதல் எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், எங்கே இவர் இப்படி பழக்க படுத்தினால் அப்புறம் எல்லாரும் கேட்க தொடங்கி விடுவார்களே என்று.இப்படி அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதே நமக்கு வாடிக்கையாகி விட்டது.

அப்புறம் இன்னொரு சௌகர்யம் என்வென்றால் ரஜினியை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அவர் அதற்கு மறுப்பும் தெரிவிக்க மாட்டார் மனதிலும் வைத்து கொள்ள மாட்டார். மன்சூர் அலிகான், லேலு பிராபாகரன் எல்லாம் ஒரு காலத்தில் ரஜினியை கீழ்தரமாக விமர்ச்சித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்ட போது யாரும் உதவிக்க வரவில்லை, அப்பொழுதும் கை தூக்கிவிட்டது ரஜினி தான் என்பதை அவர்களே பேட்டியில் கூறியிருக்கிறார்கள்.

//இவரால ஒரு பெரிய கம்பெனி இழுத்து மூடுற நிலைமைக்கு வந்ததுதான் மிச்சம்//

This statement sounds very rude sankar. இதுவரை இவரை வைத்து படம் எடுத்து யாரும் இந்த நிலைக்கு ஆனாதில்லை. குரு கேட்டாரே என்று கால்ஷிட் கொடுத்து நடித்து கொடுத்த ஒரே காரணத்திற்காக இவரை இப்படி தூற்றுவதில் கொஞ்சமும் நியாமில்லை.

தப்பா வியாபரம் பண்ணுன தயாரிப்பாளர் மேல தப்பில்லை, நல்ல கதையும் கூறு போட்ட இயக்குனர் மேலையும் எந்த தப்பில்லை, ஆனா அதில நடிச்ச அந்த நடிகர்னால மேல தான் எல்லா தப்புமே, பணத்தை திருப்பி கொடுத்தாலும்.

எவ்வளவு தான் சிறந்த படமா இருந்தாலும் அதற்கும் விளம்பரம் தேவை தான். வென்னிலா கபட குழு போன்ற சிறு முதலீட்டில் எடுக்க படம் பட்ங்களையும் ரஜினி பார்த்து பாராட்ட தான் செய்கிறார். அவர் பார்த்து பாரட்டினால் அடுத்த நாள் அது எல்லா ஊடகங்களிலும் வருகிறது. இது படத்திற்கு நல்ல விளம்பரம் விசயம் தானே அதை விட்டுட்டு வெ.க.கு ரஜினி பாராட்டாவிட்டாலும் அது சிறந்த பட்ம் தான், ரஜினி பாரட்டினால் எந்த பயனும் இல்லைன்னு சொன்னா எப்படி. நாலு பேருக்கு உதவனும்னு ஒரு காரியத்தை அவர் செய்யும் பொழுது அதையும் சொத்தை சொள்ளைன்னு குத்தம் சொல்லீகிட்டே இருந்தா எப்படி

விட்டா நான் பாட்டுக்கு எழுதிட்டே இருப்பேன். அதனால சுருக்கமா உங்களோட இந்த பதிவில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லைன்னு சொல்லிக்குறேன்.

கார்க்கிபவா said...

லட்சதுக்கு வாழ்த்துகள் தல

நையாண்டி நைனா said...

சிங்கம் மொக்கை போட சிங்கிளா தான் வரும் ஆனா அனானியா தான் வரும் என்று தலைவர் சொல்லவே இல்லியே. (அனானிய வந்தா? சிங்கம் எப்படி சிங்கமா இருக்கும். அது புலி தோல் போர்த்திய பசு)

நையாண்டி நைனா said...

/*சிவாஜி த பாஸ் said...
Thanks Vidya,
Super star means beyond comments...!
You have wasted one post!
ha ha ha ha........
:):):)*/

சகோதரா....
உன்னையோ, நம்ம சூப்பர் ஸ்தாரையொ நாங்க வெறுக்கலை. இந்த மாதிரி ஒரு எண்ணம் மட்டும் வளர வேண்டாம் என்று தான் சொல்கிறோம். யாவரும் மனிதர்.

பரிசல்காரன் said...

ப்ளீச்சிங் பவுடரின் கமெண்டுடன் ஒத்துப் போகிறேன்.

ஒருத்தன் பேசினாத் தப்பு, பேசாட்டி தப்புன்னு இப்படி அவரைப் போட்டு ஆப்படிக்கறது ரொம்பப் கொடுமைங்க. ஒரு பிரபல பதிவராகிட்ட நீங்க இப்போ உங்க ரீடர்ஸ் என்ன சொல்வாங்கன்னு ஒரு பொறூப்புணர்சியோட எழுதுவீங்க இல்லையா? உங்களுக்கும் எனக்குமே இந்த நிலைமைன்னா அவரு என்ன பண்ணுவாருன்னு யோசிங்க...

மனசார சொல்றேன்...எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்ல அவரை மாதிரி பாவப்பட்ட ஜென்மம் யாருமே இல்லைன்னு தோணுது.

Anonymous said...

ப்ளீச்சிங் பவுடரின் கமெண்டுடன் ஒத்துப் போகிறேன்.

நையாண்டி நைனா said...

இதற்கு நான் பதில் சொல்வது முறை ஆகாது. இருப்பினும் ஒரு படைப்பு யாருடைய முயற்சியினால் வந்ததோ, என்ன சொல்ல வந்ததோ அதை விட்டு விலகும் போது அந்த படைப்பாளியின் மனம் மிகவும் நோகும் அந்த நோக்கத்திலேயே அண்ணன் கேபிலாரும் எழுதி இருக்கிறார் என்று என் எண்ணம்.

அண்ணன் கேபிலாருக்கு, ரஜினி மேல் தனிப்பட்ட விருப்பு வேண்டுமானால் இருக்குமே ஒழிய வெறுப்பு இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் அவர் அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும் போது, அவரே இப்படி வேண்டும் என்று எழுதுவாரா?

நல்ல படம், நல்ல வசூல் அனைத்து தரப்பையும் கவர்ந்து இருக்கிறது
ரஜினியே பாராட்டி இருக்கிறார் நல்லா படம் என்று தானே சொல்ல வேண்டுமே ஒழிய, ரஜினி பாராட்டி விட்டார் அதனால், இது நல்ல படம், அதனாலேயே நாலு பேரை கவர்ந்து இருக்கிறது என்று சொல்வது தான் தவறு என்று அவர் கூறுகிறார்.

puduvaisiva said...

//மனசார சொல்றேன்...எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்ல அவரை மாதிரி பாவப்பட்ட ஜென்மம் யாருமே இல்லைன்னு தோணுது.//

:-))))))))))

super Super Super

Puduvai siva

புருனோ Bruno said...

//This statement sounds very rude sankar. இதுவரை இவரை வைத்து படம் எடுத்து யாரும் இந்த நிலைக்கு ஆனாதில்லை. //

மன்னிக்கவும். அந்த நிலைக்கு ஆளான ஒரு நிறுவனத்தை தான் கேபிள் சங்கர் கூறியிருக்கிறார்

அப்படியிருக்கு நீங்கள் எப்படி இல்லை என்று கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை :)

புருனோ Bruno said...

//ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது //

ரஜினியால் பாரட்டப்பட்ட பல படங்கள் தியேட்டரை விட்டு ஓடியது நாடறியும்.

ஒரு படம் ஓடுவதற்கும் ஓடாமல் ஒடுங்கவதற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் கேபிள் சங்கரின் வாதம் என்று நினைக்கிறேன்

--

படம் ஓடினால் அதில் நடித்த ரஜினி , (அல்லது பாராட்டிய ரஜினி !!!) காரணம் என்றும்

படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர் இயக்குனர் காரணமென்றும் கூறுவதன் முரண் நல்ல நகைச்சுவை

கோவி.கண்ணன் said...

//ரஜினி பாராட்டினா படம் ஓடிரும்னா அவரோட நாட்டுக்கு ஓர் நல்லவன்,பாபா, குசேலன் எல்லா ஓடியிருக்க வேண்டியது தானே..? குசேலன் படத்து க்ளைமாக்ஸுக்கே 25 வாரம் ஓடும்னு சொன்னாரு, 25 நாள் கூட ஓடல, இவரால ஒரு பெரிய கம்பெனி இழுத்து மூடுற நிலைமைக்கு வந்ததுதான் மிச்சம். அந்த கம்பெனி பாவம் சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம இருக்காங்க. குசேலன் படம் ஹிட்டுதான் சொல்ற ஆதரவாளர்களுக்கு படம் வாங்கி வெளியிட்டு,அடிபட்டு நொந்து போன ஒரு தியேட்டர் ஓனரை என்னால உதாரணம் காட்ட முடியும்//

நச் நச் நச் !
:)

Vidhya Chandrasekaran said...

\\ பரிசல்காரன் said...
ஒருத்தன் பேசினாத் தப்பு, பேசாட்டி தப்புன்னு இப்படி அவரைப் போட்டு ஆப்படிக்கறது ரொம்பப் கொடுமைங்க.\\

இந்தப் பிரச்சனைக்கு காரணம் மீடியா தானே. பேசறது பிரச்சனையில்லை. மாத்தி மாத்தி பேசறதுதான் பிரச்சனையே. மன்னிச்சிக்கோங்க. இது என் சொந்த கருத்து. நான் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ சொல்லல:))

பாலா said...

//ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல்......................சொல்பவர்களும் இருக்கிறார்கள்.//

கடைசி வாக்கியத்தை தவிர மற்ற அத்தனை வரிகளும்.. உண்மை இல்லைன்னு உங்களால ஒப்புக்க முடியுமா

சங்கர்? சுஜாதா சார் இறந்தப்ப, இழவு வீட்டுக்கு போன ரஜினியை கூட துரத்தி துரத்தி படம் எடுத்த

பத்திரிக்கைகாரங்களை மறந்திட்டீங்களா? இல்லை வேற எந்த மந்திர சொல்லை பார்த்து ப்ரமீட் சாய்மீரா,

குசேலனை 64 கோடி கொடுத்து வாங்கினாங்கன்னு சொல்ல வர்றீங்க? வடிவேலை பார்த்தா? இல்லை...... பாபா,

சந்திரமுகி, சிவாஜி, இப்ப எந்திரன்னு படத்தோட டைட்டில் கூட ரெடி ஆகறதுக்கு முன்னாடியே அதோட

கதை-திரைக்கதை-வசனத்தை எல்லாம்.. கற்பனையா.. வாரா வாரம் எழுதி காசாக்கின பெரிய பெரிய

பத்திரிக்கைகளை நீங்க படிச்சதில்லையா? இல்லை மறந்துட்டீங்களா?

ரஜினி படங்கள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கினா... கோடம்பாக்கம் ஏரியாவில்.. எவ்வளவு பணப்புழக்கம்

ஏற்படுதுன்னு... குமுதத்துல (மே பி ரிப்போர்டர்) வந்த ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை, உங்க துறையை

சேர்ந்தவங்களோட பேட்டியையும் சேர்த்து வந்துச்சி. குமுதமும்/பேட்டி கொடுத்தவங்களும் பொய்

சொல்லிட்டாங்களோ?

=====================================

//இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று

அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது.//

திரும்பவும் என்னோட போன பதிலேதான்.....! கடந்த பாராவின் கடைசி வாக்கியத்தை தவிர. இதில் ஏதும் ‘மித்’

இருக்கற மாதிரி தெரியலை.

=====================================

//தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான...................................என்று கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது..?//

நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே??!! ‘ரஜினி சொன்னதாலேயே இதெல்லாம் நடந்தது’ன்னு

அன்னைக்கு அத்தனை பத்திரிக்கைகளும் எழுதினாங்களே (எம்.ஜி.ஆர் பேப்பர்/ஜெயா டிவி-யை தவிர). இப்ப 12

வருசம் ஆய்டுச்சி.. நாம சொன்னதெல்லாம் யாரு நினைப்பு வச்சிருக்க போறாங்கன்னு... குமுதம் மாதிரி

பத்திரிக்கைகள் எல்லாம் அப்படியே உல்டா அடிச்சிட்டாங்க.

சன் டிவி-யோட பிரச்சாரம்: ரஜினி மொட்டை அடிச்சி சிங்கப்பூர்-ல இருந்து இறங்கி, ஏர்போர்ட்ல கொடுத்த அந்த

பேட்டியை..... சன்னோட டிவிடி ப்ளேயர் மனப்பாடமே செஞ்சி இருக்கும். நூத்துக்கணக்கான தடவை

திரும்பத்திரும்ப ரிலே பண்ணினாங்களே!!!! எத்தனையோ பேர் திட்டியிருக்காங்க!! அதையெல்லாம் போடாம,

ரஜினியோட “வாய்ஸ்”-ஐ மட்டும் ஏன் போடணும்.

“இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது”-ன்னு ரஜினி சொன்னது அதற்கு

பல மாதங்களுக்கு முன்பே, தூர்தர்சனில். இன்னைக்கு ரஜினியை எதிர்த்து வீரமாக பேசும் அத்தனை வீரத்தமிழ்

மக்களும்.... ‘வாய் முதற்கொண்டு... அத்தனை ஓட்டைகளையும்’ பொத்திக்கொண்டிருந்த பொழுது

முதன்முதலாக ஜெயலலிதாவை எதிர்த்து பேசியது.. நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியம்.

வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணம்னு யாராவது சொன்னா.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். ஆனா.. ரஜினியும்

ஒரு காரணம்னு நீங்க ஒத்துக்கலைன்னா.... பூனை கண்ணை மூடிகிட்ட மாதிரிதான்னு நினைச்சிக்க

வேண்டியதுதான்.

=====================================

//அடுத்து நடந்த தேர்தலில் அதே போல் “ஜெ’யின் எதிர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஜெயித்தது

என்னவோ ‘ஜெ’தான். அப்போது எங்கே போனது ரஜினி என்கிறவரின் மந்திரச்சொல்..??//

100% ஒத்துக்கிறேன். ஆனா... அதுக்குமுன்னாடியே நாடாளுமன்ற தேர்தல் வந்தது. கோவை-ல நடந்த தொடர்

குண்டு வெடிப்பு, காவலர் செலவராஜ் படுகொலை- அப்போ நடந்த கலவரங்கள்ன்னு.. டி.எம்.கே பேரு அல்ரெடி

ரிப்பேர் ஆகியிருந்துச்சி. நாடாளுமன்ற தேர்தல்ல கிட்டத்தட்ட washout-ன்னாலும், சட்டமன்றத்தேர்தலில்

ஏ.டி.எம்.கே washout ஆன அசிங்கம் டி.எம்.கே-க்கு இல்லை. அதுக்கு ரஜினி காரணம்னு நான் சொல்லலை.

ரஜினியோட ‘வாய்ஸ்’ இந்த தேர்தலில் பலிக்கலைன்னு, நானோ.. வேற யாரவதோ ஒத்துக்கலைன்னா.. நாங்க

கண்ணை மூடின பூனையாய்டுவோம்.

=====================================

//அதற்கு அப்புறம்,அவர்............திட்டத்தை ஆரம்பித்தால் செய்கிறேன் என்பார்.//

திட்டினவங்களை... திரும்ப பாராட்டவே கூடாதுன்னு.. தமிழ்நாட்டில் ஏதாவது சட்டம் போட்டுட்டாங்களா?

‘எதிரி’ன்னு ஒருத்தரை தீர்மானிச்சிட்டா.. சாகற வரைக்கும் அதை மாத்தக்கூடாதுங்கறது பண்படாத மக்களின்

குருட்டு வாதம். பரம்பரை.. பரம்பரையா... விரோதத்தை வளர்க்கிற நம்ம ஊரு காமன் மெண்டாலிட்டியை-தான்

உங்க வார்த்தைகள் காட்டுது.

‘19 வருசத்துக்கு முன்னாடி செத்துப்போன ராஜீவ்காந்திக்காக இன்னைக்கு சாகற இலங்கை தமிழர்களுக்கு

ஆதரவு தராத காங்கிரஸ் ஒழிக’-ன்னு கத்துற நம்மோட வலைபதிவாளர்கள் (நீங்களும் நானும் உட்பட) எல்லாம்

அன்னைக்கு ஸ்ரீபெரும்புத்துர்-ல பாம் வெடிச்சப்ப.. விடுதலை புலிகளுக்கு ஆதரவா.. பட்டாசா வெடிச்சாங்க?

அன்னைக்கு புலிகளை திட்டினவங்க எல்லாம்.. இத்தனை வருசம் கழித்து தங்களோட நிலைப்பாட்டை

மாற்றிக்கொள்ளலாம். ஆனா. அதையே ‘ரஜினி’ செஞ்சா மட்டும் உங்க பாஷை-ல ‘ஸ்டண்ட்’-ஆ?!!

‘நதிகள் இணைப்பு’ பற்றி அறிவியல் பூர்வமா என்னென்ன பாசிபிலிட்டி-ன்னு எனக்கும் தெரியாதப்ப.. நான் கூட

அப்படித்தான் நினைச்சேன். ‘டாய்லெட்’ போனா கழுவக்கூட தண்ணியில்லாம நாம இங்க கஷ்டப்படுறப்ப, வட

மாநிலங்கள்ல வெள்ளப்பெருக்கு-ன்னு படிக்கும்போது...... நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க... நீங்க ஒரு நாள் கூட

‘நதிகள் இணைப்பு’ பற்றி யோசிச்சது இல்லையா? உச்ச நீதி மன்றம் சொன்ன தண்ணியை கூட தரமாட்டேன்னு

கர்னாடகம் சொன்னப்ப... ஒரு சராசரி.. உணர்ச்சிவசப்படக்கூடிய மனிதனா... ரஜினி சொன்ன அந்த ‘ஒரு கோடி’

மேட்டரை.. பத்தி இன்னும் பேசிட்டு இருக்காங்கன்னா.... ‘ரஜினியை சொரிஞ்சா நமக்கு சுகம்/லாபம்’-ன்னு

நினைக்கிற மற்ற பத்திரிக்க்கைகளுக்கும்... உங்களுக்கும்... என்ன வித்தியாசம் சங்கர்? இல்லை வேற எதுவும்

சொல்ல நினைப்பு வரலையா? நான் வேணும்னா.. நினைவு படுத்தவா?

சரி ஒரு பேச்சுக்கு நதிகளை இணைக்கிறாங்கன்னு வச்சிகலாமே! ‘ஒரு கோடி’ தர்றது.. என்ன அவ்ளோ

கஷ்டமா... அதுவும் ரஜினிக்கு?! ரோட்டுல போற ‘நாய் பேயெல்லாம்’ இன்னைக்கு கோடி ரூபாய்

வச்சிருக்காங்க. அவ்வளவு ஏன்.. அமெரிக்கால.. ஒரு நர்ஸ் 2-3 வருசத்துல சம்பாதிக்கற காசு அது. அதை கூட

ரஜினி கொடுக்க மாட்டார்ன்னு சொல்ல வர்றீங்களா?

=====================================

//இவரது பாபா படத்தை......................நடந்தது என்ன என்பது..??//

உண்மை.. உண்மை... உண்மை.......!!!!!

=====================================

//அதே போல் தற்போது நடந்த குசேலன்....................இருக்கத்தான் செய்கிறார்கள்.//

அந்த வீடியோவை பார்த்தேன். ஒருவேளை நான் தமிழ்நாட்டில் இல்லாதனாலோ என்னவோ.. நீங்க எல்லாம்

ஆவேசப்படுற மாதிரி... எனக்கு எதுவும் தோணலை. அவர் மன்னிப்பு கேட்டாரா... இல்லை விளக்கம்

சொன்னாராங்கறது பத்தியும் எனக்கு அக்கறையில்லை. எனக்கு கண்ணுக்கு பட்டது எல்லாம்... “அடுத்த நாள்ல

இருந்து... எந்த கருமாந்திரம் புடிச்ச தன்மானத்தமிழனும் தனக்கு தண்ணி வராததை பத்தி.... ஒரு வார்த்தை

பேசலை.. கவலைப்படலை”. ‘ரஜினி மன்னிப்பு கேட்டுட்டாரு.... ரஜினி மன்னிப்பு கேட்டுட்டாரு....”-ன்னு

ஓட்டை ரெக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டு இருந்ததோடு சரி.

இந்த மேட்டர் நடந்தது.. ஜூலை கடைசி இல்லையா...? ஒரு மாதிரி.. கோடை வெயில் எல்லாம் கொஞ்சம்

தணிஞ்சு மழை கிழை வர ஆரம்பிச்சிருக்கும். தன்மான தமிழ் மவனுங்களா... இதோ... திரும்ப கோடை வருது....

அப்ப கொஞ்ச நாளைல ஃப்ரண்ட்டு.. பேக்’ன்னு காய்ஞ்ச பின்னாடி.. திரும்பவும்.... ‘கர்னாடகா.. கர்னாடகா’-ன்னு

கத்தப்போறீங்க. அதை சமாளிக்க.... 24 மணிநேரமும் தண்ணி வரும் வீட்டில் வசிக்கும் அரசியல்வாதிகள் எல்லாம்..

அதை திசை திருப்ப.. ரஜினி எதாவது பேச மாட்டாரான்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. உண்ணாவிரதம்..

மயிரு.. மட்டைன்னு... பாரதிராஜாவோ... சரத்குமாரோ... அறிக்கை விடுவானுங்க. மைக்-கை பிடிச்ச ரஜினி எதாவது

தாறுமாறா பேசி வைக்க அப்புறம்.. அடுத்த வருசம் வரைக்கும் உங்களுக்கு ஜாலிதான்.

நீங்க சொன்ன மாதிரி... ரஜினிக்கு ‘வாய்ஸ்’ இல்லைன்னா.. ஏன் சார்.. இதை பதிவுல சொல்லுறீங்க. ஏதோ

‘சுப்பிரமணிய சாமி’ சொன்ன மாதிரி நினைச்சிட்டு போக வேண்டியதுதானே? ‘உசுப்பேத்தி.. உசுப்பேத்தி

ரஜினியை ரணகளமாக்கியது’ இன்னைக்கு அவரையே திட்டிகிட்டு இருக்கற பத்திரிக்கைகளும்.. டிவி-க்களுமே

தவிர ரஜினி அல்ல. இன்னைக்கு.. விஜய் மாதிரி.. அல்லக்கை நடிகர்கள் கூட தனக்கு பின்னாடி 100 கோடி மக்கள்

இருக்காங்க’ன்னு நினைக்க... மீடியாக்களை தவிர வேறு யார் காரணமா இருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க....

S.A. சந்திரசேகரா?

சரி... ரஜினி.. அரசியலுக்கு வர்றேன்னு சொன்னா.. என்ன..?? இல்லை வரலைன்னு சொன்னா நமக்கு என்ன?

இத்தனை வருசமா.... கொள்ளை அடிச்சே பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு மாற்றா.. ‘ரஜினி’ வர

மாட்டாரான்னு எதிர் பார்த்துட்டு, ‘ச்சீ. ச்சீ.. இந்த பழம் புளிக்கும்’-ங்கற மாதிரி.. ஒரு ஏமாற்றத்துலதான் நாம

எல்லாம்.. அவரோட அரசியல் வருகையை இப்ப விமர்சிக்கறோம். இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க.

முன்னாடியாவது 5 வருசம்... இப்பல்லாம்.. 1-2 வருசத்துகுள்ளயே... கட்சி மாறி பேசுற அரசியல்வாதிகள் எல்லாம்

உங்களுக்கு... 3-ஆம் பக்க செய்தியா போய்விட...., ‘மாற்றி’ பேசும் ரஜினி மட்டும்... முன்பக்க தலைப்பு செய்தியா

போய்ட்டாரா?

=====================================

// இப்படியிருக்க, சமீபத்தில்................பாலாவை கேவலபடுத்த முடியாது.//

நானும் அந்த தளங்களையெல்லாம் படிச்சிட்டு சிரிச்சேன்.

=====================================


//ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களின்...................கிடைத்திருக்க முடியாது.//

உலகம் முழுக்கவா? சரிதான் போங்க...! பாலா படங்களுக்கு ஓப்பனிங் இருக்கறது மறுக்க முடியாத உண்மை.

ஆனா... அதை ரஜினி படங்களின் வியாபாரத்தோடு கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ். ஃப்ளோரிடால தமிழ் படம்

போடும் நிறைய பேரை இதை ரிலீஸ் பண்ண சொல்லி கெஞ்சி பார்த்துட்டேன். ‘நான் கடவுளா’.. யாரு

நடிச்சது..? ஆர்யாவா? பாலா-வான்னு.. கேட்டு மானத்தை வாங்கிட்டாங்க. ஃப்ளோரிடா மட்டுமே ‘உலகம்’-ன்னு

நான் சொல்ல வரலை. ஆனா.. அமெரிக்கான்னு ஒரு நாடு இருக்கில்லயா... அங்க இந்த படத்தோட

வரவேற்பை-தான் சொல்ல வர்றேன். ‘சிவாஜி-தசாவதாரம்’த்தோட கம்பேர் பண்ணாதன்னு சொன்னீங்கன்னா...

‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆன தியேட்டர் அளவுக்கு.. இங்க நிறைய படம் வந்திருக்கு. 20/20 மலையாளப்படம்

இதைவிட அதிகமான தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன்.

அதெல்லாம் சரி.... ‘சேது’ படம் ரிலீஸ் ஆனப்ப... ‘ரஜினி’ பக்கத்துல விக்ரமும், பாலாவும் நிக்கிற மாதிரியான்

போஸ்டர்.. மயிலாப்பூர் முழுக்க.. சந்தி சிரிச்சதே... அதுக்கு ‘கருமாரி’ கந்தசாமி மட்டும்தான் பொறுப்பா?

