Thottal Thodarum

Jan 8, 2010

ஜக்குபாயும் திருட்டு விடியோவும்..

jackubai ஜக்குபாய் திரைப்படம் இண்டெர்நெட்ல் வெளியாகிவிட்டது. ஊரெல்லாம் டிவிடியாய் ப்ரிண்ட் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும், வீடியோ பைரஸியை எதிர்த்து ஆளாளுக்கு மைக் போட்டு பிதற்றினதும், கண்ணீர் விட்டு அழுததும் நடந்தது.

பைரஸி வீடியோ ஏதோ ஒரு ஸ்டியோவிலிருந்து அது எந்த ஸ்டூடியோவிலிருந்து என்று படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ஏனென்றால படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் செய்யும் இடத்தில் இருந்து தான் திருடப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாய் படத்தில் ஒடும் டைம் கோடை வைத்து பார்த்தால் தெரியும். ஆனால் படத்தை திருட்டு டிவிடி தயாரித்து விற்றதாக யாரோ ஒருவரை சென்னையில் இல்லாமல் வெளியூரிலிருந்து திருட்டு டிவிடி தயாரித்தார் என்று கைது செய்திருக்கிறார்கள். எய்தவனை விட்டு விட்டு அம்பை பிடித்திருக்கிறார்கள்.

இதற்காக இவர்கள் நடத்திய மீட்டிங்கில் டிவிடியை எதிர்த்து நம் பெரும்புகழ் பெற்ற நடிகர்கள் பேசியது செம காமெடி. சேரன் ஒவ்வொரு ஊரிலும் தங்களுடய ரசிகர் படையை ஏற்படுத்தி அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் கொடுத்து பைரஸியை ஒழிப்போம். அதை மீறி விற்பவர்கள ஒடுக்குவோம் என்றார்.அதைத்தான் ஹிசைனி போன்றவர்களை வைத்து பைரஸி ப்ரொடக்‌ஷனெல்லாம் வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்தும் ஒன்றையும் கிழிக்க முடியவில்லையே. அடுத்து பேசிய கமலோ… திருட்டு விடியோவை ஆதரிக்கக்கூடாது திருட்டுவிடியோவினால் வரும் பணம் எல்லாம் நாட்டின் தீவிரவாதத்துக்கு போவதாகவும், அதனால் யாரும் திருட்டு வீடியோவை ஆதரிக்க வேண்டாம் என்றும் பேசியிருந்தார். அடுத்து ரஜினி பேசியிருக்கிறார். தன்னை இந்த கூட்டத்திற்கு அழைத்ததாகவும், தான் ஏன் வர வேண்டும் என்று கேட்டதற்கு எதிர்ப்பை காட்ட உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தான் இங்கு வந்ததாகவும், ஏற்கனவே ஜக்குபாய் திரைபடத்தில் தான் நடிக்க இருந்ததாகவும், மூன்று முறை அந்த படத்தை தயாரிக்க தடை ஏற்பட்டதாலும், வயதானவனாய் நடிக்க விருப்பமில்லாத்தாலும், அது ஒரு ப்ரெஞ்சு படத்தின் உல்டா என்றும் பேசினார். இதற்கு திருட்டு விடியோ வெளிவந்ததே பரவாயில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லோருமே சரத் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பதால், வேறு வழியில்லாமல் கடனே என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் வீடியோ பைரஸியை எதிர்ப்பதாய் சொல்லி இங்கே கூட்டியிருக்கும் மீட்டிங் ஆட்சிக்கு எதிரான ஒரு மீட்டிங் என்று எதுக்கு தேவையில்லாம பேசி மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு எல்லோருடைய பேச்சிலும் இருந்தது நிஜம்.

விடியோ பைரஸியை ஒழிக்க வேண்டுமானால் அரசு நடவடிக்கை எடுத்தால் தான் ஒழிக்க முடியுமே தவிர வேறு எந்த வழியிலும் ஒழிக்க முடியாது. ஐம்பது நாளுக்கு ஒரு படம் என்கிற ரீதியில் சன் பிக்சர்ஸின் படங்கள் வெளியாகும் தருணத்தில் நிச்ச்யமாய் ஒரு ரைய்டை போலீசார் நடததுகிறார்கள். சமீபத்தில் கூட வேட்டைக்காரன் படத்துக்கு திருட்டு வீடியோ விற்பவர்களை பற்றி போஸ்டர் எல்லாம் அடித்து பயமுறுத்தியிருந்தார்கள். எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள ஒரு காம்ப்ளெக்ஸில் திருட்டு வீடியோ பிரிவுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 ரூபாய் வீதம் ரெகுலராக மாமுல் கொடுத்துவிடுகிறார்கள். தமிழ் படங்களையும், போர்னோ படங்களையும் தவிர எல்லா மொழி படங்களையும் கடைகளில் வைத்து விற்பனை செய்வதற்கும், ரெய்ட் என்று ஏதாவது வந்தால் முன் கூட்டியே தகவல் தருவதற்க்கும் தான் இந்த மாமூல்.

இந்த பைரஸி டிவிடி விற்பவர்களுக்கு அவர்களுடய டெக்னாலஜியே எமனாகிவிடுகிறது. அதாவது எவனாவது ஒருவன் டிவிடியை 20 ரூபாய்க்கு வாங்கி, அதையே வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரில் பிரிண்ட் போட்டுவிட்டு அவன் செளகர்யத்துக்கு மெல்ல பார்த்து கொள்கிறான். அவன் அந்த சினிமா பார்பதற்கான இண்வெஸ்ட்மெண்ட் வெறும் பத்து ரூபாய் டிவிடிதான். ஒரு மாஸ்டர் காப்பியை எவனாது திருட்டு தனமாய் ப்ரிண்ட் எடுத்து விற்றால் அவனுக்கு கிடைப்பது சில பல ஆயிரங்கள் மட்டுமே, அதை வைத்து ப்ரிண்ட் போட்டு மொத்தமாய் அவன் ஒருவனால், அவனிடமிருக்கும் நெட்வொர்க்கின் பலத்தை பொறுத்து முதல் விற்பனையில் எத்தனை காப்பி வெளியாகிறதோ அவ்வளவுதான் அவன் சேல்ஸ். அதன் பிறகு அதை காப்பி பண்ணி அவனவன் ப்ரிண்ட் போட்டு விடுகிறான். இவனுங்க பண்றது அநியாயம் என்று மாஸ்டர் ப்ரிண்ட் போட்டு விற்பவர்கள் புலம்புகிறார்கள். பெரும்பாலும் வீடியோ பைரஸி டிவிடிகளை விற்பவர்கள் ஒரு குடிசை தொழில் போலத்தான் செய்கிறார்கள். திருட்டு வீடியோவில் கூட மக்கள் நல்லாருக்குன்னு தெரிஞ்ச படங்களை மட்டுமே வாங்கி பார்க்கிறார்கள். தோல்வி அடைந்த படங்களில் வீடியோக்கள் கிடைக்கவே கிடைக்காது. பெரிய நடிகர்கள் , இயக்குனர்களின் படங்களை தவிர. சமீபத்தில் வெளியாகி வந்த சுவடே தெரியாமல் போன கண்ணுக்குள்ளே என்கிற ப்டத்தின் டிவிடியை இதுவரை தேடிக் கொண்டிருக்கிறோம் கிடைத்த பாடில்லை.

ஸோ.. கமல் சொன்னது போல இந்த காசெல்லாம் தீவிரவாத குழுக்களுக்கு பயன் படுகிறது என்பதை நேரடியாய் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பால டிவிடி விற்பனையாளர்கள் மாதம் இருபது ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க பயன்படும் தொழிலாய் மட்டுமே இருக்கிறது. நாளை இது இல்லாவிட்டால் வேறு ஒன்றை விற்று அவனால் சம்பாதிக்க முடியும், அந்த காசை தீவிரவாத அமைப்புகளுக்கு கொடுக்க முடியும்.

ரஜினி ஏதேதோ பேசி கடைசியாய் தெளிந்து சட்டத்த நாம் கையில் எடுக்கக்கூடாது என்று கருத்து சொல்லி நல்ல பெயர் வாங்க முயற்சி செய்தாலும், அதற்கு முன்னால் பேசியது அபத்ததின் உச்சம், ஏற்கனவே நொந்து போயிருக்கும் சரத்தின் மனதை, ப்ரெஞ்சு படத்திலிருந்து உல்டா செய்தது, வயசானவனின் கதை, ஏற்கனவே மூன்று முறை தடங்கலான கதை என்றெல்லாம் சொல்லிவிட்டு, சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்க சரத்துனு அட்வைஸ் வேற. அவரு என்ன மாட்டேன்னா சொல்றாரு படம் முடிஞ்சி ரெண்டு மாசமாயிருச்சு. வாங்கிறதுக்கு ஆளில்லாம முழிச்சிட்டிருக்கு தயாரிப்பு. இந்த நேரத்துல செண்டிமெண்ட் அதிகமாயிருக்கிற சினிமா உலகை பற்றி தெரிந்தவர்கள் இவ்வ்ளவு நெகட்டிவான விஷயங்களை சொன்னால் எப்படி விளங்கும்? ஒரு வேளை இதுலே ஏதாவது உள்குத்து இருக்குமோ?

