ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார்.
இப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று கோர்ட்டை நாடியிருக்கிறார்.
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும் அளவிற்கு மின்ணணு இயந்தரங்களை செட் செய்ய வேண்டும். நல்ல மெஜாரிட்டி வரும் மாதிரி செட் செய்ய முடியாதா என்ன..?
இவர்களின் கூற்று போல் ஆங்காங்கே சில இடங்களில் மின்ணணு பெட்டியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை சரி செய்திருக்கிறார்கள். அப்படி நடந்த சம்பவங்கள் மொத்த இந்தியாவில் மிக சொற்பமே. சாதாரண் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், போன்ற பல அசம்பாவிதங்கள் இந்த மின்ணனு முறையால் தடுக்க பட்டிருக்கிறது.
தவறான கூட்டணிகளாலும், கொள்கைகளாலும், தேவையற்ற அறிக்கைகளாலும், மக்கள் மனதிலிருந்து வெளியேறியதன் காரணத்தை ஆராயாமல், இம்மாதிரியான அட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு, தங்கள் புண்களை தாங்களே நக்கி கொள்வது கேவலமாய் உள்ளது.
உலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்திரத்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.
”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”
Comments
http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html
appalikaavum vaaren.
அப்ப மத்த நேரத்துல.....,,,,
ஸ்ரீ....
போக்கத்தவனை போலீஸ்சாக்கு,
அறிவில்லாதவனை அரசியல்வாதியாக்கு!!
மாம்ஸ்! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாமுன்னு ஒண்னு..
இருக்குல்ல? இருக்குல்ல? இருக்குல்ல?
பாவம் கோடி கோடியா கொட்டி எலக்சனில் நின்னு தோத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும் பாவம் விடுங்க வாங்கி ஆப்பு ரொம்ப தூரம் பாய்ந்திருப்பதால் இப்படிதான் ஏதாவது அனத்துவாங்க கண்டுக்காதீங்க:))))
எங்க ஊருல இன்னும் கொஞ்சம் ”டீசண்டா நாலு நல்ல வார்த்தை” போட்டு சொல்லுவாங்க:))))
டைரக்டர் மேலே யாராவது அன்பாயிருந்தா.. அப்படியே அம்மா.திமுக கட்சிக்கு forward பண்ணுங்கப்பா...இந்த பதிவ
உங்கள் பதிவு கலக்கல் என்றால்,
குசும்பனின் கமெண்ட்
கலக்கலோ கலக்கல்
electronic voting machine உபயோகபடுத்துவதால் ஏகப்பட்ட மரங்கள் பேப்பருக்காக அழிக்கபடுவது தடுக்க படுகிறது.
ஒரே ஒரு மாற்றம் இந்தத் தேர்தலில்..
இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((
பளார்.ஹும்ம்ம்
அவ்ளோ புட்சிக்கீதா.. சுகுமாரூ..
அவ்வளவு காமெடியாவா எழுதிட்டேன்.. :)
இனிமே எலக்ஷனே இல்லாம பமகவை ஆட்சிக்கு கொண்டுவரணும்னு கூட சொல்வாரு..
அதுசரி... தராசண்ணே..
இவங்களையெல்லாம் மனுசனாவே தேர்தல் கமிசன் மதிக்கிறதுல்ல போலிருக்கு டுரூத்..
இதுவும் ஒரு முக்கியமான விஷயம் சரவணகுமரன்..
ஸ்ரீ....//
நன்றி ஸ்ரீ..
அவரும் அவரு சைடுக்கு எதையாவது சொல்லணுமில்ல..
இது என்ன நியாயத்துக்கு எக்கோவா..?
கலையரசன்
ஏன் சஞ்செய் நானெல்லாம் இப்படி எழுத மாட்டேன்னு நினைச்சீங்களா..? இப்படியும் எழுதுவோமில்ல..:)
சரியான முடிவு.. தேனீ.. சுந்தர்..
பதிவ விட உங்க பின்னூட்டம் நல்லாருக்குண்ணே..
ஏன் நான் நல்லாருக்கிறது உஙக்ளுக்கு பிடிக்கலையா..?
டைரக்டர் மேலே யாராவது அன்பாயிருந்தா.. அப்படியே அம்மா.திமுக கட்சிக்கு forward பண்ணுங்கப்பா...இந்த பதிவ//
வீரம்னா என்ன தெரியுமா அசோக்.. பயமில்லாம நடிக்கிறது.. புரிஞ்சிக்கோங்க..
