"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...
Comments
ஆனால் கதை ஒன்றும் அவ்வளவு பெரிதாக கவரவில்லை...
இந்தப் படத்தில் கதை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். தற்போது வெளிவரும் முழுத்திரைப் படங்களை விட நிறைய உள்ளது.
Another one. You definitely appreciate this..
http://www.youtube.com/watch?v=9gZCwY9qJL4
பாராட்டுகள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com