இந்த படம் வீடியோ வெளிவந்ததில் இன்னொரு பெரிய இடத்து விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். ஜக்குபாய் ராதிகாவின் ராடனும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரித்திருக்கிறது. ஒரு வேளை இந்த படம் வெளிவந்தால் ஜீ தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டு விடக்கூடிய அபாயம் இருக்க், அதையேன் வளர்பானேன், ஆரம்பத்திலேயே கட் செய்ய வேண்டும் என்ற உள்குத்து கூட இருக்கலாம்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் நம் திரையரங்குகளில் அநியாயமாய் வைத்து விற்கப்படும் டிக்கெட் விலை. புதிய படங்கள் வெளியாகும் போது ஒரு டப்பா தியேட்டரில் கூட அநியாயமாய் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள். சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் சென்னையில் 50 ரூபாய்க்கு மேல் விற்கவே கூடாது என்கிற சட்டம் அமுலில் இருக்கிறது. ஆனால் அரசு இதை கண்டு கொள்வதேயில்லை. ஏனென்றால் அவர்களின் குடும்பமும் சினிமா தயாரிக்கிறது. கிராமப்புரங்களில் இன்னும் குறைவு 30 ரூபாய் தான் டிக்கெட் விலை. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் கீழ் நிலை டிக்கெட்டுகளை கொடுக்காமல் ப்ளாட்டாக எல்லா டிக்கெட்டுகளும் ஒரே விலைக்கு விற்கபடுகிறது. ஆந்திராவில் ஹைதராபாத்தில் ஒரு பெரிய ஏஸி டி.டி.எஸ் பால்கனியில் 40 ரூபாய்க்கு படம் பார்க்க முடியும். அதனால் தான் அங்கு டிவிடி இல்லை என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும் இப்போது பைரஸி வர ஆரம்பித்துகூட தியேட்ட்ர்களில் கூட்டம் குறையவில்லை.

தமிழக அரசு திருட்டு வீடியோ விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று சட்டமியற்றியும் பெரிதாய் பருப்பு வேகவில்லை என்றால் அதன் காரணம் என்ன? அதில் சில பல ஓட்டைகளை வைத்துள்ளது. எடுத்தவுடனேயே டிவிடி விற்பவன் மேல் குண்டர் சட்டத்தை பாய விடுவதில்லை. முதல் முறையில் ஒரு சின்ன கேஸை போட்டு வெளியே விட்டு விட்டு, மெல்ல அவன் தெளிவடைந்து, கட்டிங் கொடுத்து சின்ன வேலைகளை செய்தவன், சற்றே பெரிய லெவலில் வரும் போது, மேலும் பெரிய கட்டிங் கொடுத்து தொழிலதிபர் ஆகிவிடுவான். அடுத்த முறை அரெஸ்ட் ஆகுபவன் அவனிடம் வேலை செய்யும் ஒரு சின்னப் பையன். திரும்பவும் முதலில்லிருந்து ரவுண்ட் ஆரம்பிக்கும். இது வரை எத்தனை பெயரை போலீஸார் குண்டர் சட்டம் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள்? திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள். திரையரங்குகளில் சுமார் படங்களுக்கு கூட நல்ல கூட்டம் இருக்கிறது. அதே போல திருநெல்வேலியிலும் டிவிடி கிடைப்பதில்லை. நான் வங்கி த்ருகிறேன் என்று சொல்லும் சில பேர் கூட அவ்வலௌ சுலபமாய் இதற்கு முன்பு வாங்கியது போல வாங்க முடிவதில்லை என்பது உண்மை. இங்கு மட்டும் ஒரு தனிப்பட்ட அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடிந்த அ அரசு நினைத்தால் திகாரிகளால், மற்ற இடங்களில் ஏன் செயல் படுத்த முடியவில்லை?. அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை.



தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க
Post a Comment

100 comments:

மணிஜி said...

மக்குபாய்..அதாவது மக்கிப்போன பாயி...

Cable சங்கர் said...

தொடர்ந்து என் பதிவுகளை படித்தோ, அல்லது படிக்கமலேயோ..போடும் இரண்டு மைனஸ் ஓட்டு வாசகருக்கு நன்றி.. இன்னொருத்தர் எங்கப்பா..

உண்மைத்தமிழன் said...

யோவ்

ஏன்யா இவ்ளோ அவசரம்..? கொஞ்சம் மெதுவாத்தான் கடைசியா மறுபடியும் ஒரு தடவை படிச்சிட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கெல்லாம் பார்த்துட்டு போஸ்ட் செய்ய வேண்டியதுதான..?

போன போஸ்ட்ல முடிவையே காணோம்.. இதுல முடிவுல எழுத்தெல்லாம் பரமபதம் ஆடுது..! அரைலூஸு..!

உண்மைத்தமிழன் said...

ஜீ டிவி இந்தப் படத்திற்காக ஆரம்பத்தில் கொடுத்தது வெறும் 5 கோடி ரூபாய்தான்..! அப்போதைய சரத்குமாரின் பட்ஜெட்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மாஸ் கலெக்ஷன்.. இதையெல்லாம் யோசித்து இவ்ளோதான் என்றது..

ஆனால் இப்போது படத்தின் செலவு 18 கோடியாகிவிட்டது என்று சொல்லி பேப்பரை நீட்டியிருக்கிறார்கள். இதுதான் படம் வெளிவருவதில் நடக்கும் அக்கப்போர்..

எப்படியும் கட்டப்பஞ்சாயத்து செய்தாவது வாங்கிவிடலாம் என்று இவர்கள் நினைத்திருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் இந்த பூதம் கிளம்பிவிட்டது..

ஜீ டிவியோ "சரத்குமாருக்கு அப்படியென்ன மார்க்கெட் இருக்குன்னு 18 கோடிக்கு செலவு பண்ணுனீங்க"ன்னு கட் அண்ட் ரைட்டா கேட்டுத் தொலைஞ்சிட்டாங்களாம்..!

"சித்தி" கோபத்துல கொதிச்சுக்கிட்டிருக்காங்க.. அடுத்த பஞ்சாயத்து விரைவில் வெளிவரும்..!

Cable சங்கர் said...

அதான் சொன்னேனே உ.த..பின்னாடி பல உள்குத்துகள் இருக்குன்னு

உண்மைத்தமிழன் said...

[[[போடும் இரண்டு மைனஸ் ஓட்டு வாசகருக்கு நன்றி.. இன்னொருத்தர் எங்கப்பா..]]]

வாசகர்களுக்கு நன்றி என்றுதான் இருக்க வேண்டும். இரண்டு பேரல்லவா..?

ஆமா.. ஒண்ணு நானு..!!! இன்னொருத்தர் யாரு..?

bandhu said...

a very good analysis! you are sooo right!

CS. Mohan Kumar said...

நல்ல அலசல் தல.. பிரச்னையை சரியா எழுதியிருக்கீங்க..

கோவி.கண்ணன் said...

//மூன்று முறை அந்த படத்தை தயாரிக்க தடை ஏற்பட்டதாலும், வயதானவனாய் நடிக்க விருப்பமில்லாத்தாலும், அது ஒரு ப்ரெஞ்சு படத்தின் உல்டா என்றும் பேசினார். இதற்கு திருட்டு விடியோ வெளிவந்ததே பரவாயில்லை.//

:)

ramtirupur said...

ரஜினி ஏன் இவ்வளவு அபத்தமா பேசறாரு ?

Ganesan said...

உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதை.

http://kaveriganesh.blogspot.com/2010/01/blog-post_04.html

ரவி said...

away from the target. - vote

Ganesan said...

திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள்.


அப்படியாங்க??

நீங்க ரொம்ப குறும்பு

க.பாலாசி said...

//இந்த படம் வீடியோ வெளிவந்ததில் இன்னொரு பெரிய இடத்து விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். ஜக்குபாய் ராதிகாவின் ராடனும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரித்திருக்கிறது. ஒரு வேளை இந்த படம் வெளிவந்தால் ஜீ தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டு விடக்கூடிய அபாயம் இருக்க், அதையேன் வளர்பானேன், ஆரம்பத்திலேயே கட் செய்ய வேண்டும் என்ற உள்குத்து கூட இருக்கலாம்.//

இருக்கலாம்... இருக்கும்....

Ashok D said...

தலைவரே.. துணிச்சலா நெறைய விஷயங்களை எழுதியிருக்கீங்க... துவைச்சி காயப்போட்டும் இருக்கீங்க... சபாஷ் நல்லதொர் பதிவு....

நல்லா கேட்டுங்க மகஜனங்களே யூத்தும் சில சமயம் சீரியஸா எழுதுவார்... எழுதுவார்

வரதராஜலு .பூ said...

இவ்வளவு விஷயம் இருக்கா இதுல.

//இந்த படம் வீடியோ வெளிவந்ததில் இன்னொரு பெரிய இடத்து விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். ஜக்குபாய் ராதிகாவின் ராடனும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரித்திருக்கிறது. ஒரு வேளை இந்த படம் வெளிவந்தால் ஜீ தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டு விடக்கூடிய அபாயம் இருக்க், அதையேன் வளர்பானேன், ஆரம்பத்திலேயே கட் செய்ய வேண்டும் என்ற உள்குத்து கூட இருக்கலாம்.//

இருக்கும் இருக்கும்


//ஏற்கனவே நொந்து போயிருக்கும் சரத்தின் மனதை, ப்ரெஞ்சு படத்திலிருந்து உல்டா செய்தது, வயசானவனின் கதை, ஏற்கனவே மூன்று முறை தடங்கலான கதை என்றெல்லாம் சொல்லிவிட்டு,//

நல்லா சொல்லுங்க

நல்லதோர் பகிர்வு

Unknown said...

போச்சி, உங்களுக்கு அப்ப ரஜினி, கமல், சரத் கால்ஷீட் கிடைக்காது..

நல்ல பதிவு.

Beski said...

//Cable Sankar said...
தொடர்ந்து என் பதிவுகளை படித்தோ...//

இப்படி ஒரு நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?

Paleo God said...

ஜி கொஞ்ஜமாவது பொறுப்பு வேண்டாமா அடிக்கிற குளிர்ல அம்மினி எவ்ளோ நாளா தண்ணியில நிக்குது.. பாத்து (போத்துங்க..சீ..) மாத்துங்க...:))

butterfly Surya said...

