Thottal Thodarum

May 28, 2012

கொத்து பரோட்டா -28/05/12

பெட்ரோல்
கடந்த இரண்டு நாட்களாய் சென்னையெங்கும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. நேற்று பெட்ரோலும் தட்டுப்பாடு. இருக்கிற பல பங்குகளில் ரேஷன் முறையில் ஆளுக்கு இத்தனை லிட்டர் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை?
@@@@@@@@@@@@@@@@@@@



எஸ்.எம்.எஸ்.
உலகிலேயே அதிகமான அளவில் செய்திகளை கடத்த பயன்படும் ஒரு டெக்னாலஜி. அதை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பது பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு விஷயம் இருக்கிறது. ஆனால் நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல. மொபைல் டெக்னாலஜியில் பலவிதமான அசுரத்தனமான உச்சங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலும் இந்த எஸ்.எம்.எஸ் மட்டும் அத்துனை டெக்னாலஜியுடன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது க்டந்த இருபது வருடமாக.. ஆமாங்க எஸ்.எம்.எஸ். டெக்னாலஜி மொபைலில் வந்து இருபது வருஷமாயிருச்சாம்.. 
##############################
சின்னப்படங்களின் எதிர்காலம்
சமீபத்தில் இயக்குனர் சேரனை ஒரு ப்ரிவியூவில் சந்தித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தபடியால் சிறிது நேரம் தற்போதைய தமிழ் சினிமாவைப் பற்றியும், அதன் வசூலைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாய் சின்னப் படங்களுக்கு வசூல் ஏன் வர மாட்டேனெங்கிறது என்பதைப் பற்றியும். அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியும் மிகுந்த கவலையோடு கேட்டு தன் கருத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் தியேட்டர்களின் அனுமதிக் கட்டணம் என்றேன். சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு வரபிரசாதமாய் சென்னையில் வரப்போகும் டிஜிட்டல் டெக்னாலஜியினால் வருமானம் ஈட்ட முடியும் என்கிற டெக்னாலஜியைப் பற்றி அவரிடம் பேசினேன். நான் ஏற்கனவே எனது சினிமா வியாபாரத்தில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்றும், மேலும் இதைப் பற்றி ஏற்கனவே நான்கைந்து பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு ப்ரோபோசல் கொடுத்துள்ளேன் என்பதைப் பற்றியும் சொன்னேன். சேரன் அவர்களும் இதைப் பற்றி பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஃபேஸ்புக் கில்மா
கடந்த வாரம் இணையத்தில் பிரபலமான விஷயம் ஃபேஸ்புக் இணையதளத்தினால் பழக்கம் ஏற்பட்டு கற்பை இழந்த பெண்கள் என்பதுதான். சென்னையை சேர்ந்த இரு பெண்களுக்கு வேலூரைச் சேர்ந்த் இரண்டு வாலிபர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது.  அவர்களும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். வேலுரை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூட்டிப் போய், ராணிப்பேட்டையில் ரூம் போட்டு குண்டர்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றும், மீண்டும் ஒரு முறை அவர்கள் கூப்பிட்டு ராணிப்பேட்டைக்கு போயிருக்கிறார்கள் இந்த பெண்கள். மூன்றாவது முறையாய் கூப்பிட்ட போது போக மறுத்த அந்த பெண்கள். அவர்கள் தங்களை திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள். என்னவோ வாயில கைய வச்சா கடிக்க தெரியாது என்பது போல இருக்கிறது அப்பெண்களின் புகார். ராணிப்பேட்டையில் ரூம் போடும் போதே எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் என்று