எல்லோருக்கும் தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.
வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.
எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார். ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.
ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.
மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை. ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.
ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..
படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது.
அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம், என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன். இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
ராவணன் - A Extrodinary Film Without Life
டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.
கேபிள் சங்கர்
Comments
ஆனால் எனக்கு படத்தின் முடிவு ஓகே...
##நிச்சயமாக##
http://pichaikaaran.blogspot.com/2010/06/blog-post_8533.html நம்பியவர்களை நட்டாற்றில் விடுபவரா , கேபிள் சங்கர் ??
ம் தட் பிகாஸ் ஆப் த கண்டெண்ட் ஆப்த பிலிம்.
நிச்சயம் தெரிந்த ஆட்கள் எப்படி பீல் செய்தார்களோ அதைப்போலத்தான் பீல் செய்வார்கள்.
படத்தின் குறையே அதுதான். வீராவுக்கும் ராகினிக்குமிடையே ஏற்படும் காதல், அன்புக்கான காரணங்கள். மிகவும்மேலோட்டமாய் சொல்லப்பட்டது மிகப் பெரிய குறை..
இப்படத்தில் மிக முக்கியமாய் உணர வேண்டிய விஷயம். வீராவின் பிண்ணனி, அவன் ஏன் பழிவாங்க துடிக்கிறான் என்பதற்கான காரணம் ஓகே. ஏன் எஸ்.பியின் மனைவியை கடத்த வேண்டும்? அந்த இன்ஸ்பெக்டரை வேண்டுமானல் கடத்தியிருக்கலாம். ஸோ. வெஞென்சுக்கான காரணம் மிக மொக்கை. இது போன்று பல விஷயங்கள் இருப்பதால் திரைக்கதை சொதப்பலால்.. எந்த மதத்துக்காரர்கள் பார்த்தாலும். உணர்வு என்பது ஒன்றுதான். தலைவரே.
@பார்வையாளன்
மற்றவர்களுக்காக நாம் எதையும் செய்யக்கூடாது என்கிற பாலிசி உள்ளவன் நான்.. :)
உங்க பதிவை முன்னமே பார்த்துவிட்டேன். கூல்..:)
இதையெல்லாம் கந்தசாமியில் ஏற்கனவே பார்த்து நொந்து போனோம்.
இரும் விமர்சனத்தை இனி தான் படிக்க போறேன்.
வெறும் படைப்பாளியா, தலைமை பண்பு கொண்ட படைப்பாளியா என்பதை இதுதான் நிர்ணயிக்கும்.... ( என்னை பொறுத்த வரை , இரண்டுமே ஓகே தான்.. சிவாஜியையும் ரசிப்பேன்... எம் ஜி ஆரையும் ரசிப்பேன் )
perfect!
////டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்./////
i doubt it :)
http://ithayapaasai.blogspot.com/
குருவையும் சீடப்புளைங்களையும் இங்கும் வந்து படிச்சிபார்க்குமாறு அழைக்கிறேன்
நீங்களே கதை பூராவும் சொல்லிவிட்டீர்கல்:0)
இருந்தாலும் இந்த உழைப்புக்காக பார்க்கத்தான் வேண்டும்.
அவரே (மணி ரத்னம்) ஒரு பேட்டியில் ,கதையின் திருப்பங்களை நிறைய மாற்றவேண்டிய கட்டாயத்துக்குள்ளானதாகச் சொன்னதையும் பார்த்தேன். அற்புதமான விமர்சனம்.
டும்..டும்..டும்..டும்..டும்..
mudive sollalaama sankarji?
அதெல்லாம் சரி கதை இருக்கா..?
(ஒரு காலத்தின் இளமைத்துள்ளல், என் பிரிய கார்த்திக்குக்கா அனுமன் காரெக்டர்? என்ன கொடுமை சார் இது?)
எப்படியும் நான் இணையத்தில் இலவசமாகத் தான் தான் பார்க்க போகிறேன், அதுவும் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டுமே.
But whoever watched here in Singapore are saying the movie was tame bore. Trusting ur words, gonna watch the movie tonight.
//
நீங்க ராமாயனம் எங்க படிச்சிங்கனு சொல்ல முடியுமா???
அதான் ஐந்தாவது வகுப்பில் இருந்து சொல்லிகுடுக்குறாங்களே :)
Mani sir, epodhum ungaluku nalla artist, technical team
kidaichiduthu.. Aana adhuku mela onnum solaradhuku illa..
Mothathil.. Raavanan - Technical Mokkai..
Naan sonadhu correcta Cable ji?
உங்கள் பதிவையும்,Jackie சேகர் பதிவையும் நேற்றே எதிர் பார்த்தேன், ஒரு நாள் லேட் சார் நீங்க!
முடிவை சொல்லிடிங்களே சார் !
உங்கள் பதிவையும்,Jackie சேகர் பதிவையும் நேற்றே எதிர் பார்த்தேன், ஒரு நாள் லேட் சார் நீங்க!
முடிவை சொல்லிடிங்களே சார் !
அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?
சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?
ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.
இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?
please see below blogspot..
http://premakumar.karaitivu.org/2010/06/blog-post.html#comment-form
நேற்று இரவு படம் பார்த்தேன்...
ஏ ஆர் ரகுமான் , சந்தோஷ் சிவன், மணிகண்டன், மூவரும்தான் படத்தின் உண்மையான ஹீரோக்கள்....
