கொத்து பரோட்டா -13/05/12
மும்பையில் ஒரு டைவர்ஸ் கேஸ். தேன்நிலவின் போது காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு செய்யக்கூடாது என்றும் ஒரு குழந்தையை வளர்க்கக்கூடிய அளவிற்கு பணவசதி வரும் வரை கர்ப்பம் தரிக்க மாட்டேன் என்று சொன்ன மனைவியை விவாகரத்து செய்ய வேண்டி வழக்கு நடந்திருக்கிறது. மேற்கூறிய குற்றச்சாட்டுக்கள் மட்டுமில்லாது தன் குடும்பத்திற்கு ஏற்றார் போல இருக்கவில்லை. அவளின் சம்பளத்தை தன்னுடன் பகிர்ந்து கொடுக்கவில்லை இத்யாதி, இத்யாதி என்று பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். இது போன்ற நடத்தையெல்லாம் அவளின் மன விகாரம் என்று சொல்லி விவாகரத்து கேட்டிருக்கிறார். நீதிபதி அந்தப் பெண்ணைப் பார்த்து நீ இந்த குடும்பத்தை தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது என்று நொந்து போய் கூறியிருக்கிறார். பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றும் பெண்கள் ஒரு பாரமாகவே கருதி ஏதோ திருமணமானால் சரி என்று தள்ளிவிட்டுவிடும் நிலைதானிருக்கிறது என்றும், இனி வரும் காலத்திலாவது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில் கூட இருவரும் சேர்ந்து பேசி, அவர்களுடய நிதி நிலமை, மற்றும் குடும்ப நிலமைகளை புரிந்து கொண்டு திருமண பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பாவம் நீதிபதி அவருக்கு பின்னாடி ஒரு சோகக் கதை இருக்கும் போலருக்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எப்.சி.எஸ் கம்பெனிக்காக பொதிகை தொலைக்காட்சியில் நான் இயக்கி வரும் “தமிழ்த்திரை” நிகழ்ச்சி தற்போது பொதிகையின் ரிப்போர்ட்டின் படி முதல் பத்து இடத்திற்குள் வந்திருக்கிறது. பொதிகையில் வந்தது பெரிய விஷயமா? என்று கேட்பார்கள். ஆனால் அதே பொதிகையில் பத்தில் கூட இடம்பிடிக்காத நிகழ்ச்சி இருக்கும் போது பெரிய விஷயம்தானே. நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒட்டுண்ணி அரசியலும் பண்ண முடியவில்லை, சரி ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யலாம் என்றால் தம்பி மீது கொலை கேஸ், பையன் மீது கேஸ் என்று இருக்கும் நேரத்தில் நம்மையும் ஜெயிலில் களி திங்க வைக்க சான்ஸ் அதிகம் என்பதால் அதுவும் முடியவில்லை. சரி.. மதுக்கடைகளை மூடுவோம் என்றால் அவர் மாநாடு நடத்திய நேரத்திலே அந்த ஏரியா பூராவும் இருந்த கடைகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு விற்பனை. என்னடா செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்ததில் மீண்டும் மரம் வெட்டும் வேலையை செய்வோம் என்றால் வாங்கின கெட்ட பேருக்கே இன்னும் தாவூ தீர்ந்த பாடில்லை. சரின்னு மீண்டும் தன் கேவலபுத்தியான ஜாதி அரசியலை தூக்கிட்டு அலைய விட்டிருக்காரு காடு வெட்டி குரு மூலமா நம்ம டாக்டர். அதுவும் காடு வெட்டி குரு பேசுன பேச்சுக்கு ஜாதிக்காரங்களே தூக்கு மாட்டிட்டு சாகலாம்னு நினைகிறாங்க. டாக்டர் இதுவும் ஒரு வாரத்துக்கு மேல தாங்காது. வேற ஏதையாவது ட்ரை பண்ணுங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கலகலப்பு @ மசாலாகஃபேவின் போஸ்டரில் என் பெயர் இல்லை என்று பல நண்பர்கள் வருத்தமாகவும், ”நெருங்கிய” நண்பர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தோடும், இன்னும் சில பேர் ஒரு வேளை பணம் கொடுத்துவிட்டதால் பெயர் போடப்படாததை நான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் எழுதி வருத்தப்பட்டிருந்தனர். அப்படத்தின் வசனம் பத்ரி. நான் அவருக்கு உதவிதான். எனது பெயர் படத்தின் டைட்டிலில் வருவது படம் பார்த்த அத்துனை பேருக்கும் தெரியும். எனவே.. நோ.. வருத்தம் பி ஹாப்பி.