சொல்லி தட்டிக் கழித்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. இரண்டு முறை அவர்களுடன் ராணிப்பேட்டையில் ரூம் எடுத்த போதே எதாவது கரக்கலாம் என்ற எண்ணத்திலோ, அல்லது வசதியான ஆட்களாய் இருந்தால் செட்டிலாகிவிடாலாம் என்ற ஐடியாவில் தான் படுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கேட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து படுத்துவிட்டார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்கிறார்கள். சாதாரணமாய் இந்த கேஸ் நிற்காது என்பதால் உறவின் போது எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்று கேஸ் போடுகிறார்கள். ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். இதுக்கு போலீஸும் சேர்ந்து ஆக்‌ஷன் எடுக்கிறாய்ங்க. சட்டம் ஒழுங்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இருட்டுல சோறு
சோத்த கண்ணுல பார்த்தே நாளாச்சுன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனா நிசமாவே கண்ணுல பாக்காம துணிகட்டிட்டு சாப்பிட ஒரு ஓட்டலை ஆரம்பிச்சிருக்காங்க சென்னையில இருக்கிற பார்க் ஷெராட்டன் ஹோட்டல்ல.இங்க வர்றவங்க கண்ணை கட்டி டேபிள்ல உட்கார வச்சிருவாங்களாம். ஒவ்வொரு சாப்பாட்டையும் சாப்பிட்டு பார்த்து ஃபீல் பண்ணனுமாம். வேணும்னா தொட்டுப் பார்த்து பீல் பண்ணலாமாம். சர்வர்ருங்களுக்கே மெழுகுவர்த்தித்தான் லைட்னா பார்த்துக்கங்களேன். மக்களோட நுகர்வு தன்மையை இது அதிகப்படுத்தும்னும், ஒரு வித்யாசமான அனுபவத்தையும் கொடுக்கும்னு சொல்லியிருக்காங்க. ஒரு ஆளோட சாப்பாட்டு விலை 3800+ டாக்ஸாம். ஒரு நாளைக்கு மூணு, நாலு கெஸ்டுங்கதான் வர்றாங்களாம். பின்ன நாங்கெல்லாம் தமிழ் நாட்டுல பாதி நேரம் கரண்ட் இல்லாம இருட்டுலேயே சாப்ட்டு, தூங்கி, குடும்பம் நடந்தி பழகுனவங்க எங்க கிட்டயேவா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா?
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
கேன்ஸ்
இந்த வருட கேன்ஸ் பெஸ்டிவலில் கமலின் விஸ்வரூபம் திரையிடப்படலாம் என்ற செய்தி நிஜமாகவில்லை. இந்த ஆண்டு கேன்ஸ் பெஸ்டிவலில் போட்டியில்லா பகுதியில் வெளியாகப் போகும் ஒரே இந்தியப்படம் Gangs Of Wasseypur. இதன் இயக்குனர் அனுராக் காஷ்யப்
@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@
ஐ.பி.எல்
நேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம்முறை கப் வாங்கப் போகிறதென்று. என் நண்பர் என்னால் ஒரு லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார். இதுவரை நான் சொல்லி முக்கால் வாசி மேட்சுகள் ஜெயித்திருக்கிறது. அதை நம்பாமல் ஒவ்வொரு முறையும் தோற்றிருக்கிறார். இம்முறை தான் நான் சொன்னதை கேட்டார். ஜெயித்தார். அதில் ஏதாவது கட்டிங் தருகிறாரா என்று கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த ஒரு லட்சம் போல எத்தனை கோடிகள் பெட்டிங்கில் புழல்கிறாதோ?. ஐ.பி.எல் ஒரு பக்கா பிஸினெஸ். பிஸினெஸ் என்று தெரியாமல் ஆட்டம் ஆடுவோர் தோற்பது நிச்சயம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் இன்னொரு க்ளாஸான பாட்டு. சாய்தாடம்மா சாய்தாடு என்ற படத்திலிருந்து. எஸ்பிபியும், சுசீலாவும் பாடிய பாடல். இம்மாதிரி பல சூப்பர் பாடல்கள் இளையராஜாவின் ஆரம்பக் காலத்தில் பல தோல்விப் படங்களில் அமைந்திருக்கிறது. இத்தனைக்கு சிவக்குமாரும், ஸ்ரீதேவியும் நடைத்த படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@