=====================================

//ரஜினி பாராட்டினா படம்..............உதாரணம் காட்ட முடியும்.//

அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க. சவுத் ஃப்ளோரிடாவுக்கு கடைசியா வந்த தமிழ் படம் குசேலன் தான்.

இருபதாயிரம் டாலர் கொடுத்தாங்களாம், ஒட்டுமொத்த ஃப்ளோரிடாவுக்கும். இங்க ஒரு வாரம் கழிச்சி வந்துச்சி.

அதுக்குள்ள எல்லாரும் அதை கிழிச்சிட்டனால ‘10 பேர்’ மட்டும்தான் படம் பார்த்தோம். அத்தோட சரி..... ‘நான்

கடவுள்’ வரைக்கும் அந்த அதிர்ச்சி தொடருது. கண்டிப்பா நஷ்டம்தான். சந்தேகமே இல்லாம.

ஆனா... அதெப்படி ‘சாய்மீரா’ வெறும் 64 கோடி கொடுத்தனால அதைவிட 20-30 மடங்கு பெரிய கம்பெனி மூடுற

நிலைமைக்கு வந்துடுச்சின்னு சொல்லுறீங்க. எதோ.. எனக்கு சம்பளம் கொடுத்தனால.. என் கம்பெனியே

திவால்-ங்கற மாதிரி. இதுல.. மொத்த பணமுமா.. நஷ்டம்? எதோ.. குற்றம் சுமற்றனும்னு எழுதின மாதிரியில்ல

இருக்கு. அதுசரி... நீங்க சாய்மீரா பத்தி சொல்ல வந்தீங்களா..இல்லை கவிதாலயாவா?

இவ்வளவு ஆராய்ந்து பேசும் நீங்கள், ‘பாபா’ & ‘குசேலனு’க்கு ஏற்பட்ட நட்டத்தை ரஜினி திருப்பி கொடுத்த

மனிதாபிமானத்தை மறந்துவிட்டீர்களா... இல்லை... இந்த ‘அவமானப்படுத்தாத’ பதிவுக்கு தேவையில்லையென

வசதியாக மறந்துவிட்டீர்களா?

=====================================

//ஏன் இவரு தன்னுடய...................ரஜினி போட்டோ போதுமே..?//

சரியா சொன்னீங்க. நான் கூட.. ‘ஆஹா.. ரஜினியே நான் கடவுளை பத்தி சூப்பர்ன்னு சொல்லிட்டாரு. இங்க

ரிலீஸ் பண்ணிடுவாங்க’ன்னு கனவு கண்டுகிட்டே இருந்தேன். ஒண்ணும் வேலைக்காகலை. ரஜினி

சொன்னதுக்காக எல்லாம் நம்ம கையை சுட்டுக்க வேணாம்னு இங்க நினைச்சிட்டாங்க போல. பாலாவின்

படங்களுக்கு ‘உலகம் முழுக்க ஓப்பனிங்’ன்னு யாராவது உங்க கிட்ட சொல்லியிருந்தா அதுதான் நிஜமான

‘மித்’. ரஜினி படங்களே... ரிலீஸ் ஆகாத நாடுகளும், ஒரு வாரம் கழித்து ரிலீஸ் ஆகும் நான் இருக்கும்

ஊர்களும் இருக்கும்போது, பாலா படங்களின் ஓப்பனிங் எல்லாம் ஜோக்கு சாரே... ஜோக்கு.

=====================================

//இவரது இயந்திரன்.................படமெடுக்க சொல்ல வேண்டும்?.//

பதிவுக்கும்.. இந்த பாராவுக்கும் என்ன சங்கர் சம்பந்தம்? நிச்சயமா.. சரியான காண்டுல இருந்திருக்கீங்கன்னு

மட்டும் தெளிவா தெரியுது. ‘டிஸ்கி’ நிச்சயமா ஒரு போர்வை. உங்களோட எண்ணம் ரஜினி ரசிகர்களை

சீண்டுவது..... அப்புறம்.. ரஜினியை பற்றி யாராவது தப்பா சொன்னா.... ‘உள்ளேன் அய்யா’ போடுபவர்களின்

கவனத்தை ஈர்ப்பது.

=====================================

//ரஜினி என்கிற.....................என்பது நிதர்சன உண்மை.//

இதுக்கு மாற்று கருத்து ஏதாவது இருக்கா என்ன?

=====================================

//ஏற்கனவே அவர் ஒரு குழப்பவாதி,.....................புண்ணியமா போகும். நன்றி//

அது சரி...!! ரஜினியை தலை முதல் கால் வரை திட்டிவிட்டு ‘இது ரஜினி எதிர்ப்பு பதிவு அல்ல’ன்னு டிக்ளேர்

பண்ணும் நீங்க குழப்பவாதியில்லை. நம்முடைய தளத்திற்கு அதிகமான வருகை வேண்டும்னு ரஜினி பற்றி பதிவு

போட்டு படிப்பவர்கள் கவனத்தை ஈர்க்க முயற்ச்சிக்கும் நாம் (என்னையும் சேர்த்துதான்) யாவருமே

சுயநலவாதிகள் இல்லை. ஆனால்... தான் செய்தது தவறு என நினைத்து மன்னிப்பு கேட்பவர் குழப்பவாதி.... தன்

படத்திற்கு விளம்பரம் தேடும் ரஜினி மட்டும்தான் இங்கே சுயநலவாதி.. இல்லையா சங்கர்?!

பாலாவும், நிகில் முருகனும் ரஜினியை பார்க்க போனப்ப.. யாரு போட்டோகிராபரை கூட்டிட்டு போனது?

ஒருவேளை... பாலாவை பாராட்டி.... ரஜினி.... தன்னோட ‘இழந்த மரியாதை’யை மீட்க விளம்பரம் தேடிக்க...

தானே போட்டோ புடிச்சி கவர் ஸ்டோரி எழுதி எல்லாருக்கும் கொடுத்து இருப்பாரோ... அடடே... அப்ப

‘வெண்ணிலா கபடி குழு’வையும் பாராட்டிட்டாரே... ஒருவேளை அந்த படத்தோட ‘ஜீனியஸ்’ இயக்குனரையும்

ரஜினி ரசிகர்கள் தங்களின் தளங்களில் அந்த போட்டோவையும் செய்தியையும் போட்டு அவமானப்படுத்தி

விட்டார்களோ?

ஒருவேளை... நாளைக்கே ரஜினி உங்களை கூப்பிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டால்.... “ரஜினியுடம் என்

மறக்கமுடியாத சந்திப்பு”-ன்னு அதையும் பதிவாக போட்டு விளம்பரம் தேட மாட்டீர்களா?

‘ரஜினி ரசிகர்கள்’ - ரஜினியின் பிம்பம் அல்ல. அவர்களது செயல்கள்... அவரின் செயல்களும் அல்ல. இந்த

அடிப்படை உண்மையை கூட புரிந்துகொள்ளாமல்.... அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் உங்களைப்போன்றவர்கள்

ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோளோ...அறிவுரையோ...அல்லது ஆலோசனையோ சொல்கிறேன் பேர்வழி’ன்னு

ரஜினி என்ற தனி மனிதனை ஒரு சார்பாக விமர்சிக்காதீர்கள். இது பதிவிட்ட பின்னூட்ட நண்பர்களுக்கும் சேர்த்து

என்னுடைய வேண்டுகோள்.

இது பாலா என்ற ‘ஜீனியஸை’ பெருமை படுத்தும் பதிவா.. இல்லை.... ரஜினி என்ற ‘குழப்பவாதி’யை பற்றிய

பதிவான்னு ஒரு கன்ஃப்யூசன். ஆனா... ‘ஜீனியஸ்’ பாலாவையும் பெருமை படுத்த.. உங்களுக்கு எல்லாம்..

நிச்சயம் ‘ரஜினி’ என்னும் சீப்பு சொரிந்து கொள்ள தேவைதான்.

‘நண்டு’வை தட்டிய கைகளா.. இந்த ‘அரைகுறை’ பதிவையும் எழுதியது? தயவு செய்து... இதுபோன்ற ‘ஹாப்

பாய்ல்ட்’ பதிவுகளை ரஜினி என்ற தனி மனிதனை வைத்து எழுதி “ரஜினியை அவமானத்துக்கு

உள்ளாக்காதீர்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி”.

=====================================

அப்புறம் தல.... நையாண்டி நைனா..! முரளிக்கண்ணனோட பதிவை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’

(http://muralikkannan.blogspot.com/2008/10/blog-post_18.html) பண்ணிட்டு....

அவருக்கு ஒரு ‘தேங்க்ஸ்’ கூட சொல்லாம விட்டுட்டீங்களே? உங்களுக்கு பதிலா... நான் சொல்லிடுறேன்.
=====================================

யூர்கன் க்ருகியர் said...

:)

கிரி said...

ப்ளீச்சிங் பௌடர் கருத்தை வழிமொழிகிறேன்.

ஒவ்வொரு முறையும் வலிய வந்து விளக்கம் கொடுப்பேன், இவ்வாறு கூறி சலித்துவிட்டது. அது நம் வேலையும் அல்ல எனபதால் எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.

சங்கர் நம் கருத்தை கூறுவதில் தவறில்லை, ஆனால் நாம் கூறும் கருத்தில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை உணர்ந்து எழுத வேண்டும்.

யாரும் விமர்சிக்கபடக்கூடாதவர் அல்ல, ஆனால் விமர்சிக்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். நாம் பேசும் போது கூறும் கருத்துக்கள் வேறு, அதையே பதிவாக ஏற்றும் போது பலர் படிக்கின்றனர் என்கிற பொறுப்புள்ளது.

நான் இங்கு எதையும் நியாயப்படுத்தி பேசவிரும்பவில்லை ஆனால் ப்ளீச்சிங் பௌடர் அவர்கள் கூறிய ஒன்றை மறுபடியும் நினைவுபடுத்த விரும்புகிறேன்

"நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்"

வெற்றி said...

அறிவாளி நினைப்பில் எழுதும் ஒரு மட்டமானப் போக்கு இந்தப் பதிவு.

ரஜினி பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நடிகர்.

ஒப்புக்கு சப்பானியாக பதிவெழுதும் உம்மையும் என்னையும் போன்றவர்களே நான் கடவுள் பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுக்கும் போது, பல ஆண்டுகளாக அதே துறையில் வெற்றிகொடி நாட்டிய சூப்பர் ஸ்டார் பாராட்டி ஒரு கடிதம் எழுதியது தவறா?

சூப்பர் ஸ்டாரை ரசிக்கும் ஒரு ரசிகன் அவரின் கடிதத்தை வைத்து புலகாங்கிதம் அடைந்து ஒரு பதிவு எழுதியது தவறா?

உண்மையில் நீங்களெல்லாம் என்னாமதிரி மனநிலை கொண்டவரய்யா?

உங்களுக்கு அரித்தால் ரஜினியின் கோவணம்தான் ஞாபகம் வருமா?

தயவு செய்து இந்த மாதிரி மட்டமான எண்ணங்களை எடுத்து தொலையுங்கள்.

வெற்றி said...

இப்பதான் உங்களைப் பற்றிப் படித்தேன். சினிமாவுல வேலை செய்ற ஆசையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எப்படி உங்களால் சிந்திக்க முடிகிறது?

போய் ஒரு படம் எடுத்துப் பாருங்கள், அப்பொழுது தெரியும் சினிமா என்றால் என்ன என்று?

மேட்டர் கிடைக்காம மேஞ்சுட்டீங்களோன்னுதான் தோனுது.

Anonymous said...

//ஏன் இந்த பதிவை கூட படிக்க வந்தவர்கள் ரஜினியின் பெயரில் இருப்பதால் இருக்கலாம். ஆனால் அவரின் படம் கூட மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாய் அமைகிறது என்பது நிதர்சன உண்மை.//

நிஜம்தான்னே!
நானும் அப்டி வந்தவன் தான்.
ஹிஹி..ஹி

அத்திரி said...

நல்ல பதிவு அண்ணே........

அத்திரி said...

Cable Sankar said...
//விரைவில் பத்து இலட்சம் என்ற குறிக்கோளை அடைய வேண்டும்..
அதற்கு முன் நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்..
அதை நான் முதல் காட்சியே பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்..உங்கள் ரசிகனாக...
////அப்ப இருக்குதுடி உனக்கு ஆப்பு என்று மனசுக்குள் சொல்வது தெரிகிறது.. இனிமே கொஞ்சம் விமர்சனத்தையெல்லாம் கொறைச்சுக்கணும்னு தோணுது.//

இப்படி சொன்னா எப்படி அண்ணே.. எத்தனை படத்திலிருந்து எங்களை காப்பாற்றி இருக்கீங்க

உண்மைத்தமிழன் said...

