Thottal Thodarum

Apr 21, 2010

Phoonk 2 –(2010)

x
phoonk ஏற்கனவே முதல் பாகம் பார்த்தவர்களுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. முதல் பாகத்தில் தன்னுடன் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னை ஏமாற்றுகிறாள் என்று கண்டுபிடித்து அவளை வெளியே அனுப்புகிறான் கதாநாயகன். அவள் அவனை பழி வாங்க.. அவனின் வீட்டிற்கு பில்லி சூனியம் வைக்கிறாள். அதனால் அவனது பெண்ணுக்கு பேய் பிடித்து எக்ஸார்ஸிஸ்ட் போல ஆகிவிட, பேய் பூதங்களை நம்பாத கதாநாயகன் அவளுக்கு மருத்துவ ரீதியாய் ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னொரு பக்கம் அவனது மனைவி மாந்திரீகத்தை அணுக, இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே மாந்திரீகம் இருக்கிறது என்று மனைவியும், இல்லை என்று கணவனும் சண்டைப் போட்டுக் கொள்ள், ஒரு கட்டத்தில் கணவன் நம்பி ஒரு கண் தெரியாத மாந்திரீகனை அழைத்து பில்லி சூனியத்தை கண்டுபிடித்து, பேயிடமிருந்து விடுவிக்கிறான். ஏவிவிட்டவள் இறக்கிறாள்.

இரண்டாவது பாகத்தில் இறந்து போன அந்த பெண் ஆவி ரூபமாய் கதாநாயகனின் குடும்பத்தை தொடர்கிறாள். காட்டில் குழந்தைகள் மூலமாய் ஒரு பொம்மை ரூபத்தில் வீட்டிற்குள் நுழைய, கொஞ்சம், கொஞ்சமாய் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனின் மனைவிக்குள் பேய்யா இறங்கிவிடுகிறாள் செத்துப் போனவள். அவ்வப்போது சந்திரமுகியாய் மாறி, தன் கணவனிடம், உன்னை கொல்ல மாட்டேன் உன் குடும்பத்தை கொஞ்சம், கொஞ்சமாய் அழிக்கிறேனா இல்லையான்னு பார். என்று சவால் விடுகிறாள் மனைவி ரூபத்தில் இருக்கும் பேய்.
Phoonk-2 மனைவி ரூபத்தில் இருக்கும் பேய் அவனையும், அவன் குடும்பத்தையும் பழிவாங்கியதா.? அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை ஒரே ரத்தமயமாய் காட்டியிருக்கிறார்கள். படம் நெடுக பேய் வந்த பிறகு கார்பரேஷன் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல ரத்தமாய் கொட்டுகிறது.

படத்தில் பாராட்டபட வேண்டிய முக்கிய விஷயம் கேமரா. வழக்கமாய் ஆர்.ஜிவியின் படங்களுக்கான கோணங்களுடன். பின்னணி இசை பெரிதாய் பயமுறுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓரிரு காட்சிகளை தவிர..
நடித்திருக்கு நடிகர்கள் அனைவரின் நடிப்பினால் பல காட்சிகள் உயிரூட்ட பட்டிருக்கிறது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சியில் சுதீப்பின் நடிப்பும், அவனது மனைவிக்கு அந்த வீட்டில் ஏதோ தப்பாக் இருக்கிறது என்று உணர்ந்து சுதீப்பிடம் அழும் காட்சி.

மிலிந் கட்கர் இயக்கியிருக்கிறார். இவர் தான் பூங் முதல் பாகத்தில் ரைட்டர். இரண்டாவது பாகத்தில் முதல் பகுதி முழுவதும் சும்மாவாவது பில்டப் கொடுத்தே நோக அடிக்கிறார். இரண்டாவது பாதியில் சுறுசுறுப்பாய் இருந்தாலும் கடைசி காட்சிகளில் வரும் ஓவர் ரத்தமும், பெரியதாய் போராட்டம் ஏதும் இல்லாத காட்சியமைப்புகளால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. அநேகமாய் பூங் 3 வரும் என்றுதான் தோன்றுகிறது.
Phook – Nothing Extraordinary



கேபிள் சங்கர்
Post a Comment

24 comments:

க ரா said...

நல்ல விமர்சனம்.

Philosophy Prabhakaran said...

FIRST...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

rite dvd enga kidaikkum

மேவி... said...

nalla velai naan pilaithu konden....nalla padam varum entru kathu iruppen....

King Viswa said...

கேபிளாரே,
பதிவின் தலைப்பை சற்று திருத்தவும்.N மிஸ்ஸிங்.

Paleo God said...

ரைட்டு!

shortfilmindia.com said...

நன்றி இராமசாமி கண்ணன்

shortfilmindia.com said...

நன்றி பிலாசபி கண்ணன்

shortfilmindia.com said...

சாரி பிலாசபி கண்ணன் இல்லை..பிரபாகர்

shortfilmindia.com said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
டிவிடி கடையில தான்:)

CS. Mohan Kumar said...

ரொம்ப குட்டியா இருக்கே விமர்சனம்.. தல பிஸியா

pichaikaaran said...

வழக்காமாக , படங்களை விட உங்கள் விமர்சனம் சுவையாக இருக்கும்...

இந்த விமர்சனம் சுருக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது.... மற்றபடி, படத்தை பற்றி உங்கள் பார்வை , வழக்கம் போல "நச் " என்று இருக்கிறது..
Phook விமர்சனம் – Nothing Extraordinary

chosenone said...

ooook.

rajeshkannan said...

வழக்கம் போல super....

திருநெல்வேலி ஜங்ஷன் said...

விமர்சனம் பயமுருத்தவேல்லை . மொக்கய் விமர்சனம்.

thamizhparavai said...

இரண்டு படமும் பார்க்கவில்லை எனினும், முதல் பாகக் கதை ‘எண்டமூரியின்’ ‘துளசிதளம்’ கதை என்றே எண்ணுகிறேன்.. அக்கதையின் இரண்டாம் பாகம் ‘மீண்டும் துளசி’யையே இப்போது எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ...?

Unknown said...

வணக்கம் தல,
சிங்கப்பூர் வந்தாச்சு, விமர்சனம் படிச்சாச்சு, ஒட்டு போட்டாச்சு

ரவிஷா said...

டிரெயிலரில் வரும் பொம்மையைப் பார்த்தால் “Child's Play" series தான் நினைவுக்கு வருகிறது!

Cable சங்கர் said...

ஆமாம் ரவிஷா

Cable சங்கர் said...

என்னா ஒரு கடமை உணர்ச்சி செந்தில உங்களுக்கு:)

Cable சங்கர் said...

பேய் படங்களுக்கெல்லாம் ஒரே விதமான் கதை தான். திரைக்கதையும் மேக்கிங்கும்தான் வித்யாச படுத்த வேண்டும்.

Cable சங்கர் said...

பேய் படமாய் இருப்பதால் பெருசாய் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்றுதான். சின்னதாய் ஒரு விமர்சனம். மோகன் குமார்

Cable சங்கர் said...

படம் மொக்கையாய் யமுறுத்தாமல் இருந்தால் விமர்சனமும் அப்படித்தான் இருக்கும் மிஸ்டர் இட்லி

Cable சங்கர் said...

நன்றி பார்வையாளன்

நன்றி சூஸன் ஒன்

நன் ராஜேஷ் கண்ணன்