Thottal Thodarum

Oct 11, 2011

நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.

இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.
டாடா நிறுவனத்தின் க்ராண்டா எனும் காரின் விளம்பரத்துக்காக டாடா இவர்களுடன் சேர்ந்து இலவச கார் ட்ரையல், ஆளுக்கொரு டி சர்ட், போன்ற ஏற்பாடுகளுடன் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். சென்னையின் புதிய நட்சத்திர ஹோட்டலான ஹயாத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வந்திருந்த இருநூறு சொச்ச பதிவர்களுள் ராண்டமாய் செலக்ட் செய்யப்பட்ட சிலரின் அறிமுகப்படலத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களின் ஸ்பான்ஸர்களான டாடா க்ராண்டாவை பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சின்ன பேச்சும், என்று சுவாரஸ்யமாய் ஆக்க முயற்சித்தார்கள். மதியம் டீ பார்ட்டியில் அருமையான உணவுகள் பரிமாறப்பட்டன. வழக்கமான கார்பரேட் மீட்டிங்கின் அத்துனை அம்சங்களையும் கொண்ட ஒரு ஆர்கனைஸ்ட் விழாவாக நடத்தி வந்தார்கள்.

நிகழ்வின் கடைசி விஷயமாய் lounge எனும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஐந்தாறு குழுவை ஏற்படுத்தி யார் யாருக்கு எதில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து அரட்டையடிப்பது என்பது போன்ற நிகழ்ச்சி அப்போது ஒவ்வொரு குழுவிற்குமான போர்டை எடுத்து வந்தார்கள். அதில் ஒரு போர்டை பார்த்தும், என்னுள் தாங்க முடியாத கோபம் வந்துவிட, உடனடியாய் அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். நாங்கள் தமிழில் எழுதும் ப்ளாகர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம். நீங்கள் எங்களுக்கு எப்படி உதவலாம் என்று கலந்தாலோசனை செய்யும் அளவிற்கு?. என்று ஆரம்பித்து தொடர்ந்து என் கண்டணங்களை பதிவு செய்தவுடன், உடன் இருந்த பெரும்பாலான தமிழ் உணர்வு கொண்ட தமிழ் இணைய பயனாளர்களும் சேர்ந்து எதிர்க்க, அந்த போர்டு எடுக்கப்பட்டது. பின்பு அவர்கள் அதற்கான மன்னிப்பும் கேட்டனர்.

அவர்களை எந்த விதத்தில் அவ்வாறு எழுத தூண்டியது என்றே புரியவில்லை. தமிழில் மட்டும் சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் வலைப்பூ வைத்திருக்கிறார்கள். உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் ரீஜினல் மொழியில் தமிழ் இரண்டாவது இடத்திலிருக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பெரும்பாலும் எந்த பிராந்திய மொழிக்காரராய் இருந்தாலும் உலகம்  முழுவதும் பயன் படுத்தப்படும் மொழியில் எழுதுவதால் சிறப்பானவர்கள் என்று அர்த்தமா?  எந்த விதத்தில் நாம் குறைந்து போய்விட்டோம்? தமிழில் இல்லாத டெக்னிக்கல் பதிவுகளா? நாம் தமிழில் எழுதுவதற்கே யூனிகோட் எனும் ஒரு விஷயத்தை பயன்படுத்தி, அதை பயின்று எழுதுபவர்கள் நாம். பிராந்திய மொழியில் எழுதியே இந்திய அளவில் ஐம்பதாயிரம் அளவில் அலெக்ஸா ரேங்கில் இருக்கும் பதிவர்கள் இருக்கும் நம் தமிழ் வலைப்பூ உலகிற்கு இவர்கள் என்ன உதவி செய்ய கலந்தாலோசிக்க வேண்டிய நிலை இருக்கிறது?.

ஒரு வேளை ஆங்கிலத்தில் தொழில் முறையாய் ப்ளாக் எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள். மாதா மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதை பற்றி சொல்லி கொடுக்க போகிறார்கள் என்று நினைத்தால் அதுவும் நிச்சயம் அவர்களால்  முடியாது. ஏன் என்றால் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு வருமானமே கூகிளின் மூலம் வரும் வருமானம்தான். அதன் பிறகு அதற்காக ஆட் வேர்ட், டேக் போன்ற பல டெக்னிக்கல் தகிடுதத்தங்களை மட்டுமே வைத்து தொடர்ந்து எழுதி சம்பாதிக்க முடியும்.

ஆனால் தமிழில் நல்ல ட்ராபிக் உள்ள தளங்களுக்கு மட்டுமே ஆட்சென்ஸ் விளம்பரம் மூலமாய் வருமானம் வர வழியிருக்கும் போது அந்த ஆப்ஷனும் இவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் இணையத்தில் விளம்பரம் வழங்கும் நிறுவனம் அல்ல. அப்படியிருக்க, எப்படி இம்மாதிரியான ஒரு போர்டை எடுத்துக் கொண்டு வருவார்கள்?. ஏதோ ஆங்கில ப்ளாகர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போலவும், மற்ற மொழியில் எழுதுபவர்கள் கீழ் நிலையில் இருப்பவர்கள் போலவும் மனதில் எண்ணம் கொண்டதால் தானே இம்மாதிரியான போர்டை எடுத்து வர தைரியம் வந்தது?.  என்னுடய தரப்பு வாதங்களை அவர்களிடம் ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டு, இவ்வளவு ஆங்கிலம் தெரிந்த எங்களால் ஆங்கில ப்ளாக் எழுத முடியாமல் இல்லை. தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தினால் தான் எழுதுகிறோம். அது மட்டுமில்லாமல் வலைப்பூவில் எழுதி எழுத்தாளர்களாகவும், அதன் மூலம் வருமானமும் சம்பாதித்துக் கொண்டுதானிருக்கிறோம். எனவே உங்களுக்கு எங்கள் கண்டனங்கள் என்றேன். அவர்களும் எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அந்த போர்டை வாபஸ் வாங்கி வருத்தம் தெரிவித்தார்கள். இதோ அந்த தட்டியின் புகைப்படம். நீங்களே பாருங்கள்.

90 சதவிகிதம் ஆங்கில ப்ளாகர்கள் உள்ள இடத்தில் நம்மைப் பற்றிய பார்வையும், அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும்?  நட்சத்திர ஓட்டலில் உட்கார வைத்து சோறு போட்டவனிடம் சண்டைப் போட்டு தான் எதிர்ப்பை காட்டுவதா? என்று கேட்பவர்களுக்கு… தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.
09102011159
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

122 comments:

a said...

Thala,
Nachinnu kettu irukkeenga...

Unknown said...

யாரும் கேக்காமலே இருந்ததாலே அவனுகளுக்கு தெரியலே போலிரிக்கு சார், உங்க எதிர்ப்பை தெரிவித்து சரியான வேலை செஞ்சு இருக்கீங்க நன்றி சார்..

Vinodh S said...

சரியான அடி , ப்ளாக் மட்டும் அல்ல இன்னும் பல விஷயத்தில நமக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைகுரானுங்க.
செம கோவம் வருது சார்.

கோவி.கண்ணன் said...

முழுமையாக வழிமொழிகிறேன். நீங்கள் அவர்களுக்கு கொடுத்தது நல்ல பாடம். தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு உதவ இவர்கள் யார் ? யார் இவர்களிடன் உதவி கேட்டது ?

Unknown said...

you are absolutely correct.i was there with you.i have d video clip of your fight with the organiser.will send you thru mail soon !!

மதுரை அழகு said...

இது போன்ற நுனிநாக்கு ஆங்கில ஒயிட் காலர் திமிர்த்தனத்தை தொடர்ந்து எதிர்க்க ஊக்கமான வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

//சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.//

உங்களின் குழந்தை மனதுக்குள்ளும் ஒரு போராட்ட மனிதன் இருக்கிறான். அதை அவ்வப்போது நிருபித்து வருகிறீர்கள். உரக்க குரல் கொடுப்போம் ஒற்றுமையாய்... வாழ்த்துகள்.

நிகழ்காலத்தில்... said...

என்ன போர்டுன்னு புரியாமலே படிச்சிட்டு வந்தேன். கடைசியில போர்ட பார்த்தவுடன் டென்சன் எகிறிருச்சு.,

நீங்கள் செய்தது சரிதான்...

அஞ்சா சிங்கம் said...

ரவ்த்ரம் பழகு .....................

Thamira said...

போர்டைப் பார்க்கும் போதே கடுப்பாவுதே.!!

‘பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு, எப்பிடியாச்சும் ஒரு 5, 10 போட்டுக்கொடுப்போம்’ ங்கிறமாதிரி இருக்கு. நல்லா கொடுத்தீங்களா? இல்ல, நாசூக்கா சொன்னீங்களா? சோத்தைப்போட்டாலே நம்மாளுகளுக்கு மானம் மறந்துபோகுமே.!

SURYAJEEVA said...

தமிழனடா, அவன் மனிதனடா

rajamelaiyur said...

எதிர்ப்பை தெரிவித்து சரியான வேலை செஞ்சு இருக்கீங்க

rajamelaiyur said...

இன்று என் வலையில் ..


அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?
Buzz It
Share

அக்கப்போரு said...

ரௌடினா அது நீங்க தாண்ணே

சசிகுமார் said...

தமிழ் பதிவர்கள் சார்பாக பலமான கைதட்டல் உங்களுக்கு கேபிள் சார். அரசியல் வாதிகள் ஈய விசயத்தை வைத்து ஏமாற்றுவது போல இந்த இண்டி பிளாக்கர் நம்மை வைத்து விளையாட நினைத்திருக்கிறார்கள் ஆனால் நீங்கள் கொடுத்த சுவுக்கடி அவர்களுக்கு உரைத்து இருக்கும் அதனால் தான் உடனே வாபஸ் பெற்று இருக்கிறார்கள்.. சபாஸ் சார்...

ஒரே ஒரு மாதம் கூகுள் தனது அட்சென்ஸ் சேவையை ஆங்கில வலைப்பூக்களுக்கு நிறுத்தட்டும் அப்புறம் தெரியும் எத்தனை பேர் எழுதாராங்கன்னு...

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன் கேபிள் அண்ணா!

அறிவில்லாதவன் said...

கலக்கிட்டீங்க கேபிள். வாழ்த்துக்கள். ஆயிரம் வருடம் முன்பாகவே தமிழ் செல்லாத இடமே இல்லை உலகில். தமிழ் கலப்பு இல்லாத மொழியும் இல்லை. ஆங்கிலம் கூத்தியாளுக்கு பிறந்த குழந்தை. வெறும் நானூறு ஐநூறு வருசத்துக்கு முன்னால் நெறியற்ற போர் முறையினாலும் , சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், வணிக நோக்கத்தோடும் நாடு பிடிக்கப்பட்டு வளர்ந்த மொழி தான் ஆங்கிலம். எவன் எவனுக்கு கற்று தருவது?

எட்டாயிரம் வருடங்களுக்கும் மேலா தன்னை தானே காலத்திற்கு ஏற்றார் போல் செம்மை படுத்திகொண்டு வளர்ந்த மொழி தமிழ். இணையத்தில் வளர்த்தெடுக்க ஆரம்பித்து இருபது வருடம் ஆகிவிட்ட எங்களுக்கு இவன் சொல்லிதர அவசியம் இல்லை.

kamalakkannan said...

வட நாட்டானுக்கு தென் நாட்டான பார்த்த எப்பவும் இளக்காரம் தான்,சேரன் செங்குட்டுவன் காலம் தொட்டு இது தொடருது .

Ravikumar Tirupur said...

சார் தமிழ்நாட்ல ஆங்கில ப்ளாக்க அம்மாம்பேர் படிக்கிறாங்களா? இன்னிக்கு படம் ரிலீஸ் ஆனதும் ப்ளாக்கர்ஸ்க்கு தனி ஷோவே போடற அளவு முக்கியமானவங்களா ஆகிருக்காங்க தமிழ் ப்ளாக்கர்ஸ்.
இன்னொன்னு கல்வி,அரசு, ஆட்சி,அலுவலகம் அப்படீனு எங்க பார்த்தாலும் தமிழ் இரண்டாம் தரமாகதானே பார்க்கப்படுகிறது.
அதான் அவங்களுக்கும் அப்படி தோணிருக்கு!
உங்க துணிச்சலுக்கு பாராட்டுக்கள்!

Unknown said...

சரியான அடி சார்

தமிழன்டா

settaikkaran said...

தமிழுலெ எழுதறவன்னா இளப்பமா இவனுகளுக்கு...?
உயர்வு மனப்பான்மை கொஞ்சம் ஓவராயிருச்சு போலிருக்குது!

Anonymous said...

See Also in today's (11th Oct. 2011) Indian Express:

Blogging in Tamil just doesn’t pay, say bloggers

link: http://expressbuzz.com/cities/chennai/blogging-in-tamil-just-doesn%E2%80%99t-pay-say-bloggers/321940.html

//The perception of commercial establishments also added to this view as many advertisers were of the opinion that people using the web would not be looking for content in local languages and preferred to attract the English-speaking lot.//

Yaro Oruvann

creativemani said...

அங்கு நடந்த முழு-விவரம் தெரியாம எப்பவும் போல கொதிச்சு எழறவங்களுக்கு..

நானும் IndiBloggers & TATA Grande இணைந்து வழங்கிய Bloggers Meet'க்கு போயிருந்தேன். பல்வேறு தளங்களில் இயங்கும் வலைப்பூ எழுத்தாளர்கள் கலந்து கொண்ட அற்புதமாய் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சி அது.

எப்போதும் பர்ஷப்ஷன் பத்தி பேசும் கேபிள் சார்.. அவங்க எந்த பர்ஷப்ஷன்'ல அந்த போர்டு வச்சாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா.. அவங்க மைக்'லையே தெளிவா சொன்னாங்க, வலைப்பூவில் சேர்க்கக் கூடிய புதிய டெக்னாலஜி பத்தியும், இன்னும் மெருகூட்டி எழுதும் எழுத்துக்கள் மூலம் மக்களை கவர்ந்திழுத்து வருமானம் பெறுவது பற்றியும் தெரிஞ்சுக்கவே அவங்க அந்த டிஸ்கஷன் ஏற்பாடு பண்ணினாங்க.

உங்களுக்கு கூகுள் ஆட்-சென்ஸ் பத்தியும் விளம்பரங்கள் பத்தியும், அதன் மூலம் கிடைக்கும் சாதக/பாதகங்கள் பத்தியும் தெரிஞ்சுருந்தா, எல்லாருக்குமே தெரியும்'ன்னு அர்த்தம் இல்லையே.. தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்க போறாங்க.

தமிழ் வலைப்பூக்கள் 8000 வரை இருக்கும்'ன்னு சொல்றீங்க.. அதில் எத்தனை பேர் தினம் இயங்கறாங்க. எத்தனை திறமை இருந்தும், தினம் எழுதியும் பணம் சம்பாதிச்சுடறாங்க. இது ஒரு தகவல் அறியும் வாய்ப்பு தானே.. அதில் என்ன தப்பு. அது மாதிரி தானே தமிழிலும் கவிதை, கதை எழுத பட்டறை, போட்டிகள் போன்ற விஷயங்கள் நடத்தப்படுது. அப்போ அதுவும் தப்பா?

ஒரு நல்ல நிகழ்வை அப்படியே தமிழ் ப்ளாக்கர்ஸ்'க்கு எதிராக நடத்தப் பட்டதை போன்று எழுதியதைப் பார்த்தே இவ்வளவு வருத்தம்.

Sivaraman said...

Hello Manigandan,

I am not a blogger and I am not there in the Meet, But If they want to teach the Bloggers, How to make money and other Technical aspects of blogging, Its a common topic and they can teach/Share it to everybody. Why specifically to "TAMIL" Bloggers? and Why there is a board targeting Tamil's? Any comments?

-Sivaraman

creativemani said...

Dear Sivaraman,

Its so simple.. and I have mentioned the reason already.. How many tamil bloggers are familiar with all the widgets and stuffs that are helping to monetize their blog? How many of them know the advantages and disadvantages of keeping them? How many of them know to make their blog very attractive by using the ever changing templates etc.,

And the meeting held at chennai, so they tried to open a discussion to help tamil bloggers as well.. so that we wont think that they left us unnoticed..

பிரபல பதிவர் said...

தல...

உங்க ப்ளாக்கே cablesankar.blogspot.com என்று போட்டாத்தான் ஓப்பன் ஆகுது,,,

முதல்ல கேபிள்சங்கர்.பிளாக்ஸ்பாட்.காம் என்று போட்டா ஓப்பன் ஆகனும்னு தீக்குளிங்க தல...


வாழ்க புரட்சி.... கேட்டால்தான் கிடைக்கும்

Sivaraman said...

Hello Manigandan,

Still I am not getting the point. Don't you think that technical Familiarity has nothing to do with the region or language (e.g. adding widgets or changing templates)? It is a generic topic needs to be addressed for all bloggers. Since the meeting happened in Chennai, I would expect a topic like "Role of Tamil/Regional bloggers" in blogging. Where this might have given a opportunity to show everybody What kind of work People like "CABLE Sankar" is carrying out here. Not sure whether there is a channel like this in the meet? Also I follow English and Tamil blogging I don't see any area's where Tamil bloggers fall short from a Reader's perspective...

-Sivaraman

Avani Shiva said...

சரியாகதான் செய்தீர்கள் ,மகிழ்ச்சி

Sivakumar said...

'சோத்தைப்போட்டால் நம்மாளுகளுக்கு மானம் மறந்துபோகும்'...

தமிழனை கேவலப்படுத்த indiblogger எதுக்கு? நாங்களே கேவலப்படுத்திக்குவோம் என்பதற்கு உயரிய உதாரணம்.

குறையொன்றுமில்லை. said...

முதல்ல அங்க வெரும் அறிவிப்புமட்டும் பார்த்ததில் ஒன்னும் புரியல்லே இங்கவந்து பாத்ததும் ஓரளவு புரிந்ததது. அவங்கவங்களுக்கு தெரிந்தபாஷையில் பதிவு போடுராங்க இதில் என்ன இருக்கு தெரிஞ்சவங்கபடிக்கட்டுமே.