முழுக்க முழுக்க கருப்பு பணத்தில் குளித்து கும்மாளமிடும் சினிமா அதிபர்கள், நடிகர்கள் முதலில் ஒழுங்காக வரி கட்டட்டும்.

அப்புறம் அடுத்தவன் திருட்டை பற்றி பேசலாம்.

தண்டோரா பன்ச் சூப்பர்.

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சங்கர்,

ஒரு விரிவான பின்னூட்டம். :-) .
// பைரஸி வீடியோ ஏதோ ஒரு ஸ்டியோவிலிருந்து அது எந்த ஸ்டூடியோவிலிருந்து என்று படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும்//

ரொம்ப சரி. சித்திக்கும் , சித்தப்புக்கும் அது யார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஏதும் செய்ய இயலாது. காரணம் எதிராளியிடம் உள்ள அதிகாரமும் அது தரும் வலிமையும். மேலும் தற்போதைய சார்ந்திருத்தலும்....


// அடுத்து பேசிய கமலோ… திருட்டு விடியோவை ஆதரிக்கக்கூடாது .... திருட்டு வீடியோவை ஆதரிக்க வேண்டாம் என்றும் பேசியிருந்தார்.//

கமல் ஒரு காலத்தில் பர்பெக்ஷனிஸ்ட் ஆக இருந்தார். ஆனால் இப்போது அப்படி இல்லை. காரணம் Vitamin M(Money) தான். அன்பே சிவம் அருமையான படம். பாராட்டுக்கள் ஏராளம். ஆனால் வசூலில் ? காரணம் நாம் தான் !!!

பாவம் அவருக்கு சினிமாவை விட வேறு எந்த தொழிலும் தெரியாது. இதில் உள்குத்து ஏதும் கிடையாது . ஆதலால் தான் தீவிரவாத்தை பற்றி எடுத்த உன்னைப்போல் ஒருவனில் ஏராளாமான Technical Goofs. 1. அந்த மாடி கட்டிடத்தில் இயங்கிய அனைத்து உபகரணங்களும் மின்இணைப்பு தரும் விரிவாக்க பெட்டியில் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதற்கு மின் இணைப்பு இருக்காது. ஆனால் A Wednesday ல் கீழிருந்து ஒரு வயர் வரும். தற்போதைய தொழில்நுட்பத்தில் ஒரு சில Netbook தவிர்த்து அனைத்து மடிக்கணனிகளும் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் பேட்டரியில் இயங்கும்.

2. சென்னையில் எந்த தனியார் தொலைக்காட்சியும் "Free to Air" கிடையாது. அதைப்பார்க்க கண்டிப்பாக கேபிள் அல்லது டிஷ் தேவை. DD தவிர. (இந்தியா முழுவதும் இப்படித்தான் என நினைக்கிறேன், காரணம் இந்தியாவில் நான் அதிகபட்சம் சென்ற தூரம் பெங்களூரு தான்) இன்னும் உள்ளது. ஆனால் பின்னூட்டம் இடுகையைவிட பெரிதாகிவிடும். ஆகையால் விடு ஜூட் ...


// இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லோருமே சரத் நடிகர் .....துக்கு தேவையில்லாம பேசி மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு எல்லோருடைய பேச்சிலும் இருந்தது நிஜம். //

வாவ் . எல்லைக்கோட்டை தொட்டுவிட்டீர்கள். ரொம்ப துணிச்சல் தான். பாராட்டுகள். வெறுமனே பாராட்டி(உசுப்பத்தி)விட்டு தான் செல்ல இயலும். ஆட்டோ வந்தால் ஓட்டம் தான். :-))) நாங்க எல்லாம் ஸ்டீல் பாடி கிடையாது.



// எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள ஒரு காம்ப்ளெக்ஸில் திருட்டு வீடியோ பிரிவுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 ரூபாய் வீதம் ரெகுலராக மாமுல் கொடுத்துவிடுகிறார்கள்.//

தொகை நான் கேள்விபட்டதைவிட ரொம்ப கம்மிய இருக்கே? செய்யற தொழில் தப்பாக இருந்தாலும் இதில் ரொம்ப சுத்தம். இது ஒரு ரிலே ரேஸ் போல அந்த பிரிவிற்கு வரும் அடுத்த அதிகாரியிடமும் அழகாக மடைமாற்றிவிடப்படும் !!!.


// இந்த படம் வீடியோ வெளிவந்ததில் இன்னொரு பெரிய இடத்து விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். ... ஒரு வேளை இந்த படம் வெளிவந்தால் ஜீ தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டு விடக்கூடிய அபாயம் இருக்க், அதையேன் வளர்பானேன், ஆரம்பத்திலேயே கட் செய்ய வேண்டும் என்ற உள்குத்து கூட இருக்கலாம்.//

மறுபடியும் மிகப்பெரிய இடத்தை சீண்டுகிறீர்கள். வேண்டாம் இந்த விபரீத வேலை . :-)))) அவர்கள் இணைந்துவிட்டார்கள். அங்கே இதயம் இனித்து கண்கள் பனித்துவிட்டது. ஆகவே வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. ச்சும்மா !!!!


// தமிழக அரசு திருட்டு வீடியோ விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று .... எடுத்தவுடனேயே டிவிடி விற்பவன் மேல் குண்டர் சட்டத்தை பாய விடுவதில்லை. முதல் முறையில் .... ளிவடைந்து, கட்டிங் கொடுத்து சின்ன வேலைகளை செய்தவன், சற்றே பெரிய லெவலில் வரும் போது, மேலும் பெரிய கட்டிங் கொடுத்து தொழிலதிபர் ஆகிவிடுவான். அடுத்த முறை அரெஸ்ட் ஆகுபவன் அவனிடம் வேலை செய்யும் ஒரு சின்னப் பையன். திரும்பவும் முதலில்லிருந்து ரவுண்ட் ஆரம்பிக்கும். இது வரை எத்தனை பெயரை போலீஸார் குண்டர் சட்டம் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள்?//

விரிவான விளக்கத்தைப்பார்த்தால் இந்த தொழில் ஏற்கனவே வசப்பட்ட ஒன்று போல தோன்றுகிறதே? !!! ம்ம்ம் அயன் படத்தில் கூட சூர்யா, பிரபுவிற்கு பதிலாக விஜய் டிவி நண்டு தான் மாமியார் வீட்டிற்கு விஜயம்.


கடைசியா உதவி வேண்டி :- சென்னை வருகிறேன். எந்த தியேட்டரில் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதாரை' குடும்பத்துடன் 3D ல் முழு திருப்தியுடன் பார்க்கலாம்? திருட்டு டிவிடி ஒன்றும் வேலைக்காகவில்லை !

moe said...

this is a very complex,convoluted problem. Real root cause is multifold.

To start, just try going to a movie in various modes of transportation.
Try getting movie tix from various sources.
Try to get the movie going expereicene..

எறும்பு said...

சூப்பரு

:)

எம்.எம்.அப்துல்லா said...

//ரஜினி ஏதேதோ பேசி கடைசியாய் தெளிந்து சட்டத்த நாம் கையில் எடுக்கக்கூடாது என்று கருத்து சொல்லி நல்ல பெயர் வாங்க முயற்சி செய்தாலும், அதற்கு முன்னால் பேசியது அபத்ததின் உச்சம், ஏற்கனவே நொந்து போயிருக்கும் சரத்தின் மனதை, ப்ரெஞ்சு படத்திலிருந்து உல்டா செய்தது, வயசானவனின் கதை, ஏற்கனவே மூன்று முறை தடங்கலான கதை என்றெல்லாம் சொல்லிவிட்டு, சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்க சரத்துனு அட்வைஸ் வேற. அவரு என்ன மாட்டேன்னா சொல்றாரு படம் முடிஞ்சி ரெண்டு மாசமாயிருச்சு. வாங்கிறதுக்கு ஆளில்லாம முழிச்சிட்டிருக்கு தயாரிப்பு. இந்த நேரத்துல செண்டிமெண்ட் அதிகமாயிருக்கிற சினிமா உலகை பற்றி தெரிந்தவர்கள் இவ்வ்ளவு நெகட்டிவான விஷயங்களை சொன்னால் எப்படி விளங்கும்? ஒரு வேளை இதுலே ஏதாவது உள்குத்து இருக்குமோ?

//

அந்த உள்குத்து என்னன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க பாருங்க

:)

ஜெட்லி... said...

சும்மா பிரிச்சு மெய்ஞ்சிட்டிங்க தலைவரே....

பின்னோக்கி said...

ரொம்ப பெரிய விவகாரமா இருக்கும் போல. படிச்சுட்டேன். மத்தபடி எனக்குன்னு கருத்து ஒன்னும் இல்லைங்க. வர்றேங்க.

Ravikumar Tirupur said...

ஜீ படதயாரிப்பை முடக்கும் மேட்டரில் கண்டிப்பாக உங்க சந்தேகம்தான் எனக்கும்.
திருட்டு வீடியோக்கு கடுமையான நடவடிக்கை வேண்டுமா? எந்திரன் டிரெய்லர் ரிலீஸ்கு முன்னாடி வேறும் டிரெய்லர மட்டும் நெட்ல விட்டுபாக்க சொல்லுங்க அப்ப பாயும் பாரு சட்டம்!

இராஜ ப்ரியன் said...

எப்பொழுதும் போல பேசி மாட்டிகிட்டாரா ? ஐயோ..... ஐயோ........... இந்த ராவுக்கு இதே வேல

வெண்பூ said...

எவ்ளோ பெரிய பெரிய (இடம் சம்பந்தபட்ட) விஷயங்களை அசால்ட்டா சொல்லியிருக்கீங்க.. பாத்து ஆட்டோ / சுமோ வரப்போகுது..

மரா said...

நல்ல அலசல்.இவ்ளோ விசயம் இருக்கா இதுல.முடியலடா சாமி.

Marimuthu Murugan said...

//அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை.//

உண்மை

arul said...