என் ட்வீட்டிலிருந்து
விஜய் பார்க்க அழகாயிருந்த படமெல்லாம் ஓடினதில்லை # துப்பாக்கி ஸ்டில்ஸ்..

எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது - ரஜினி #BooksByActors

நடிக்காமல் ஹிட்டடிப்பது எப்படி? - உ.நிதி ஸ்டாலின் #BooksByActors

கிழி கிழியென கிழிப்பது எப்படி? -கலா மாஸ்டர் #BooksByActors

பவர் பாயிண்ட் - Power Star #BooksByActors

எந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆறுதலாய் நாலு வார்த்தை கேட்டபின் கட்டுப்படுத்த முடிவதில்லை.

ஊருல இருக்கிறவன் தான் கொள்ளையடிக்கிறான்ன்னா கவர்மெண்டே நம்ம கிட்ட கொள்ளையடிக்குது. எங்க போய் சொல்ல? # பெட்ரோல் விலை உயர்வு

ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தையை மற்றவர்கள் உன்னிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.. வலி புரியும்.

நீயாய் உணரும் வரை அடுத்தவரின் நடவடிக்கையைப் பற்றி பேசாதே..

காசு வெட்டிப் போட்டா மத்திய அரசு ஒழியுமா? முடியலை யுவர் ஆனர் # பெட்ரோல் விலையுர்வு

பெரும்பாலான பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை உணராதவர்களிடம் வெளிப்படுத்தி நொந்திருப்பதினால் தான்.

மாற்றத்தைக் கண்டு பயப்படாதே.. நல்ல விஷயங்கள் போய் அதை விட நல்ல விஷயங்கள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

பத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவர்களாய் தேரியவர்களின் இன்றைய நிலையை பற்றி யாருக்காவது தெரியுமா?

என்னைத் தவிர என் வாழ்க்கையை யாராலும் சரியாய் புரிந்து கொள்ள முடியாது.

வலி உன்னை அழித்துவிடாமல் பார்த்துக் கொள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A husband and wife were in the bathroom getting ready for work when the husband looked at his wife and said, "I gotta have you!"

He backed her up against the bathroom door, pulled down her panties and ravaged her.

He knew he was doing great because she screamed and wiggled more than she ever had before.

When he finished, he started putting his clothes back on and when he noticed his wife still writhing against the door.

He said, "That was the best, honey. You've never moved like that before, you didn't hurt yourself did you?"

His wife replies, "No, no. I'll be OK once I can get the doorknob out of my ass." 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Post a Comment

24 comments:

சித்தார்த்தன் said...

i am first,

gnanidasan said...

அட..அண்ணன் சைட்டுல நம்ம சேனல் பாட்டு. நன்றிண்ணே! இதயத்தாமரைல வருகிற "ஒரு காதல் தேவதை" பாட்டுதான் இந்த காலத்து பசங்களுக்கு தெரியுது. நீங்க நம்ம காலத்து ஆளு. உங்களால நிறைய பேர் இந்த ராஜா பாட்டை கேட்டு ரசிப்பாங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.

arul said...

bridge to india nice concept

சேகர் said...

adult corner super...

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு முன்னால் அதே வார்த்தையை மற்றவர்கள் உன்னிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்.. வலி புரியும்.


அருமை......

ராஜா said...

**பத்து வருடங்களுக்கு முன் 10th, +2வில் முதல் மாணவர்களாய் தேரியவர்களின் இன்றைய நிலையை பற்றி யாருக்காவது தெரியுமா?**

super...

வவ்வால் said...

கேபிள்ஜி,

நல்லப்பகிர்வு,ஆஹா அருமை...அட்டகாசம்(ஹி...ஹி ஒரு ப.பா தான்)

// கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை?//

காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்பது தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.

மேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.

விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கூடுவாஞ்சேரிப்பகுதியில் நுகர்வு குறைவு என்பதால் எப்போதும் கிடைக்கும்,(நம்ம ஏரியாவாச்சே)சில சமயங்களில் தாம்பரத்தில் இருந்தெல்லாம் பெட்ரோல் போட வண்டலூர், கூடுவாஞ்சேரிக்கு வருவாங்க.பெட்ரோல் விலை ஏறப்போவதாக சொல்லப்படும் மாலையில் செம கூட்டம் இருக்கும்.

ஆனால் டீசலுக்கு சில சமயம் தட்டுப்பாடு வந்து நோ ஸ்டாக் என எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன். ஏன் எனில் லாரிகள் அதிகம் டீசல் போடும் பகுதி அது.

Tally in Tamil said...

//எந்த நேரத்திலும் மற்றவர்கள் முன் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆறுதலாய் நாலு வார்த்தை கேட்டபின் கட்டுப்படுத்த முடிவதில்லை.//

அழுதுடும்மா ,அழுதுடு,கொட்டி தீர்த்திடும்மா - என்று லட்சுமி சொல்லாத
வ்ரைக்கும் ஓ.கே..

புஷ்பராஜ் said...

ஃபேஸ் புக் கில்மா, சூப்பர் கமெண்ட், இவளுங்க எப்பவுமே இப்படிதான், ஆசைக்கு போயிடுறது, பிரச்சினை வந்தா பசங்களை ஈசியா மாட்டி விட்டுட்டு இவளுங்க மட்டும் எஸ்கேப் அயிடுறது, public forum la இந்த மாதிரி விசயங்களுக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லி பெண்களை அப்பாவி மாதிரி project செய்பவர்களுக்கு மத்தியில், தங்களின் விமர்சனம் கேடு கெட்ட பெண்களுக்கு சாட்டையடி

Balaganesan said...

kothu parotta ...migavum rusikirathu...