இப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவேனா என்று பல பேர் கேட்டிருந்தார்கள். நிச்சயம் எழுத மாட்டேன் என்று சொன்னேன். இது வரை நான் சம்பந்தப்பட்ட எந்த படத்தையும் நான் விமர்சித்ததில்லை. விமர்சிக்கவும் மாட்டேன். அதனால் மசாலாகஃபேயை பொருத்தவரை விமர்சனம் வாங்குமிடத்தில் இருக்கிறேன். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பை பார்க்கும் போது ஒரு வெற்றிப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் என்ற எண்ணம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாய்ப்பளித்த இயக்குனர் சுந்தர்.சிக்கும், இயக்குனர் பத்ரிக்கும் என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
மீண்டும் மொட்டையின் அற்புதமான ஃப்லோக். மனுஷனை இதில் அடிச்சிக்க ஆளேயில்லை எனலாம். அதிலும் இந்தப் பாடலில் அவர் குரலில் இருக்கும் இன்னொசென்ஸும், ட்யூனில் இருக்கும் எளிமையும், பிஜிஎம்மில் கம்போஸிங்கும்... வாவ்.. பாட்டைக் கேட்டால் நிச்சயம் தலையாட்டி கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஒவ்வாதவர்களுடன் வாதம் செய்வதை விட ஒத்துப் போபவர்களிடம் இணைக்கமாய் போய்விடுவது நல்லது.
அர்தமுள்ள மெளனம் அர்த்தமில்லாத பேச்சுக்களை விட சிறந்தது.
சூர்யாவிற்கு பதிலாய் கார்த்தியை போட்டிருந்தால் நீ.வெ.ஒ.கோடி களைகட்டியிருக்குமென்று தோன்றுகிறது.
நான் உறுதியானவன் என்பதினால் நான் தாங்குவேன், புரிந்து கொள்வேன் என்று என்னை காயப்படுத்துகிறார்கள். # கொடுமைடா சாமி.
விமர்சனம் பண்ற இடத்தில நானில்லைப்பு.. வாங்குற இடத்தில இருக்கேன். சொல்லுங்கப்பூ # masala cafe
ஒரு பெண் உன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்றால் உண்மையை சொல்லி விடு. ஏனென்றால் அவளுக்கு பதில் ஏற்கனவே தெரிந்துதான் கேட்கிறாள்.
உன்னுடய எல்லா நிறை குறைகளையும் தெரிந்து கொண்ட உன்னை ஏற்றுக் கொள்பவன் கிடைக்க பெறுவது ஒரு அதீத சந்தோஷம்தான்.
சமயங்களில் அவள் மீது மட்டுமே என் கவனமெல்லாம் இருக்க வேண்டுமென்று கேட்கிறாள். # காதல்
நான் சிரிப்பதற்கு லட்சம் கோடி காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் நீ எனக்கு மேலானவன் தான்.
நீ பேசும் வார்த்தைகள் மீது கவனமாய் இரு. அவை மன்னிக்கப்படுபவைகளே தவிர மறக்கப்படுவதில்லை.
உண்மையாகவே நீ அவனை விரும்பினால் உன் சந்தோஷத்தை விட அவனுடயதை முக்கியமாய் நினைப்பாய்.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A husband emerged from the bathroom naked and was climbing into bed when his wife complained, as usual, "I have a headache." "Perfect," her husband said. "I was just in the bathroom powdering my penis with aspirin. You can take it orally or as a suppository, it's up to you!"