அன்புள்ள கேபிளார்,

நான் உங்க ப்ளாக்க எப்பொழுதும் வாசிபேன்.
ஒரு விஷ‌ய‌ம் நான் நினைக்கிற‌து என்ன‌னா "நீங்க‌ எப்பொழுதும் ர‌ஜினிய ம‌ட்ட‌ம் த‌ட்டுற‌ மாதிரியே,அல்ல‌து குற்றம் சொல்லுற மாதிரியே எழுதுறீங்க‌ளே அது ஏன்?"

I hope I did not type anything wrong.

உண்மைத்தமிழன் said...

[[[arul said...

அன்புள்ள கேபிளார், நான் உங்க ப்ளாக்க எப்பொழுதும் வாசிபேன்.
ஒரு விஷ‌ய‌ம் நான் நினைக்கிற‌து என்ன‌னா "நீங்க‌ எப்பொழுதும் ர‌ஜினிய ம‌ட்ட‌ம் த‌ட்டுற‌ மாதிரியே,அல்ல‌து குற்றம் சொல்லுற மாதிரியே எழுதுறீங்க‌ளே அது ஏன்?"
I hope I did not type anything wrong.]]]

மனசுக்குள்ள இருக்குற தானும் ஒரு ரஜினின்ற நினைப்புதான்..! வேறென்ன..?

உண்மைத்தமிழன் said...

அப்துல்லாஜி..

அதுதான் ரஜினி..!

வேறெந்த நடிகராவது இந்த அளவுக்காச்சும் உண்மை பேசியிருக்காங்களா..?

தெரிந்த கதையாகவே இருந்தாலும் நல்லபடியா எடுத்திருந்தா படம் நல்லாவே ஓடும் என்பது ரஜினியின் கருத்து. அதனாலதான் ஓப்பன் டாக்ல வுட்டாரு சவுண்ட்டு..!

உடனே வாசபி டிவிடி வாங்கணும்பா..!

வாழ்க அண்ணன் ரஜினி..!

சைவகொத்துப்பரோட்டா said...

//முழுக்க முழுக்க கருப்பு பணத்தில் குளித்து கும்மாளமிடும் சினிமா அதிபர்கள், நடிகர்கள் முதலில் ஒழுங்காக வரி கட்டட்டும். //

33 - இல் ஒரு வார்த்தை. சரியாக சொன்னீர்கள்.

வந்தியத்தேவன் said...

இங்கேயும் கொழும்பு வீதிகளில் மலிவு விலையில் ஜக்குபாய் சிடி விற்பனையாகின்றது. நல்ல தரமான சிடி என்கின்றார்கள். படம் வெளிவராமல் சிடியில் முதலில் வெளியான முதல் படம் என்ற குரலுடன் முதன்முதலில் திரைக்கு வரலாம்.

ஜீ டிவி விடயம் சிந்திக்க வைக்கின்றது. விஜய் டிவியின் செய்திகளை நிறுத்தியவர்கள் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள் அவர்களின் கையில் தானே மத்திய மாநில ஆட்சிகள்.

மகா said...

சரத் : நெக்ஸ்டு மீட் பண்ணுவோம் ....

thiru said...

//அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை //
- அண்ணே .. எல்லாம் சொன்ன நீங்க," எடுக்குற படத்த நல்ல படமா எடுத்தா" - அப்படிங்கறதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.
மொழி,பசங்க,சுப்பிரமணியபுரம்,நாடோடிகள் - இதுக்கெல்லாம் DVD இல்லியா என்ன ?

எனக்கெல்லாம் ஓசியில DVD குடுத்தாக்கூட 2 மணிநேரம் எதுக்கு நேரத்த வீணாக்கிக்கிட்டு-ன்னு போய்டுவேன்.
ஆனாலும், நானே விரும்பி போய் பாத்த படங்கள் ஒரு சிலது தான்.
DVD-யக் காரணம் சொல்றது எல்லாம் சும்மா டுபாகூர் வேல ..
ஜக்குபாய் படத்த internet-ல வெளியிட்டும் எத்தன பேரு download பண்ணியிருப்பாங்க .. ???

shortfilmindia.com said...

/அதுதான் ரஜினி..!

வேறெந்த நடிகராவது இந்த அளவுக்காச்சும் உண்மை பேசியிருக்காங்களா..?

தெரிந்த கதையாகவே இருந்தாலும் நல்லபடியா எடுத்திருந்தா படம் நல்லாவே ஓடும் என்பது ரஜினியின் கருத்து. அதனாலதான் ஓப்பன் டாக்ல வுட்டாரு சவுண்ட்டு..!//

இப்படி பேசினதை எல்லாம் பாராட்டிட்டா.. பேசினது சரியாயிருமா..? யோவ் வேலையா பாருய்யா.. பின்னூட்டம் போட்டுகிட்டு.. திரும்ப பதிவெழு அனுப்பிச்சிர போறாங்க..:)

Cable சங்கர் said...

/I hope I did not type anything wrong.//

இல்லை தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ரஜினியை மட்டுமல்ல.. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், சேரன் உள்பட் எல்லோரையும்தான் எழுதியிருக்கிறேன். ரஜினியை பற்றி மட்டும் தவறாக சொல்கிறேன். என்பது கொஞ்சம் ஜாஸ்தியாகவே கருதுகிறேன். சொல்லக்கூடாது என்று ஏதும் விதி விலக்கல்ல..

Srinivas said...

//திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள்.


அப்படியாங்க??

நீங்க ரொம்ப குறும்பு//

Ada Pongappa...Trichy la 3 monthsa PADAYAPPA 5.1 DVD kettuttu Irukken...Innum Kedaikkala...So Moserbaer Super DVD dhaan Kaapaathudhu...

Padam Nalla Eduthaa Kandippa Theatre la paappaanga...

Padam Release aana 3 months la Original DVD ya avangale Release panna Podhum...

குப்பன்.யாஹூ said...

திருட்டு விசிடி யால் கூட்டம் குறைகிறது என்பது எல்லாம் பத்து சதவீத உண்மையே.

இதே திருட்டு விசிடி காலத்தில் தான் சுப்ரமணியபுரம், சிவாஜி, ஈரம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஜக்குபாய் திருட்டு வீசிடி வெளியாகாமல் இருந்து இருந்தால் பத்து நாட்கள் ஓடி இருக்கும், இப்போது எட்டு நாட்கள் ஓடும், அதுதான் பெரிய வித்தியாசம்.

தராசு said...

கேபிள் அண்ணே,

அடிச்சு, துவைச்சு, பிழிஞ்சு, காயப் போட்டிருக்கீங்க.

அய்யா காவேரி கணேஷூ,

ரஜினி என்னைக்கு தெளிவா பேசியிருக்காரு??????

சங்கமித்திரன் said...

ஏனுங்கன்னா,
இது லியாம் நீசன் நடித்த டேக்கன் படத்தோட கதை தானுங்களே?
இதை இன்னும் எத்தனை பேரு எடுப்பான்? கப்பிபயலுங்கோ, என்கிட்ட நூறு உண்டு

creativemani said...

கேபிள் அண்ணே..

ரஜினி ஜக்குபாய் திரைப்படத்தால் தனக்கு ஏற்பட்ட நெகடிவ் விஷயங்கள் பற்றித் தான் சொன்னாரே தவிர.. படத்தைப் பற்றி நெகடிவ்வாக ஒன்றுமே சொல்லவில்லை.. மாறாக படம், நல்ல கதை, வயசானாலும் பவர்புல் ஹீரோ சப்ஜெக்ட் என்று தான் சொன்னார்..

மேலும், எந்த படமும் நல்லா இல்லேன்னா யார் சொன்னாலும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள் என்று தானே சொன்னார்..

எல்லாத்துக்கும் மேல.. திருட்டு விசிடி உருவாகும் முக்கிய காரணங்களை சொல்லி, அதையெல்லாம் முதல்ல தடுத்து நிறுத்துங்கன்னு சொன்னாரே.. உங்க பதிவுல அதைபற்றி நீங்க குறிப்பிடவே இல்ல... ஏன்???

நெருப்புச் சக்கரம் said...

அந்த ஃப்ரெஞ்சு படம் நல்ல படம்ங்க..

ஒன்றரை மணி நேரம் போனதே தெர்ல...

இவய்ங்க எடுத்தா எப்பட்டியும் மொக்கயாத்தான் எடுப்பாய்ங்க....அதுவும் சரத் வேற...

But do watch the original film..its really a good entertainer...to be watched...

வஜ்ரா said...

சேரன் ரொம்ப அறிவாளி மாதிரி பேசப்பார்த்தார்.
ஆனால், ரஜினி நல்ல குட்டுவைத்தார்.

90% திருட்டு டி.வி.டிக்கள் சினிமா காரர்கள் தான் பிரிண்டு போட்டு விற்கிறார்கள். அதைத்தான் ரஜினி முதலில் தடுக்கச் சொன்னார்.

போஸ்ட் புரடக்ஷன்ல் தான் அதெல்லாம் நடக்கிறது. ஆகவே சினிமா காரர்கள் டி.வி.டி விற்பவர்களை திட்டுவதை விட்டுவிட்டு, தாங்கள் தயாரிக்கும் படங்களை கலர் லேப்புகள், சவுண்ட் மிக்ஸிங்க் லேபுகளிலிருந்து திருட்டு டி.வி.டி போடுவதைத் தடுக்க வழி செய்தாலே போதும். திருட்டு டி.வி.டி கிடைக்காது. தியேட்டர் பிரிண்ட் மட்டுமே கிடைக்கும். தியேட்டர் பிரிண்டை அவ்வளவாக யாரும் விரும்பிப் பார்ப்பதில்லை.

சில்க் சதிஷ் said...

இதயம் இனித்து கண்கள் பனித்துவிட்டது.



திருட்டு விடியோ Producers enka area.

Neathji Nagar Korukupet.

Maani said...