MANO நாஞ்சில் மனோ said...

குட்டு குடுக்குறவனுக்கு, தகுந்த நேரத்தில் குட்டு கொடுப்பதில் தப்பில்லை, கேபிள் செய்தது சரியே...

creativemani said...

Dear Sivaraman..

Ofcourse, Technical familiarity is generic, but can you tell me how many tamil blogs having them. And How many tamil bloggers aware of them..

But not only widgets, why cant someone (tamil blogger) take it as a opportunity to know more about what they really dont know?

I have plenty of questions on blogspot and wordpress and other monetizing tools. How many tamil sites using them, talk about them, and how many of them ready to teach others.

But in this meet, there was a set of people to advice and share the knowledge of the same. And for the people who wants to know something new its a opportunity. Thats it.

Do you know? they are also making our ramil blogger friend Athisha's story as a Stage Show? So there's nothing bad to know something really interesting!

Sivakumar said...

@ அன்புடன் மணிகண்டன்

மணி, அவர்கள் மைக்கில் விளக்கி தள்ளியது எல்லாம் சரிதான். புதிய டெக்னாலஜி பற்றியும், மெருகை ஊட்டி ஊட்டி எழுதி காசு பார்க்கும் வித்தை பற்றியும் தமிழ் ப்ளாக்கர்ஸ்களுக்கு அறவே தெரியாதுன்னு எவன் முடிவு செஞ்சான். இல்லன்னா இங்கிலீசுல எழுதுற எல்லாருக்கும் அந்த ஈர வெங்காயம் பத்தி ரொம்ப நல்லா தெரியுமா? எதை வச்சி சொல்றீங்க?

புதிய டெக்னிகல் விஷயம் பற்றிய புலமை உள்ள தமிழ் ப்ளாக்கர்ஸ் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாம நீங்க சொல்றது சரி இல்லை. அது பத்தி அங்க இருந்த indiblogger ஆளுகிட்ட தெளிவா சொல்லி இருந்தேன்.

இங்க பிரச்னையே we can help அப்டிங்கற வார்த்தைதான். Let us give technical and other helps to the bloggers அப்டின்னு போர்ட் வச்சா எவன் கேட்டான்? we can help tamil bloggers தான் பிரச்னை.

இங்கிலீஷ் ப்ளாக்கர்ஸ் எல்லாரும் ரெகுலரா இயங்குறாங்கன்னு எதை வச்சி சொல்றீங்க? பர்ஷப்சன் என்னவா வேணா இருந்துட்டு போகட்டும். அது எல்லாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரி மாணவன் முதல் ரிட்டயர்ட் ஆன பெரியவர்கள் வரை பதிவர்களாக இருக்கையில் எல்லாருக்கும் பொதுவான அர்த்தத்தில்தான் அந்த போர்டை வைத்திருக்க வேண்டும்.

Unknown said...

தமிழ் மேல் நாம் காட்டும் பற்று , சில சமயம் நம்முடைய தாழ்வுமனப்பான்மையை மறைக்கும் முயற்சியோ என்று கூட தோன்றுகிறது. அப்படி இல்லாதவரை சந்தோசம்தான்.

kamalakkannan said...

@ அன்புடன்-மணிகண்டன்

//வலைப்பூவில் சேர்க்கக் கூடிய புதிய டெக்னாலஜி பத்தியும், இன்னும் மெருகூட்டி எழுதும் எழுத்துக்கள் மூலம் மக்களை கவர்ந்திழுத்து வருமானம் பெறுவது பற்றியும் தெரிஞ்சுக்கவே அவங்க அந்த டிஸ்கஷன் ஏற்பாடு பண்ணினாங்க.

தமிழ் வலை பூ எழுத்தாளர்கள் அனைவரும் பணம் பண்ணும் நோக்கத்துடன் எழுதுவது கிடையாது,அனைத்து தொழில் நுட்பமும் அறிந்தவர்கள் தமிழர்கள் அவர்களுக்கு புதிதாக நீங்க என்ன தொழில் நுட்பம் சொல்லி தர போறிங்க,கணினி இணைய பயன்பாட்டில் தமிழ் மொழி அணைத்து இந்திய மாநில மொழிகளை விட விஞ்சி இயங்க ஆற்றல் உள்ளது ,

//தமிழ் வலைப்பூக்கள் 8000 வரை இருக்கும்'ன்னு சொல்றீங்க.. அதில் எத்தனை பேர் தினம் இயங்கறாங்க. எத்தனை திறமை இருந்தும், தினம் எழுதியும் பணம் சம்பாதிச்சுடறாங்க. இது ஒரு தகவல் அறியும் வாய்ப்பு தானே.. அதில் என்ன தப்பு. அது மாதிரி தானே தமிழிலும் கவிதை, கதை எழுத பட்டறை, போட்டிகள் போன்ற விஷயங்கள் நடத்தப்படுது. அப்போ அதுவும் தப்பா?

கட்டுரை ,கவிதை போட்டி நடத்துவதற்கும் "நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?" என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது , வடமொழிகாரன் தமிழ் எழுத்து சீர் செய்வது என்பது எப்படி சொல்லி தர மாறி :(

//ஒரு நல்ல நிகழ்வை அப்படியே தமிழ் ப்ளாக்கர்ஸ்'க்கு எதிராக நடத்தப் பட்டதை போன்று எழுதியதைப் பார்த்தே இவ்வளவு வருத்தம்.

வலை பதிவு எவ்வாறு உதவுவது ? தலைப்பு இருந்தா பிரச்னை இருந்து இருக்காது , தமிழ் வலை பதிவாளர்களுக்கு உதவுவது தலைப்பு இருந்ததால தான் பிரச்னை ,தமிழ் ஒரு மாகாணத்தின் மொழி அல்ல உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மொழி.

பிரபல பதிவர் said...

//we can help tamil bloggers//

மீட் சென்னைல நடந்ததுனால தமிழ் ப்ளாக்கர்ஸ்...

மும்பைல நடந்தா மராத்தி ப்ளாக்கர்ஸ்...

ஹைதராபாத்ல நடந்தா தெலுகு ப்ளாக்கர்ஸ்... ப்ளா... ப்ளா.... இது ஒரு இயல்பான விஷயம்... கொந்தளிக்க ஒண்ணுமே இல்ல....

தமிழன் சும்மா பேசி பேசியே நாசமா போனவங்கிறதுக்கு இந்த பதிவும் பின்னூட்டங்களும்தான் உதாரணம்,,,,,

Sivaraman said...

Hello Manigandan,
Part of my view is answered by Sivakumar.

"How many Tamil sites using them," ? ---> Neither u have the stats Nor I Do :)

I have plenty of questions on blogspot and wordpress and other monetizing tools. ---> You Don't have these Questions because your are blogging in Tamil. If you have any difficulty "Only" because you are blogging in TAMIL, Then that's a point... needs to be addressed in the Meets By those Gentleman's ... Do you have any Show Blocker?

perception --> I think what "cable" has done is right... They are trying to address a entire community/Group. They have to be Little clear/Careful on what they are trying to address. You Cannot !Generalize Things! On few thousand Blogger...

பிரபல பதிவர் said...

புள்ள குட்டிகளையாவது கொஞ்சம் பரந்த மனப்பான்மையோடு வளருங்கய்யா....

66 ல் முடிந்து போன சுய நல மொழிப்போர மறுபடியும் கிளறிகிட்டு.... நாசமா போயிராதீங்கய்யா....

creativemani said...

அன்பு சிவகுமார்..
இங்கே எல்லாம் தெரிந்தவர்களை பற்றிய பேச்சே இல்லை..
நான் கேட்பது, அது பற்றி முழு விபரமும் தெரியாதவங்களை தான் (including me ) ..
இது எங்களுக்கு புதிய விஷயம் தெரிந்து கொள்ள ஒரு தகவல் அறியும் வாய்ப்பு..
புதிய டெக்னிகல் விஷயம் தெரிஞ்ச புலமை உள்ளவங்க யார் சார்,
இந்த மாதிரி ஒரு ஈவன்ட் ஆர்கனைஸ் பண்ணி விளக்கம் தர்றாங்க..
அவர்கள் போர்டு வைத்தது, சென்னையில் இது நடப்பதால், தமிழ் பிளாக்கர்'களுக்கு தேவையான விளக்கங்கள் அளித்து உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒரு கவரும் உத்தி அவ்வளவே.

You are correct Sivakasi Mappillai.. :))

kamalakkannan said...

தாய் மொழி (தமிழ் )மறக்கும் அளவிற்கு புள்ள குட்டிய பரந்த மனப்பான்மையோட வளர்க்க முடியாது , தாய் மொழி ஒருவனுக்கு வேர் போன்றது ,66 நடந்தது சுய மொழி போர் இல்லை ,சுய அடையாளம் காக்கும் போர் .

உலக சினிமா ரசிகன் said...

கேபிளின் கோபம் நியாயமானது....நாணயமானது.

புண்ணுக்கு புனுகு பூச வேண்டாம்...
மணிகண்டரே!

Sivakumar said...