ஆழ்ந்த கருத்துக்கள்.

தேர்ந்த வார்த்தைகள்..

கூரான சொற்கள்..

அருமையான கதைக்கரு..

பின்னி விட்டீர்கள் கேபிள் ஸார்..

ஆமாம்.. இது எந்தத் திரைப்படத்தின் விமர்சனம் என்று சொல்ல முடியுமா?

உண்மைத்தமிழன் said...

வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டும் போல் உள்ளது கேபிளு..

ஸோ.. அதனால.. தனிப் பதிவே போட்டுர்றேன்.. ஆனா இன்னிக்கு இல்ல.. நாளைக்கு..

Cable சங்கர் said...

//ஸோ.. அதனால.. தனிப் பதிவே போட்டுர்றேன்.. ஆனா இன்னிக்கு இல்ல.. நாளைக்கு..//

நீங்களுமா.. அண்ணே.. சரி ஆரம்பிங்க.. ஸ்டார்ட் மிசுக்

Cable சங்கர் said...

//ஆமாம்.. இது எந்தத் திரைப்படத்தின் விமர்சனம் என்று சொல்ல முடியுமா?//

நம்ம படம்தான் தலைவரே..

Cable சங்கர் said...

நன்றி அத்திரி..

Cable சங்கர் said...

//போய் ஒரு படம் எடுத்துப் பாருங்கள், அப்பொழுது தெரியும் சினிமா என்றால் என்ன என்று?//

அதைத்தான் சொல்லுறேன் தேனியாரே.. படமெடுக்கிற கஷ்டம் தெரிஞ்சதினாலேதான் தயவு செஞ்சு ரஜினி பாராட்டுனதுனாலதான் படம் கோடி, கோடியா கொட்டுதுன்னு சொல்லி அவரை அவமானப்படுத்தாதீங்கன்னு சொல்லுறேன். அது யாருக்கும் புரியலையே..

Cable சங்கர் said...

//அறிவாளி நினைப்பில் எழுதும் ஒரு மட்டமானப் போக்கு இந்தப் பதிவு.//

என்ன ஒரு கோவம்..:):):)

//ரஜினி பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நடிகர்.//

நான் இல்லைன்னு சொன்னனா..?

//ஒப்புக்கு சப்பானியாக பதிவெழுதும் உம்மையும் என்னையும் போன்றவர்களே நான் கடவுள் பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுக்கும் போது, பல ஆண்டுகளாக அதே துறையில் வெற்றிகொடி நாட்டிய சூப்பர் ஸ்டார் பாராட்டி ஒரு கடிதம் எழுதியது தவறா?//

யார் பாராட்ட கூடாதுன்னு சொன்னது.. பாருங்கண்ணே நீங்க பிரச்சனை என்னன்னு தெரியாம பஞ்சாயத்துக்கு வர்றீங்க..

//சூப்பர் ஸ்டாரை ரசிக்கும் ஒரு ரசிகன் அவரின் கடிதத்தை வைத்து புலகாங்கிதம் அடைந்து ஒரு பதிவு எழுதியது தவறா?//

அதே போல் பாலாவை ரசிக்கும் ஒரு ரசிகன் ரஜினி சொல்லாததை, அவரின் பெயர் கொண்டு பதிவிடுவதை, பார்த்து வெறுத்து போய் பதிவிடுவது தவறாண்ணே..


//உண்மையில் நீங்களெல்லாம் என்னாமதிரி மனநிலை கொண்டவரய்யா?//

நடுநிலை கொண்ட மனநிலைதாண்ணே..

//உங்களுக்கு அரித்தால் ரஜினியின் கோவணம்தான் ஞாபகம் வருமா?//
என்னதான் கோபம் வந்தாலும் அப்படியெல்லாம் பேசப்படாது..

Cable சங்கர் said...

//"நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்"//

அப்படி ஒரு நாள் வந்தால் நான் ஒன்றும் பழக மாட்டேன் என்று சொல்லவில்லையே.. தொழில் வேறு, சுய வெறுப்பு விருப்பு வேறுண்ணே..

Cable சங்கர் said...

//மேட்டர் கிடைக்காம மேஞ்சுட்டீங்களோன்னுதான் தோனுது.//

இல்லைன்ணே இதை எழுதினா என்ன கிடைக்கும்னு தெரிஞ்சேதான் எழுதினேன்.

Cable சங்கர் said...

//ஒப்புக்கு சப்பானியாக பதிவெழுதும் உம்மையும் என்னையும் போன்றவர்களே நான் கடவுள் பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுக்கும் போது,//

நான் அப்படியில்லைண்ணே.. நான் கடவுள் என்ன ரஜினியா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட விஷ்யமா என்ன..? விமர்சனம்னு வந்தா எல்லாரும் ஒண்ணுதாண்ணே.. நான் உள்பட..

Cable சங்கர் said...

//:)//

எனன் ஜூர்கேன் சார்.. ஆளையே காணோம்.. ஆனாலும் உங்களை ரொம்பத்தான் தேடிட்டேன். யாராச்சும் சொன்னங்களா..?

Cable சங்கர் said...

//சீண்டுவது..... அப்புறம்.. ரஜினியை பற்றி யாராவது தப்பா சொன்னா.... ‘உள்ளேன் அய்யா’ போடுபவர்களின்

கவனத்தை ஈர்ப்பது.//

ஹா..ஹா.. ஹா.. பாலா அது என்ன இவ்வளவு பெரிசா ஒரு பின்னூட்டம்.. ஆனாலும் சூப்பர். பாலா..

Cable சங்கர் said...

//வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணம்னு யாராவது சொன்னா.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். ஆனா.. ரஜினியும்

ஒரு காரணம்னு நீங்க ஒத்துக்கலைன்னா.... பூனை கண்ணை மூடிகிட்ட மாதிரிதான்னு நினைச்சிக்க //

அதையேதான் நானும் செல்றேன் பாலா.. அவரு சொல்லல.. அவருடய ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அப்படி சொல்லி அவரை அவமானபடுத்தாதீங்கன்னுதான் சொல்றேன்.. ஆனாலும் நீஙக் இவ்வளவு ஆதரவாளரா இருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை..

பாருஙக் நீங்களே பாதி விஷயஙக்ளை ஒத்துகிட்டு இருக்கீங்க..

Cable சங்கர் said...

நன்றி கோவி.கண்ணன்.

Cable சங்கர் said...

//ஒரு படம் ஓடுவதற்கும் ஓடாமல் ஒடுங்கவதற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் கேபிள் சங்கரின் வாதம் என்று நினைக்கிறேன்//

அட ஆமாங்க சார்.. உங்களுக்கு புரியுது.. தேவையில்லாம எவனோ எடுத்து நல்லா ஓடும் படஙக்ளை ரஜினி பார்த்துவிட்டதால் தான் கோடி கோடியாய் சம்பாதிக்கிறது என்பது ரொம்ப உட்டாலக்கடியாய் உள்ளது.

Cable சங்கர் said...

//அண்ணன் கேபிலாருக்கு, ரஜினி மேல் தனிப்பட்ட விருப்பு வேண்டுமானால் இருக்குமே ஒழிய வெறுப்பு இருக்க வாய்ப்பே இல்லை. //

அட ஆமாங்க நைனா... நம்ப மாட்டீங்க.. எல்லா படத்தையும் மொத நாளோ, ஒரு வாரம் முன்னாடியோ பார்க்கும் நான் சிவாஜிய எவ்வளவு கஷ்டப்பட்டு திருவான்மியூர் போய் பார்த்தேன் தெரியுமா.. ரஜினிய வெறுக்கிறவன் ஒரு ரெண்டு நாள் க்ழிச்சு கூட பாத்திருக்கலாமில்ல..

Cable சங்கர் said...

//நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்.//

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. பாருங்க சார்.. நீங்க இப்படி நல்லவராயிருக்கீங்க.. உங்க ஆதரவாளர்கள் தேவையேயில்லாம அவங்க கருத்த உங்க கருத்தா சொல்லி உங்களை அவமான படுத்துகிறார்கள்.. கொஞ்சம் கண்டிச்சு வையுங்கன்னு சொல்வேன்.

Anonymous said...

//மனசார சொல்றேன்...எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்ல அவரை மாதிரி பாவப்பட்ட ஜென்மம் யாருமே இல்லைன்னு தோணுது//
என்னங்க இப்படி சொல்லிடீங்க ...ஒழுங்கா சுட்டு சுட்டு படத்தில நடிச்சமா, காச அல்லுனமா இருந்தவரு ...திடீருன்னு பவர் ஆசை வந்து அவர் ஸ்டைல்-ல சில ஸ்டண்ட் பண்ணி பார்த்துட்டு ...அப்புறம் சில பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வச்ச சூடு தாங்காம , சரி நமக்கு இந்த ஆட்டம் தோது படாது ,நம்ம கவனத்த முழுசா சினிமா பக்கம் திருப்பி , வர்ற படத்த பாத்தோமா அதுல நல்ல படமா தெரிஞ்சா ஒரு பாராட்ட போட்டமா அப்படின்னு அவர் அவர் ரூட்ட கிளியரா புரிஞ்சி நல்ல ஒரு சீனியர் ஆர்டிச்ட அவர் கடமையை செய்ய ஆரம்பிட்சிருகாறு இப்ப அதுலயும் வழக்கம் போல தீ ஆரம்பிச்சாச்சு ...இந்திரன் ரிசுல்ட பொறுத்து பெருந் தலை அடுத்த பிளான் பண்ணும் ..அதுக்கும் ஆப்பு வைக்க வருவான் எதாவது ஒரு மாப்பு ...அட போங்கபா , இந்த விளையாட்டு எப்ப முடியும் ...எல்லாம் அந்த பா பா ஜிகே வெளிச்சமடா சாமி ...

Cable சங்கர் said...

//பாபா படம் தோல்வி அடைந்ததால் பணத்தை திருப்பி கொடுத்ததற்கு கூட கமல் முதல் எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், எங்கே இவர் இப்படி பழக்க படுத்தினால் அப்புறம் எல்லாரும் கேட்க தொடங்கி விடுவார்களே என்று.//

கமல் அப்படி கொடுக்கவில்லை என்று யார் சொன்னது.. என்ன அவர் கொடுத்த போது மீடியாவுக்கு தெரிந்து கொடுக்கவில்லை.. எனக்கு தெரிந்து கமல் ஹேராமின் தோல்விக்கு பணத்தில் ஒரு பகுதியை திரும்ப கொடுத்திருக்கிறார்.

Cable சங்கர் said...

//தப்பா வியாபரம் பண்ணுன தயாரிப்பாளர் மேல தப்பில்லை, நல்ல கதையும் கூறு போட்ட இயக்குனர் மேலையும் எந்த தப்பில்லை, ஆனா அதில நடிச்ச அந்த நடிகர்னால மேல தான் எல்லா தப்புமே, பணத்தை திருப்பி கொடுத்தாலும்.//

வெறும் சம்பளம் மட்டும் வாங்கியிருந்து நடித்திருந்தால் பரவாயில்லை.. லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு இருக்கிறது. கதையை தீர்மானிப்பதிலிருந்து, இயக்குனரை தீர்மானிப்பது வரை அவரில்லாமல் ஒரு அணுவும் அசையாது.. அப்படியிருக்க.. நடித்தவர் என்று அப்படியே ஓரம்கட்டி கொள்வது சரியல்ல ப்ளீச்சிங் பவுடர்..

நிச்சயமாய் நான் ரஜினிக்கு எதிரியல்ல. நான் சொல்வது எல்லாம் தேவையில்லாமல் அவரால் என்று அவர் சொல்லாத எதையும் அதே மீடியாவில் மற்றவர்கள் படிப்பார்களே என்று தெரிந்தும் பதிவிட்டு அவரை அவமானபடுத்த வேண்டாம் என்றுதான் கேட்டு கொள்கிறேன்.

பாலா said...

//அதையேதான் நானும் செல்றேன் பாலா.. அவரு சொல்லல.. அவருடய ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அப்படி சொல்லி அவரை அவமானபடுத்தாதீங்கன்னுதான் சொல்றேன்.. ஆனாலும் நீஙக் இவ்வளவு ஆதரவாளரா இருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை..//

அங்கதான் சங்கர் மேட்டரே..! நீங்க நேரடியா.. அந்த மாதிரி பப்ளிஷ் பண்ணின தளங்களின் பெயரை தைரியமா சொல்லி.. அவங்களை திட்டியிருதிருக்கலாம். ஆனா சம்பந்தமே இல்லாம ரஜினியை திட்டினதுதான்... டாபிக் ஹாட் ஆய்டிச்சி.!! ஹி.. ஹி.. ஹி..!!

தேவகோட்டை ஹக்கீம் said...