Dear CableSankar,

Reading your blog for a year now. While I appreciate your efforts to educate blog readers about nuances of cinema both technical and business, at the same time I'm disappointed with such venomous animosity against Rajni. This view of yours will make blog followers think the credibility of other articles published if it might be with the same perception as it is with this article.

By no means, I portray Rajini as immortal or exception for critics. But with this incident particularly, I find nothing wrong with him, infact he was magnanimous to be present there after how sarath commented on him in last couple of years.

More over, I dont accept he was there just coz Sarath being head of Nadigar sangam. You will be knowing well how helpful Nadigar sangam were during Baba and kuselan fiasco. So, I request you to look things based on incidents not on your likes and dislikes with a person.

Cheers,
MS

ramalingam said...

எல்லாம் டிவிதான் காரணம். திரைக்கு வராமல் சில மாதங்களே ஆன என விளம்பரம் செய்யாமல் விட்டார்களே!

kalil said...

தல , செம hot ah இருக்கு உங்க போஸ்ட் ....

Post Highlight:திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள். திரையரங்குகளில் சுமார் படங்களுக்கு கூட நல்ல கூட்டம் இருக்கிறது. அதே போல திருநெல்வேலியிலும் டிவிடி கிடைப்பதில்லை. நான் வங்கி த்ருகிறேன் என்று சொல்லும் சில பேர் கூட அவ்வலௌ சுலபமாய் இதற்கு முன்பு வாங்கியது போல வாங்க முடிவதில்லை என்பது உண்மை. இங்கு மட்டும் ஒரு தனிப்பட்ட அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடிந்த அ அரசு நினைத்தால் திகாரிகளால், மற்ற இடங்களில் ஏன் செயல் படுத்த முடியவில்லை?. அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை.

நன்றி
kalil

kalil said...

தல , செம hot ah இருக்கு உங்க போஸ்ட் ....

Post Highlight:திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள். திரையரங்குகளில் சுமார் படங்களுக்கு கூட நல்ல கூட்டம் இருக்கிறது. அதே போல திருநெல்வேலியிலும் டிவிடி கிடைப்பதில்லை. நான் வங்கி த்ருகிறேன் என்று சொல்லும் சில பேர் கூட அவ்வலௌ சுலபமாய் இதற்கு முன்பு வாங்கியது போல வாங்க முடிவதில்லை என்பது உண்மை. இங்கு மட்டும் ஒரு தனிப்பட்ட அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடிந்த அ அரசு நினைத்தால் திகாரிகளால், மற்ற இடங்களில் ஏன் செயல் படுத்த முடியவில்லை?. அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை.

நன்றி
kalil

kalil said...

தல , செம hot ah இருக்கு உங்க போஸ்ட் ....

Post Highlight:திருச்சியில் கருணாசாகர் பதவியேற்ற பின்பு திருச்சியில் டோட்டலாய் டிவிடியை ஒழித்திருக்கிறார்கள். திரையரங்குகளில் சுமார் படங்களுக்கு கூட நல்ல கூட்டம் இருக்கிறது. அதே போல திருநெல்வேலியிலும் டிவிடி கிடைப்பதில்லை. நான் வங்கி த்ருகிறேன் என்று சொல்லும் சில பேர் கூட அவ்வலௌ சுலபமாய் இதற்கு முன்பு வாங்கியது போல வாங்க முடிவதில்லை என்பது உண்மை. இங்கு மட்டும் ஒரு தனிப்பட்ட அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடிந்த அ அரசு நினைத்தால் திகாரிகளால், மற்ற இடங்களில் ஏன் செயல் படுத்த முடியவில்லை?. அரசு நினைத்தால் டிவிடி பைரஸியை முழுவதுமாய் ஒழித்து விட்டு, தியேட்டர் கட்டணங்களை இயற்றிய சட்டப்படி நிலைநிறுத்தினால், வரி விலக்கில்லாம் கூட தமிழ் படங்கள் வாழும் என்பதே உண்மை.

நன்றி
kalil

பீர் | Peer said...

சங்கர் அண்ணே, திருட்டி டிவிடியை ஒழிப்பதால் பொதுசனத்திற்கு என்ன நன்மை? அல்லது இப்படியே இருந்துவிடுவதால் அவனுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? என்பதை சொல்லாமல் வீடியோ பைரஸியை ஒழித்துவிட முடியாது. அதாவது, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் கான்சப்ட் (இங்கு திருடன் பொதுசனமும் தான்)

sreeja said...

கேபிள் அண்ணன் வீட்டுக்கு ஒரு ஆட்டோ பார்சல்ல்ல்ல்ல்லேய்ய்ய்ய்ய்....

kanagu said...

anna..... cinema la irundhu arasiyal varaikum thottu thool kelappiteenga :) :) aana paathu suthaanama irunga :) :)

அக்னி பார்வை said...

///இந்த படம் வீடியோ வெளிவந்ததில் இன்னொரு பெரிய இடத்து விஷயமும் இருக்கிறது என்கிறார்கள். ஜக்குபாய் ராதிகாவின் ராடனும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரித்திருக்கிறது. ஒரு வேளை இந்த படம் வெளிவந்தால் ஜீ தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டு விடக்கூடிய அபாயம் இருக்க், அதையேன் வளர்பானேன், ஆரம்பத்திலேயே கட் செய்ய வேண்டும் என்ற உள்குத்து கூட இருக்கலாம்.///

paththa vachituyee paratta

சதீஷ் said...

இந்த ஜக்குபாய் பட டிவிடிய சும்மா குடுத்தாகூட ஒருத்தனும் வாங்கிட்டுப் போக மாட்டான். இதுக்கு இவ்ளோ பில்டப்பா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

புலவன் புலிகேசி said...

என்னமோ போங்க...எடுத்தவங்க பத்திரமா வச்சிருக்கனும்...

அப்துல் சலாம் said...

//ஜக்குபாய் படத்த internet-ல வெளியிட்டும் எத்தன பேரு download பண்ணியிருப்பாங்க .. ???//

வேஸ்டு .... டவுன்லோட் செய்யுற அளவுக்கு வொர்த் இல்லை


ரஜினி-சேரன் -கமல் எல்லோரும்
கடுபேத்துறாங்க my லார்ட் !!

சிம்பா said...

சங்கர் அண்ணா மீண்டும் ஒரு அருமையான பதிவு. நீங்க சொன்ன விசயத்தை கோர்வையா வச்சு, ஜக்குபாயும் திரைமறைவு ரகசியங்களும் என்று ஒரு படம் எடுத்தா, விடப்போற காசை புடிச்சிடலாம் போல.

தலைவருக்கு வாய்ல வாஸ்து சரி இல்லை. வயசான character காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. அனேகமா வயசுக்கு கூட வராத பொண்ணு ஜோடி கேட்டிருபாறு. அந்த கடுப்பு தான் இப்படி பேச வச்சிருக்கும்.

100 illa 200 rs டிக்கெட் வச்சா கூட பொறுத்துக்கலாம் ஆனால் கூட்டம் அதிகமானால், நாயை விட கேவலமா நடத்துவாங்க, (அந்நியன் படம் பார்க்க போனபொழுது நேரடி அனுபவம்), அதையும் மீறி, இவளோ கஷ்ட்டப்பட்டு திரையரங்கு போய் தான் படம் பார்க்கணுமா என்ற எண்ணம் அடிக்கடி வந்துபோகுது.

Mottai said...

I thought of experimenting outside Satyam and went to Devi, Abirami, Inox.

They treat everybody like terrorist in Inox.

Devi & Abirami is treating people like cattle. True 'cattle class'.

Overpriced popcorn. They are not allowing people to take their water bottles.

It is good that the thiruttu-DVD industry is around. Not everybody is paid that much to buy tickets for whole family and watch it in a theatre.

And after the movie, they will be pissed by the quality of the movie. :))

I welcome those guys who create thiruttu-DVD.

(Remember, thiruttu-VCD is abolished in Tamilnadu.)

ஜிகர்தண்டா Karthik said...

படம் நல்ல இருந்ததுன்னு என் நண்பன் சொன்னாரு..

Raja Subramaniam said...

சூப்பர் கேபிள்ஜி

torrent பத்தி எதாவது பதிவு போடுங்களேன்

VISA said...

//Reading your blog for a year now. While I appreciate your efforts to educate blog readers about nuances of cinema both technical and business, at the same time I'm disappointed with such venomous animosity against Rajni. This view of yours will make blog followers think the credibility of other articles published if it might be with the same perception as it is with this article. //

So do you mean to say that an ariticle which criticises Rajini will loose its credibility.

//By no means, I portray Rajini as immortal or exception for critics. But with this incident particularly, I find nothing wrong with him, infact he was magnanimous to be present there after how sarath commented on him in last couple of years.//

I am a ardent fan of Rajini since my childhood. But still I dont find anything magnanimous in his presence there. Its a debt which he as to repay or he is bound to attend such meetings as an actor.
Why should Rajini's presence should be felt magnanimous. Sarat might have passed comments about Rajini personally but remember Rajini is not participating in Sarat's party meeting.

More over, I dont accept he was there just coz Sarath being head of Nadigar sangam. You will be knowing well how helpful Nadigar sangam were during Baba and kuselan fiasco. So, I request you to look things based on incidents not on your likes and dislikes with a person.
//

I dont feel cable has written this article based on his lies or dislikes. Many times Rajini has proved that he is not good in delivering public speeches. Many times either he has made its way or people turn it that way his speeches has fetched very bad image in return. He doesnt have the personality outside the screen.
I would worship his as a hero icon in screen. But in public life he is ZERO. Have a lot to learn which he cannot or not willing and he to reduce all such tensions sit in Imayamalai and we poor guys just wonder what a MAGNANIMOUS person he is . Visiting imayamalai is not MANAM + ANMEEGAM. Visiting imayamalai is PANAM + ANMEEGAM.