படம் பார்க்க நல்லாதான் இருந்தது.வசனங்களை நன்றாக உன்னிப்பாக கவனித்தும் சில இடங்களில் வசனங்கள் எனக்கு புரியவில்லை...
உசுரே போகுதே என்ன ஒரு அருமையான சாங்..இந்த சாங்கை கார்த்தி எவ்வளவு பீல் பண்ணி பாடியிருக்கிறார்..ஆனால் அதை பயன்படுத்திய இடம் சற்று கூட சம்பந்தமில்லாமல் வருகிறது...
அகிரா குரோசவாவின் "rashomon" படத்திற்கான லிங்க்:
http://www.youtube.com/watch?v=-XZCZHXmWbA&playnext_from=TL&videos=L8DMg553ao4
நல்லா காமெடி பண்றீங்க!!, எந்த நாட்டுல சார் இருக்கீங்க??..இந்தியாவுல பொறந்த எல்லாருக்கும் ராமாயணமும், மகாபாரதமும் நல்லா தெரியும்... ஜைனமும், புத்தமும் கூட தெரியும். அதுதான் இந்தியாவோட தனித்தன்மையே....வேற்றுமையில் ஒற்றுமை..படிச்சதில்லையா??... நீங்க சொல்றது மற்ற நாட்டுல வேணா நடக்கலாம் (உதா- அமெரிக்கா)- அதுக்கும் கேபிள் சார் பதில் கொடுத்துட்டார்.
கம்பரும் பாத்தா
கோச்சுக்கமாட்டாங்களா?
இப்ப தான் படம் பார்த்துட்டு வந்தேன்.
எனக்கும் இதே தான் தோணுச்சு.
மணியின் முதல் வெற்றிப்படமான “மெளன ராகம்” கூட கே.பாக்கியராஜின் “அந்த 7 நாட்கள்” படத்தின் அப்பட்டமான காப்பி. ஒரு கதாசிரியராக கே.பாக்கியராஜின் கால் தூசுக்கு கூட பெறாத மணிரத்தனத்தை சிறந்த படைப்பாளி என்று சிலர் கொண்டாடுவது பேதமையிலும் பேதமை.
“எனக்கு சர்வதேச தரத்திலான இசை தேவைப்பட்டதால் AR.ரகுமானுடன் இனைந்தேன் மற்றபடி ராஜாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை” என்று ஒருமுறை மணிரத்னம் உளறியிருந்தார், இதுவா உண்மையான நட்பு? உண்மையான நட்பு என்பது தன்னுடைய வளர்ச்சியிலும் நண்பனையும் கையனைத்து செல்வதுதான். ராஜாவின் தரத்தை பற்றி “பல்லவி அனுபல்லவி”க்கு முன்னரே மணிரத்னம் கண்டறிந்திருந்தால் மணிரத்னத்தை ஓர் அறிவுஜீவி என்று கொண்டாலாம். இளையராஜா மட்டும் இல்லை என்றால் மணிரத்னம் என்றோ ஒழிந்து போயிருப்பார்.
மணிரத்தின் தனித்துவம் கூட PC. ஸ்ரீ ராம் – ஆல் வந்தது (இருட்டுக்குள்ள படம் எடுக்குறது).
தமிழில் மணிரத்னத்தின் கடைசி வெற்றிப்படமான அலைபாயுதேவின் கதைகூட மணிரத்னத்தின் சொந்தக்கதையில்லை. பழம்பெரும் கதாசிரியர் R.செல்வராஜிடம் இருந்து வாங்கி தனது பெயரையும் அதில் ஒட்டிக்கொண்டார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் அலைபாயுதேவின் இந்திப்பதிப்பில் கதை: மணிரத்னம் என்று தனது பெயரை மட்டும் போட்டுக்கொண்டார்.ஒரு படைப்பாளிக்கு உரிய குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாதவரை இந்திய சினிமாவின் சர்வேதேச முகம் எனக்கொண்டாடுவது அபத்ததிலும் அபத்தம்.
Rinsil desilva, rangde basant script writer than kathai ezhuthinaram,kadaisiyil etho pinaku vanthu(avar kurban padathil busy aanathal konjam izhuthar)avar peyarai thookkivittathaga news.
சுத்த போர்
Super vimarsanam.....
Read mine here!
Expecting ur feedback!
Raavanan-Ten heads but no brain!
http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html
-திருவட்டாறு சிந்துகுமார்
mani has lost his golden touch long back.
He has abused hinduism by showing lot of things which is not required.
Like the broken vishnu idol, may be for artisic purpose.. but the IDOL looks sad...
Just for a girl he has left, Prithiviraj who is instrumental in killing his brother and also the Policeman who had raped his sister.
There is a big hole and Vikram character hits rock bottom.
What is prabhu and ranjitha doing there.
What is the purpose to say I am ravan I m ravan by vikram repeatedly.
Also ample show of bosom of Ashwarya not at all xpected frm Mani s movie So pathetic
The great about mani sirs movie is his small twists, unexpected reaction from a character and so on.. (For eg, alaipayuthe sakthi telling about her marriage before the groom, Velu naikar daughter saying Nazaar about his whereabouts and many such)
I (we) expect a clean, mani sir branded movies with fresh stories like alaipayuthe, kannathil muthamitta and so on...
Sir We are waiting!
Ramkumar