கேபிள் சங்கர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எப்.சி.எஸ் கம்பெனிக்காக பொதிகை தொலைக்காட்சியில் நான் இயக்கி வரும் “தமிழ்த்திரை” நிகழ்ச்சி தற்போது பொதிகையின் ரிப்போர்ட்டின் படி முதல் பத்து இடத்திற்குள் வந்திருக்கிறது. பொதிகையில் வந்தது பெரிய விஷயமா? என்று கேட்பார்கள். ஆனால் அதே பொதிகையில் பத்தில் கூட இடம்பிடிக்காத நிகழ்ச்சி இருக்கும் போது பெரிய விஷயம்தானே. நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒட்டுண்ணி அரசியலும் பண்ண முடியவில்லை, சரி ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யலாம் என்றால் தம்பி மீது கொலை கேஸ், பையன் மீது கேஸ் என்று இருக்கும் நேரத்தில் நம்மையும் ஜெயிலில் களி திங்க வைக்க சான்ஸ் அதிகம் என்பதால் அதுவும் முடியவில்லை. சரி.. மதுக்கடைகளை மூடுவோம் என்றால் அவர் மாநாடு நடத்திய நேரத்திலே அந்த ஏரியா பூராவும் இருந்த கடைகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு விற்பனை. என்னடா செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்ததில் மீண்டும் மரம் வெட்டும் வேலையை செய்வோம் என்றால் வாங்கின கெட்ட பேருக்கே இன்னும் தாவூ தீர்ந்த பாடில்லை. சரின்னு மீண்டும் தன் கேவலபுத்தியான ஜாதி அரசியலை தூக்கிட்டு அலைய விட்டிருக்காரு காடு வெட்டி குரு மூலமா நம்ம டாக்டர். அதுவும் காடு வெட்டி குரு பேசுன பேச்சுக்கு ஜாதிக்காரங்களே தூக்கு மாட்டிட்டு சாகலாம்னு நினைகிறாங்க. டாக்டர் இதுவும் ஒரு வாரத்துக்கு மேல தாங்காது. வேற ஏதையாவது ட்ரை பண்ணுங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கலகலப்பு @ மசாலாகஃபேவின் போஸ்டரில் என் பெயர் இல்லை என்று பல நண்பர்கள் வருத்தமாகவும், ”நெருங்கிய” நண்பர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தோடும், இன்னும் சில பேர் ஒரு வேளை பணம் கொடுத்துவிட்டதால் பெயர் போடப்படாததை நான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் எழுதி வருத்தப்பட்டிருந்தனர். அப்படத்தின் வசனம் பத்ரி. நான் அவருக்கு உதவிதான். எனது பெயர் படத்தின் டைட்டிலில் வருவது படம் பார்த்த அத்துனை பேருக்கும் தெரியும். எனவே.. நோ.. வருத்தம் பி ஹாப்பி.இப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவேனா என்று பல பேர் கேட்டிருந்தார்கள். நிச்சயம் எழுத மாட்டேன் என்று சொன்னேன். இது வரை நான் சம்பந்தப்பட்ட எந்த படத்தையும் நான் விமர்சித்ததில்லை. விமர்சிக்கவும் மாட்டேன். அதனால் மசாலாகஃபேயை பொருத்தவரை விமர்சனம் வாங்குமிடத்தில் இருக்கிறேன். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன். படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பை பார்க்கும் போது ஒரு வெற்றிப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் என்ற எண்ணம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாய்ப்பளித்த இயக்குனர் சுந்தர்.சிக்கும், இயக்குனர் பத்ரிக்கும் என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