Henry J said...

Burj Dubai opening ceremony Photo Gallery
"Burj" is Arabic for "Tower" World Wonder Burj Dubai Photo Gallery

ungalrasigan.blogspot.com said...

வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். மிகக் கவனமுடன் ஒவ்வொருவர் பேச்சையும் அலசியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

ஸ்ரீவி சிவா said...

சரியா சொன்னீங்க கேபிள்...

கடைசி ரெண்டு பத்தியில இருக்கும் விஷயங்கள் மிகச் சரி.

//ஒரு டப்பா தியேட்டரில் கூட அநியாயமாய் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள்//
கண்மூடித்தனமாக வழி மொழிகிறேன். இக்காரனத்தாலேயே தியேட்டருக்கு போவதையே குறைத்து கொண்டேன். என் நண்பர்களும் கூட. தவிர்க்க முடியாத சிறந்த படங்களுக்கு மட்டுமே தியேட்டர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா நெத்தியில் அடித்தது போல சொன்னீங்க. இந்த ஹீரோ எல்லாம் சம்பளத்தை குறைத்து டிக்கெட் விளையும் குறைந்தால் யாரும் திருட்டு டீவீடி யில் படம் பார்க்கப் போவதில்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் சங்கர் ...

Muhammad Ismail .H, PHD., said...

@ Starjan,

இதே இங்கே, http://thulasidhalam.blogspot.com


பிறகு புதிய பதிவர்களிடம் சொல்லி வைக்கவும். எல்லோரும் துளசி டீச்சரை "கோபாலண்ணே" என அழைத்து வைக்கிறார்கள். அடுத்த பதிவர் கூட்டத்தில் ப்ரோபலை எப்படி படிப்பது என வகுப்பு எடுக்கவும். :-)))

Unknown said...

கேபிள் அண்ணா .........
கலக்கிட்டிங்க போங்க ......
தமிழ் படங்களின் திருட்டு டி.வீ.டி திருச்சி, சென்னை, புதுசேரி ஆகிய ஊர்களில் இருந்து தான் தமிழ் நாட்டிற்க்கு சப்பளை.... இப்போ திருச்சி காலி ...... புது கமிச்சினர் பட்டைய கிளப்புறார்... சிட்டி சூப்பர் . கடசியா வேட்டைக்காரன் படத்துக்கு திருட்டு சி.டி வாங்க போனப்ப செம காமெடி . முன்பெல்லாம் தெப்பகுளம் பசார் பக்கம் போனாலே சமஞ்ச பொண்ணு மாதிரி கைய புடிச்சி இழுத்து சி.டி வேணும்மான்னு கேட்பானாக . என் நண்பர்கள் சிலர் சி.டி தொழில் செய்து வந்தனர் . இப்போ அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க .
திரியாரங்குகளில் கூட்டம் களைக்கட்டுகிறது . ஆனால் சாதாரண திரை அரங்குகள் கூட நூறு ரூபாய்க்கு குறையாமல் வசூலிக்கிறது .டிக்கெட் வாங்குவதற்குள் உயிர் போகிறது . அதற்க்கு திருட்டு வீ.சி.டி இருத்த நல்ல இருக்கும் . திருச்சி திரைஅரங்குகள் பற்றி நீங்க எழுதணும் அண்ணா, டி.வீ.டியும் கிடைக்க மாட்டேன்கிறது . திரைஅரங்குகளும் மோசம்.
பாவம் திருச்சி மக்கள் ....



யாரோ ஒருத்தர் "நல்ல குறும்புன்னு " எழதி இருந்தார் ...... அவரிடம் ஒரு சின்ன வேண்டுகோள் . திருச்சில எங்க சுலபமா திருட்டு டி.வீ.டி வாங்க முடியும்னு சொல்லுங்களேன் ..........

Romeoboy said...

இவ்வளவு மேட்டர் இருக்கா இங்க??

கிரி said...

//கமல் சொன்னது போல இந்த காசெல்லாம் தீவிரவாத குழுக்களுக்கு பயன் படுகிறது என்பதை நேரடியாய் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பால டிவிடி விற்பனையாளர்கள் மாதம் இருபது ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க பயன்படும் தொழிலாய் மட்டுமே இருக்கிறது. நாளை இது இல்லாவிட்டால் வேறு ஒன்றை விற்று அவனால் சம்பாதிக்க முடியும், அந்த காசை தீவிரவாத அமைப்புகளுக்கு கொடுக்க முடியும்//

தற்போது கமல் கூறியதை ரஜினி கூறி இருந்தால் ... கமலுக்கு சாஃப்டாக கூறியதை காரமாக கூறி விமர்சித்து இருப்பீர்கள்! சம்பந்தம் இல்லாம ரஜினி தீவிரவாதம் அது இதுன்னு உளறிட்டு இருக்காருன்னு!

//ரஜினி ஏதேதோ பேசி கடைசியாய் தெளிந்து சட்டத்த நாம் கையில் எடுக்கக்கூடாது என்று கருத்து சொல்லி நல்ல பெயர் வாங்க முயற்சி செய்தாலும்//

:-)) ரஜினி இதை கூறி நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறாரா! நல்ல காமெடி!

//செண்டிமெண்ட் அதிகமாயிருக்கிற சினிமா உலகை பற்றி தெரிந்தவர்கள் இவ்வ்ளவு நெகட்டிவான விஷயங்களை சொன்னால் எப்படி விளங்கும்? ஒரு வேளை இதுலே ஏதாவது உள்குத்து இருக்குமோ?//

ரஜினி பேசியதில் எந்த உள்குத்தும் இல்லை நீங்கள் பேசியதிலே உள்குத்து வெளிகுத்து எல்லா குத்தும் இருக்கிறது.



//Cable Sankar said...
arul said...
/I hope I did not type anything wrong.//

இல்லை தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ரஜினியை மட்டுமல்ல.. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், சேரன் உள்பட் எல்லோரையும்தான் எழுதியிருக்கிறேன். ரஜினியை பற்றி மட்டும் தவறாக சொல்கிறேன். என்பது கொஞ்சம் ஜாஸ்தியாகவே கருதுகிறேன். சொல்லக்கூடாது என்று ஏதும் விதி விலக்கல்ல//

உங்க பதிவு எதை பற்றியது? திருட்டு DVD

ரஜினி பேசிய பேச்சின் முக்கிய சாரம்சமே திருட்டு திரை உலகில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது என்பது. இதை பற்றி நீங்க வாயே திறக்க வில்லையே! ஏன்? உங்களோட பதிவின் அடிநாதமே ரஜினி கூறியதில் தானே இருக்கிறது. நீங்களே அதைத்தானே முதல் பத்தியில் கூறி இருக்கிறீர்கள்.

ரஜினியை விமர்சிப்பது தவறல்ல அவர் விமர்சிக்க படக்கூடாதவரும் அல்ல. ஒருவரை பற்றி உயர்த்தி கூற வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் அவர் கூறியதை கூறலாம் அல்லவா!

உங்களுக்கு தேவையான பார்ட் மட்டும் எடுத்துக்கொண்டு எது சரியான பதிலோ (நான் சொல்லலை அதை நீங்க தான் முதல் பத்தியில் கூறி இருக்கிறீர்கள்) அதை சத்தம் இல்லாம விட்டுட்டீங்களே!



உங்களுக்கு ரஜினி பிடிக்காது அது உங்கள் தனிப்பட்ட விஷயம், அனைவருக்கு ரஜினியை பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் பலர் படிக்கும் உங்கள் தளத்தில் ரஜினி கூறிய முக்கியமான திருட்டு DVD விஷயத்தை வசதியாக விட்டு விட்டு இப்படி உங்கள் ரஜினி எதிர்ப்பு கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பது என்ன நியாயம்?

Unknown said...

Well done.... Gopi.

Cable Sir, It's not fair. Hope you are not trying to get more hits by talking against Rajini. For his complete speech about Jaggubhai, this link is here
http://www.envazhi.com/?p=15142

Unknown said...

Gopi= Giri. Sorry for the typo :(-

Unknown said...

இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஸ்டூடியோவில் ப்ரிண்ட் போட்டு வருவது ஒரு வகை என்றால் வெளிநாட்டு டிவிடி ரைட்ஸில் போகும் டிவிடி ப்ரிண்டுகள் அடுத்த நாளே டிவிடி ரிப்பாக மாறி டொரண்ட் வழியாக இலவசமாக எல்லோருக்கும் கிடைச்சுடுது. டிவிடி ரிப்பில் பார்த்தாலும் நல்லப்படங்களாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் பார்க்கிறார்கள். சமீபத்திய உதாரணம் 3 இடியட்ஸ். இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்‌ஷனில் குறைவிருக்காது. கமலின் தீவிரவாதம் - காமெடி.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

/////
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[போடும் இரண்டு மைனஸ் ஓட்டு வாசகருக்கு நன்றி.. இன்னொருத்தர் எங்கப்பா..]]]

வாசகர்களுக்கு நன்றி என்றுதான் இருக்க வேண்டும். இரண்டு பேரல்லவா..?

ஆமா.. ஒண்ணு நானு..!!! இன்னொருத்தர் யாரு..?
///////////////////////

அந்த இன்னொருதர்தாங்க அவரு...

Maani said...

*** So do you mean to say that an ariticle which criticises Rajini will loose its credibility. ***

Yes ofcourse, judgement can be made on things which you are completely aware of. In my case, I know things happen around rajini from fans perspective. So definitely this article looses its credibility. Why on earth, one gets criticised for attending a meeting condemning piracy of a movie yet to be released.

*** I am a ardent fan of Rajini since my childhood. But still I dont find anything magnanimous in his presence there. Its a debt which he as to repay or he is bound to attend such meetings as an actor.
Why should Rajini's presence should be felt magnanimous. Sarat might have passed comments about Rajini personally but remember Rajini is not participating in Sarat's party meeting.***

We've seen enough "so called" ardent fans of Rajini from childhood.

