இளையராஜாவின் இசையில், வேணுவின் ஒளிப்பதிவில், கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதையில்,பெங்களூரில் நடந்த இரண்டு தாதாக்களுக்கிடையே ஆன சண்டையை மிக இயல்பாக, ஊடே ஒரு காதல் கதையையும் கொடுத்து , ஒரு இடத்தில் கூட ரத்தம் சிந்தாமல் மிரட்டியிருக்கிறார்கள். இந்த ஆதினகளு டீன் என்றால் மிகையாகாது.
அக்னி ஸ்ரீதரின் நண்பன் சேத்தன் ஒரு பெண்ணை காதலிக்க, அதை தடுக்க அவனின் அப்பா பெங்களூரின் பெரிய டானான கொத்தவால் ராமசந்திராவின் உதவியியை நாடியிருக்க, கொத்தவால் சேத்தனையும், அவனின் காதலியையும் மிரட்ட, வேறு வழியில்லாமல் அவனுக்கு எதிரியான இன்னொரு டான் ஆன ஜெயராஜிடம் அடைக்கலமாகிறார்கள்.
ஒரு பக்கம் கொத்தவாலின் சாம்ராஜ்யத்தை ஒழிக்க துடிக்கும் ஜெயராஜ், கொத்தவாலுக்கு உதவியாய் இருப்பது மாதிரியான நடவடிக்கைகளுடன், அவனை பழிவாங்க கொல்ல துடிக்கும் அதுல் குல்கர்னியும், அவனைது நண்பர்களும்.
கொத்தவால் உயிருடன் இருந்தால் தன் காதல் ஜெயிக்காது என்பதால், ஜெயராஜ், அதுலுடன் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சம் சேத்தனும் கிரிமினலாகுவது என்று மிக இயல்பான திரைக்கதையும், அளவான வசனங்களுடன் . ஒரு காட்சியில் கூட மிகப்பெரிய வன்முறையோ, ரத்தகளரியோ இல்லாமல், கேமரா கோணங்களிலும், பிண்ணனி இசையிலும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்
அதுல அக்னிஹோத்திரி, ஆஷிஷ்வித்யார்தி, புதுமுகம் சேத்தன், அர்சனா, ஷரத் ஆகியோரின் நடிப்பு மிகையில்லாத கேரக்டர் உணர்ந்த சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் பிண்ணனி இசை அருமை என்று சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல். ஷிகிகாலி என்கிற பாடலை அவரே பாடியிருக்கிறார் அருமையான மெலடி. அதே போல் கேமராமேன் வேணுவின் ஒளிப்பதிவு, சடசடவென மாறும் எடிட்டிங் இல்லாமல் அருமையான கேமரா கோணங்கள் மற்றும் லைட்டிங்கிலும் நான் இருக்கிறேன் என்கிறார்.
கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதை எங்கும் தொய்யாமல் பரபரப்பான காட்சிகளோடு பறக்கிறது. இயக்குனர் சைதன்யாவை இவ்வளவு அருமையான படத்தை கொடுத்ததற்காக பாராட்டியே ஆகவேண்டும்.
டிஸ்கி
கன்னடத்தில் இவ்வளவு குவாலிட்டியான படம் பார்த்து வருஷங்களாகிவிட்டது.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
கலக்குறீங்க தல...
பிரபாகர்.
ஆ தினகளு - அந்த நாட்கள் !
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடித்து இருந்தது. சிகி காலி பாட்டு சான்சே இல்லை சூப்பர் மெலோடி.
இளையராஜாவிற்க்கு கன்னடத்தில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது
கிரிஷ் கர்னாட் - ரசிக்கத் தகுந்தவர்
கேபிள் சங்கர் வாழ்க.....
sihi gali, sihi gali, sahi hakida mansinali
Ilayaraja and Nandita both rocked in that song.Girish Garnard is back with bang in films.This Ranga Shakara man is pride of kannadigaas..
Ilayaraja - Great music director kannada ever got..
திராவிட(அரசியல் திராவிட இல்ல. மொழி ஆய்வுபடி) மொழிகள் எல்லாத்துலயும் படம் பாத்து விமர்சனம் எழுதிட்டீங்க!
எது..? வண்ணத்துபூச்சியாரே..?
கலக்குறீங்க தல...
பிரபாகர்//
நன்றி பிரபாகர்.
நன்றி கோவி.கண்ணன்.
11:14 AM//
வச்சிருவோம் நைனா...
நன்றி மதுரைமல்லி..
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடித்து இருந்தது. சிகி காலி பாட்டு சான்சே இல்லை சூப்பர் மெலோடி.
இளையராஜாவிற்க்கு கன்னடத்தில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது
//
சிடிக்கு மிக்க நன்றி அருண்.. இளையராஜாவுக்கு கன்னடத்தில் என்ன உலகம் முழுக்கவே ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.. அருண்..
கேபிள் சங்கர் வாழ்க.../
நன்றி ரெட்மகி..
எதுக்கெல்லாம் கவலைபடறாங்கப்பா..
திராவிட(அரசியல் திராவிட இல்ல. மொழி ஆய்வுபடி) மொழிகள் எல்லாத்துலயும் படம் பாத்து விமர்சனம் எழுதிட்டீங்க!//
ஹி..ஹி.. ஏதோ நம்மாள முடிஞ்சது பப்பு
//
நன்றி சார்..
ஆமாம் ப்ரசன்னா.. ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் டிவிடி கிடைச்சுது..
உங்கள் வலையைப் படித்த போது, நீங்கள் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவரே என்பது புரிகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
http://kgjawarlal.wordpress.com
மிக்க நன்றி
//
நானும் ரொம்ப அதிகம் பார்த்ததில்லை.. நண்பர் ஒருவருடய.. ரெகமெண்டேஷனில் பார்த்தேன்.. அருமை.. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன்.
உங்கள் வலையைப் படித்த போது, நீங்கள் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவரே என்பது புரிகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
http://kgjawarlal.wordpress.com//
நன்றி ஜவார்லால்..
நன்றி ஜெகநாதன்.. பிழையை திருத்திவிட்டேன்.. உங்கள் பாராட்டுக்கும், பிழைதிருத்த உதவியதற்கும் மிக்க நன்றி..