அதுக்குன்னு இப்படியா கேனத்தனமா பேசுறது. வித்யா.
அப்ப மின்ணணு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நீஙக்ள் ஆதரிக்கிறீர்களா.. பாலாஜி..?:(
உங்கள் பதிவு கலக்கல் என்றால்,
குசும்பனின் கமெண்ட்
கலக்கலோ கலக்கல்//
நிஜம்தான் முரளி..
electronic voting machine உபயோகபடுத்துவதால் ஏகப்பட்ட மரங்கள் பேப்பருக்காக அழிக்கபடுவது தடுக்க படுகிறது.//
ஆமாம் அருண் இதுவும் ஒரு நல்ல தகவலே..
ஒரே ஒரு மாற்றம் இந்தத் தேர்தலில்..
இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((//
அவர் இல்லைன்னா என்னா..? நாமெல்லாம் இல்லையா.. ????
நன்றி நர்சிம்..
நானே கஷ்டப்பட்டு ஒரிஜினலை தவிர்த்து எழுதியிருக்கேன்.. நீங்க வேற....
அரசியல்வாதிகளுக்கேற்ற நாம்.ஆவதும் நம்மாலே.அழிவதும் நம்மாலே.இதில் யாரைக் குறை கூறுவது?
சரி தோற்றவர்களின் பிதற்றலை ஏன் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் ஆற்றாமை, அழுது விட்டு போகட்டும் :)
ÇómícólógÝ
//I remember his ironic, dry wit in a travel piece in which he traverses the backwaters of Kerala to install EVMs, only to be challenged in court by a Leftist politician who suspects electoral foul play. The EVM wins the case, is sent to the polls and, with a twist in the tale, the man who lost in court wins the election.//
நன்றி : http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=a39ffaed-4a0d-4c83-ba7f-881c8c17f78a
அப்ப மின்ணணு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நீஙக்ள் ஆதரிக்கிறீர்களா.. பாலாஜி..?:(//
அப்படி இல்ல சார். வயித்தெரிச்சல் படுகிறவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லையே.
என்ன திடீர்னு இப்படி அம்மா, மருத்துவர் அய்யா, கேப்டன் எல்லாரையும் சாடிட்டீங்க... ?
ஏதோ பாவம் அவங்க தோல்விய மறைக்க/மறுக்க ஒரு முயற்சி பண்றாங்க... என்ன அது "முழு பூசணிக்காவ ஒரு பருக்கைல மறைக்க " முயர்ச்சிக்கற மாதிரி தெரியுது..
EVM எந்திரத்த அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு, சோதனை செய்தவங்க எல்லாம் கொமாளிங்கங்கர மாதிரி இவங்க சொல்லறது .. கேக்கறதுக்கு சிரிப்பு தான் வருது..
இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((
வேதனை பகிர்வுடன்.....
அரசியல்வாதிகளுக்கேற்ற நாம்.ஆவதும் நம்மாலே.அழிவதும் நம்மாலே.இதில் யாரைக் குறை கூறுவது?
//
:(
//
எனக்கு அப்பவே தெரியும் அத்திரி நீஙக் ஒரு அம்மா ஆதரவாளர்ன்னு..
என்ன திடீர்னு இப்படி அம்மா, மருத்துவர் அய்யா, கேப்டன் எல்லாரையும் சாடிட்டீங்க... ?
ஏதோ பாவம் அவங்க தோல்விய மறைக்க/மறுக்க ஒரு முயற்சி பண்றாங்க... என்ன அது "முழு பூசணிக்காவ ஒரு பருக்கைல மறைக்க " முயர்ச்சிக்கற மாதிரி தெரியுது..
EVM எந்திரத்த அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு, சோதனை செய்தவங்க எல்லாம் கொமாளிங்கங்கர மாதிரி இவங்க சொல்லறது .. கேக்கறதுக்கு சிரிப்பு தான் வருது..
9:06 PM
//
இப்படி தேவையில்லாம பேசறத நினைச்சாத்தான் பயங்கர காண்டாவுது.. செந்தில்
Sorry for my English.
First you need to understand one thing.
Other state politician, they are not running any TV channel specific for the party.so It is possible in Tamil nadu .our politicians are technically improved because of we leader in IT compare with other state also leader in shortcuts to reach the destinations.It's Possible in Tamilnadu .