//சென்னையில் இது நடப்பதால், தமிழ் பிளாக்கர்'களுக்கு தேவையான விளக்கங்கள் அளித்து உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒரு கவரும் உத்தி அவ்வளவே.//

@ மணிகண்டன்

என்னங்க காமடி பண்றீங்க? சென்னையில் இருந்து கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் இங்கிலீஷ் ப்ளாக்கர்ஸ் என்று நேரில் பார்த்தீர்களே. அப்படி என்றால் அவர்களில் பலருக்கும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தெரிய வாய்ப்பு இல்லாமல் இருக்கலாமே? அது என்ன குறிப்பாக தமிழ் ப்ளாக்கர்ஸ்?

தாய்மொழியை ஆதரிக்க ஜப்பான், ஜெர்மன், எல்லாம் எது செஞ்சாலும் 'என்னா ஒரு மொழிப்பற்றுடா?' என்று சிலாகிப்பதும், அதையே தமிழன் செய்தால் அதை மாப்பிள்ளைகள் நக்கல் அடிப்பதும் எந்த விதத்தில் சேர்த்தி?

பரந்த மனப்பான்மையோட புள்ள குட்டிங்களை வளருன்னா எப்படி? இங்கிலீஷ்ல பேசுறவன் எது செஞ்சாலும் பொத்திக்கிட்டு கேக்கற மாதிரியா?

bigilu said...

"Discuss IndiBlogger & how we can help bloggers/ TN bloggers" - இப்படி எழுதி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு அனைத்தும் தெரியும் என நம்ப நான் என முட்டாளா.. ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கும் உதவலாமே...

என்னை பொருத்தவரை கேபிள் சார் செய்தது மிக மிக சரி...

Sivaraman said...

And If we Don't Condemn this ...One Day ... This may continue as a sequel. How to blog in Tamil (Part 1,2,3)... What else...:) At last can get concluded as, These "8000 TAMIL" Blogger's doesn't Know how to blog... We have conducted a "free" Seminar and HELPED them ... Now they are doing OK :( ... and making their penny's for life from this :(

Ha ... Ha... May be a bit of exaggeration ... No Offence Please :)

creativemani said...

@ திரு உலக சினிமா ரசிகன்.
இங்கு யாரும் யார் புண்ணுக்கும் புனுகு பூச வில்லை..

@ சிவகுமார்
சென்னையில் இது நடப்பதால், தமிழ் பிளாக்கர்'களுக்கு தேவையான விளக்கங்கள் அளித்து உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒரு கவரும் உத்தி என்று சொல்லியும் நீங்க காமெடி பண்றேன்னு சொன்னா எனக்கும் சிரிப்பு தான் வருது..

//அவர்களில் பலருக்கும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் தெரிய வாய்ப்பு இல்லாமல் இருக்கலாமே? அது என்ன குறிப்பாக தமிழ் ப்ளாக்கர்ஸ்? //

யாருக்கு தெரியலையோ அவங்க கேட்டு தெரிஞ்சுக்கப் போறாங்க சிவகுமார். அவன் தமிழ் ப்ளாக்கர்ஸ்'க்கு ஹெல்ப்'ன்னு தானே போர்டு வச்சான்.. இதிலென்ன தப்பு. So.. யாரைக் கேட்பது என்ன கேட்பது'ன்னு நெனைக்கற தமிழ் ப்ளாக்கர்ஸ் அவங்களுக்குரிய தகவல் பெறும் மையமா அதை பயன்படுத்திக்க போறாங்க. Thats all!

சேகர் said...

அந்த இடத்தில நான் இருந்தாலும் எனக்கும் கோவம் வந்திருக்கும். தாங்கள் செய்தது சரியே...

பிரபல பதிவர் said...

எனக்கு வடிவேலு பார்த்திபன் மீன் கடை காமெடிதான் நியாபகத்துக்கு வருது,,,,

பிரபல பதிவர் said...

//தாய் மொழி (தமிழ் )மறக்கும் அளவிற்கு புள்ள குட்டிய பரந்த மனப்பான்மையோட வளர்க்க முடியாது , தாய் மொழி ஒருவனுக்கு வேர் போன்றது ,66 நடந்தது சுய மொழி போர் இல்லை ,சுய அடையாளம் காக்கும் போர் .//


அப்ப கன்னடம், மராத்தி, தெலுகு, மலையாளம் எல்லாம் காணாப்போச்சா?....

அந்த மொழிப்போரால ஹிந்தி தெரியாம இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நிலை தெரியாம சும்மா சவடால் பேச்சு பேசக்கூடாது,,,,

அப்புறம் என்னாத்துக்கு ஹிந்திய எதிர்த்துட்டு ஆங்கிலத்த இரண்டாவது மொழின்னீங்க...

பிரபல பதிவர் said...

ரொம்ப நாள் கழித்து 50 பின்னூட்டம் போல‌

Thamira said...

'சோத்தைப்போட்டால் நம்மாளுகளுக்கு மானம் மறந்துபோகும்'...

தமிழனை கேவலப்படுத்த indiblogger எதுக்கு? நாங்களே கேவலப்படுத்திக்குவோம் என்பதற்கு உயரிய உதாரணம்.//

நெகடிவாக பேச எப்போதும் நான் விரும்பியதில்லை. இருப்பினும் எப்போதாவது கோபத்தில் வார்த்தைகள் வருவதுண்டு.

பல்வேறு தளங்களில் நாம் இயங்கும் லட்சணத்தை நோக்கும் போது அப்படி ஒன்றும் நான் சொன்னது கொலைக்குத்தமும் இல்லை. எப்பயுமே சொல்லப்பிடாதுன்னா இப்படி சோறும் போட்டு அதையே சொல்லிட்டுப்போக வேற ஒருத்தன் வருவான்.

கோபத்துக்குக் காரணம் அதே இடத்தில் நம்மாளுங்க சிலர் பேசின ‘செஞ்சோற்றுக் கடன்’ டயலாக்ஸ்தான். அதைச்சொல்லவா? இன்னும் கொஞ்சம் மானம் டேமேஜாகும், பரவாயில்லையா.?

அப்புறம்.. அறிவார்ந்த, சிந்தனாவாதிகளின் விவாதங்களையும் இங்கு அடையாளம் காண உதவிய கேபிளுக்கு பெஸல் நன்றி.

kamalakkannan said...

//அப்ப கன்னடம், மராத்தி, தெலுகு, மலையாளம் எல்லாம் காணாப்போச்சா?..

நான் சொன்னது தாய் மொழி அது எந்த மொழி யா இருந்தாலும் ,பிழைப்புக்காக எந்த மொழி தேவையானாலும் கத்துக்குங்க ஆனா ,தமிழ் நாட்ல தமிழ் தான் :)

உங்களுக்கு மராட்டியத்தில் மராத்தி தெரியாம ஹிந்தி பேசுங்க ஆனா தமிழ் நாட்ல தமிழ் தான் ஹிந்தி இல்லை.

ஆங்கிலம் பொதுவான தொடர்பு மொழி தான் இரண்டாம் மொழி முன்றாம் மொழி கதை வேண்டாம் .

creativemani said...

அடா.. அடா.. எல்லாம் தெரிஞ்ச புலமை வாதிகள் என்ன வேணும்'ன்னா பேசலாம்.. தப்பே இல்ல..

மெச்சு said...

அன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய திரு.சங்கர்,

இப்ப என்ன கேட்கக் கூடாத கேட்டுட்டாங்க ! யாருமே எந்தக் கூட்டமுமே எப்போதும் முழுமையானது இல்லை தெரியுமா ? அரசியல் செய்யனும்னு முடிவெடுத்துட்டா எல்லாத்தையுமே குற்றமாக்கிடலாம்.

சும்மா எதுக்கு எடுத்தாலும் தமிழ் தமிழ்-னு கம்பு சுத்தறதை எப்ப நிறுத்தப் போகிறோம்.

நமக்கு கத்துக்கிறதுக்கு எதுவுமே இல்லையா ?

தமிழ் பதிவர் சந்திப்பு பத்தி ஒரு பதிவர் சில வருடங்களுக்கு முன்னே படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார். பாவம் அவரு டிஜிட்டல் கேமிரா-வின் கவரைக்கூட எப்படி எடுக்கிறதுன்னு தெரியாம வாட்டர் கலர் பன்னாப்ல படமெடுத்திருந்தார்.(பாலீத்தீன் தாளை எடுக்காம எடுத்திருப்பாரோ??) திரைத் துறையுடன் தொடர்புள்ளவர் என்று அவர் பதிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் பெயர் நினைவில்லை.

பிரபல பதிவர் said...

/ஆனா தமிழ் நாட்ல தமிழ் தான் ஹிந்தி இல்லை.//

... ஏன் தமிழ் நாட்டு ஸ்கூல்ல தமிழ், ஆங்கிலம் இரண்டும் கத்து தராங்க...

ஆங்கிலம் என்னா தமிழன் கண்டுபிடிச்ச மொழியா???



இந்த அடிப்படை கேள்விய புரிஞ்சிக்காம சவுண்ட் உடாதீங்க...

பிரபல பதிவர் said...

தான் மட்டும்தான் சிந்தனாவாதிங்கிற டைப் பின்னூட்டங்களை ஒத்தது உங்க சண்ட....

பிரபல பதிவர் said...