கேபிள் சாரே! பின்னிட்டீங்க போங்க....
நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு இருக்கேன்...உங்கள் படத்தினுடைய விமர்சனம்தான் என்னுடைய முதல் பதிவா இருக்கும்...)))

Anonymous said...

உங்கள் ப்லோக் தினசரி காலை எழுந்தவுடன் பார்த்து விடுவேன். இந்த பதிவு என் மனதை படு காய படுத்தி விட்டது. நீங்கள் ஒரு நடு நிலையான பதிவாளர் என்று நினத்தேன்?. உங்கள் பதிவுன் நோக்கம் என்ன. ரஜினி சொன்னதால் இந்த படம் ஓட வில்லை...அதற்கு ஏன் இந்த கண் மூடி தனமான தாக்குதல்?. என் போன்ற அமைதியாக படித்து விட்டு மட்டும் செல்ல்பவர்களை இங்கு மின்னுட்டம் செய்ய வைத்த வரை உங்களுக்கு வெற்றி தான்?

நான் அதிகம் கமெண்ட் அடித்து இல்லை. எழுத்து பிழை இருந்ததால் மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் said...

//Cable Sankar said...
12:32 AM
//"நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்"//

அப்படி ஒரு நாள் வந்தால் நான் ஒன்றும் பழக மாட்டேன் என்று சொல்லவில்லையே.. தொழில் வேறு, சுய வெறுப்பு விருப்பு வேறுண்ணே..
//

சங்கர்,

இவங்க ரஜினியின் பெரும்தன்மை பற்றி சொல்வது மனோரமா விசயத்தில் பல் இளிச்சு போச்சு, தன்னை தேர்தல் நேரத்தில் குடிகாரன் என்று சொன்னதற்காக மனோரமாவுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை ரஜினி.அதன் பிறகு ஒரே ஒரு படத்தில் ஒரு துண்டு ரோல், அதுவும் ரஜினியின் பாத்திர புகழை பாடும் ஒரு பாத்திரமாக வந்து போவார் மனோரமா, அருணாசலம் படத்தில்.

அத்திரி said...

சகா என் கட பக்கம் வாங்க........... விருது கொடுத்திருக்கேன்.

பாலா said...

//இவங்க ரஜினியின் பெரும்தன்மை பற்றி சொல்வது மனோரமா விசயத்தில் பல் இளிச்சு போச்சு, தன்னை தேர்தல் நேரத்தில் குடிகாரன் என்று சொன்னதற்காக மனோரமாவுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை ரஜினி.அதன் பிறகு ஒரே ஒரு படத்தில் ஒரு துண்டு ரோல், அதுவும் ரஜினியின் பாத்திர புகழை பாடும் ஒரு பாத்திரமாக வந்து போவார் மனோரமா, அருணாசலம் படத்தில்.//

கோவி. கண்ணன்... பின்னூட்டம் போடுறதுக்கு முன்னூட்டமா கொஞ்கம் ஹோம் வொர்க் பண்ணனும். ‘முத்து’ வந்த பின்னாடிதான் தேர்தல் வந்துச்சி. அப்பதான் மனோரமா பேசினது. அப்படி பேசுனதுக்கு ‘சக்தி மசாலா பொடி’ விளம்பரத்தை கூட நிறுத்தி வச்சாங்க. அவ்வளவு வெறுப்பு மனோரமா மேல இருந்தது எல்லோருக்கும்.

அப்படி பேசினப்ப.. ADMK காரங்களே முட்டை அடிச்சாங்க.

முத்துவுக்கு பின்னாடி ரஜினி நடிச்சது அருணாச்சலத்தில் தான். அதுவரைக்கும் மனோரமாவை சீந்த ஒரு ஆள் வரலை.

நான் ரஜினியோட பெருந்தன்மைன்னு எல்லாம் இங்க சீன் போட வரலை. உங்களை மாதிரி.. அரைவேக்காட்டுத்தனமா.. யாராவது தப்பு தப்பா.. மேட்டரை எடுத்து விடும்போதுதான்... கடுப்பா வருது.

கணேஷ் said...

மன்னிக்கவும் சார். எனக்கு தங்களின் கருத்தில் உடன்பாடில்லை. மற்றபடி லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

//மன்னிக்கவும் சார். எனக்கு தங்களின் கருத்தில் உடன்பாடில்லை. மற்றபடி லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்.//

எதுக்கு ராம்..இந்த மாதிரியான வார்தைகள்.. நாம் நண்பர்கள்.. கருத்து எனும் போதே அதற்கு மாற்று என்பது ஒன்று உண்டு நண்பா.. நீஙகள் இப்படி பின்னூட்டமிடுவதால் என் மனது கஷ்டமாகிறது. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..

இங்கே நீண்ட பின்னூட்ட ஹாலிவுட் பாலா எனது நண்பர்.. ஆனாலும் அவருடய கருத்தை தெரிவிக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மிக்க நன்றி ராம் சுரேஷ்.

Bleachingpowder said...

//கோவி.கண்ணன் said,

இவங்க ரஜினியின் பெரும்தன்மை பற்றி சொல்வது மனோரமா விசயத்தில் பல் இளிச்சு போச்சு, தன்னை தேர்தல் நேரத்தில் குடிகாரன் என்று சொன்னதற்காக மனோரமாவுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை ரஜினி.அதன் பிறகு ஒரே ஒரு படத்தில் ஒரு துண்டு ரோல், அதுவும் ரஜினியின் பாத்திர புகழை பாடும் ஒரு பாத்திரமாக வந்து போவார் மனோரமா, அருணாசலம் படத்தில். //

அதுக்காக ஹீரோயின் வேஷமா கொடுக்க முடியும்? வாய்ப்பே இல்லாம வீட்டுல சும்மா உக்காந்திட்டு இருந்தவங்கள கூப்பிட்டு ஒரு வாய்ப்பு கொடுத்தா அதுவும் தப்பு. கர்மம்...கர்மம்....எங்க இருந்து தான் இப்படி எல்லாம் கிளம்பி வரங்களோ

Bleachingpowder said...

//Cable Sankar said...
12:42 AM

அதையேதான் நானும் செல்றேன் பாலா.. அவரு சொல்லல.. அவருடய ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அப்படி சொல்லி அவரை அவமானபடுத்தாதீங்கன்னுதான் சொல்றேன்
//

ஓகே சார் ஓத்துக்கரேன்.அப்போ நீங்க ரஜினி அதரவாளர்களை மட்டும் தானே நீங்க சாடனும். அதை விட்டுட்டு பதிவு முழுக்க ரஜினியை தானே கடிச்சு குதறியிருக்கீங்க. இது எந்த ஊர் நியாயம்ங்க. ரஜினி போய் ஒவ்வொரு பதிவரையும் நிங்க இப்படி எல்லாம் எழுதாதிங்க கேபிள் சங்கர், என்ன கிழி கிழின்னு கிழிக்கறாருன்னு சொல்லிட்டு இருக்க முடியுமா?

Bleachingpowder said...

//Cable Sankar said...
வெறும் சம்பளம் மட்டும் வாங்கியிருந்து நடித்திருந்தால் பரவாயில்லை.. லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு இருக்கிறது. கதையை தீர்மானிப்பதிலிருந்து, இயக்குனரை தீர்மானிப்பது வரை அவரில்லாமல் ஒரு அணுவும் அசையாது.. அப்படியிருக்க.. நடித்தவர் என்று அப்படியே ஓரம்கட்டி கொள்வது சரியல்ல ப்ளீச்சிங் பவுடர்..
//

இது ரஜினிக்கு மட்டுமல்ல தலைவரே, இப்ப நடிக்கிற நண்டு சுண்டு நடிகருக்கு கூட பொருந்துமே. விஜய்,அஜித்தை விடுங்கள். பரத், சிம்பு, விஷால் கூட அப்படி தான்.

திரைபடத்தின் வெற்றியை யாராலும் கணிக்க முடியாது. யாருமே இங்கே தோல்வி படம் எடுக்க விரும்புவதில்லை. ரஜினி நடித்த படம் ஒடவில்லை என்றால் முடிந்த வரை தயாரிப்பாளர்களை கை தூக்கி விட்டிருக்கிறார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

திரையுலகில் வெற்றி தோல்வி சகஜம். இதற்கு ஒருவரை மட்டு குற்றம் சொல்வது நியாமில்லை.

Anonymous said...

ஒருவர் எந்திரன் நான் கடவுள் போல இருக்காது என்று ரஜினி சொன்னார் என்று சொல்கிறார்!! பின்ன ஷங்கர் கிட்ட நான் கடவுள் மாதிரி படமா எதிர்பார்பீங்க?? என் சார் ஏதேதோ சொல்லறீங்க?? உங்களுக்கு ரஜினி புடிக்கல நேர சொல்ல வேண்டியது தானே?? ஏன் இப்படி??

சரி சங்கர் சார் உங்க கருத்துக்கு வருவோம்!!

ரஜினி சொல்லுவதால் மட்டும் படம் ஓடாது என்பது உங்கள் கருத்து! உண்மை! ஒரு நல்ல படம் தான் ஓடும்!! அதே மாதிரி மீடியா சொல்லுவதால் மட்டுமே அவர் பெரிய மனுஷன் ஆகலை!! அது தானே லாஜிக்??

நீங்கள் சொல்லும் மீடியா குசேலன் விஷயத்தில் எப்படி நடந்தது? ஒரு படம் ப்லோப் என்று மூன்றாம் நாளே முக்கிய செய்தி எல்லாம் வேற யாருக்கும் வராது சார்!! இது தன் அவருக்கு மீடியா கொடுக்கும் சப்போர்ட்! அவங்க சும்மா இருந்திருந்தா படம் இன்னும் சில நாள் ஓடிருக்கும் என்பது தான் உண்மை!

//தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் காங்கிரஸிலிருந்து மூப்பனார் தா.மா.க என்று தனியே கட்சி ஆரம்பித்திருந்தது, அது மட்டுமில்லாமல், ஜெயலலிதா, சசிகலா, நகை கடை பொம்மைகளாய் உலா வந்த வளர்ப்பு மகன் திருமணமும், அவர்களின் ஆட்சியில் சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், சன் டிவியின் பிரசாரமும் செய்யாத விஷயத்தை ரஜினி சொன்னதால் நடந்தது என்று கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது..?//

நீங்கள் சொல்லுவது சரி தான்!! இதை தான் ரஜினி சாரும் "ஒருவன் அரசியலில் வெற்றி பெற சந்தர்ப்பம் சூழ்நிலை தான் முக்கியம்! எனக்கும் அது வந்தது..". அப்போ நீங்க அவரு கட்சியா??

//கமல் அப்படி கொடுக்கவில்லை என்று யார் சொன்னது.. என்ன அவர் கொடுத்த போது மீடியாவுக்கு தெரிந்து கொடுக்கவில்லை.. எனக்கு தெரிந்து கமல் ஹேராமின் தோல்விக்கு பணத்தில் ஒரு பகுதியை திரும்ப கொடுத்திருக்கிறார்.//

சார் ரஜினி கொடுத்தப்போ கமல் எதிர்ப்பு சொன்னார் என்பது உண்மை! இது மீடியால வந்தது!! அதற்க்கு முன்னாடி மணி சார் இருவர் படத்துக்கு கொடுத்தார்!! கமல் எல்லாம் கொடுத்தார் என்று நீங்கள் சொல்லுவது புதுசா இருக்கு!!
//அப்படி கலை நோக்கில் படமெடுப்பவர்கள்.. தன் சொந்த காசில் எடுக்க வேண்டும்.//
இந்த வசனம் நீங்கள் சொன்னது!! இதையே பல கமல் படத்துக்கும் பொருந்தும்!! உதாரணம் ஹேராம், ஆளவந்தான்,குணா.. ஆனால் அப்போது மட்டும் அவர் கலை ரட்சகர் ஆகி விடுவார்!! நான் இதை கமல் சாரை மட்டம் தட்ட சொல்லவில்லை! என் தகுதிக்கு அவரை மட்டம் தட்டவும் முடியாது! அதுபோல் தான் ரஜினி சாரும்!!


ரொம்ப நாள் படிச்சு பின்னுட்டம் போட சோம்பேறி தனம்!! இப்போ பதில் போட வெச்ச வகையில உங்களுக்கும் ரஜினி சாருக்கும் வெற்றி!!

Suresh said...

ரஜினி வச்சு பதிவு எழுதின கூட எவ்ளோ கூட்டம் வருது பாரு. இது தான சேர்ந்த கூட்டம் எவனாலயும் ஒன்னும் பண்ண முடியாது. ஹிட்ஸ் வேணும்னு இந்த பதிவு, வாழுங்க தலைவர் நிழல்ல நெறைய பேர் வாழுறாங்க நீங்களும் வாழுங்க.

நன்றி bleacingpowder உங்கள் கமெண்ட்ஸ் என்னை சாந்த படுத்தியது.

// இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல.. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்கிற ஆதங்கத்தோடு ரஜினியின் நடிப்பை விரும்புகிறவனின் அன்பான வேண்டுகோள்.மீண்டும் நன்றி .. //

அந்த பயம் இருக்கட்டும்.

சத்தியமா சொல்றேன் இந்த பதிவும் ரஜினியை வைத்து வியாபாரம் ஆக பயன் படுத்துறீங்க.

வெண்ணிலா கபடி குழு போன்ற படங்கள் ரஜினியின் பாராட்டு பலமே.

நையாண்டி நைனா said...

/*அப்புறம் தல.... நையாண்டி நைனா..! முரளிக்கண்ணனோட பதிவை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’

(http://muralikkannan.blogspot.com/2008/10/blog-post_18.html) பண்ணிட்டு....

அவருக்கு ஒரு ‘தேங்க்ஸ்’ கூட சொல்லாம விட்டுட்டீங்களே? உங்களுக்கு பதிலா... நான் சொல்லிடுறேன்.*/


நாம் ஒரு இடத்தில் படிப்பதையே இன்னொரு இடத்தில் பயன்படுத்தி கொள்கிறோம். நான் அந்த தகவலை எழுதி வைத்து இருந்தேன், அறிந்து வைத்து இருந்தேன் பயன் படுத்தி கொண்டேன்.
நான் ‘காப்பி-பேஸ்ட்’ செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை. அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும், தெரிவிக்காதது தவறு என்றால் அந்த தவறுக்காக நான் வருந்துகிறேன். மீண்டும் அவ்வாறு வராது பார்த்து கொள்கிறேன்.

சுட்டிய உங்களுக்கும் மிக நன்றி.

Suresh said...

// ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள் //

Its a great truth. Check the comments number on a day.

வெற்றி said...

//ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.//

நாடே சொல்லுது, இதில் உமக்கென்ன சந்தேகம்.

//ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.//

இல்லையா என்ன? பேப்பர் படிக்கும் பழக்கம் இல்லையா?

//ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.//

நீர் என்ன காட்டுவாசியா? உமக்குத் தெரியாது?

//ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள்.//

உண்மைதானே ராஜா. இல்லாமலா இத்தனை ஆண்டுகள் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

//ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள்.//

அது வந்தப் பிறகுப் பார்க்கலாம். நீங்கள்கூட சினிமாவுக்கு வந்தால் பெரிதாக சாதிக்கப் போவதாக சொல்கிறீர்கள். வந்தாதானே தெரியும்?


//இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது.//

மீடியாங்கிறது என்ன சார்? இதுவே ராமராஜன் சொல்லிருந்தா தனிப் பதிவா போட்டிருபீங்களா? போடக் காரணம்? அதனால் உம்மை மாதியே மீடியாக்காரணும் எதைப் போட்டால் விற்குமுன்னு பாக்குறான், போட்றான். இதுகூடப் புரியாம எப்படி இருக்கீங்க.

//தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.//

இதிலென்னயா பெருசா தப்பு தெரியுது. தனக்குப் பிடிச்சவங்க சொல்றது நடக்கும்போது ஏற்படக்கூடிய ஒரு சாதாரண சந்தோசம்.
//உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் காங்கிரஸிலிருந்து மூப்பனார் தா.மா.க என்று தனியே கட்சி ஆரம்பித்திருந்தது, அது மட்டுமில்லாமல், ஜெயலலிதா, சசிகலா, நகை கடை பொம்மைகளாய் உலா வந்த வளர்ப்பு மகன் திருமணமும், அவர்களின் ஆட்சியில் சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், சன் டிவியின் பிரசாரமும் செய்யாத விஷயத்தை ரஜினி சொன்னதால் நடந்தது என்று கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது..?//

பயங்கரமானக் கண்டு பிடிப்பு சாமி. மூப்பனாரே, ரஜினி எப்ப விருப்பப்பட்டாலும் தா.மா.கா.விற்கு தலமை ஏற்க வரலாம் என்று உம்மைக் கருத்துக் கேட்காமல் சொல்லிவிட்டாரோ?

//அடுத்து நடந்த தேர்தலில் அதே போல் “ஜெ’யின் எதிர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஜெயித்தது என்னவோ ‘ஜெ’தான். அப்போது எங்கே போனது ரஜினி என்கிறவரின் மந்திரச்சொல்..??//

உமக்கு முடக்கு வாதம், வேறென்ன சொல்ல. மந்திரச் சொல்லுக்கு எல்லாமே நடக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்ற சாதாரண அர்த்தம் உமக்கு தெரியாமலிருப்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. அதிக பட்ச நம்பகத்தண்மையை மட்டுமே கருத்தில் வைக்க வேண்டும் என்ற "பொது புத்தி" உமக்கேன் வேலை செய்யவில்லை?

//அதற்கு அப்புறம்,அவர் விட்ட அறிக்கைகள், அவரின் சினிமா பஞ்ச் டையலாக்குகளை விட பெரிய ஸ்டெண்ட். அப்படி ஜெயலலிதாவை பற்றி சொன்னவர், அப்படியே உட்டாலக்கடி அடித்து, ஜெயா பங்கு பெற்ற ஒர் விழாவில் அவரை பாராட்டினார்.//

ஒருவரை தொடர்ந்து பாராட்டுவதோ அல்லது திட்டுவதோ அறிவிழிகள் செய்யும் வேலை. இதே ரஜினி அரசியலுக்கு வந்து நான் நினைத்தமாதி இல்லை என்றால் திட்டதான் செய்வேன். அரசியல் வேறு, நடிப்பு வேறு.

// அதே போல் இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒர் அறிக்கை, ஆனால் என்ன நடந்தது என்று நாடறியும். கேட்டால் என்ன சொல்வார் திட்டத்தை ஆரம்பித்தால் செய்கிறேன் என்பார்.//

அரவேக்காட்டுத்தனமான சிந்தனை. 1 கோடியென்ன அதற்கு மேலும் கொடுக்கலாம். ஆரம்பிக்காமல் கொடுத்து அரசியல்வாதிகளின் சின்ன வீட்டுக்கு நெய் வாங்கவா?

//இவரது பாபா படத்தை எதிர்த்து பமகவினர் செய்த பிரச்சனைக்கு எதிராய், அவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் நடந்தது என்ன என்பது..??//

ரஜினி பிடிக்கும் என்பதற்கு விட்டேத்தியாக நாங்கள் இருக்க, நாங்கள் என்ன அரசியல் தொண்டர்களா? அதே அவர் அரசியலுக்கு வரட்டும் உயிர்கொடுத்து வேலை செய்வோம். இது ஒரு ரசிகனுக்கும் ஒரு தலைவனுக்கும் இடையில் இருக்கும் ஒரு புரிதல். ரசிக்காதவர்களுக்கு இங்கு வேலை இல்லை.

//அதே போல் தற்போது நடந்த குசேலன் பட பிரச்சனைக்காக, கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டது..? என்று இவர் அடித்த அந்தர் பல்டிகளை, தமிழ்நாடே பார்த்தது சிரித்தது,அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரியும்.//

இந்த ஒரு வரியிலேயே உம்முடைய நடுநிலமை ஒரு விலங்குக்குகூடப் புரியும்.

//அரசியலுக்கு வருவேன், எப்ப வருவேன், யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் வருவேன் என்று ஒவ்வொரு படம் ரிலீஸுக்கு முன்பும், தன் ரசிகர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஏற்கனவே பரபரப்பாய் இருக்கும் தன்னுடய படம் பற்றிய ஒரு பிரி ரிலீஸ் ஹைப்பை ஏற்படுத்திவிட்டு பின்னால் அதெல்லாம் சினிமாவுல டைரக்டர் சொல்லி பேசுறது அதுக்கு எனக்கும் சம்மந்தமில்லைனு சொல்லுவார். ரஜினியை நம்பி எவ்வளவு முறை அவரது ஆதரவாளர்கள் அவமானப்பட்டு ஏமாந்தார்கள் என்பதை எண்ணி கணக்கிலடங்காது.//

நாங்க அவர சரியாத்தான் புரிஞ்சிருக்கோம். உமக்கு ஏன்யா எறியுது? உனக்கு ரஜினி பிடிக்கது.ரஜினிப் படமும் பாக்கமாட்ட. பின்ன எதுக்கு வேண்டாத சிந்தனை?

//இருந்தாலும் கண்மூடிதனமாய் அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

சிறு பிள்ளைத்தனமாக சொல்லக்கூடாது. கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் என்றால் அவரின் எல்லாப் படமும் ஓடியிருக்க வேண்டும்.ஒரு ரசிகனுக்கு ப்டிப்பதற்கு படம் மட்டுமே காரணம் என்று நினைப்பவர்கள் தான் அறிவிழிகள்.


//இப்படியிருக்க, சமீபத்தில் ரஜினி பாலாவின் நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.//

இது கீழ்தரமான வரிகள். நானும் படித்தேன். ரஜினி பாராட்டியதை எம் போன்ற ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.அவ்வளவுதான்.

//இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.//

இதைவிட யாரும் கேவலமாய் சிந்திக்க முடியாது.

//ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு ஏற்படும் ஒரு எதிர்பார்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய ஒரு மாபெரும் இயக்குனர் பாலா.//

தன்னையறியாமல் ஒத்துக்கொண்டு உள்ளீர். அதாவது ரஜினியின் படம் தாக்கத்தை ஏற்படுத்துமென்று. போய் தலையில் குட்டிக்கொள்ளுங்கள், அடடா ரஜினியை தெரியாமல் பாராட்டிவிட்டோமென்று.

//ஒரு இயக்குனருக்காக, அதுவும் இந்நாள் வரை வித்யாசமான சீரியஸ் படங்களை வெற்றி படஙகளாய் தந்த ஒரு இயக்குனருக்கு உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் ஓபனிங் பாலாவை தவிர வேறு யாருக்கும் கிடைத்திருக்க முடியாது.//

யாருப்பா இல்லையென்று சொன்னது.

//ரஜினி பாராட்டினா படம் ஓடிரும்னா அவரோட நாட்டுக்கு ஓர் நல்லவன்,பாபா, குசேலன் எல்லா ஓடியிருக்க வேண்டியது தானே..? குசேலன் படத்து க்ளைமாக்ஸுக்கே 25 வாரம் ஓடும்னு சொன்னாரு, 25 நாள் கூட ஓடல,//

தொர சினிமாங்குறது ஒரு பிசினெஸ். எல்லாரும் நல்லா ஒடுன்னுதான் சொல்லுவாங்க. ஓடாதுன்னு எந்தக் கேணயன் சொல்லுவான்?

//இவரால ஒரு பெரிய கம்பெனி இழுத்து மூடுற நிலைமைக்கு வந்ததுதான் மிச்சம். அந்த கம்பெனி பாவம் சொல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம இருக்காங்க.//

அடப் பாவிகளா, அவர்னால எத்தனபேர் வாழ்ந்தாங்கன்னு சொல்ல மனசு வரலயே? உங்ககிட்ட வேற என்ன எதிர் பார்க்க முடியும்?

//குசேலன் படம் ஹிட்டுதான் சொல்ற ஆதரவாளர்களுக்கு படம் வாங்கி வெளியிட்டு,அடிபட்டு நொந்து போன ஒரு தியேட்டர் ஓனரை என்னால உதாரணம் காட்ட முடியும்.//

வியாபாரமுன்னா முன்ன பின்ன அப்பிடிதாய்யா இருக்கும். லாபம்மட்டும் வேணுன்னா அந்த பண்ணாடைகளை "கந்து வட்டி" செய்ய சொல்லு ராசா.

//ஏன் இவரு தன்னுடய ஆதரவாளர்களை பார்க்க சொல்லி சொன்ன சேரனின் தேசிய கீதம், சந்திரமுகி ஹிட் கொடுத்ததினாலே வாசுவோட புள்ளை நடிச்ச தொட்டால் பூ மலரும் போன்ற படங்களை பத்தி கூட சூப்பர், அது இதுன்னு போட்டோ போஸ் கொடுத்து சொன்னாரு அப்ப அது ஏன் ஓடல.?//

தூங்கறவன எழுப்பலாம். தூங்கறமாதி நடிக்கிறவன.....?

//படம் ஓடுறதுக்கு ரஜினி வச்சு விளம்பரம் பண்ணா போதும்னா, எதுக்கு கதை, நடிகர்கள்,டைரக்டர் எல்லாம்? ரஜினி போட்டோ போதுமே..?//

விளம்பரத்தப் பற்றி உமக்கு தனி வகுப்பெடுக்க வேண்டும்.