மீண்டும் மொட்டையின் அற்புதமான ஃப்லோக். மனுஷனை இதில் அடிச்சிக்க ஆளேயில்லை எனலாம். அதிலும் இந்தப் பாடலில் அவர் குரலில் இருக்கும் இன்னொசென்ஸும், ட்யூனில் இருக்கும் எளிமையும், பிஜிஎம்மில் கம்போஸிங்கும்... வாவ்.. பாட்டைக் கேட்டால் நிச்சயம் தலையாட்டி கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எப்போதும் நன்றாக இருக்கும் சாப்பாட்டுக்கடைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். ஆனால் இம்முறை மோசமான ஒரு கடையை பற்றி சொல்ல வேண்டும். திண்டுக்கல்லின் பெயரோடு பிரியாணி கடை ஆரம்பித்த அந்நிறுவனம் ரெண்டு மூன்று வருடங்களில் தொடர்ந்து சென்னையில் மூலை முடுக்குகளில் எல்லாம் தன் கிளையை ஆரம்பித்திருக்கிறது. கிளை பெரிதாக பெரிதாக அதன் சுவை குறைய ஆரம்பித்தது. இப்போது படு மோசமாகிவிட்டது. வீக் எண்டில் கூட்டம் அம்மும் கடைகளில் இப்போது காத்தாடத் துவங்கிய காரணம் என்னவென்று பார்த்தால் அவர்களின் சுவையின் மாறுபாடும், அநியாய விலையும்தான் என்று புரிந்தது. ஒரு பிரியாணியின் விலை 155 + டாக்ஸ். அதுவும் ஆறிப் போய் சூடில்லாத, பிரியாணியின் வாசனையேயில்லாத ஒரு பிரியாணிக்கு. அவர்களின் பிரியாணிக்கு திண்டுக்கல்லில் ஏன் மவுசு குறைந்து போய்விட்டது என்று இப்போது புரிகிறது. ரெண்டொரு நாள் முன்பு திண்டுக்கல் வேணு பிரியாணி ஓட்டலுக்கு சென்ற போது புரிந்தது ஏன் அவ்வளவு கூட்டம் அம்முது என்றும். சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் ட்வீட்டர்களின் மெகா மீட் நேற்று மதியம் ஏற்பாடாகியிருந்தது. இந்த மீட்டுக்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் பல கீச்சர்கள் வந்திருந்தார்கள். ஆட்டம், பாட்டம், குறும்படமாய் சந்தோஷமாய் போனது. என்னை பல பேருக்கு தெரிந்ததிருந்தது படு ஆச்சர்யமாய் இருந்தது. கேட்டால் கிடைக்கும் குழுவைப் பற்றி நானும், சுரேகாவும் பேசினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. இரவு உணவெல்லாம் தயார் செய்திருந்தார்கள். எனக்கு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் ஒரு மீட்டிங் இருந்ததால் உடன் கிளம்ப வேண்டியாதாய் போய்விட்டது. கிரி அருமையாய் பாடினார். எம்.ஜி. ரவிக்குமார் மிமிக்ரி செய்ய ஆரம்பிக்க கிரேஸி வந்து ஆட்டத்தில் சேர செம ஜோராக நடந்தது. நம்ம பரிசல் தான் காம்பியரிங்.. டிபிசிடி நடித்த ஒரு குறும்பட ட்ரெயிலரைப் போட்டார்கள். எதற்கும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வருகிற 20 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு, சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. ஆம் பதிவர் சந்திப்புத்தான். யூத் பதிவர் சந்திப்பு. சென்ற முறை என் “தலைமையில்” நடைப்பெற்றது பதிவுலக இளைஞர் வட்டத்தில் பிரபலம். அதே போல இந்த வருடமும் யூத் பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி உள்ளது. மறந்தும் இருந்து விடாதீர்கள். எங்களைப் போன்ற நிஜ யூத்துகளும், மனதளவில் யூத்தானவர்கள் என்று நினைப்பை கொண்டவர்களும், மற்றும் வாலிப வயோதிக பதிவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இடம் நம்ம டிஸ்கவரி புக் பேலஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சமையல் நிகழ்ச்சி ஃபோர்ன் படம் பார்பதைப் போல. அதிலேயும் மத்தவங்க செய்யுறத நாம பாக்குறோம்
சில உறவுகள் டாம்& ஜெர்ரியைப் போல,ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும், அடித்துக் கொண்டுமிருந்தாலும் கூட ஒருவரில்லாமல் மற்றவரால் இருக்கமுடியாது.