DEBT?? For what & whom he is indebted for?? DEBT for Nadigar sangam for helping him with Baba and Kuselan issue ??? No one turned single stone for him when he was in problems. Still if he is voicing for Sarath when he is in problem, it can be termed nothing other than 'MAGNANIMOUS'. Also the occasion looked kinda Saraths party meeting, as Radhika and sarath are the only active members in it.

Where was nadigar sangam when Mudalvan was telecasted in Madurai through local cable when the movie got released? Why didn't they conduct same meeting then? With in couple of days of release, Kamal's unnai pol oruvan DVDs were available in market. Wasn't nadigar sangam aware of it?? Why were not they conducting same meetings then???

*** I dont feel cable has written this article based on his lies or dislikes. Many times Rajini has proved that he is not good in delivering public speeches. Many times either he has made its way or people turn it that way his speeches has fetched very bad image in return. He doesnt have the personality outside the screen.
I would worship his as a hero icon in screen. But in public life he is ZERO. Have a lot to learn which he cannot or not willing and he to reduce all such tensions sit in Imayamalai and we poor guys just wonder what a MAGNANIMOUS person he is . Visiting imayamalai is not MANAM + ANMEEGAM. Visiting imayamalai is PANAM + ANMEEGAM. ***

It's not for you or me to weigh his offscreen persona also he doesnt deserve ranking or marks. It's there for everyone to see. And finally, this article is based about DVD piracy. Rajini pointed piracy starts within the industry. Cable doesn't need to praise him for that and one can't expect all to like rajini but atleast shouldn't critise the good intent showed.

And regarding Imayamalai comments, i dont want get into his private life and finally would like to say onething to u when you cricise someone's private life.. 'GROW UP'

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நச் பதிவு.

youtubeuser said...

cable sir,
naan ungaloda pala pathivugal padichu rasichu iruken.. intha pathivula neenga rajini pathi pesina sila visayangall nichayam yenaku niyayama padala antha video full la pathutu thann ippadi sollurenn..

"Giri" yoda niyayamana comments ku nichayam neenga bathil sollanum.. unga bathil la romba aarvama yethir pakuren.. ungaloda free time nichayam avaroda (Giri sir) niyamana qs ku neenga answer pannuveenganu namburenn

ராஜ நடராஜன் said...

தாமதமான பின்னூட்டம் என நினைக்கிறேன்.இடுகையும் பின்னூட்டங்களும் பல கோணங்களை ஆராய்ந்துள்ளதும் சினிமாவின் தாக்கமும் கூடவே பின்புல அரசியலும் வியப்பை ஏற்படுத்துகிறது.

திரையரங்கு சென்று படம் பார்ப்பதின் அலாதியான உணர்வை விட அதற்கு மாற்றாக டி.வி.டியின் எளிமை முக்கியமாக பொருளாதார மிச்சம்,காலம்,பயணம் போன்றவை திரையனுபவத்தை தோற்கடித்து விடுகிறது.

நமக்கே உரித்தான தனிமனித வழிபாடு,அரசியல் இல்லாமலும் மற்ற இடங்களில் DVD ஒரு உலகளாவிய நுகர்பொருள்.திருட்டு DVD என்ற வார்த்தை ஒரு தவறான சொற்பிரயோகம்.

இங்கே போஸ்டர் ஒட்டாதீர்கள் என்பது சிலரின் நலன் பாதுகாப்பது போல் போஸ்டர் ஒட்டுவதும் சிலரின் வாழ்வாதார பிரச்சினை.

Simply it is Demand and Supply.இப்பொழுது குடிப்பது சட்ட விரோதமல்ல.ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.DVD யும் சட்ட விரோதமில்லை காலம் வரட்டும்.

shortfilmindia.com said...

/தற்போது கமல் கூறியதை ரஜினி கூறி இருந்தால் ... கமலுக்கு சாஃப்டாக கூறியதை காரமாக கூறி விமர்சித்து இருப்பீர்கள்! சம்பந்தம் இல்லாம ரஜினி தீவிரவாதம் அது இதுன்னு உளறிட்டு இருக்காருன்னு!//

கமலுக்கு எங்கே சாப்டாக சொல்லியிருக்கிறேன். அவரையும் சாடித்தான் இருக்கிறேன். அவரின் முட்டாள் தனமான பேச்சை இதைவிட கிண்டலாய் சொல்ல முடியாது. நீங்கள் ரஜினி ரசிகராய் இருப்ப்தால் அவரை பற்றி சொனனதும் உங்கள் பர்ஷப்ஷனில் ஹார்ஷாக சொல்வது போல் தெரிகிறது.

shortfilmindia.com said...

/:-)) ரஜினி இதை கூறி நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறாரா! நல்ல காமெடி!//

உங்களுக்கும் தெரிந்திருக்கிறதே..

shortfilmindia.com said...

/ரஜினி பேசியதில் எந்த உள்குத்தும் இல்லை நீங்கள் பேசியதிலே உள்குத்து வெளிகுத்து எல்லா குத்தும் இருக்கிறது.
//

உள்குத்து என்னவென்று எனக்கு தெரியும்.. அது சம்பந்தபட்டவர்களுக்கு தெரியும்.. இதுவும் உங்கள் பர்ஷபனுக்கு விடுகிறேன்.

shortfilmindia.com said...

/உங்களுக்கு தேவையான பார்ட் மட்டும் எடுத்துக்கொண்டு எது சரியான பதிலோ (நான் சொல்லலை அதை நீங்க தான் முதல் பத்தியில் கூறி இருக்கிறீர்கள்) அதை சத்தம் இல்லாம விட்டுட்டீங்களே! //

நீங்கள் பதிவை முழுதாக படிக்கவில்லை. ரஜினியைபற்றி எழுதியதை மட்டும் படித்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது . இந்தபதிவில் எங்கிருந்து டிவிடி விஷய்ம் ஆர்மபிக்கிறது, அவர்களீன் வியாபார லாபங்கள் என்ன? டிவிடியை யார் தடுக்க முடியும், அரசு ஏன் தடுக்க முயலவிலலை. சன் டிவிக்கு மட்டும் ஏன் ரெயிட்?, தியேட்டர் கட்டணங்களை பற்றிய விமர்சனம், தியேட்டர் மெயிண்ட்னென்ஸ் பற்றிய குறைகள், மற்றும் வரி விலக்கு தேவையில்லை சட்டத்தை ஒழுங்காக பிரயோகித்தால் போதும் என்று இவ்வளவு விஷய்ங்கள் எழுதியிருக்கிறேன்.ஸோ.. தேவையான பார்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியது யார் என்று உங்களுக்கே புரியும். நண்பரே..

shortfilmindia.com said...

/உங்களுக்கு ரஜினி பிடிக்காது அது உங்கள் தனிப்பட்ட விஷயம், அனைவருக்கு ரஜினியை பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.//

யார் சொன்னது எனக்கு ரஜினி பிடிக்காது என்பது.. ரஜினி என்கிற நடிகரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடிக்காது என்கிறதும் உங்களது பர்ஷப்ஷனே..:))

Cable சங்கர் said...

/Cable Sir, It's not fair. Hope you are not trying to get more hits by talking against Rajini. For his complete speech about Jaggubhai, this link is here/

பிரபாகர்.. செம காமெடியாய் இருக்கு உங்க பின்னூட்டம்.. ஏனென்றால் ரஜினியை பற்றி எழுதி நான் ஹிட்ஸ் வாங்கணும் என்றால தனியே ஒரு பதிவு எழுதியிருப்பேன். இந்தமாதிரி கும்பலில் நாலு பேர் பற்றி எழுதிய பதிவில் எழுத மாட்டேன்.:)

VISA said...

//nd regarding Imayamalai comments, i dont want get into his private life and finally would like to say onething to u when you cricise someone's private life.. 'GROW UP'//

Hello Mani. dont say GROWUP. I have grown enough. I could feel you are just 5 years behind me. Friend you will grow and understand I hope. And if I had to grow for criticizing Rajini on his personal life on imayamalai then Vijay TV and all other magazines and all others who worship him like a saint for his himayamala journey has to GROW first. Because I am not a known friend of Rajini. And I have never heard about his divine imayamalay journey from his mouth. Its the media and the people who sanctify it which is unnecessary. When they can glorify his tours why cant I cricize the unwanted hype created by media and his fans on his trips. And you should understand I didnt critizise his tours to himalayas. I criticize the perception of our people on his devotional tours.

I will try to GROW UP my friend.

கிரி said...

//shortfilmindia.com said...


//கமலுக்கு எங்கே சாப்டாக சொல்லியிருக்கிறேன்//



:-) உங்கள் பதிவில் தான்



"ஸோ.. கமல் சொன்னது போல இந்த காசெல்லாம் தீவிரவாத குழுக்களுக்கு பயன் படுகிறது என்பதை நேரடியாய் ஒப்புக் கொள்ள முடியாது."



"ரஜினி ஏதேதோ பேசி கடைசியாய் தெளிந்து சட்டத்த நாம் கையில் எடுக்கக்கூடாது என்று கருத்து சொல்லி நல்ல பெயர் வாங்க முயற்சி செய்தாலும்"



கமல் பேசியதற்கு நீங்கள் கொடுத்து இருப்பது விளக்கம் ரஜினிக்கு செய்தது விமர்சனம்.