//உங்களுக்கு மராட்டியத்தில் மராத்தி தெரியாம ஹிந்தி பேசுங்க ஆனா தமிழ் நாட்ல தமிழ் தான் ஹிந்தி இல்லை//

என்னா கொடுமையான லாஜிக் இது,,, இதுலேர்ந்தே தெரியுது,.,,, தமிழனோட கிறுக்குத்தனம்

Sivakumar said...

'பெசலாக' புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பதில் சொல்லும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகள்(ஆவரேஜ் அறிவுள்ள ப்ளாக்கர் க்ரூப்) வரிசையில் நான் இருப்பதை பெருமையாகவே கருதுகிறேன்.

//
கோபத்துக்குக் காரணம் அதே இடத்தில் நம்மாளுங்க சிலர் பேசின ‘செஞ்சோற்றுக் கடன்’ டயலாக்ஸ்தான். //

அந்தக்காரணம் 'விஷயம் தெரிந்த நபர்களுக்கு வேண்டுமெனில் புரியலாம். பொத்தாம் பொதுவாக 'நம்மாளுகளும்' போன்ற வார்த்தைகளை எழுதினால் அந்த நம்மாளு பதிவர்களா, தமிழர்களா, இந்தியர்களா அல்லது ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களா என்று ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு நாங்கள் வளர நாள் ஆகும்.

// இன்னும் கொஞ்சம் மானம் டேமேஜாகும், பரவாயில்லையா.?//

அதற்கு வீட்டு (ப்ளாக்) ஓனர்தான் பதில் சொல்ல முடியும்.

kamalakkannan said...

// .. ஏன் தமிழ் நாட்டு ஸ்கூல்ல தமிழ், ஆங்கிலம் இரண்டும் கத்து தராங்க...

ஆங்கிலம் என்னா தமிழன் கண்டுபிடிச்ச மொழியா??? //

தமிழனுக்கு தமிழ் தாய் மொழி ,ஆங்கிலம் பொது தொடர்பு மொழி , தமிழனுக்கு ஹிந்தி மொழி வழி கல்வி தேவை இல்லை .நீங்க வட நாட்டில் இருந்து வந்து ஹிந்தி படிச்சா எங்களுக்கு அத பத்தி கவலை இல்லை .எந்த மொழி கற்பதையும் எதிர்க்கவில்லை,மொழி வாரி மாநிலம் பிரித்த பிறகு ஹிந்தி மொழி ஆதிக்கம் மூலம் மாநில மொழி உரிமையினை நசுக்குவதை ,திராவிட மொழிகளின் தாய் மொழி பேசும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் .

பிரபல பதிவர் said...

நம்ம தல கேபிளும் நாம் தமிழர் இயக்கத்துல சேர்ற எண்ணத்துல இருக்காரா,,,,

அவனுங்கதான் தமிழ், தமிழ்னு ஏதாவது காமெடி பண்ணீட்டு இருப்பானுக...

இப்ப இவுரும் ஆரம்பிச்சிருக்காரே...

kamalakkannan said...

தமிழர்களின் தாய் மொழியில் வலை பூ எழுதுபவர்களிடம் வந்து ஒரு அந்நியன்
நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது? சொன்னா கண்டிப்பா உதைப்போம் காரணம் அவர்களின் ஆதிக்க மனப்பான்மை .

// sivakasi maappillai said...
நம்ம தல கேபிளும் நாம் தமிழர் இயக்கத்துல சேர்ற எண்ணத்துல இருக்காரா,,,,

அவனுங்கதான் தமிழ், தமிழ்னு ஏதாவது காமெடி பண்ணீட்டு இருப்பானுக...

இப்ப இவுரும் ஆரம்பிச்சிருக்காரே... //

தாயினை நிந்தனை செய்தவனும் தாய் மொழி நிந்தனை செய்வதற்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை .
--

பிரபல பதிவர் said...

//தாயினை நிந்தனை செய்தவனும் தாய் மொழி நிந்தனை செய்வதற்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை . //

66 லேர்ந்து இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமாயிருக்கு,,.,, இன்னும் திருந்தலியா...

kamalakkannan said...

66 ல இருந்து இல்லா அதற்க்கு முன்பும் ,இப்போதும் ,எப்போதும் சொல்லுறது ஒன்னு தான் , தாய் மொழி ,நீ தமிழனாக இருந்தால் தமிழ் மொழி ,அந்நிய மொழி திணிப்பு எதிர்ப்பு எப்போதும் இருக்கும் அது ஹிந்தி மொழி அனாலும் வேறு எந்த மொழி அனாலும் .

பிரபல பதிவர் said...

//தமிழனுக்கு தமிழ் தாய் மொழி ,ஆங்கிலம் பொது தொடர்பு மொழி , தமிழனுக்கு ஹிந்தி மொழி வழி கல்வி தேவை இல்லை//

ஓ அப்ப அடிமையா இருந்தா வெள்ளக்காரனுக்கு அடிமையா இருப்போங்கிறீங்க,.,,

தமிழ காப்பாத்துங்க... தப்பே இல்ல... ஏன் ஆங்கிலத்தயும் சேத்து காப்பாத்துறீங்க.... அந்நிய மொழி ஓகே.. தேசிய மொழி நாட் ஓகே என்ற மனோபாவத்தைதான் சாடுகிறேன்... புரிஞ்சிக்குங்க...

பிரபல பதிவர் said...

/////தமிழனுக்கு தமிழ் தாய் மொழி ///

அய்யா ... தமிழ் தாய் மொழியா இருந்தா மட்டும்தான் தமிழன்.... இந்த அடிப்படை கூட தெரியாம புதுசா வந்த தேமுதிக உறுப்பினர் மாதிரி பேசக்கூடாது...

பிரபல பதிவர் said...

/தாய் மொழி ,நீ தமிழனாக இருந்தால் தமிழ் மொழி///

அய்யோ கொல பண்றாரே... கொல பண்றாரே....

அப்ப இந்தி தெரிஞ்சாத்தானே இந்தியன் சொல்ல முடியும்?

இளம் பரிதி said...

we can help tamil bloggers ....antha 'we' ngra varthaithan overa theriuthu...

kamalakkannan said...

தமிழ காப்பாத்துங்க... தப்பே இல்ல... ஏன் ஆங்கிலத்தயும் சேத்து காப்பாத்துறீங்க.... அந்நிய மொழி ஓகே.. தேசிய மொழி நாட் ஓகே என்ற மனோபாவத்தைதான் சாடுகிறேன்... புரிஞ்சிக்குங்க..

இந்தியாவில் மொழி வரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது .

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை ஆனால் தமிழ் ஒரு செம்மொழி ,திராவிட மொழிகளின் தாய் மொழி .

Guru said...

//கோவி.கண்ணன் said...
முழுமையாக வழிமொழிகிறேன். நீங்கள் அவர்களுக்கு கொடுத்தது நல்ல பாடம். தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு உதவ இவர்கள் யார் ? யார் இவர்களிடன் உதவி கேட்டது ?
///

Naama KAruthum athe..

Anoop Johnson said...

Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)

நிவாஸ் said...

//என்னுடய தரப்பு வாதங்களை அவர்களிடம் ஆங்கிலத்திலேயே வைத்துவிட்டு, இவ்வளவு ஆங்கிலம் தெரிந்த எங்களால் ஆங்கில ப்ளாக் எழுத முடியாமல் இல்லை. தமிழின் மேல் இருக்கும் ஆர்வத்தினால் தான் எழுதுகிறோம்.//

//நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை.//

உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தமிழரின் தன்மானம் காத்த உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் தகும்

kamalakkannan said...

Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

கலப்பு தமிழ் மொழி பேசுபவர்களால் மட்டும் வைத்து தமிழ் மொழி // Tamil is not very good :) ஒரு மிக சிறந்த மொழி அல்ல என்பதினை மிக வன்மையாக கண்டிக்கிறேன் .

இலக்கண ,சொல் வளம் மிக்க ஒரு செம் மொழி தமிழ் மொழி என்பதினை சொம்பு அடித்து சொல்ல என்னால் முடியும் வாங்கப்பு கொஞ்ச நேரம் விளையாடலாம் . சிவகாசி ,அத்தி பட்டி கம்மான் கம்மன் :)

இந்திய வலைபதிவு திரட்டில் எழுதுன நம்மா தமிழ் மொழி வலைபதிவு திரட்டுக்கள் என்ன ஆகும் ,பிளகர்களுக்காக பிளக்கர்களால் நடத்தப்படும் வலைபதிவு திரட்டின் வளர்ச்சி ???
வியாபார நோக்கோடு தமிழ் வலை பதிவாளர்களை தன வலையில் விழ்த்த நினைக்கும் indiblogger சூழ்ச்சியினை புறக்கணிப்போம் ,தமிழ் மொழி வலை திரட்டி அது எதுவாக இருந்தாலும் ஆதரிப்போம் :) பிரித்தாலும் சூழ்ச்சினை வெல்வோம் :)

பிரபல பதிவர் said...

அப்ப ஆங்கில படத்த அட்ட காப்பி அடிக்கிற டைரக்டர் மற்றும் முக்கிய நடிகர பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்களே தல....