//இவரது இயந்திரன் படத்தை பணப்பிரச்சனையால் எடுக்க முடியாமல் போகும் போது கூட அவர் தன்னுடய பணத்திலேயோ.. அவ்வளவு ஏன் தன்னுடய மகளின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவோ எடுத்திருக்க முடியும். இத்தனைக்கு அந்த கம்பெனியின் பார்டன்ர்கள் உலக புகழ் வார்னர் பிரதர்ஸ், அப்படியிருக்க ஏன் கலாநிதி மாறனை வீடு தேடி ஓடிப்போய் படமெடுக்க சொல்ல வேண்டும்?.//

இதெல்லாம் ஒரு கேள்வியென்று எப்படிக் கேட்கத் தோனுது? ரஜினி நடிச்சா போதுமுன்னு தயாரிப்பாளர்கள் தவம்கிடக்குறது சினிபீல்டுல இருக்குற உமக்கு தெரியவில்லையே? உம்மை என்ன சொல்வது?

//ரஜினி என்கிற ஒரு நடிகருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது அது உண்மை.//

உண்மைய சொல்லிட்டாருங்கோ...

//அவரின் படம் பற்றி செய்திகள் வெளிவந்தால் அவரின் ரசிகர்களால் விரும்பப்படுகிறது அதுவும் உண்மை.//

அட்றா.. அட்றா...

//ஏன் இந்த பதிவை கூட படிக்க வந்தவர்கள் ரஜினியின் பெயரில் இருப்பதால் இருக்கலாம்.//

அப்பாடா தெரிஞ்சா சரி.

//ஆனால் அவரின் படம் கூட மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாய் அமைகிறது என்பது நிதர்சன உண்மை.//

என்னய்யா புதுசா சொல்றீங்க.ரஜினி படம் ஓட்றதுக்கும் ரஜினியப் பிடிக்கிறதுக்கும் சம்மந்தம் இல்ல ராசா.


//ஏற்கனவே அவர் ஒரு குழப்பவாதி, அவரின் குழப்ப சுயநல பேச்சுக்களால் ஏற்கனவே அவரின் மேல் மக்களுக்கு இருக்கும் மரியாதை குறைந்துள்ள நிலையில்,//

நீர் ஒரு கிணற்றுத் தவளை.

//அவருக்கு ஆதரவளிக்கிறேன், அவரின் பெருமையை போற்றுகிறேன், புகழ் பரப்புகிறென் என்று இம்மாதிரியான் செய்திகளை வெளியிட்டு ரஜினியை இமேஜை உயர்த்துவதாய் நினைத்து,//

யாரும் கவலைபடத் தேவையில்லை. வேகமா சினிமா எடுக்குற வழியப் பாருங்க.

//பாலா போன்ற் ஜீனியஸ்களை அவமான படுத்தாதீர்கள்.//

ஆடு நனயுதுன்னு ஓநாய் ...........

//ரஜினிக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி//

இவர்தான் புள்ளி(விவர)ராஜா. உங்க வேலைய மட்டும் பாருங்க சார்.

Cable சங்கர் said...

பின்னூட்ட கயமைத்தனம்.

Unknown said...

Poor buddy,

At the recession times, High budget Rajini movie could find new producers. What about Marma, Kama, Yogis?

Ass-scar Ravi is making new movie with Jackie chan. Why didn't he come rescue for Komali, like Sun did for Rajini?

Ever heard of a former powerful CM like JJ losing at her fortress? This happened because of Rajini's voice.

But cry-wolf like you never succeed.

பாலா said...

//நாம் ஒரு இடத்தில் படிப்பதையே இன்னொரு இடத்தில் பயன்படுத்தி கொள்கிறோம். நான் அந்த தகவலை எழுதி வைத்து இருந்தேன், அறிந்து வைத்து இருந்தேன் பயன் படுத்தி கொண்டேன்.
நான் ‘காப்பி-பேஸ்ட்’ செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை. அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும், தெரிவிக்காதது தவறு என்றால் அந்த தவறுக்காக நான் வருந்துகிறேன். மீண்டும் அவ்வாறு வராது பார்த்து கொள்கிறேன்.

சுட்டிய உங்களுக்கும் மிக நன்றி.//

ஹா.. ஹா.. ஹா.. காட் யு..!!!

எப்பவும் நீங்கதானே.. சங்கரை கலாய்ப்பீங்க.!! அதுதான்.. வேணும்னே உங்களை வம்புக்கு இழுத்தேன். ரொம்ப சீரியஸ் ஆய்ட்டீங்கபோல தல..!!!

மன்னிச்சிக்கங்க..!! (அட.. மொதல்ல திட்டுற மாதிரி பேசிட்டு இப்ப மன்னிப்பு கேக்கறேன். நானும் ஒரு ‘குழப்பவாதி’ தானே).

பாலா said...

100 பின்னூட்டமா.... அட்ரா சக்கை...!!!

‘கேபிள்’ நாரதரே.. தங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடந்துவிட்டது அல்லவா??!!!

இன்னொரு தடவை தலைவரை வம்புக்கு இழுத்தீங்கன்னா... ‘ஆஸிட்’தான்..!!!

Anonymous said...

என்ன ராசா, பாலாவும் ரஜினியும் போஸ்டர்ல சிரிக்கிற காட்சியப் பார்த்துட்டு தூக்கு மாட்டிக்க புளிய மரம் தேடுறியாப்பா...

எங்கப்பா இதுக்கு முன்ன நான் எழுதின கருத்துப் பதிவு.

உண்மை ரொம்ப சுட்டுடுச்சோ... கண்ணா... உண்மை ரொம்ப பவர்புல். எரிச்சிடும். எழுதத் தெரியாம எதையோ கிறுக்கித் தள்ற நீ, ரஜினி பத்தி எழுத ஆசப்பட்டது எதுக்குன்னு, உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு பாராட்டித் தள்ளின மனவியாதிக்காரங்களுக்கு இப்பவாவது புரியுமான்னு தெரியல.

நல்லவங்களா இருந்தா புரிஞ்சிக்கிட்டிருப்பாங்க. கேபிள்டிவில கூட லாயக்கில்லாத படம் எடுக்கப்போற நீயெல்லாம் ரஜினி பக்கத்தில் அல்ல... அவர் படம் பார்த்துவிட்டுப் போகும் போர்பிரேம்ஸ் ஓரமா நிக்கக் கூட தகுதியில்லாதவன்.

-பிரபாகர், மதுரவாயல்

Cable சங்கர் said...

//உண்மை ரொம்ப சுட்டுடுச்சோ... கண்ணா... உண்மை ரொம்ப பவர்புல். எரிச்சிடும். //

உண்மை சுடல.. கிச்சு கிச்சு மூட்டுது

//கேபிள்டிவில கூட லாயக்கில்லாத படம் எடுக்கப்போற நீயெல்லாம் ரஜினி பக்கத்தில் அல்ல... அவர் படம் பார்த்துவிட்டுப் போகும் போர்பிரேம்ஸ் ஓரமா நிக்கக் கூட தகுதியில்லாதவன்.//

ஹா..ஹா..ஹா..

நல்ல நகைச்சுவை. அது எப்ப வரும், எப்படி வரும், எந்த டீவீயில வரும்ன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்துல தானா வரும்

Cable சங்கர் said...

//எங்கப்பா இதுக்கு முன்ன நான் எழுதின கருத்துப் பதிவு. //

முதல்ல டைப் பண்ணுற்துக்கு முன்னாடி பேர் போட்டு எழுத கத்துக்கங்க.. அப்புறம் மத்தவங்களை பத்தி பேசலாம். அனானி.. ஹி..ஹி..

Anonymous said...

ரொம்ப சந்தோசம்...
எனக்கு கத்துக்குடுக்கறது இருக்கட்டும்...

பாலா என்ற வியாபாரியைப் பத்தியும் கொஞ்சம் எழுதிப் பாரேன். தெரியலேன்னா... நான் வேணும்னா கொஞ்சம் எடுத்துக் கொடுக்கட்டுமா...?

சேதுவுக்கு பப்ளிசிட்டி தேடி ரஜினி வீட்டுக்கு சிவக்குமாரோட பிஆர்ஓ நிகிலை வச்சி நடையா நடந்தாரே... அதுல ஆரம்பிக்கலாமா...

இல்ல... தொடர்ந்து 4 படத்திலயும் அவர் அடித்த லட்சங்கள்... கடைசி படத்துல எப்படியும் கோடிகள்லதான் இருக்கும்... அதுலருந்து ஆரம்பிக்கலாமா..?

இப்ப நான் கடவுள் 10வது நாள் போஸ்டர்கள்ல பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா சிரிக்குதே ரஜினி லெட்டரும் அவரோட முகமும் அதிலிருந்தே ஆரம்பிக்கலாமா...

நான் பேர் போட்டு எழுதுனா என்ன... அனானியா எழுதினா என்னப்பா... நேர்மையை, உண்மையை எழுதறேன். உனக்கு அந்த தைரியம் இருக்கா... நீ இப்போ எழுதினது ஒரு முட்டாள்தனமான பதிவுன்னு ஒத்துக்குற தைரியம் இருக்கா உனக்கு.

பாலாவுக்குள் மட்டுமல்ல... இந்த உலகிலேயே என்னைப் போல கலைப்புடுங்கி யாருமில்லை என்று பீற்றிக் கொள்ளும் எப்பேர்பட்ட கொம்பனுக்குள்ளும் அட்டகாசமான ஒரு வியாபாரி ஒளிந்து நின்று, உங்களைப் போன்றவர்களைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கிறான்.

பாலா நல்ல படம் எடுத்தார்; அதை ரஜினி என்ற மனிதன் பாராட்டினார். பாராட்டியவர் குப்பனோ சுப்பனோ அல்ல... உலகமறிந்த ஒரு நடிகன். நாடே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறது. அப்பேர்பட்டவர் கொடுத்த பாராட்டும் சான்றிதழும் நான் கடவுள் போன்ற வெகுஜனங்களுக்கு அன்னியப்பட்ட ஒரு படத்துக்கு பெரும் உந்து சக்திதானேயன்றி வேறில்லை.

ரஜினி ரசிகனுக்கான படமா நான் கடவுள்? ஆனால் ரஜினியின் ரசிகர்கள் அந்தப் படத்தைப் போய் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயம்தானே..

இதைக் குறிப்பிட்டு சிலர் பேசுவது தவறு என்றால், நீ பாலாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசுவதும் தவறுதானே... இப்போது நீ எழுதிய எழுத்துக்களே...- பாலா மாதிர் மிகச் சிறந்த படைப்பாளியை கேவலப்படுத்தும் செயல் - உன்னைப் பார்த்து கேலி செய்கிறதே கண்ணா...

நானும் இந்த சினிமாவைச் சேர்ந்தவன்தான். இந்த போஸ்டரை சிவஸ்ரீ சீனிவாசன் அடித்தார் என்று கூட நீயே ஒரு ரெடிமேட் பதிலைச் சொல்லக் கூடும்.

போ.. போய் அழகன் தமிழ்மணியிடம் கேள்... பாலா என்ன சொல்லி போஸ்டர் போடச் சொன்னார் என்று!!

பெயரில்லாமல் எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை கண்ணா.

எஸ்.பிரபாகர்
மதுரவாயல்
சென்னை

செல் நம்பர் வேணுமா... தாங்க மாட்டே!

Anonymous said...

//கேபிள்டிவில கூட லாயக்கில்லாத படம் எடுக்கப்போற நீயெல்லாம் ரஜினி பக்கத்தில் அல்ல... அவர் படம் பார்த்துவிட்டுப் போகும் போர்பிரேம்ஸ் ஓரமா நிக்கக் கூட தகுதியில்லாதவன்.//

ஹா..ஹா..ஹா..

நல்ல நகைச்சுவை. அது எப்ப வரும், எப்படி வரும், எந்த டீவீயில வரும்ன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்துல தானா வரும்..."

-வழியுது தொடச்சிக்கோ... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கத்துக்கோ முதல்ல!
உண்மை கிச்சுகிச்சு மூட்டுச்சா... டேய்... அவனா (ளா) நீயி...
உனக்குப் போயி கமெண்ட் எழுதினேனே... என் உழைப்பெல்லாம் வீணாப் போச்சே!

எஸ்.பிரபாகர்
மதுரவாயல்

Cable சங்கர் said...

//செல் நம்பர் வேணுமா... தாங்க மாட்டே!//

கொடுங்க.. பேசுவோம்

Cable சங்கர் said...

//பெயரில்லாமல் எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை கண்ணா. //

முதல்லேயே பேர் போட்டுருக்கலாமே .. எதுக்கு அனானி..

Cable சங்கர் said...

//நானும் இந்த சினிமாவைச் சேர்ந்தவன்தான்.//

தெரியுது..தெரியுது.. ஃபோர் பிரேம்ஸுன்னு சொல்லும் போதே தெரியுது..

andygarcia said...