Raj said...

அண்ணே அந்த பேஸ்புக் அழகிகள் அட்ரஸ் கிடைக்குமா .... உங்க நியாயம் சரிதான்

அ.சந்தர் சிங். said...

நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.

அ.சந்தர் சிங். said...

நான் மறுபடியும் சொல்றேன்,அடல்ட் கார்னரை தமிழில் பதியுங்கள் என்று.இல்லை இப்படித்தான் இங்கிலீஷில்தான் போடுவேன் என்றால்,உங்கள் தலையில் இடி விழ.

shortfilmindia.com said...

//காரணம் நகரில் அதிக எண்ணிக்கையில் நுகர்வோர்கள் இருப்பது தான். ஒரு லோட் பங்குக்கு வந்து சீக்கிரம் விற்று விட்டால் அடுத்த லோட் வரும் வரை நோ ஸ்டாக் தான்.

மேலும் லோட் வருவதற்கு முன்னரே பங்குகள் டி.டி அல்லது இ.சி.எஸ் முறையில் மொத்தப்பணத்தையும் வங்கியில் கட்டிவிடவேண்டும், எண்ணை நிறுவனத்திற்கு பணம் போய் சேர்ந்தால் தான் லோட் அங்கிருந்தே கிளம்பும், சிலர் பணம் கட்ட தாமதம் செய்தால் லோட் தாமதமாகவே வரும்.//

இந்த காரணங்கள் எல்லாம் இன்று நேற்றா பழக்கத்தில் இருக்கிறது. இப்படி திடீரென ஏன் ஸ்டாக் இல்லாமல் போக காரணம் என்று இதை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நிச்சயம் இதன் பின் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. என்றே தோன்றுகிறது.

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை.
ராசா பாடல் சூப்பர்.

Unknown said...

தல, ஹெச்.பி. பத்தி தெரியல.. ஆனா எல்லா பி.பி. (பாரத் பெட்ரோலியம்) பங்க்ஸ் மூடியேதான் வச்சிருக்காங்க. சதியும் இல்ல, ஒண்ணும் இல்ல.. வெரி சிம்பிள் லாஜிக்.. பெட்ரோல் தட்டுப்பாட்ட தற்காலிகமா உருவாக்கி ரேட் ஏத்துனத மறக்கடிக்குறதுதான் அது.. இதல்லாம் ரொம்பக் கொடும.. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

Cable சங்கர் said...

illai. எழில் அப்படியிருந்தா இந்தியா பூராவும் இல்லை அப்படி நடந்திருக்கணும்.

வவ்வால் said...

//விலை ஏறப்போகும் முதல் நாள் பெட்ரோல் இல்லை என சொல்லிவிட்டு ஏறியப்பின் விற்பார்கள், அவர்கள் பழைய விலையில் வாங்கிய சரக்கு என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும்.//

கேபிள்ஜி,

அந்த சூழ்ச்சியும் சொல்லி இருக்கேன் பார்க்கவில்லையா?

நோ ஸ்டாக் ஆக பங் சைட் நடக்கும் காரணங்கள் இவை.

இன்னும் சிலர் டீசலை கடத்துவார்கள் அதெல்லாம் கடலோர மாவட்டமான நாகைப்பகுதியில்.

கடலூர்ப்பகுதியில் டீசல் டிமாண்ட் ஆச்சுன்னா பொதுமக்களுக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு ,தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கொடுப்பாங்க.

தானே புயல் அப்போ டீசலுக்கு செம டிமாண்ட் ,ஒரு லிட்டர் 100 கூட போச்சு சொல்றாங்க.நான் அப்போ பாண்டி நகருக்கே போய் டீசல் போட்டேன்

வவ்வால் said...

கேபிள்ஜி,

ரொம்ப நாளாக இருக்கும் நடை முறைதான் தெளிவாக சொல்லவில்லை என நினைக்கிறேன்,

விலையேற்றப்போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரேயாவது ,பங்குகளுக்கு சொல்லிவிடுவார்கள், எனவே அவர்களும் புது ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்,கொடுத்தாலும் ,எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்யாது ஏன் எனில் விலை ஏற்றத்துக்கு முந்தைய விலையில் அதிகம் வாங்கிவிட்டு பின்னர் ஏறிய பின்னர் கூடுதல் விலைக்கு விற்றுவிடுவதை தடுக்கவே.