அவுனுகள புதுசா தமிழ்ல கத பண்ணி படம் எடுக்க சொல்லி போராடுங்களேன்,,,

கேட்டாத்தான் கிடைக்கும்....

பிரபல பதிவர் said...

கமலகண்ணன்...

தண்ணி குடிங்க‌... யாரு என்னா எழுதுறிக்காங்கன்னு புரியாமலே கமெண்ட் போடும் உங்ககிட்ட சொற் குற்றம் பொருட்குற்றம் ரேஞ்சில விவாதிக்க முடியாது.,.,.

பேசாம சன் டிவில விஜய டி ஆர்ன் அரட்டை அரங்கம் பாருங்க...

மொதல்ல ஒரு தமிழ் கமெண்ட் எழுத்துப்பிழை இல்லாம போடுங்க பாக்கலாம்... கமான் கமான்

kamalakkannan said...

நன்றி

Anbu said...

தாங்கள் செய்தது சரியே...

Vadivelan said...

Good lesson to them....

சேக்காளி said...

அருவா கம்போட நம்ம பக்கத்துலர்ந்து ஒரு முன்னூறு பேரு ஆயத்தமா இருக்கோம்ணே. அடுத்தால எப்ப(ம்) வரணும்னு மட்டும் சொல்லி அனுப்புங்க.

Santhose said...

I think you have some ego problem. You want you to dominate the meeting ???.

It is not good for you to make an issue like this.

Thamira said...

தொழில், கலை, அரசியல் போல பிற தளங்களில் உருவாவதைப்போல கூட்டமைப்பு பதிவர்களுக்காக உருவாக வாய்ப்பில்லை, அது அவசியமுமில்லை. ஒரே குடை, ஒரே வராண்டா என்பதெல்லாம் ஜல்லி. லாப நோக்கற்ற இணைய சேவை என்பதையும் நான் நம்பவில்லை. இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகளே. அதோடு அது இங்கு தேவையுமில்லை.

இந்தக்கட்டுரையைப் பற்றி நான் சொல்லவிரும்புவது இதுதான். டெக்னாலஜி அப்டேட்ஸ், வரவு சார்ந்து இயங்குவது போன்ற நல்ல விஷயங்களைத்தான் வாலண்டியராக அந்த அமைப்பு தமிழ் பதிவர்களுக்கு கற்றுத்தர முன்வந்தது என்பதைத் தாராளமாக நம்பலாம். அதை யாரும் சந்தேகிக்கவும் இல்லை.

உறுத்துவது “How we can help tamil bloggers?” என்ற வாக்கியம்தான்.

பஞ்சத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உணவுப்பொட்டலங்களை வழங்குவது என்று திட்டமிடும் அதிகாரிகளைப்போல, ’அவர்களுக்குள்ளாக இந்த ஜீவன்களுக்கு உதவலாம் என்று திட்டமிடத்தான் (..we can..) கூடியிருக்கிறார்கள். நம்மை எந்த உரையாடலுக்கும் அழைக்கவில்லை.’ என்று எந்த தமிழ் பிளாகரும் அந்த வரிக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியான அநாகரீகமான வார்த்தைகள் அவை. உண்மையிலேயே இந்த விஷயங்களில் நாம் பின் தங்கியிருக்கிறோமா? அவர்கள் முன்னேறியிருக்கிறார்களா? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் யார் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும் கற்கை நன்றே.! முன்னதாக நாகரீகமான வார்த்தைகளில் எப்படி ஒரு சந்திப்புக்கு பெயரிடலாம் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

‘சோறு போடுதல்’ என்பது ஒரு குறியீடே. நமக்கு டெக்னிகலாக உதவ வந்தவர்களிடம் அறிவை இலவசமாகப் பெறுவோம், சரி. பணப்பங்களிப்பு இல்லாமல் அவர்கள் தரும் இலவச டி-ஷர்ட்டையும் (அதுவும் வரிசையில் நின்று), உணவையும் ஏற்றால் நன்றியுணர்ச்சி வந்து தொலைக்குமே, (சிலருக்கு வந்தும் தொலைத்ததே) என்பதால் சொல்லவந்தேன். ஆனால் அது 'Tata grande' வின் விளம்பரங்களை நாம் பொறுத்துக்கொண்டதற்கான கூலியே என்பது வேறு விஷயம்.

மற்றபடி தமிழ் ’மொளி’, இங்கிலீஷ் ’மொளி’, இந்தி ’மொளி’ பிரச்சினைக்கெல்லாம் நான் வரவில்லை. அப்படி யாரும் டிஸ்கஸ் பண்ணவிரும்பினால் அதில் எனக்கு ஆர்வமும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

மணிகண்டன் said...

//நன்றி. வணக்கம்.//

முதல் வரியா இதை எழுதிட்டு கம்மென்ட்டும் அதோட நிறுத்தி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் ஆதி ?

Cable சங்கர் said...

//Anoop Johnson said...
Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)//

மேலுள்ள, பின்னூட்டம் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டவர்களால் எழுதப்பட்டது. அதில் எங்காவது தமிழ் ப்ளாகர்களுக்கு உதவி செய்யும் விஷயம் இருக்கிறதா என்று பாருங்க. அவர்கள் எங்காவது தமிழ் ப்ளாகர்கள் சம்பாதிக்க வழி செய்யும் வகைகளை பற்றி கலந்தாலோசிக்க வைத்த விவாதம் என்று சொல்லியிருக்கிறார்களா? பாருங்கள். நான் அப்படி கேள்வி கேட்டதும் அவர்கள் அங்கு சூழ்ந்திருந்த நண்பர்களிடம் சொன்னதும் இதுதான். ஆனால் இவர்களாகவே சம்பாதிப்பது பற்றி சொல்லப் போவதாய் சொன்னார்கள் என்று ஜல்லியடிப்பது செம காமெடி.

ILA (a) இளா said...

1) பதிவெழுதி காசு சம்பாரிக்க அலையறவந்தான் தமிழன்.
2) காசுக்கு அலையறவந்தான் தமிழன்.
3) Everybody should remember one Advt, from HSBC- Has to be localised.
IndiBlogger was not doing that, other than organising the Blog meetup and ordering the Feeds( I am following Indiblogger for past 4 years and I am running Similar portal for 4 languages).

செவிலியன் said...

தமிழன் தலைநிமிர்ந்திருக்கிறான்...சரியான நெத்தியடி தலைவரே....

பெயரில்லா பெரிய பெருமாள் said...

"May I help you" க்கும் "How we can help Tamil Bloggers" க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

முதலாவது உதவுவதர்க்கே அனுமதி கேட்பது. மிகவும் நாகரிகமான வார்த்தை. யாருக்கு உதவி வேண்டுமோ, அவர்கள் எடுத்த்ுக் கொள்ளலாம். வேண்டதவர்கள் விலகிப் போகலாம்.

இரண்டாவது, நமக்கு எல்லாம் தெரியும். பாவம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. வாருங்கள் நாம் எல்லாம் சென்று அவர்களுக்கு உதவுவோம் என்பது. இதில் நமக்கு என்ன தெரியும், எந்த அளவுக்கு தெரியும் என்று அவர்கள் கேட்டார்களா என்று தெரியவில்லை. அப்பிடி கேட்காமல் உனக்கு நான் உதவுகிறேன் என்பது பிச்சைக்கு சமம்.

இது எந்த மொழி-யாக இருந்தாலும் இது தான் அர்ததிதம். தமிழ் என்பதற்காக மட்டும் இல்லை. எந்த மொழியிலும் சுயமாரியதைக்கு ஒரே அர்த்தம் தான்.

பெயரில்லா பெரிய பெருமாள் said...

"May I help you" - நான் உங்களுக்கு உதவட்டுமா? இது நம்மை அவர்கள் கேட்பது. two way communication. ஆரோக்கியமான விவாதம்.

"How can we help Tamil Bloggers" - நாம் தமிழ் பிளோக்கர்களுக்கு எவ்வாறு உதவலாம்? one way decision. இது அவர்கள் அவர்களுக்குள்ளே முடிவு எடுப்பது. இதில் நாம் (அதாவது உதவி வாங்குபவர்) எங்கு வருகிறோம் என்றே தெரியவில்லை.

இரண்டுக்கும் மலை அளவு விதத்ியாசம் உண்டு.

பரிசல்காரன் said...

கேபிள்


நீங்க கோவப்படறதுலயும் கொதிக்கறதுலயும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல நோக்கத்துக்காக அவங்க சொல்றதை தப்பா புரிஞ்சுட்டீங்கன்னு அப்பட்டமா தெரியுது!

இவ்ளோ கொதிப்பா எழுதினத புரிஞ்சுகிட்டோ புரியாமயோ அனூப் ஜான்சன் எழுதின ரிப்ளையைப் பாருங்க. எவ்ளோ ப்ரொஃபஷனலா பதில் சொல்றாங்க!

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!

என்னமோ போய்ய்யா... புடிக்கல!

Unknown said...

கேபிள், அந்த தட்டியைப் பார்த்தவுடன் உங்களுடன் சேர்ந்து நானும் கடுப்பாகி சத்தம் போட்டேன். இங்கேயும் என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். ஒரு விஷயத்தைத் தட்டிக்கேட்டால்தான் தலைவன் என்றால், இந்த விஷயத்தில் உங்களைத் தலைவனாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!