//நீங்கள் பதிவை முழுதாக படிக்கவில்லை. ரஜினியைபற்றி எழுதியதை மட்டும் படித்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது . இந்தபதிவில் எங்கிருந்து டிவிடி விஷய்ம் ஆர்மபிக்கிறது, அவர்களீன் வியாபார லாபங்கள் என்ன? டிவிடியை யார் தடுக்க முடியும், அரசு ஏன் தடுக்க முயலவிலலை. சன் டிவிக்கு மட்டும் ஏன் ரெயிட்?, தியேட்டர் கட்டணங்களை பற்றிய விமர்சனம், தியேட்டர் மெயிண்ட்னென்ஸ் பற்றிய குறைகள், மற்றும் வரி விலக்கு தேவையில்லை சட்டத்தை ஒழுங்காக பிரயோகித்தால் போதும் என்று இவ்வளவு விஷய்ங்கள் எழுதியிருக்கிறேன்.ஸோ.. தேவையான பார்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியது யார் என்று உங்களுக்கே புரியும். நண்பரே//



பதிவை முழுதாக படிக்காமல் வாதாடும் அளவிற்கு இன்னும் மோசமாகவில்லை.. விமர்சிப்பவர்கள் தான் அனைத்தையும் உள்ளடக்கி கூற வேண்டும் அதில் கேள்வி கேட்பவர்கள் தங்களுக்கு தேவையானதை அல்லது மாற்று கருத்து உள்ளதில் மட்டுமே கேட்பார்கள். சரி உங்கள் விருப்படியே நினைத்துக்கொள்ளுங்கள். அதில் எனக்கு வருத்தமில்லை.



நான் கேட்ட கேள்வி ரஜினி கூறிய நெகடிவை விமர்சித்த நீங்கள் ரஜினி கூறிய பாசிடிவை முக்கியமான திருட்டு தயாராகும் இடம் பற்றி கூறியதை (அதாவது ரஜினி கூறியதை நீங்கள் கூறியதை அல்ல, நீங்கள் கூறியது தான் அனைவருக்கும் தெரியுமே!) பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே!



சுருக்கமாக ரஜினியை விமர்சித்த நீங்கள் அவர் கூறிய உண்மையான விஷயத்தை ஏன் பாராட்டவில்லை என்பதே! விமர்சனம் என்றால் அனைத்தும் (திட்டு பாராட்டு) உள்ளடக்கியது தானே!



//யார் சொன்னது எனக்கு ரஜினி பிடிக்காது என்பது.. ரஜினி என்கிற நடிகரை எனக்கு மிகவும் பிடிக்கும்//



ரொம்ப பாதுகாப்பானா பதிலா! :-) ரஜினியை பிடிக்காதவர்கள் கூறும் வழக்கமான பதில் தானே! ஓகே பிரச்சனை ரஜினி பிடிக்கிறதா இல்லையா என்பது அல்ல! நான் கேட்டது வேற.



நேரமிருந்தால் இந்த பதிவு படித்து பாருங்கள் "ரஜினி கமல்" ரசிகர்கள் நேர்மையாக விமர்சிக்க முடியுமா?



சரிங்க சங்கர்! நாம விவாதம் செய்தால் இதற்க்கு முடிவே இல்லை. நீங்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.. இதை தொடர்ந்து விவாதம் செய்வது இருவருக்குமே வெட்டி வேலை. என் கருத்தை அல்லது எதிர்ப்பை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே! அதை செய்து விட்டேன்.



நீங்கள் இதற்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம், நானும் இனி தொடர மாட்டேன். நன்றி.

andygarcia said...

மும்பை பொறுத்தவரை piracy கண்ட்ரோல் செய்வது underworld தாவூத் இப்ராகிம்,
தனக்கு பிடித்த டைரக்டர் சுபாஷ் கய் என்றால் லேட்டாக cd ரிலீஸ் செய்வான் என்று
படித்திருக்கிறேன்,piracy பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது உண்மை, தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் பொருந்தாது.

Cable சங்கர் said...

@mohan kumar
நன்றி

Unknown said...

// Cable Sankar said...
/Cable Sir, It's not fair. Hope you are not trying to get more hits by talking against Rajini. For his complete speech about Jaggubhai, this link is here/

பிரபாகர்.. செம காமெடியாய் இருக்கு உங்க பின்னூட்டம்.. ஏனென்றால் ரஜினியை பற்றி எழுதி நான் ஹிட்ஸ் வாங்கணும் என்றால தனியே ஒரு பதிவு எழுதியிருப்பேன். இந்தமாதிரி கும்பலில் நாலு பேர் பற்றி எழுதிய பதிவில் எழுத மாட்டேன்.:)//

8:18 PM

You don't have to write a full article about Rajini to achieve hits - Few lines will do. As you can see the pouring feedback, can you show me any of your other posts have had accounted for such high hits and pages of discussion with in few days.

BTW have you answered Giri questions if you think your article is credible and the suggestions are origional?

Prabagar

சாதாரண கிராமத்தான் said...

இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி சரத்குமாரும், ராதிகாவும் கேட்டவுடன் வாழும் வள்ளுவர் நடவடிக்கை எடுத்ததும் ராதிகாவுக்கு கண்கள் பணித்ததும் எல்லோரும் ஏற்கனவே பார்த்தாயிற்று. இதில் ரஜினியின் பேச்சு சற்று பரவாயில்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதை தீர்க்கவேண்டும் என்று அவர் சொன்னது சரிதான் என்றாலும் வழக்கம்போல் பிறர் எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கும் தான் பிறகு மன்னிப்பு கேட்பதற்கும் ஏதுவாக அவர் பேச்சு அமைந்து விட்டது. மற்ற எல்லாரின் பேச்சுக்கள் எல்லாமே அந்த கூடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பேசியது போல இருந்தது. இருந்தாலும் இந்த சாதரானின் சந்தேகம் என்ன என்றல் இவர்கள் கருனநிதியைய்ம், எம் ஜி ஆரையும் நினைத்த நேரத்தில் எப்படி பார்க்க முடிகிறது? ஒரு சாதாரண ஆள் ஒரு அரசாங்க அதிகாரியையே பார்க்க தவம் கிடக்கும் போது இது மட்டும் எப்படி முடிகிறது? பத்திரிகைகள் ஓங்கி குரல் கொடுத்தன தினமலரின் பிரச்சினையின் போது. ஆனால் எந்த பத்திரிகைக்கும் சினிமா நியூஸ் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது நன்கு தெரியும் (துக்ளக் ஒரு விதி விலக்கு. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் ஒரு அத்தாட்சி கைஎளுதிர்காக எங்கள் ஊரின் மருத்துவரை (இவர் அவர் இல்லை) பார்க்க போனபோது அவர் தனது ஒவொரு கைஎளுதிர்க்கும் விலை வைத்திருந்தார். அவரை பார்க்கவும், அவர் எதிர் பார்த்ததை கொடுத்தாலும் நான் அவளவு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இவர்கள் எந்த தைரியத்தில், எதனால் இவளவு சீக்கிரம் மாநிலத்தின் சக்தி வாய்ந்த அதிகாரியை (டெல்லியின் தலை நகரில் வசிப்பவர்) சந்திக்க முடிகிறது? இதை எல்லாரும் விட்டு விட்டு ரஜினி பேசியது சரியா? கமல் பேசியது சரியா? ராதிகா, சரத்குமார் அழுதது நிசமா? என்று தான் பேசுகிறார்கள். அனைத்து blog களிலும் இதுதான் செய்தி. சினிமாவை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறோம்?
my blog: http://sollaninaikkiren.blogspot.com/

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அன்பின் கேபிள்

சற்றே பெரிய,மிகவும் தாமதமான பின்னூட்டம் தான்.நீங்க சொன்ன எல்லாம் சரிதான்.

மிக முக்கியமான ஒன்னு,இங்க திருப்பூரில் எல்லா திரை அரங்குகளுமே பகல் கொள்ளை அடிக்கறானுக.(ஏனோ எந்த திருப்பூர் பதிவர்மே இது பத்தி பதிவு போடலை).

எந்த குப்பை படத்துக்கும் 100,150தான் ticket விலை.பாப்கார்ன் ல ஆரம்பித்து கூல்ட்ரிங்க்ஸ் வரை கொள்ளையோ கொள்ளை.பராமரிப்போ மிகவும் மோசம்.4 பேர் உள்ள ஒரு குடும்பம் படம் பார்க்க மினிமம் 600 to 1000 ஆகும்.
முதலில் எதிர்த்து கேட்டேன்(வீட்டுக்காரி கிட்டுருந்து திட்டு வேற).எல்லா இடத்தில் இருந்தும் ஒரே அலட்சியமான பதில் தான்.நாங்க இப்படி தான் இஷ்டம் இருந்தா பார், இல்ல போயிட்டே இருன்னு.இந்த பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்கனு தெரியலை.collettor ல ஆரம்பித்து அதிகாரிகள் வரை என்ன பன்றாங்கன்னே தெரியலை.

நம்புங்கள் கேபிள் கமல் படங்கள்(இது கமலுக்கு கொடுக்கும் சிறப்பு மரியாதை),லேட்டா சில நல்ல படங்கள் தவிர வேறு எந்த படத்திற்கும் நான் போனதில்லை.போவதாய் இல்லை.only DVD தான்.

"அவங்கள மாற சொல்லு நான் மாறுகிறேன்" ங்கிற நாயகன் பட வசனம் போல அவங்க சரியான கட்டணம் வசூலிக்கும் வரை நான் DVD தான்.

4:05 PM

Unknown said...

முதலில் சென்னை பாரிசில் திருட்டு வீடியோ விற்பதை முழுமையாக தடுக்கமுடியுமா கூறுங்கள்

NAGARAJAN said...

Good Analysis

Ganesh Kumar said...

ரஜினி வெளி வராத ஜக்கு பாய் கதையை கூறியது போல் எந்திரன் படத்தின் கதையையும் கூறுவாரா.
படத்தின் கதை நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் என்று சொல்கிறாரே தைரியம் இருந்தால் அவர் படத்தின் கதையை சொல்லலாமே. அவர் படத்தின் கதையை ரகசியமாக வைத்து கொண்டு வெளி வராத படத்தின் கதையை கூறுவதுஞாயமாகுமா

அகல்விளக்கு said...

சரியா சொன்னீங்க....