எனவே பெட்ரோல்/டீசல் விலை ஏற்றும் போது பங்குகளில் இருக்கும் சரக்கை தான் விற்க வேண்டும், சிலருக்கு தீரும் நிலையில் இருக்கும், சிலருக்கு நிறைய இருக்கும், விலை ஏறப்போகுதுன்னு மாலையில் தான் மக்கள் கூட்டம் படை எடுக்கும் , டேங்க் ஃபுல் செய்யாதவன் எல்லாம் ஃபுல் டேங் போடுவாங்க இதனாலேயே சில குறைவான ஸ்டாக் இருக்கும் இடங்களில் சீக்கிரம் தீர்ந்து விடும்,அப்புறம் முன் சொன்னது போல வைத்துக்கொண்டே நோ ஸ்டாக் சொல்லி அடுத்த நாள் விற்றுக்காசு பார்க்கவும் செய்வார்கள்.

முன்னர் எல்லாம் விலை ஏற்றம் செய்யும் முன்னர் பங்குகளில் எவ்வளவு ஸ்டாக் இருக்கு என எண்னை நிறுவனத்தில் இருந்து ரேண்டமாக அதிரடி ஆய்வு செய்வார்கள், இப்போ அடிக்கடி அரசு விலை ஏற்றுவதால் ,அப்படிலாம் ஆய்வு செய்வதில்லை.

இப்போவே இப்படி சொல்லுறிங்களே 90 களில் விலைக்கம்மியா இருக்கும் போதே பெட்ரோல்/டீசல் தட்டுப்பாடு உண்டு, ஒரு வாரம் ,10 நாள் எல்லாம் நோ ஸ்டாக் சொல்லுவாங்க, அப்போ எல்லாம் எங்க வீட்டுலவே வயலுக்கு என டீசல் 50 லிட் அ 100 லிட் என வாங்கி பதுக்கி வச்சு இருப்போம் :-))

பெட்ரோல் தட்டுப்பாடு வந்தப்போ ,டிவிஸ் -50 இல் டபுள் டேங்க் செட் செய்து , பெட்ரோலில் ஸ்டார்ட் செய்து எஞ்சினை சூடாக்கிவிட்டு டீசலில் ஓட்டிய விஞ்ஞானிகள் எல்லாம் எங்க ஏரியாவில் இருந்தாங்க.

Rizi said...

Superb Song.. Ilayaraja Ever Best.

அப்பாவி தமிழன் said...

நேற்று முன் தினமே கூறி விட்டேன். கொல்கத்தா தான் இம்முறை கப் வாங்கப் போகிறதென்று. என் நண்பர் என்னால் ஒரு லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார். இதுவரை நான் சொல்லி முக்கால் வாசி மேட்சுகள் ஜெயித்திருக்கிறது. அதை நம்பாமல் ஒவ்வொரு முறையும் தோற்றிருக்கிறார். இம்முறை தான் நான் சொன்னதை கேட்டார். ஜெயித்தார். அதில் ஏதாவது கட்டிங் தருகிறாரா என்று கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து இந்த ஒரு லட்சம் போல எத்தனை கோடிகள் பெட்டிங்கில் புழல்கிறாதோ?. ஐ.பி.எல் ஒரு பக்கா பிஸினெஸ். பிஸினெஸ் என்று தெரியாமல் ஆட்டம் ஆடுவோர் தோற்பது நிச்சயம். //////////////////////////////
lmao.....so funny

வவ்வால் said...

தொடர்ச்சி....

இப்போ புதுசா இன்னொருக்காரணமும் சொல்றாங்க, மத்திய அரசு கொஞ்சம் விலையை குறைக்க போகுதாம், எனவே இப்போ இருக்கும் விலைக்கு பணம் கட்டி லோட் எடுத்தால் நஷ்டம் ஆகிடும்னு பெட்ரோல் பங்க்காரங்களே லோட் புக் செய்யாமல் இருக்காங்கணும் ஒரு பேச்சு.

எல்லாம் அரசு நடத்தும் நாடகத்தின் விளைவே.

kailash said...

I checked with Bridge to India reg. RoofTop Solar Installation , they said at present they are interested only in commercial buildings as they need a minimum of 4000 sq. ft. , in future they might be coming up with plans for residential buildings.

thanna said...

"ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். "

-----------தப்பு எல்லாரும் தான் பண்றாங்க ஆனா கேஸ் மட்டும் ஆண்கள் மேல ! எந்த ஊரு நியாயம் பா இது !