பரிசல்காரன் said...

போர்டைப் பார்த்தா கோவம் வருதுன்னு பொங்கறவங்களுக்கு...


அரசியல்வாதிக ஓட்டுக் கேட்டு அடிக்கற பிட்டு நோட்டீஸ், ஃப்ளக்ஸ் பேனரெல்லாம் படிக்கறீங்களா இல்லையா? செலக்டீவ் அம்னீஷியா மாதிரி செலக்டீவ் ப்ளைண்ட்னஸ்-ஸா?

பரிசல்காரன் said...

யோவ்.. கேபிள்.. என் கமெண்டைப் போடல... கொண்டேபோடுவேன்.... ஆமா..

Thangaraju Ramasamy said...

//.

அப்ப இந்தி தெரிஞ்சாத்தானே இந்தியன் சொல்ல முடியும்?
//

Hindi is NOT language to said like that.

Hindi is regional language for 4 states. and Tamil is regional language for 2 states.

It was not said as TAMILNADU bloggers or simply bloggers, but TAMIL bloggers. That's the problem.

Rishi said...

Shankar ji, This is not the way to behave in public by a dignified person like you. Don't think yourself as just a blogger. As a well known film critic, person like me are expecting you as an icon of a director. No shankar or mani ratnam or bala will do such a thing in public. This will also make a rethink for your producers mind. Person being good is just not enough. He should always end us with winning notes. pardon me, if i am wrong.. I wish you all the best & hope you will not protest for silly things. You have a big energy and preserve only for best things...

masiyaan said...

thamizhenda

Cable சங்கர் said...

//நீங்க கோவப்படறதுலயும் கொதிக்கறதுலயும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல நோக்கத்துக்காக அவங்க சொல்றதை தப்பா புரிஞ்சுட்டீங்கன்னு அப்பட்டமா தெரியுது!
///
நான் எப்பவும் அவங்க நோக்கத்தை குறை சொல்லவேயில்லையே.. அவர்களிடம் என் கண்டனத்தை தெரிவித்துவிட்டு, அதன் பிறகு அவர்களுடன் இப்போது அவர்கள் பின்னூட்டத்தில் என்ன சொன்னார்களோ அதைப்பற்றி பேசிவிட்டு.. அவர்களுடன் கை கொடுத்து , அவர்கள் கொடுத்த டீ ஷர்ட்டை வாங்கிக் கொண்டுதானே வந்தேன். இவர்கள் எழுதியிருக்கும் சீன் எல்லாம் செட்டப்.. குறிப்பு: அந்த டி ஷர்ட் கே.ஆர்.பி. கேட்டதால் வாங்கினேன்.

Cable சங்கர் said...

//இவ்ளோ கொதிப்பா எழுதினத புரிஞ்சுகிட்டோ புரியாமயோ அனூப் ஜான்சன் எழுதின ரிப்ளையைப் பாருங்க. எவ்ளோ ப்ரொஃபஷனலா பதில் சொல்றாங்க!

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!

என்னமோ போய்ய்யா... புடிக்கல!//

parisal.. நீ ரொம்ப நல்லவன்யா...:)))

விஜய் said...

இவ்வுளவு பின்னூட்டங்களுக்கு பிறகு எனக்கு ஒருஅடிப்படை கேள்வி, Tamil bloggers அப்படின்னா தமிழ் நாட்டு bloggersஆ அல்லது தமிழில் எழுதும் bloggersஆ? தமிழ் நாட்டவர்களை சுருக்கி ஒரு அணியாக 'தமிழ்' என்று தானே சொல்கிறோம்.

விச்சு said...

பிளாக்கர் பற்றித் தெரியாதவர்களுக்கு எப்படி உதவுவது? என்று போர்டு வைத்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

அப்பாதுரை said...

கேபிள் சங்கர்... ஒருவேளை அவசரப்பட்டு கோபப்பட்டீங்களோ என்னைப் போல? 'how we can help'க்கும் 'how can we help'க்கும் வித்தியாசம் உண்டே?
'how we can help'னு தானே கேட்டிருக்காங்க? அதுல condescendingஆ எதுவும் தோணலியே?

கோவி.கண்ணன் said...

//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of Malayalam, Hindi, Marati, Kannada and god knows what.. //

if you are not sure, better don't write rubbish.

Malayalam is mixture of Tamil and Sanskrit
Hindi is mixture of Urdu and Sanskrit
Marati is Mixture of itself with Sanskrit
Kannada also mixture of its old Kannada and Sanskrit

Only Tamil could be write and speak without any mixture.

துளசி கோபால் said...

எந்த மாதிரி உதவலாமுன்னு நினைச்சாங்கன்னு கேட்டீங்களா?

இங்கே ஒரு சமயம் இண்டியன் க்ளப்பிலே தமிழைக்கேலி செஞ்ச பஞ்சாபிகளை நான் வாங்குவாங்குன்னு வாங்கினது நினைவுக்கு வந்துச்சு. சாமியாடிட்டேன் போங்க.

அப்புறம் மேடையில் ஏறி நின்னு மன்னிப்பு கேட்டாங்க அவுங்க. விட்டுறக்கூடாதுலெ?

Unknown said...

தல, நீங்க செஞ்சது தப்பே இல்ல.. இன்னும் சொல்லப் போனா நீங்க சொல்ல வந்த கருத்த ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கீங்க.. அது புரியாம சில பல பக்கிங்க செருப்பால அடிப்போம் கிழிப்போம்னு சில்லுமண்டித்தனம் பண்ணிகிட்டு அலையுதுங்க..

வழக்கம் போல, just ignore them!!!!

இதுங்க கெட்ட கேட்டுக்கு சுஜாதா பேர்ல விருது வேற.. கர்மம்.. முதல்ல ஒரு நண்பர, சக பதிவர எப்படி மதிக்கணும்னு அந்த பக்கிக்கு யாராவது சொல்லித் தந்தா நல்லா இருக்கும். May I help uக்கும், How we can helpக்கும் வித்தியாசம் தெரியாத நாயெல்லாம் பத்திரிகக்கையாளனாம்.. இது எந்த இஸ்கூலுல படிச்சிச்சாம்?

பிரபல பதிவர் said...

முதலில் பெரிய பதிவர்களின் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் சொல்லும் மனோபாவத்தை நீக்குங்கள்...

ஒண்ணு எல்லோருக்கும் பதில் சொல்லுங்கள்...

இல்ல யாருக்குமே பதில் சொல்லாதீங்க...

அல்லது மொத்தமா ஒரு sequel பதிவா போடுங்க....

இந்த அடிப்படைய தெரிஞ்சிகிட்டு அப்புறம் தமிழ், தமிழ் சமூகத்துக்கு ஏதாவது செய்ய பாருங்க....


நான் இந்த மாடரேஷன் வச்சிருக்கிற அப்பாடக்கர் பதிவர்களுக்கு பின்னூட்டம் இடுவதையே நிறுத்தி விட்டேன்....

jayaramprakash said...

thank u ji.

Bala said...

அப்படி என்னதான் உதவி செய்யப் பார்த்தாங்க அப்படிங்கறதைப் பொறுத்திருந்து பார்த்துட்டு அதுக்கப்புறமா எதிர்ப்பு தெரிவிச்சு இருக்கலாம்.

Anoop Johnson said...

When I said...

//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of Malayalam, Hindi, Marati, Kannada and god knows what.. //

I meant that ..

I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..

All of you are taking these lines out of context and commenting on it. Please read the full reply before you comment

Thanks!

"ராஜா" said...

அந்த தட்டியை பார்த்தாலே கோபம் வருகிறது ... good job தல ...

priyamudanprabu said...

:)

Rocket Ranga said...

Seriously, you **** Mr. Sankar. Don't you know the basic difference "will" and "can." "How we can" definitely doesn't sound rude and it is basically they are just offering their knowledge to people who might be in need of it. You are a self-proclaimed genius who has an ego that is bigger than you and that is what making you to do such cheap things.

aotspr said...

மிகவும் சரியான பகிர்வு......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

விஜய் said...

முதல்ல நம்ம கருத்துக்கு மாற்று கருத்து இருக்கும்ன்னு ஒத்துக்கணும். அந்த மாற்று கருத்தை பிறர் சொல்லும் போது அதை நாகரீகமா சந்திக்கலாம். மாற்று கருத்தை சொன்னவரும் நாகரீகமா சொல்லவேண்டும். அவர் எண்ணத்தை சொல்லும்போது அது நம்மை உசுப்பெத்துவதாக இருந்தால் அது ஒரு எண்ணத்தை சொல்லாகிய முறையில் பிழையா இல்லாது உள்நோக்குடன் செய்ததா என்று பார்த்த பின்புதான் நாம் எதிர் நடவடிக்கை எடிக்கவேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு விவாதம் கருத்து பரிமாற்றம் முன்னேறி செள்ளவைக்கும். இல்லையேல் அது வெறும் அகங்காரத்தின் வேரியாட்டமாகவே முடியும்.