நல்ல சினிமாவை ஆதரிக்காதவர்களுக்கு சினிமா நல்லது செய்யவே செய்யாது.
அர்தமுள்ள மெளனம் அர்த்தமில்லாத பேச்சுக்களை விட சிறந்தது.
சூர்யாவிற்கு பதிலாய் கார்த்தியை போட்டிருந்தால் நீ.வெ.ஒ.கோடி களைகட்டியிருக்குமென்று தோன்றுகிறது.
நான் உறுதியானவன் என்பதினால் நான் தாங்குவேன், புரிந்து கொள்வேன் என்று என்னை காயப்படுத்துகிறார்கள். # கொடுமைடா சாமி.
விமர்சனம் பண்ற இடத்தில நானில்லைப்பு.. வாங்குற இடத்தில இருக்கேன். சொல்லுங்கப்பூ # masala cafe
ஒரு பெண் உன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்றால் உண்மையை சொல்லி விடு. ஏனென்றால் அவளுக்கு பதில் ஏற்கனவே தெரிந்துதான் கேட்கிறாள்.
உன்னுடய எல்லா நிறை குறைகளையும் தெரிந்து கொண்ட உன்னை ஏற்றுக் கொள்பவன் கிடைக்க பெறுவது ஒரு அதீத சந்தோஷம்தான்.
சமயங்களில் அவள் மீது மட்டுமே என் கவனமெல்லாம் இருக்க வேண்டுமென்று கேட்கிறாள். # காதல்
நான் சிரிப்பதற்கு லட்சம் கோடி காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் நீ எனக்கு மேலானவன் தான்.
நீ பேசும் வார்த்தைகள் மீது கவனமாய் இரு. அவை மன்னிக்கப்படுபவைகளே தவிர மறக்கப்படுவதில்லை.
உண்மையாகவே நீ அவனை விரும்பினால் உன் சந்தோஷத்தை விட அவனுடயதை முக்கியமாய் நினைப்பாய்.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A husband emerged from the bathroom naked and was climbing into bed when his wife complained, as usual, "I have a headache." "Perfect," her husband said. "I was just in the bathroom powdering my penis with aspirin. You can take it orally or as a suppository, it's up to you!"
கேபிள் சங்கர்
Comments
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீரய்யா..சங்கரா..!!
டேக் ஓகே!!
அண்ணே . .
spelling mistake
" வெட்டி " ங்குறது
வெற்றி ஆயிடுச்சு பாருங்க
Thanks
இரண்டாம் பாதியில் பல இடங்களில் பார்வையாளர்களின் சிரிப்பு சத்தத்தில் வசனம் கொஞ்சம் கேக்கலை. அந்த அளவுக்கு எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. நல்ல டைம் பாஸ்...
குரங்குபெடல் said...
" ஒரு வெற்றிப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் "
அண்ணே . .
spelling mistake
" வெட்டி " ங்குறது
வெற்றி ஆயிடுச்சு பாருங்க
Thanks
/////////
குரங்குபெடல் சார், நீங்கதான் அந்த சந்தோஷமாக இருக்கும் “நெருங்கிய” நண்பரா????
Gross generalization. The new law proposes that women will get half of the properties bought after marriage If she has contributed monetarily in buying the property.
another thing is married women who apply for divorce will get half of husband's properties.//
Gross generalization. The new law proposes that women will get half of the properties bought after marriage If she has contributed monetarily in buying the property.
//
Wrong. Unless there is a pre-nuptial agreement stating otherwise, all properties movable or immovable purchased by either parties during the marriage irrespective of in whose name they were purchased need to be shared equally.
Even if one of the parties has not contributed monetarily, he or she assumes equal rights automatically.