கேபிள் அண்ணா கலக்கிட்டிங்க! பின்னூட்டம் பாத்து தப்பு பண்ணிடோம்னு நெனைக்காதீங்க ஊர்பக்கம் போகும் போது, சலூன்ல, பஸ்ல மக்கள் ரசினி அண்ணன
பன்க்ச்சர் பண்றாங்க, அவர் போட்ட ஈழ ஆதரவு சீன் வேகவில்லை.
talking about chidambaram,kadalur,viruddachalam area earlier difficult to critize rajini,nowadays avarukku aaputhan
suprised to see so much hatred for him in these area,been in those areas for 15 days.thirumavalavan,vijaykanth only have respect.

Anonymous said...

//நாடே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறது//

மோதல தமிழ் நாட்ட தாண்டி பார்ட ரஜினிக்கு என்ன மரியாதைன்னு தெரியும்... j.k.rethish தமிழ் நாட்டுல என்ன ரேஞ்சோ அதவிட கேவலமா பாக்கராங்க ஹிந்தி காரங்க..

Anonymous said...

// தேனியார் said...
//ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.//

நாடே சொல்லுது, இதில் உமக்கென்ன சந்தேகம். //

இன்னொரு வெளங்காத தமிழ் குடிமகன் ...

இங்க இவள பெருசா எழுதுனதுக்கு ஒரு பக்கத்துக்கு உங்களுடைய கெமிக்கல் பத்தின ஆராச்சி கட்டுரை எழுதி இருந்திங்கன்னா உபயோகமவாவது இருந்திருக்கும்...

நம் நாடு இன்னும் எத்தனையோ விடயங்களில் முன்னேற வேண்டி இருக்கிறது அதை சாத்தியப்படுத்த நாம் எவ்வளவோ உழைக்க வேண்டியது இருக்கிறது அதற்க்காக உங்கள் சக்தியை செலவிடுங்கள்... சரி அது தான் இல்லை உங்கள் குடும்ப தரத்தை உயர்தவாவது முயற்சி செய்யுங்கள் அதை விட்டுவிட்டு எதோ ஒரு நடிகனுக்கு கூஜா தூக்கிடு சுத்துரிங்க..

உங்கள் வயது 35 என் வயது 23 நாளைக்கு நான் உங்களை பார்த்து சிரிக்கிற மாதிரி நடந்து கொள்ளாதிர்கள்....

பாதை காட்டவிட்டலும் தவறான பாதைக்கு இழுத்து செல்லாதீர்கள்...

Cable Sankar இது உங்களுக்கும் தான்...

priyamudanprabu said...

\\இப்படியிருக்க, சமீபத்தில் ரஜினி பாலாவின் நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.

\\

நெத்தியடி

priyamudanprabu said...

அதானே இந்த மாதிரி பின்னூட்டம் ரஜினி ஆதரவாளர்கிட்டேயிருந்து வரலேன்னாதான் அதிசயம்..


அதே அதே

உண்மைத்தமிழன் said...

கேபிள் ஸார்..

எனது கண்டனப் பதிவை போஸ்ட் செய்துவிட்டேன்.

ஆனால் உங்களது பதிவோடு அதனை எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.

ஆகவே இங்கே ஒரு பின்னூட்டமாகப் போட்டுவிடுகிறேன்.

http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_18.html

Anonymous said...

// இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது. //

மித் தான், அதான் ரஜினி ரசிகர் வலைத்தளத்துல போட்ட ஒரு விஷயத்துக்கு ஒரு பதிவை போட்டு இருக்கீங்க (நடுநிலைமைனு வேற சிலர் சொல்லுறாங்க)

//அதே போல் இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒர் அறிக்கை, ஆனால் என்ன நடந்தது என்று நாடறியும். கேட்டால் என்ன சொல்வார் திட்டத்தை ஆரம்பித்தால் செய்கிறேன் என்பார்.//

திட்டம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பணம் கொடுக்கணும்னு சொல்லறீங்களா?

// அப்படி ஜெயலலிதாவை பற்றி சொன்னவர், அப்படியே உட்டாலக்கடி அடித்து, ஜெயா பங்கு பெற்ற ஒர் விழாவில் அவரை பாராட்டினார். //

அதாவது எப்பவுமே ஒருத்தரை எதிர்த்திகிட்டே இருக்கனுமா?

//இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல//

சரியாச் சொன்னீங்க. கண்மூடித் தனமான எதிர்ப்பு பதிவு

Anonymous said...

I agree with Bleachingpowder
See cable sankar a pera auto sankar mathiri than , see rajini oru nalla pada tha parthu reconize panathula enna thappu, ethula enna prestige issue unaku, rasigar sonna solatumae
whats ur problem, vettiya asst director a suthi kitu irukira unake eppadi na, dei mothla nee rosam ulla ambalai na kalai ka ku nu pesurathuna
enaiku producer kedaikama edupa kati padam edukura directors irukanaga da avangala pathi pesu

I am big fan of bala, avaru pera pathai nee pesatha .. unoda soppa blog lae theriyuthu nee aduthavana pesi perbalam agalanu pakura pannadai nu

Unaku ellam 118 comments cha
ethuku munadi nee yaru nu kuda enaku theriyathu thalaivar pathi pesinala konjam parthan yaruda nu athuvum vara oruthar blog la irunthu link pudichi thedi vanthan

Nee ellam cheap a velai pogatha araisiyal vathi mathiri evara pathi contrast a sonna publicity agalam nu athu nikathu kanna unoda padaipu oru puuuuu vum kanom...

poda poi velai ya paru da

Nee producer kedaikama asst director osi kanji kudichi ae appa amma va kapathama velai seiyama nanum kalai pudingi nu solitu irukira nee ellam oru pulu

Infact bala asked a reporter who was questioning rajini like u, bala asked nee avaru mundai etha pesa mudiyum a nu...

Avru nalla padam parthu rasichar nu soli , avara flop athu ethu nu soli theva ellai ma vambuku eluthuta...

parpom da unoda life la nee enna _______ agura appa heros a parthu sutha pothi vaya pothi chin cha podum manakitta directors neeyum irupa da

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Cable சங்கர் said...

//vettiya asst director a suthi kitu irukira unake eppadi na, dei mothla nee rosam ulla ambalai na kalai ka ku nu pesurathuna
enaiku producer kedaikama edupa kati padam edukura directors irukanaga da avangala pathi pesu//

சுரேஷ்.. முதலில் நான் வெட்டியா சுத்திகிட்டு இருக்கிற் அசிஸ்டெண்ட் டைரக்டர் இல்ல..

சினிமா உலகில் வேறெங்கோ சம்பாதித்து கொண்டு சினிமா பற்றி பேசுபவன் இல்லை.. சினிமாவில் இன்வெஸ்ட் செய்தவன், செய்கிறவ்ன்..

நீங்க சொல்ற டைரக்டர்கள் பத்தியும் கண்டிப்பா எழுதுவேன்.

நாளைக்கே உங்க சாபங்களையெல்லாம் மீறி படமெடுத்து அதை பற்றி எந்தவிதமான விமர்சனங்களையும் யார் செய்தாலும் கவலைபடுபவனும் அல்ல..

நீங்க சாப்ட்வேர் இன்ஜினியர்னா.. கெளதம் அசிஸ்டெண்டா இருந்துட்டு போங்க்.. நல்லாயிருங்க..

அதுக்காக நான் கஞ்சிகில்லாம அலையிறவனு நீங்களே முடிவு பண்றதா..?

ஹா.. ஹா.. நாளைக்கு பின்னே நீயே படம் பண்ணா.. அதனால் எதுக்கு கோவம் எல்லாம்.. நீங்களும் ஒரு டைரக்டர் ஆக ஆசைபடுறவர்..

உங்களூக்கு சீக்கிரமே படம் கிடைத்து, அது மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள் சுரேஷ்..

Anonymous said...

Dear Cable sankar,

See i dont want to curse you, enakum ellarum nalla irukanum nu rajini pola oru nalla manithana pola asai than

Ungaloda blog eppadi anbana oru nalla manithara pun paduthucho athu mathiri enoda manathayum pun paduthuchu

Kandipa neenga mela varivinga, all the best for your career.
But please dont try to hurt anybody
Spl people who have given great lifes to cinema

Enoda friend theatere vachi mudalam nu osicha pothu chandramughi vanthuchu enaikum solran, avaonda life a mathinathu , avanoda theatre , parking stand la interval a velai seikra elarum life um oru bright a life a koduthtathu thalaivar padam, infact after that he is running with the same effect anaiku edutha padam nala innai varikum avanala theatre a otta mudiyuthu

So yaru manasayum kaiya paduthathinga, Eppadi paduthina eppadi neenga mana ulachaluku alaningalao athu mathirit than

( ellai nu soli poi solla venam)
Kandipa padikum pothae oru kovam kastham varum, athu than manitha elaibu

So eppadi nan ungala pathi seriya theriyama pesinano , athu mathiri than neengalum rajini bala mathiri maperum manithargala pathi theriyama pesuringa

See cable u neenga rajini mathiri oru eduthala iruntha famous ungala la kandipa avara mathiri amathiya thalai kanam ellama iruka mudiyahtu adithu solran atha mattum

Because i can see ur attitude from ur writting ...

Dont hurt any one, kandipa nee kulsean kuppai nu soli iruntha kuda nan kavalai patu iruka mattan
enna athu padam, u can do vimarsan

but neenga rajini a ellai thappu nu solitinga, theva ellai ma palaya matter ellam eluthutinga..

Avara valtha kudumbam enaku theriyum

Unknown said...

டைரக்டர் பாலா தன் படைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் ரஜினியிடம் போகவேண்டிய அவசியம் இல்லை.தன்னை நம்பி வந்தவர்களை நடுநிலைமை என்றபேரில் அவமானபடுத்தும் நபர் மனிதனில்லை.ரஜினி எம்போதுமே மனிதர்களை மதிக்கும் தன்மையை கொண்டவர் எனவேதான் தன்னிடம் நம்பி வந்த பாலாவுக்கும் உதவியை செய்தார். அவ்வளவுதான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல ரஜினி விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் செய்யமாட்டார் விமர்சிதவர்களே தன்னுடைய கருத்தை மாற்றும் அளவில் வாழ்ந்து காட்டுவார் . இதற்க்கு பல உதாரணக்கள் கடந்தகாலத்தில் உள்ளன. சிறந்த உதரணமாக ஜெயலலிதா ஆதரவாக நடிகை மனோரமா அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் அவரை பற்றி சொல்லப்பட்ட வார்த்தைகள் பிற்காலத்தில் எப்படி மாறியது என்பது எல்லோரும் அறிந்ததே வெறும் சினிமாவிற்காக மட்டும் மக்கள் அவர் மீது மதிப்போ மரியாதையோ வைக்கவில்லை அதையும் தண்டி அவர் கடைப்பிடிக்கும் நடத்தை முறைக்காகவும்தான்.

Anonymous said...

//"நாளை நீங்கள் இயக்குனராகும் பொழுது அவரை இன்னும் அருகில் பார்க்க பழக வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது, இந்த பதிவை எழுதியதை நினைத்து நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள்"//

// அப்படி ஒரு நாள் வந்தால் நான் ஒன்றும் பழக மாட்டேன் என்று சொல்லவில்லையே.. தொழில் வேறு, சுய வெறுப்பு விருப்பு வேறுண்ணே //

ஹி ஹி ஹி . . . இத விட என்ன வேணும் . . கேபிள் சார் . . அத தான் நீங்க இப்பயும் செஞ்சிருக்கீங்க . . உங்க சுய விருப்பு வெறுப்பு வேறு . . தொழிலுக்காக தான் இதே செஞ்சீங்க :P

TXBlogger said...

Nan oru rajini rasigan. Avarai patriya vimarsanangalai avar endraikum varaverpar.. Avar rasigargalagiya nangalum engalai patriya vimarsanagalai varaverpom..

Aaanaal, avari patriya thavagalgalai thirithu, ulnookathudan veliyiduvadhai virumbamatom. What you speak is what that defines you. This kind of malicious, crooked thoughts of yours wont get you anywhere. For god's sake, rajini told that he is doing a guest role in kusalen. He did not own the movie or he did not sell that for such huge amounts. It is others like balachander who were greedy. Rajini clarified on this issue in the fan meet. I dont think you would have missed that.

Then why do you lie? when you lie once here, what is the guarantee that all other articles of yours are truthful. The basic qualification to be in media/show business is sincerity and you lack it!

You hav'nt made a single movie yet i guess. Ippovae indha thalai ganam.. mmm rendu padam edhuthae na enna aatam irukum...

Enga aal 150+, 30 yrs he has been leading the industry. Avaru naalaiku unoda padatha paarthaaruna korai enna nu unkitta mattum soluvaaru.. nerai enna nu oorukae solluvaaru..

Adhu andha manushanoda nalla gunam. Adhu puriyalaya? puriyadha madhiri nadikireengala?

Urangupavargalai yelupalam! urangupavargal pol nadipavargalai? Eraiva! Nee dhaan Savukaal Adithu Yeluppa Vendum!