இந்த "how can we help Tamil Bloggers" என்ற சொல்லாச்சியில் எனக்கு ஏதும் நம்மை குறைத்து மதிப்பிடுவது போல் தெரியவில்லை. ஆனால் சூழ்நிலை வேறு அர்த்தத்தை கொடுத்ததா என்று தெரியாது. வெறும் எந்த வாக்கியம் தவறாக படவில்லை. அதற்கு தங்களின் தவறான வேறு அர்த்தம் காணமுடியும், ஆனால் சூழ்நிலை பொறுத்தே பிருந்துகொள்ளமுடியும்.

நீங்கள் விளக்கிய சூழ்நிலையில் தவறாக அவர்கள் உள்நோக்கத்துடன் தடந்ததாக தெரியவில்லை. தவறாக நீங்களே புரிந்துக்கொண்டு ஆவேசமடைந்திருக்கிரீர்கள் போல.

தவர் செய்தார்கள் என்று முடிவிற்கு பின்தானே தமிழின கோபமெல்லாம். அதற்குள்ளாக ஆவேசமான இழிவான வார்த்தைகளெல்லாம் எதற்கு?

Mohd said...

கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே.

-ஔவையார்

Unknown said...

எத்தனையோ நிறுவனங்கள் கோடி கணக்கில் விளம்பரத்திற்க்காக செலவு செய்கின்றார்கள் புத்தகம் டிவி போன்றவற்றில் வலைபதிவுகளில் விளம்பரம் செய்வது கட்டணம் குறைவு என்பதோடு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படிக்கின்றார்கள் என்கின்ற உண்மை அறியாதவர்களாக இருக்கின்றார்கள் அவர்களின் விளம்பரம் பதிவர்களுக்கு கிடைத்தால் இன்னும் நிறைய திறமையானவர்கள் உருவாகுவார்கள் அந்த நாள் விரைவில் வரும் என்பது உறுதி
எதை பற்றியும் கவலைப்படாமல் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் போராடிய உங்களை பாராட்டுகின்றோம் நன்றி

Anonymous said...

Anoop Johnson said...
When I said...
//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-)
I meant that ..
I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..Please read the full reply before you comment//

Johnson Master..."Your" English is not good too...-:)
அது ஒரு தவறு...திருத்தி மன்னிப்பு கோரியது உங்கள் பெருந்தன்மை...

Apologies accepted...

வவ்வால் said...

//I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..//
முன்னர்,
//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of Malayalam, Hindi, Marati, Kannada and god knows what.. //
after seeing those two statements ''anoop johnson'' must me a lunatic, if this kind of person hosted some event means that will be like this only so people dont take this event seriously.

இன்டிபிளாக்கர்ஸ் அப்படி போர்ட் வச்சது அவங்க சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அ காட்டுது ,இது வழக்கமா ஆங்கிலம் புழங்கும் மக்களின் மேட்டுக்குடி மனோபாவம்! அவ்வளவு லேசில மாறாது!

நம்ம தமிழ் சரியில்லை என்பது பொதுவா தமிழ் நாட்டில் என்பதா அல்லது அவங்க டீம் பேசுர தமிழ் என்று சொல்வதா என்பதை கூட அவங்களுக்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியவில்லை அய்யோ! அய்யோ! இப்போ அவங்க ஆங்கிலமும் சரியில்லைனு ஒத்துப்பாங்களா? god only knows that!

அங்க நடக்கிறது சரியில்லைனா கண்டனத்தை சொல்லிட்டு வெளியேறி இருக்கணும் கடைசி வரை இருந்து கஞ்சி குடிச்சிட்டு, அவர் சொன்னார் இவர் சொன்னார்னு டீ சர்ட் வாங்கினேன் ,இப்போ பதிவு போட்டேன் என்பெதெல்லாம் பாம்பும் சாவ கூடாது கம்பும் உடையக்கூடாது கதை சாமி

புருனோ Bruno said...

--
Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)

--

As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community

--

அப்படி என்றால்

How can Tamil Bloggers help us

என்று தானே தட்டி இருந்திருக்க வேண்டும்

அது சரி(18185106603874041862) said...

I agree with you Shankar.

The problem is the tone, "How can we help Tamil bloggers", as if bloggers writing in Tamil are like beggars.

அது சரி(18185106603874041862) said...

||ஆதிமூலகிருஷ்ணன் said...
தொழில், கலை, அரசியல் போல பிற தளங்களில் உருவாவதைப்போல கூட்டமைப்பு பதிவர்களுக்காக உருவாக வாய்ப்பில்லை, அது அவசியமுமில்லை. ஒரே குடை, ஒரே வராண்டா என்பதெல்லாம் ஜல்லி. லாப நோக்கற்ற இணைய சேவை என்பதையும் நான் நம்பவில்லை. இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகளே. அதோடு அது இங்கு தேவையுமில்லை.

இந்தக்கட்டுரையைப் பற்றி நான் சொல்லவிரும்புவது இதுதான். டெக்னாலஜி அப்டேட்ஸ், வரவு சார்ந்து இயங்குவது போன்ற நல்ல விஷயங்களைத்தான் வாலண்டியராக அந்த அமைப்பு தமிழ் பதிவர்களுக்கு கற்றுத்தர முன்வந்தது என்பதைத் தாராளமாக நம்பலாம். அதை யாரும் சந்தேகிக்கவும் இல்லை.

உறுத்துவது “How we can help tamil bloggers?” என்ற வாக்கியம்தான்.

பஞ்சத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உணவுப்பொட்டலங்களை வழங்குவது என்று திட்டமிடும் அதிகாரிகளைப்போல, ’அவர்களுக்குள்ளாக இந்த ஜீவன்களுக்கு உதவலாம் என்று திட்டமிடத்தான் (..we can..) கூடியிருக்கிறார்கள். நம்மை எந்த உரையாடலுக்கும் அழைக்கவில்லை.’ என்று எந்த தமிழ் பிளாகரும் அந்த வரிக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியான அநாகரீகமான வார்த்தைகள் அவை.||


I second this. Well said.

அது சரி(18185106603874041862) said...

shared your blog in my buzz. Hope you dont mind.

நீச்சல்காரன் said...

How can we help new bloggers என்பது ஏற்புடையது. ஆனால் கூடியிருக்கும் மற்ற பிளாக்கர்கள் மத்தியில் மொழிப் பிரிவினையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தான் அவ்வாசகம் தெரிகிறது. அதை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

கவிதை பூக்கள் பாலா said...

அந்த இடத்தில நான் இருந்தாலும் எனக்கும் கோவம் வந்திருக்கும். தாங்கள் செய்தது சரியே...
தமிழ் பதிவர்கள் சார்பாக பலமான கைதட்டல் உங்களுக்கு கேபிள் சார்.

நிறைய சட்டை கிழிஞ்சிருக்கும் போல , அவை அடக்கம் என்பது ஒன்று இருக்கு ,
அதற்காக சொல்வதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கனும் என்ற அவசியம் இல்லை , நீங்கள் சொல்வதிலும் சில விசயங்கள் நல்லதாகவும் படுகின்றது . பொதுவாகவே நமக்கு ஒரு காம்பிளக்ஸ் உண்டு , ஆனால் அதை தவிர்த்து வார்த்தை தவறுதலுக்கு ஆட்சேபம் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் தவறில்லை . ஆனால் முறை இருக்கு அவர்கள் அதற்கு மறுப்பு சொல்லாமல் வாதிட்டால் கண்டிப்பாக அதை குரல் உயர்த்தி வாதிடுவது தவறில்லை . நடந்தது என்ன நான் அறியேன் அதனால அதிகமா விமர்சிக்க முடியல.

நாமளுங்களுக்கு தமிழ்ல பேசறதே தவற நினைக்கும் பக்கிங்க இருக்கற வரை இத மாதிரி சொரணை இல்லாத மாதிரி இருக்க சொல்லும் . அடிமையா வேலை செய்து செய்து ஒரு வேலை தன்மானம் மங்கி போச்சோ , இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் . இன்டெர் நேஷனல் கம்பெனி காரங்க வடிக்கை யளவை ஏமாற்றியே பழகி போன மாதிரி . இனிக்க இனிக்க பேசி நமக்கு தெரியாம நம்ம பக்கெட்டுல கைய வைக்கும் பழக்கம் . தாய்மொழி பற்று இல்லாதவர்களை பற்றி பேசி ஒன்னும் ஆக போறதில்ல . பிச்சை எடுக்காதீங்க . நாம இன்னும் அந்த நிலைமைக்கு வரல . எதிர்த்து குரல் கொடுக்கவும் ஒரு தில்லு வேணுமில்ல , கேபிள் நீங்க நீங்க தான் , உங்களை தமிழ் பதிவர் சந்திப்புல சந்திச்சது தான் .

Dhamu said...

sabash Sankar Ji!

SURYAJEEVA said...

இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒரு அறிவாளி... வாழ்த்துக்கள் ப்ருனோ... யோவ் யாருமே யோசிக்க மாட்டீங்களா?

1:47 AM
புருனோ Bruno said...

--
Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)

--

As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community

--

அப்படி என்றால்

How can Tamil Bloggers help us

என்று தானே தட்டி இருந்திருக்க வேண்டும்
2:48 AM

சத்ரியன் said...

//தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.//

சபாஷ்!

Agarathan said...

தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.

தமிழன் என்று சொல்லடா ......